மார்ச் 30 : பலஸ்தீன நில தினம் – ஜனநாயக சக்திகள் பலஸ்தீனுக்கான தீர்வை வலியுறுத்த வேண்டும்

0 452

சுதத் அதி­காரி
நிறை­வேற்றுக் குழு உறுப்­பினர், சமா­தா­னத்­துக்கும் நட்­பு­ற­வுக்­கு­மான இலங்கை அமைப்பு

பலஸ்தீன் நில தினம் ஒவ்­வொரு ஆண்டும் மார்ச் 30 ஆம் திகதி அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. 1976 ஆம் ஆண்டு சியோ­னிச இஸ்ரேல் பாரா­ளு­மன்­றத்தில் சட்­டங்­களை இயற்றி பலஸ்­தீ­னர்­க­ளுக்குச் சொந்­த­மான நிலங்­களை பலாத்­கா­ர­மாக கைய­கப்­ப­டுத்­தி­யது. இஸ்ரேல் நிர்­வாகம் நிலத்தைக் கைய­கப்­ப­டுத்­து­வதை எதிர்த்து நச­ரேத்தில் கடு­மை­யாகப் போரா­டிய ஆறு பலஸ்­தீ­னர்கள் இந்த துர­திர்ஷ்­ட­மான நாளில் சுட்டுக் கொல்­லப்­பட்­டனர். போராட்­டத்தில் ஈடு­பட்ட மேலும் பலர் காய­ம­டைந்­தனர்.

இதனைத் தொடர்ந்து அனைத்து பலஸ்­தீ­னர்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகை­யி­லான ” பலஸ்­தீன நிலங்­களின் பாது­காப்­புக்­கான தேசிய முன்­னெ­டுப்பு” எனும் ஓர் அர­சியல் அமைப்பு தோற்­று­விக்­கப்­பட்­டது. வேலை­நி­றுத்தப் போராட்­டத்தை முன்­னெ­டுக்­கு­மாறு இந்தக் குழு கோரிக்கை விடுத்­தது. தமது நிலத்தை இழந்­த­தனால் ஏரா­ள­மான பலஸ்­தீ­னர்கள் பாதிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் பலஸ்­தீன நில தின­மாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட இந்த நாளில் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் இருந்த பலஸ்­தீ­னர்கள் பர­வ­லான போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தனர். 1970 களுக்கு முந்­திய கிளர்ச்­சிகள் மற்றும் ஆர்ப்­பாட்­டங்­களைப் போலன்றி அதிக அள­வி­லான பலஸ்­தீ­னர்கள் பங்­கு­கொண்ட நன்கு ஒழுங்­க­மைக்­கப்­பட்ட ஒன்­று­பட்ட போராட்­ட­மாக இது அமைந்­தி­ருந்­தது. பலஸ்­தீன நில தினப் பிர­க­டனம் பலஸ்­தீன மக்­க­ளுக்கு மிகுந்த வீரி­யத்­தையும் வெற்­றி­யையும் தந்­தது. இஸ்­ரே­லிய எல்­லையின் இரு­ம­ருங்­கிலும் வாழும் அரே­பி­ய­ரி­டையே ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­தவும் இது வழி­ய­மைத்­தது.

அன்­றி­லி­ருந்து, இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தி­னரால் வீர­மிக்க ஆறு போரா­ளிகள் கொல்­லப்­பட்­ட­தையும் தமது மூதா­தை­யர்­களின் சட்­ட­பூர்­வ­மான பூர்­வீக நிலத்தைப் பறித்­தெ­டுப்­பதன் மூலம் பலஸ்­தீன மக்­க­ளுக்கு இது­வரை இழைக்­கப்­பட்­டுள்ள தொடர்ச்­சி­யான அநீ­தி­யையும் உல­குக்கு எடுத்துக் காட்டும் வகையில் மார்ச் 30 ஆம் திகதி ஆண்­டு­தோறும் பலஸ்­தீ­னர்­களால் நினை­வு­கூ­ரப்­ப­டு­கி­றது. வர­லாறு நெடு­கிலும் ஒவ்­வொரு வரு­டமும் மார்ச் 30 அன்று நினை­வு­கூ­ரப்­படும் பலஸ்­தீன நில தினம் பலஸ்­தீ­னர்­க­ளுக்கும் உல­கெங்­கி­லு­முள்ள புலம்­பெயர் பலஸ்­தீ­னர்­க­ளுக்கும் ஒரு முக்­கிய நிகழ்­வாகக் கரு­தப்­ப­டு­கி­றது. இந்த நிகழ்வு வர­லாற்றைக் குறிப்­பது மட்­டு­மல்­லாமல் பலஸ்­தீனப் புரட்­சியைப் பற்­றிய பொது­வான நினை­வூட்­ட­லையும் வழங்­கு­கி­றது.

