விடிவெள்ளிக்கு இரண்டு விருதுகள்!

0 336

இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னமும் இலங்கை பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் சங்­கமும் இணைந்து நடாத்­திய 2019 மற்றும் 2020 ஆம் ஆண்­டு­க­ளுக்­கான ஊடக அதி­யுயர் விருது வழங்கும் விழாவில் விடி­வெள்ளி பத்­தி­ரிகை இரண்டு விரு­து­களை வென்­றுள்­ளது.
கொழும்பு, ஹில்டன் ஹோட்­டலில் நேற்று முன்­தினம் மாலை நடை­பெற்ற இந் நிகழ்வில் 2020 ஆம் ஆண்­டுக்­கான விசேட நிலை­மை­களில் செய்தித் தேட­லுக்­கான பேரா­சி­ரியர் கைலா­ச­பதி நினைவு விரு­தினை விடி­வெள்ளி பத்­தி­ரி­கையின் சுயா­தீன ஊட­க­வி­ய­லாளர் ஏ.எம். றிப்தி அலி பெற்றுக் கொண்டார்.

அத்­துடன் 2020 ஆம் ஆண்­டுக்­கான சிறந்த பத்­தி­ரிகை வடி­வ­மைப்­புக்­கான சிறப்புச் சான்­றிதழ் விரு­தினை விடி­வெள்ளி பத்­தி­ரி­கையின் பக்க வடி­வ­மைப்பு அணி சார்பில் செ. கலைச்­செல்வி பெற்றுக் கொண்டார். இதே விரு­தினை சண்டே டைம்ஸ் பத்­தி­ரி­கையும் பகிர்ந்து கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இலங்கை பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்­கமும் இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னமும் இணைந்து வரு­டாந்தம் நடாத்தும் சிறந்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான விருது வழங்கும் விழாக்­களில் கடந்த காலங்­க­ளிலும் விடி­வெள்ளி பல விரு­து­களை வென்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்­டு­களில் சிறந்த இளம் ஊட­க­வி­ய­லா­ள­ருக்­கான சான்­றிதழ் விருதை விடி­வெள்ளி ஊட­க­வி­ய­லாளர் எஸ்.என்.எம். சுஹைல் பெற்றுக் கொண்டார்.

2011 ஆம் ஆண்டு சிறந்த பக்க வடி­வ­மைப்­புக்­கான சான்­றிதழ் விருதும் விடி­வெள்­ளிக்கு கிடைக்கப் பெற்­றது.

அதே­போன்று 2012 ஆம் ஆண்டு சிறந்த பத்தி எழுத்­தா­ள­ருக்­கான விருதை விடி­வெள்ளி ஊட­க­வி­ய­லாளர் ஏ.ஆர்.ஏ.பரீல் பெற்றுக் கொண்டார்.
2016 ஆம் ஆண்டு சிறந்த செய்தி இணை­யத்­த­ளத்­திற்­கான சிறப்புச் சான்­றிதழ் விருதும் விடி­வெள்­ளிக்கு கிடைக்கப் பெற்­றது.

2018 ஆம் ஆண்டு சிறந்த பக்க வடி­வ­மைப்­புக்­கான விருதும் சிறந்த செய்தி இணை­யத்­த­ளத்­திற்­கான சிறப்புச் சான்­றிதழ் விருதும் விடி­வெள்­ளிக்கு கிடைக்கப் பெற்­றது. இந் நிலை­யி­லேயே 2020 ஆம் ஆண்­டுக்­கான விருது வழங்கும் நிகழ்­விலும் விடி­வெள்ளி இரண்டு விரு­து­களை வென்று சாதனை படைத்­துள்­ளது.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் திகதி இலங்கை முஸ்­லிம்­களின் முதன்மைக் குரலாக ஆரம்பிக்கப்பட்ட விடிவெள்ளி வார பத்திரிகை கடந்த 14 வருடங்களாக இலங்கை முஸ்லிம்களின் முதன்மைக்குரலாக பிரகாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.