உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரம்: இப்றாஹிம் ஹாஜியாருக்கு பிணை கோர தீர்மானம்

மே 25 இல் வழக்கு விசாரணைக்கு

0 300

(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தினம் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களில், சினமன் கிராண்ட் மற்றும் ஷங்­ரில்லா ஹோட்­டல்­களில் குண்­டினை வெடிக்கச் செய்த தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளான சகோ­த­ரர்­களின் தந்தை இப்­ராஹீம் ஹாஜியார் என அறி­யப்­படும் யூசுப் மொஹம்மட் இப்­ராஹீம் சார்பில் பிணை கோரிக்கை முன் வைக்க அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் தீர்­மா­னித்­துள்­ளனர்.

இது தொடர்பில் அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் நேற்­று­முன்­தினம் கொழும்பு மேல் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தனர்.

இப்­ராஹீம் ஹாஜியார் என அறி­யப்­படும் யூசுப் மொஹம்மட் இப்­ராஹீம் உள்­ளிட்ட மூவ­ருக்கு எதி­ராக மேல் நீதி­மன்றில் குற்­ற­வியல் வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது. இப்ராஹீம் ஹாஜி­யா­ருக்கு மேல­தி­க­மாக அவ­ரது மேலும் இரு புதல்­வர்­களே அவ்­வ­ழக்கின் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர். இப்­ராஹீம் ஹாஜியார் என அறி­யப்­படும் யூசுப் மொஹம்மட் இப்­ராஹீம், மொஹம்மட் இப்­ராஹீம் ஹிஜாஸ் அஹமட், மொஹம்மட் இப்­ராஹீம் இஸ்­மாயீல் ஆகி­யோரே இவ்­வ­ழக்கின் பிர­தி­வா­தி­க­ளாவர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் அறிந்­தி­ருந்தும் அது தொடர்பில் பாது­காப்பு தரப்­புக்கு அறி­விக்­காமல் தக­வல்­களை மறைத்­தமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்கள் பிர­தி­வா­திகள் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளன. பயங்­க­ர­வாத தடைச் சட்டம் மற்றும் தண்­டனை சட்டக் கோவையின் கீழ் இந்த குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.
அதன்­படி இந்த விவ­கார வழக்­கா­னது நேற்­று­ முன்­தினம் கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி நவ­ரத்ன மார­சிங்க முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது பிர­தி­வா­திகள் மூவரும் நீதி­பதி முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். இவ்­வா­றான நிலை­யி­லேயே அவர்கள் சார்பில் பிணை கோரிக்கையை முன் வைக்க எதிர்பார்ப்பதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி வழக்கானது எதிர்வரும் மே 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படவுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.