மூடப்பட்ட பள்ளிகளின் பெயர் பட்டியலை வெளியிட மறுப்பு

பாதுகாப்பை காரணம் காட்டுகிறது திணைக்களம்

0 398

(றிப்தி அலி)
ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தலை அடுத்து நாட்டில் மூடப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­களின் பெயர்ப் பட்­டி­யலை வெளி­யிட முடி­யாது என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வ­ல்கள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

“பாது­காப்பு கார­ணங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே குறித்த பள்­ளி­வா­சல்­களின் பெயர்­களை வெளி­யிட முடி­யாது” என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வ­லகள் திணைக்­கள பணிப்­பாளர் இப்­றாஹீம் அன்சார் தெரி­வித்தார்.

கடந்த 2019 இல் இடம்­பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தலை அடுத்து நாட்டில் செயற்­பட்ட 16 பள்­ளி­வா­சல்கள் பல்­வேறு கார­ணங்­களை முன்­வைத்து மூடப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் கடந்த பெப்­ர­வரி 16ஆம் திகதி அறி­வித்­தி­ருந்­தது.

எனினும், குறித்த பள்­ளி­வா­சல்­களின் பெயர்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இத­னை­ய­டுத்தே நாட்டில் மூடப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­களின் பெயர் விப­ரங்­க­ளையும் அதற்­கான கார­ணங்­க­ளையும் அறியும் நோக்கில் தக­வ­ல­றியும் விண்­ணப்­ப­மொன்று முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வ­லகள் திணைக்­க­ளத்­திற்கு சமர்ப்பிக்­கப்­பட்­டது. இந்த விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்ட பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.