பட்டினியுடன் உறங்குவதற்கு இடமளியாதிருப்போம்!

0 379

நாடு மிக மோச­மான பொரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்ள இந்த நாட்­க­ளி­லேயே முஸ்­லிம்­க­ளா­கிய நாம் புனித ரழமான் மாதத்தை ஆரம்­பிக்­கிறோம். இந் நிலையில் நாடு எதிர்­நோக்­கி­யுள்ள இந்த நெருக்­கடி நிலைமை மிக விரைவில் நீங்­கு­வ­தற்­காக இந்தப் புனித மாதத்தில் பிரார்த்திப்­பது நம் அனை­வ­ரதும் கடப்­பா­டாகும்.

கடந்த சில மாதங்­க­ளாக நீடிக்கும் எரி­பொருள் பற்­றாக்­குறை இன்­னமும் நீங்­க­வில்லை. வாக­னங்கள் எரி­பொ­ரு­ளுக்­காக வரி­சையில் நிற்கும் நிலை தொடர்­கி­றது. எரி­வா­யு­வுக்கும் இதே நிலைதான். மருந்துத் தட்­டுப்­பாடு கார­ண­மாக வைத்­தி­ய­சா­லை­களில் சத்­திர சிகிச்­சை­களைக் கூட நடத்த முடி­யா­துள்­ளது. வைத்­தி­ய­சா­லை­களில் தங்கி சிகிச்சை பெறும் நோயா­ளி­க­ளுக்கு உண­வு­களைக் கூட வழங்க முடி­யாத நிலை தோற்றம் பெற்­றுள்­ளது. தின­சரி மின் துண்­டிப்பு தற்­போது 13 மணித்­தி­யா­லங்கள் வரை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிலை­மைகள் உடன் சீர­டை­வ­தற்­கான வாய்ப்­புகள் இல்லை. மாறாக மேலும் மோச­ம­டையும் என்றே எதிர்­வு­கூ­றப்­ப­டு­கி­றது.

இந்த நெருக்­கடி நிலைமை நாட்டு மக்­களை வெகு­வாகப் பாதித்­துள்­ளது. மக்கள் செய்­வ­த­றி­யாது தவிக்­கி­றார்கள். ஊட­கங்கள் வாயி­லாக மக்கள் தமது அங்­க­லாய்ப்­பு­களை வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள். ஆங்­காங்கே ஆர்ப்பாட்­டங்­களும் நடந்­த­வண்­ண­முள்­ளன. சமூக வலைத்­த­ளங்­களில் மக்கள் தமது உணர்ச்­சி­களைக் கொட்டிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அனர்த்தம் ஒன்று வரு­கின்­ற­போது, பாதிக்­கப்­பட்ட சாரா­ருக்கு பாதிக்­கப்­ப­டாத சாரார் முன்­வந்து உத­வி­களை வழங்­கு­வார்கள். ஆனால் நாடு இன்று எதிர்­நோக்­கி­யுள்ள பெரு­ளா­தார நெருக்­கடி அனைத்து மக்­க­ளை­யுமே பாகு­பா­டின்றிப் பாதித்­துள்­ளது. இதில் யார் யாருக்கு உத­வு­வது என்ற கேள்­விக்கே இட­மில்­லா­துள்­ளது.

இன்­றைய நாட்­களில் பண வசதி படைத்­த­வர்கள் முதல் ஏழைகள் வரை அனை­வ­ருமே பொரு­ளா­தார ரீதி­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். எரி­பொ­ரு­ளின்மை, தொடர் மின்­சாரத் தடை கார­ண­மாக பாரிய வர்த்­த­கங்கள் கூட நெருக்­க­டியைச் சந்­தித்­துள்­ளன. பலர் தமது தொழில் நட­வ­டிக்­கை­களை கைவிட வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளார்கள். எரி­பொருள் தட்­டுப்­பாடு கார­ண­மாக வாக­னங்கள் மூலம் தொழில்­பு­ரியும் சார­திகள் உள்­ளிட்ட பல்­லா­யிரக் கணக்­கானோர் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். எரி­வாயு இன்­மையால் பல ஹோட்­டல்­களும் மூடப்­பட்­டுள்­ளன. இந்தப் பொரு­ளா­தார நெருக்­கடி நிலை கார­ண­மாக பல தொழில் நிறு­வ­னங்கள் தமது ஊழி­யர்­களின் எண்­ணிக்­கையை வெகு­வாகக் குறைத்­துள்­ளன. இதனால் பலர் தொழில்­வாய்ப்­பு­களை இழந்­துள்­ளனர்.