1967 இல் கிழக்கு ஜெரூ­ஸலம், காஸா, மற்றும் மேற்குக் கரையை இஸ்ரேல் சட்­ட­வி­ரோ­த­மாக ஆக்­கி­ர­மித்த முதல் நாளி­லி­ருந்தே இஸ்ரேல் மென்­மேலும் பலஸ்­தீன நிலங்­களை கைய­கப்­ப­டுத்தத் தொடங்­கி­ய­தோடு இஸ்­ரே­லியப் பிர­ஜை­களை அதிலே குடி­ய­மர்த்­தவும் ஆரம்­பித்­தது. இன்­றைய நில­வ­ரப்­படி 600,000 இஸ்­ரே­லி­யர்கள் 230 க்கும் மேற்­பட்ட வீட்டுத் திட்­டங்­களில் சர்­வ­தேச சட்­டத்­துக்கு முர­ணான வகையில் வாழ்ந்து வரு­வ­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பெய்த்­ஸலம் மற்றும் கெரம் நவட் (B’Tselem and Kerem Navot) வெளி­யிட்ட அண்­மைய அறிக்­கை­யின்­படி, பறி­முதல் செய்­யப்­பட்ட பலஸ்­தீன நிலங்­களில் 20 க்கும் மேற்­பட்ட துனாம்­களில் (ஒரு துனாம் என்­பது 1000 சதுர மீட்­ட­ருக்குச் சமம்) இஸ்­ரே­லி­யர்­களைக் குடி­ய­மர்த்தி இஸ்­ரே­லிய அர­சாங்கம் நிர்­வ­கித்து வரு­கி­றது.

1948 இல் ஒன்­றரை மில்­லியன் பலஸ்­தீ­னர்கள் தமது தாய­கத்தில் வாழ்ந்­தனர். அதே ஆண்டில் (1948) இஸ்ரேல் பலஸ்­தீன நிலத்­துக்குள் ஒரு நாடாக நிறு­வப்­பட்­டது. 1976 ஆம் ஆண்­ட­ளவில் ஒன்­றரை மில்­லியன் பலஸ்­தீ­னர்­களில் 20 வீதம் மட்­டுமே இஸ்­ரேலால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தி­களில் வாழ்ந்­தனர். ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பகு­தி­களில் வாழும் பலஸ்­தீ­னர்கள் இஸ்­ரே­லிய இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்­டி­லேயே வாழ்ந்து வரு­கின்­றனர். இவர்கள் தொடர்ந்­தேர்ச்­சி­யான சோத­னைகள், ஊர­டங்கு உத்­த­ர­வுகள், கைதுகள், தங்கள் வீடு­களில் நுழை­வ­தற்கும் வெளி­யே­று­வ­தற்கும் விஷேட அனு­மதி அட்­டை­களைப் பெற்­றி­ருக்க வேண்­டி­யி­ருப்­பது போன்­ற­தான சிர­மங்கள், சேரி வாழ்க்கை எனப் பல சிர­மங்­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றனர். பலஸ்­தீன சனத்­தொகை கணிப்­பீட்டுப் பணி­யகம் அண்­மையில் வெளி­யிட்ட தர­வு­க­ளின்­படி 1948 முதல் பலஸ்­தீன நிலப்­ப­ரப்பில் 85 வீதத்தை இஸ்ரேல் ஆக்­கி­ர­மித்­தி­ருக்­கி­றது. ஐக்­கிய நாடுகள் சபையின் திட்­டத்­தின்­படி 55 வீத­மான நிலம் 1948 இல் ஏற்­க­னவே கொடுக்­கப்­பட்­டு­முள்­ளது.

வருந்­தத்­தக்­க­வ­கையில், உலகில் வாழும் 13.7 மில்­லியன் பலஸ்­தீ­னி­யர்­களில் 6.2 மில்­லியன் பேர் பலஸ்­தீன எல்­லைக்கு வெளியே அக­தி­க­ளாக வாழு­கின்­றனர். சர்­வ­தேச சட்­டத்­தின்­படி அக­திகள் தமது சொந்த பூர்­வீக நிலத்­துக்கு திரும்ப முடி­யு­மாக இருந்­தாலும் இது­வரை பலஸ்­தீன அக­தி­க­ளுக்கு தமது சொந்த ஊருக்குத் திரும்ப முடி­யாத நிலையே காணப்­ப­டு­கி­றது.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பகு­தி­களில் சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்­களை நிறு­வு­வது உட்­பட்ட இஸ்­ரேலின் பல நட­வ­டிக்­கைகள் பலஸ்­தீனின் இருப்­புக்கு கடு­மை­யான தடை­யாக மாறி­யுள்­ள­தோடு அவர்­களின் செயற்­பா­டுகள் நாட்டில் நீடித்த அமை­திக்­கான நம்­பிக்­கை­யையும் சிதைப்­ப­தாக அமைந்­துள்­ளன. இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் பலஸ்­தீ­னர்கள் தாம் பிறந்த இடத்தில் தமது சுதந்­தி­ரத்­தையும் சுயா­தீ­னத்­தையும் அனு­ப­விப்­பதைத் தடுக்­கின்ற தெளி­வான சியோ­னிசக் கொள்­கையைக் குறித்துக் காட்­டு­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது. சர்­வ­தேச ரீதி­யாக கண்­டிக்­கப்­பட்ட போதிலும் இஸ்ரேல் அர­சாங்கம் அதன் சியோ­னிச விரி­வாக்கக் கொள்­கை­யையும் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீன நிலங்­களில் சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்­க­ளையும் தொடர்ந்து வரு­கி­றது.

