இலங்கையின் தேசிய பிரச்சினை நேற்று, இன்று, நாளை

0 823

மூலம்: பேரா­சி­ரியர் ஜெய­தேவ உயன்­கொட
தமிழில்: எம்.எச்.எம். ஹஸன்

சில கால­மாக அமுக்­கி­வைக்­கப்­பட்­டி­ருந்த இலங்­கையின் தேசிய பிரச்­சினை தொடர்­பான கருப்­பொருள் மீண்டும் ஒரு­முறை அர­சியல் உரை­யா­ட­லுக்கு உட்­பட்­டுள்­ளது. இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு, அதி­காரப் பர­வ­லாக்­கல்­களை பலப்­ப­டுத்தல், அதற்குப் பொருத்­த­மான வகையில் 13ஆவது யாப்புச் சீர்­தி­ருத்­தங்­களை மாற்­றி­ய­மைத்தல் போன்ற செயல்­மு­றைகள் தமிழர் தேசியக் கூட்­டணி தவிர்ந்த ஏனை­ய­வர்­களின் கவ­னத்­தி­லி­ருந்து சறுக்­கி­யுள்­ள­மைக்­கான அறி­கு­றிகள் தென்­ப­டு­கின்­றன.

எனினும் அது சிவில் சமூக அமைப்­புக்­களின் கவ­னத்­தி­லி­ருந்து வில­க­வில்லை. அர­சியல் கட்­சி­களின் எண்ணம் பற்­றிய பல­மான இரு அறி­கு­றிகள் சென்ற வாரங்­களில் தென்­பட்­டன. முத­லா­வது, ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்க உரை­யின்­போது தேசிய பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் தீர்­வொன்று அவ­சியம் என்ற விடயம் இடம்­பெ­ற­வில்லை.

அதற்குப் பதி­லாக தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான, கவ­லை­க­ளுக்­கான பரி­காரம், பொரு­ளா­தார தீர்வு வழங்­கு­வதே என்று கூறப்­பட்­டுள்­ளது. அது ராஜ­பக்ச குடும்­பத்தின் தலை­மையின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இருந்­ததும் தற்­போது பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணிக்கு மாறி­யுள்­ள­து­மான நிலைப்­பா­டாகும். தமிழ் மக்­க­ளுக்கு இருப்­பது அர­சியல் பிரச்­சி­னை­யல்ல, மாறாக பொரு­ளா­தார விருத்­தி­யின்மை பற்­றிய பிரச்­சி­னை­யாகும். அதற்கு வழங்க வேண்­டி­யது பொரு­ளா­தார அபி­வி­ருத்தி தொடர்­பான தீர்வே என்­பது இந்த நிலைப்­பாட்டின் விளக்­க­மாகும்.

இரண்­டா­வது அடை­யாளம், ஜே.வி.பி தலை­மைத்­து­வத்தின் கீழுள்ள தேசிய மக்கள் சக்­தியின் “நெருக்­க­டியை வெல்­வ­தற்­கான அவ­சரப் பிர­வேசம்” என்ற கொள்கை வெளி­யீட்டுப் பிர­சு­ரத்தில் தேசிய பிரச்­சினை என்ற பிர­யோ­கத்தை பயன்­ப­டுத்­து­வ­தையே தவிர்த்­துள்­ளனா;. அந்த வெளி­யீட்டில் இலங்­கையின் தேசிய இனம் என்ற தொனிப்­பொ­ருளில் மூன்று விட­யங்கள் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன. முத­லா­வது, அதி­கா­ரத்தைப் பர­வ­லாக்கும் புதிய வழி­மு­றை­யுடன் கூடிய ஆட்­சி­ய­மைப்பு ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வதும் மாகாண சபை­களை முறை­யா­னதும் வினைத்­தி­ற­னுள்­ள­து­மான நிறு­வ­னங்­க­ளாக மாற்­று­வ­து­மாகும். அது தமிழ் முஸ்லிம் மக்­களை சிறப்­பாக இலக்கு வைத்­த­தாக அன்றி நாட்டின் சகல இனத்­த­வர்­க­ளதும் இலங்கைத் தனித்­துவம் உறு­திப்­ப­டுத்­தப்­படும் ஒரு வழி­மு­றை­யா­கவே அந்த வெளி­யீட்டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதா­வது சிறு­பான்­மை­யி­னரின் தேசிய பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தை­விட இலங்­கையின் தேசிய தனித்­துவம் பற்­றிய பிரச்­சினை தீர்வு பற்­றி­ய­தான ஒரு நோக்­காகும்.