வாழ்க்கைச் செலவு உச்­சத்தைத் தொட்­டுள்ள இன்­றைய நாட்­களில் வரு­மா­ன­மின்றித் தவிக்கும் இந்தக் குடும்­பங்­க­ளுக்கு உதவிக் கரம் நீட்­டு­வது அவ­சி­ய­மாகும்.
முஸ்லிம் சமூகம் பள்­ளி­வா­சல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நிர்­வ­கிக்­கப்­ப­டு­வதால், ஒவ்­வொரு பள்­ளி­வா­சல்­களும் தமது மஹல்­லா­வுக்­குட்­பட்ட தேவை­யு­டைய குடும்­பங்­களை இனங்­கண்டு எவ்­வாறு உத­வலாம் என்­பது குறித்துத் திட்­ட­மிட்டுச் செயற்­பட வேண்டும்.

முஸ்லிம் சமூக நிறு­வ­னங்­க­ளுக்கும் இதில் பொறுப்­புள்­ளது. தமது ஸகாத், ஸத­காக்கள் மூலம் உதவக் கூடி­ய­வர்­க­ளி­ட­மி­ருந்து பணத்தைத் திரட்டி ஒரு­வேளை உண­வுக்குக் கூட வழி­யின்றித் தவிக்கும் குடும்­பங்­களை இனங்­கண்டு உத­வி­களை வழங்க வேண்டும். துர­திஷ்­ட­வ­ச­மாக இன்று சமூ­கத்தில் மக்­களை மென் மேலும் நெருக்­க­டிக்குள் தள்­ளு­கின்ற செயற்­பா­டு­களே அதிகம் இடம்­பெ­று­கின்­றன. பொருட்­களைப் பதுக்கி வைத்து வியா­பாரம் செய்­ப­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. சா­தா­ரண பேரீச்­சம்­ப­ழத்தைக் கூட பல நூறு ரூபா விலை கூட்டி விற்­கின்ற வியா­பா­ரிகள் நமது சமூ­கத்தில் மலிந்­துள்­ளமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

இது மக்­க­ளி­ட­மி­ருந்து கொள்­ளை­ய­டிப்­ப­தற்­கான நேர­மல்ல. மாறாக ஒரு­வ­ருக்­கொ­ருவர் உதவி ஒத்­தா­சை­யா­க­வி­ருந்து இந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து நாம் மீளத் தலைப்­பட வேண்டும். நமது செயற்­பா­டுகள் ஒரு போதும் இறை­வனின் புறத்­தி­லி­ருந்து தண்­ட­னையைக் கொண்­டு­வ­ரு­ப­வை­யாக அன்றி அருளைக் கொண்டு வரு­ப­வை­யாக அமைய வேண்டும். இன்­றைய இந்த நெருக்­கடி நிலை­மைக்கு ஊழல் நிறைந்த அர­சி­யல்­வா­தி­களும் அதிகாரிகளும் மாத்திரம் காரணமல்ல. சந்தர்ப்பம் பார்த்து கொள்ளையடிக்கின்ற இவ்வாறான வியாபாரிகளும்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

எனவேதான் நெருக்கடியான இன்றைய நாட்களில் ஒருவரிடமிருந்து பொருளாதாரத்தை எப்படி அபகரிக்கலாம் என்பது பற்றிச் சிந்தியாது எவ்வாறு ஒருவருக்கொருவர் கொடுத்துதவலாம் என்பது பற்றிச் சிந்திப்போம். நமது பிரதேசங்களில் ஒருவர் கூட உண்ண வழியின்றி பட்டினியுடன் படுக்கைக்குச் செல்ல அனுமதிக்காதிருப்போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.