‘ஆன்மிகம், தர்மத்தில் ஈடுபாடு காட்ட வேண்டும்’

0 304

ஏ.ஆர்.ஏ.பரீல்

நாடு அர­சியல் மற்றும் பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்­குண்டு திணறிக் கொண்­டி­ருக்­கி­றது. அர­சியல் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு உரிய தீர்­வுகள் பெற்­றுக்­கொள்ள முடி­யா­த­நி­லையில் நாட்டில் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்கள் தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றன.

எரி­பொருள், எரி­வாயு, பால்மா உட்­பட அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்கு நில­வி­வரும் தட்­டுப்­பாடு கார­ண­மாக மக்கள் பல்­வேறு இன்­னல்­களை எதிர்­கொண்­டுள்­ளார்கள். எரி­பொருள் நிலை­யங்­களில் மக்கள் நாட் கணக்கில் வரி­சை­களில் காத்­தி­ருக்­கி­றார்கள்.
இந்­நி­லையில் இவற்­றுக்­கான தீர்­வு­க­ளுக்கு முஸ்­லிம்கள் எவ்­வாறு பங்­க­ளிப்பு செய்ய முடியும். அவர்­களின் அர­சியல் நகர்வுகள் எவ்­வாறு அமைய வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் இடம் வினவினோம். அவரது கருத்து வருமாறு :

“முஸ்­லிம்கள் ஆன்­மிக ரீதியில் தர்­மத்தின் ஊடாக பொரு­ளா­தார ரீதி­யாக மற்றும் அர­சியல் ரீதி­யாக நாட்டின் அர­சியல் பொரு­ளா­தார சவால்­களை எதிர்­கொள்ள வேண்டும். அல்­லாஹ்வின் உதவி நிச்­ச­ய­மாக எமக்கு கிடைக்கும். எமது முயற்­சிகள் மூலம் சிறந்த எதிர்­கா­லத்தை நாட்­டுக்குப் பெற்றுக் கொடுக்க நாம­னை­வரும் பங்குதாரர்கள் ஆகுவோம். பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கு­ப­வர்­க­ளாக மாறுவோம்.

நாடு எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு ஆன்­மிக ரீதி­யாக நாம் முகங்­கொ­டுக்­க­வேண்டும். சோதனைகள் அல்­லாஹ்வின் அனு­ம­தி­யில்­லாது வந்­த­டை­யாது என்று அல்லாஹ் குர்­ஆனில் குறிப்­பி­டு­கின்றான். இந்­நி­லையில் யாருக்கு அல்­லாஹ்வின் மீது நம்­பிக்கை அதி­க­மாக இருக்­குமோ அல்லாஹ் அவர்­க­ளுக்கு வழி­காட்­டுவான்.

இந்­தப்­ பி­ரச்­சி­னை­க­ளுக்கு யார் கார­ண­மாக இருக்­கி­றார்­களோ அவர்­க­ளுக்கு தகுந்த பதிலை அல்லாஹ் வழங்­குவான். யார் அநி­யாயம் செய்­கி­றார்­களோ அவர்­க­ளுக்கு தகுந்த பதில் வழங்­கப்­படும். அல்­லாஹ்வின் நாட்­ட­மின்றி எதுவும் நடை­பெ­றாது. எனவே அல்­லாஹ்வின் மீது நாம் உறு­தி­யான நம்­பிக்கை கொள்ள வேண்டும்.

இச்­சூ­ழலில் நாம் துஆ செய்ய வேண்டும். குறிப்­பாக பாவ­மன்­னிப்புக் கோர வேண்டும்.
பாவ­மன்­னிப்பு மூலம் அல்லாஹ் எமது எல்லாப் பிரச்­சி­னை­க­ளையும் தீர்த்து வைக்­கிறான். பொரு­ளா­தார நெருக்­கடி மற்றும் குடும்ப பிரச்­சி­னை­க­ளுக்கு அல்லாஹ் தீர்­வு­களை வழங்­கு­கிறான். அந்த அடிப்­ப­டையில் நபிகள் நாய­கத்தின் மீது நாம் அதி­க­மாக ஸல­வாத்து சொல்ல வேண்டும்.

இந்­தப் ­பி­ரச்­சி­னை­களை அல்லாஹ் மூலமே தீர்த்து வைக்க முடியும். அத்­தோடு பொரு­ளா­தார பிரச்­சி­னை­க­ளுக்கு நாம் எவ்­வாறு முகங்­கொ­டுக்க முடியும்? எமது பொரு­ளா­தா­ரத்தை நாம் சரி­யாக கட்­ட­மைத்துக் கொள்ள வேண்டும். செல­வு­களை இயன்­ற­ளவு குறைக்க வேண்டும். சிக்­க­ன­மாக செலவு செய்­ய­வேண்டும். தேவை­யற்ற செல­வு­களைத் தவிர்க்க வேண்டும். எந்­தெந்­த­வ­கையில் நேர்­மை­யாக பொரு­ளா­தா­ரத்தை பெற்­றுக்­கொள்ள முடியும் என்­பதில் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்­பாக விவ­சா­யத்தில் நாம் கூடி­ய­ளவு கவனம் செலுத்த வேண்டும். கால் நடை வளர்ப்பு போன்­ற­வற்றில் ஈடு­ப­ட­வேண்டும்.

ஜன­நா­யக ரீதி­யாக அர­சி­யலில் தொடர்­பு­பட வேண்டும். அர­சியல்வாதி­களின் மோச­டிகள் கார­ண­மாக நாம் இந்­நி­லைக்குத் தள்­ளப்­பட்­டுள்ளோம். அர­சியல் மாற்­றத்தில் ஜன­நா­யக முறையில் நாம் ஒவ்­வொ­ரு­வரும் பங்­கு­தா­ர­ராக வேண்டும். நாட்டின் அர­சியல் யாப்பின் பிர­காரம் எங்­க­ளுக்கு அர­சியல் சுதந்­திரம் உள்­ளது. நாம் தூய்­மை­யாக, கட்­சி­சார்­பற்ற முறையில் நேர்­மை­யான அர­சியல் மாற்றம் வர­வேண்­டு­மெ­னவும், எதிர்­கா­லத்­தி­ல் நல்­லவோர் அர­சியல் யாப்பு உரு­வா­க­வேண்டும் என்பதற்காக உழைக்க வேண்டும்.

சிறார்­க­ளுக்கு அவர்­க­ளது கல்­விக்­காக தர்­மத்தின் ஊடாக உத­விகள் செய்ய வேண்டும்.
ஆன்மிக ரீதியாக, தர்மத்தின் ஊடாக பொருளாதார ரீதியாக மற்றும் அரசியல் ரீதியாக நாம் இந்தச் சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

எமது முயற்­சிகள் மூலம் சிறந்த எதிர்­கா­லத்தை நாட்­டுக்குப் பெற்றுக் கொடுக்க நாம­னை­வரும் பங்­கு­தா­ரர்கள் ஆவோம். பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கு­ப­வர்­க­ளாக மாறுவோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.