முன்­வைக்­கப்­படும் இரண்­டா­வது தீர்வின் பின்­னணி பார­பட்சம் காட்­டா­தி­ருத்தல் என்ற விட­யத்தைப் பலப்­ப­டுத்­து­வ­தாகும். இது இலங்­கையின் இனப் பிரச்­சி­னையைத் தீர்ப்­பது தொடர்­பி­லான இழி­வ­ளவு யோச­னை­யாகும்.

மூன்­றா­வது விடயம், இலங்கை சமூ­கத்­தி­லுள்ள பன்­முகக் கலா­சா­ரத்தை அங்­கீ­க­ரிப்­ப­தாகும். இதுவும் லிபரல் (தாராண்­மை­வாத) அர­சியல் கோட்­பாட்டின் அண்­மைக்­கா­ல­மாக விருத்­தி­ய­டைந்த ஒரு கருத்­தாகும்.

இந்த மூன்று பிரே­ர­ணை­களும் முக்­கி­ய­மா­னவை. ஆயினும் இதனை இன்று தாராண்­மை­வாத (லிபரல்) அர­சியல் யாப்பு தொடர்­பி­லுள்ள மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட தீர்வுக் கட்­டங்கள் என்றே சொல்ல முடியும். தேசிய பிரச்­சி­னைக்கு வழங்கும் நிரந்­த­ர­மான தீர்வின் அடிப்­ப­டை­யாக அரசைப் புனர்­நிர்­மாணம் செய்­வது தொடர்­பான ஒரு எதிர்­கால நோக்கு இல்­லா­தி­ருப்­பதும் வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மற்றும் மலை­யகத் தமி­ழர்­களின் கோணத்தில் அதனைப் பார்க்­கா­தி­ருப்­பதும் இந்த தீர்வு செய­லொ­ழுங்கில் காணப்­படும் முக்­கிய குறை­பா­டாகும். நிறு­வனப் புனர்­நிர்­மாணம் மற்றும் சட்ட ரீதி­யான புன­ர­மைப்பு என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்ட வர­வேற்­கக்­கூ­டிய ஆனால், ஆகக் குறைந்­த­ள­வி­லான ஒரு பிர­வேசம் என்றே இதனைக் கூறலாம்.

அண்­மைக்­கா­ல­மாக விருத்­தி­ய­டைந்­துள்ள தீவிர சிங்­கள இன­வாதப் போக்­கு­க­ளுக்கு இசைந்து போவ­தாக இருக்­கக்­கூ­டிய சாத்­தி­யமே இவற்றில் பெரும்­பாலும் உள்­ளது. பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியை தேர்­தலில் தோற்­க­டிக்க வேண்­டு­மானால் தாமும் சிங்­கள பௌத்த இன­வாத சக்­தி­களைக் கவர வேண்டும் என்ற நிலைப்­பாட்டை எடுக்க வேண்டும் என்ற பிர­வேசம் மூன்று பிர­தான கட்­சி­க­ளிலும் உள்­ளீர்க்­கப்­பட்­டி­ருக்­கலாம்.

கவ­ன­மான பிர­வேசம்
இப்­போ­துள்ள அர­சியல் யாப்பு மாற்ற விவா­தத்­தின்­போது தேசியப் பிரச்­சினை தொடர்­பி­லான முற்­போக்­கான ஒரு பிர­வே­சத்தை தேர்ந்­தெ­டுத்­தி­ருப்­ப­வர்கள் நீதி­யான சமூ­கத்­துக்­கான தேசிய இயக்கம் மட்­டுமே. அதி­காரப் பர­வ­லாக்­கத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்­காக 13ஆவது யாப்புத் திருத்­தத்தை மேலும் விரி­வு­ப­டுத்­துதல், அதி­காரப் பரவல் அல­கு­க­ளாக மாகா­ணங்­களை தொடர்ந்தும் பேணுதல், அர­சியல் நிர்­வாக அமைப்பின் ஆகக் குறைந்த அல­கு­க­ளுக்கு அதிக அதி­கா­ரத்தை வழங்­குதல் என்­பன அவர்­க­ளது பிரே­ர­ணையில் இருக்கும் பிர­தான விட­யங்­க­ளாகும். இவை தேசிய பிரச்­சினை தீர்வு தொடர்­பாக தெற்­கி­லி­ருந்து முன்­வைக்­கப்­படும் முன்­னேற்­ற­க­ர­மான முன்­மொ­ழி­வாக இருக்­கலாம்.