1976 சம்­ப­வத்­துக்கு 16 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் பலஸ்­தீன நில தினம் தேசிய பொது­வி­டு­மு­றை­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. எதிர்ப்புப் பேர­ணிகள் மற்றும் பொது­வேலை நிறுத்­தங்­களை முன்­னெ­டுப்­ப­த­னூ­டாக பலஸ்­தீ­னர்கள் ஆண்­டு­தோறும் இந்த நாளை நினை­வு­கூ­ரு­கின்­றனர். அதே­நேரம் உலகின் வேறு­பல பகு­தி­க­ளிலும் பலஸ்­தீன நில தினம் அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கி­றது. அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பிய நாடு­களில் கூட பலஸ்­தீ­னர்கள் இன்­று­வரை இந்த நிகழ்வை அனுஷ்­டித்து வரு­கி­றார்கள்.

உலகின் 140 க்கும் மேற்­பட்ட நாடுகள் பலஸ்­தீனில் சியோ­னிச இஸ்­ரேலின் நில அப­க­ரிப்புக் கொள்­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ள­தோடு இந்தக் கொள்­கையை கடு­மை­யாக நிரா­க­ரித்­துள்­ளன. அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தி­யத்தின் ஆசீர்­வா­தத்­துடன் அப­க­ரிக்­கப்­பட்ட பலஸ்­தீன நிலங்­களில் இஸ்ரேல் நிர்­வாகம் புதிய குடி­யேற்­றங்­களை நிறுவி வரு­கின்­றது. இஸ்­ரேலின் நட­வ­டிக்­கை­களைக் கண்­டித்து ஐநாவில் 500 க்கும் மேற்­பட்ட தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. ஆனாலும் அமெ­ரிக்­காவின் தொடர்ச்­சி­யான ஆத­ரவும் பின்­னூட்­டமும் கார­ண­மாக உல­க­ள­வி­லான கோபத்­துக்கும் கண்­ட­னத்­துக்கும் மத்­தி­யிலும் சியோ­னிச இஸ்ரேல் பலஸ்­தீனில் நில அப­க­ரிப்பைத் தொடர்ந்து வரு­கி­றது.

இந்த நிலை­யிலும் பலஸ்­தீனில் இஸ்­ரேலின் நில அப­க­ரிப்புக் கொள்­கையை ஆத­ரிப்­ப­தற்கும் பாது­காப்­ப­தற்கும் அமெ­ரிக்கா 40 க்கும் மேற்­பட்ட சந்­தர்ப்­பங்­களில் தனது வீட்டோ அதி­கா­ரத்தை ஐநா சபையில் பயன்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்தப் பின்புலத்தில், இஸ்ரேலில் உள்ள சாதாரண மக்கள் ஓர் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு அல்லாடி வருகின்றனர். 1967 இல் நிறுவப்பட்ட எல்லைகளுடன் ஐக்கிய நாடுகள் சபையில் பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள இருநாட்டுத் தீர்வை நடைமுறைப்படுத்துவதும் சுதந்திர பலஸ்தீன தேசத்தின் தலைநகராக கிழக்கு ஜெரூஸலத்தை அங்கீகரிப்பதும் பலஸ்தீன அகதிகள் தமது தாயகம் திரும்புவதற்கான உரிமையை ஏற்றுக் கொள்வதுமே தற்போதைய நெருக்கடிகளுக்கான ஒரே தீர்வாக அமைய முடியும். இந்தத் தீர்வு மிகவும் தாமதமானதொன்றாக இருந்தாலும் இதுவே இஸ்ரேல் பலஸ்தீன் மக்களுக்கும் முழு மத்திய கிழக்குக்கும் அமைதியைக் கொண்டுவரும். எனவே சமாதானத்தை விரும்பும் ஜனநாயக சக்திகளும் அரசாங்கங்களும் 1967 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்வை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.