இந்தப் பின்­ன­ணியில் நாம் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்ள போக்கு குறிப்­பாக சிங்­கள சமூ­கத்­துடன் உற­வாடும் பிர­தான அர­சியல் கட்­சிகள் தேசிய பிரச்­சி­னைகள் தொடர்பில் ‘கவ­ன­மான பிர­வேசம்’ என்ற பதத்­தினால் அறி­யப்­ப­டக்­கூ­டிய ஒரு பிர­வே­சத்தைத் தேடும் ஒரு கட்­டத்தை அடைந்­துள்­ள­மை­யாகும். இது இலங்கை அர­சி­யலில் 2015 இன் பின்னர் ஏற்­பட்ட மாற்­றங்­களைத் தொடர்ந்து ஏற்­பட்­டுள்ள நிலை என்­பதும் தெரி­கி­றது.

விசே­ட­மாக சிங்­கள சமூ­கத்தில் சிங்­கள பௌத்த இன­வா­தத்தின் எழுச்சி மற்றும் பொது­ஜன ஐக்­கிய முன்­னணி இந்­தி­யாவின் பார­தீய ஜனதா கட்சி ஹிந்­துத்­துவா கோட்­பாட்டைத் தூக்கிப் பிடித்­தி­ருப்­பது போன்று சிங்­கள பௌத்த நிகழ்ச்சி நிர­லொன்றை தொடர்ந்தும் முன்­வைக்கும் ஒரு பின்­ன­ணியில் இது இலங்கை அர­சி­யலில் ஏற்­பட்­டி­ரு­கின்ற ஒரு பின்­ன­டை­வா­கவும் வீழ்ச்­சி­யா­கவும் பார்க்­கப்­பட வேண்­டிய ஒன்­றாகும். அதனை அர­சியல் ரீதி­யாகத் தோற்­க­டிக்க வேண்டும். எனவே அதன் நகர்வை அவ­தா­னிக்க வேண்டும்.

பின்­ன­ணியும் நகர்வும்
இலங்­கையின் இன அர­சியல் தொடர்­பு­களில் காணப்­படும் அண்­மைக்­கால மற்றும் நிகழ்­கால நகர்­வு­களை பின்­வரும் வகையில் இனங்­கண்டு கொள்­ளலாம்.

(I) இனப் பிரச்­சினை, தேசிய பிரச்­சி­னையை அர­சியல் யாப்பு மறு­சீ­ர­மைப்பு மூலம் அர­சியல் ரீதி­யாகத் தீர்த்தல் என்­பது இப்­போது பிர­தான அர­சியல் கட்­சி­களின் நிகழ்ச்சி நிரலில் உள்ள ஒரு விட­ய­மாக இல்லை. அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில், அல்­லது பொதுத் தேர்­தலில் வெற்றி பெற்று அர­சாங்கம் அமைக்க எதிர்­பார்க்­கின்ற இப்­போது பத­வி­யி­லில்­லாத அர­சியல் கட்­சிகள் விட­யத்தில் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு குறித்துக் காணப்­ப­டு­வது கவ­ன­மா­னதும் இழி­வ­ள­வா­ன­து­மான ஒரு பிர­வே­சமே.

(II) இப்­போது பத­வி­யி­லுள்ள பொது­ஜன ஐக்­கிய முன்­னணி இலங்­கையின் இனத் தொடர்­புகள் பற்­றிய அர­சியல் திரைக்­கதை வச­னத்தை மறு­சீ­ர­மைத்து எழுதும் நோக்கில் இல்லை.
(அ) சிங்­கள பௌத்த இன­வாத அர­சி­யலின் ஆதிக்­கத்தை மீளக் கட்­ட­மைத்தல்
(ஆ) நடு­நிலை தமிழ் முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் தேசிய அர­சி­யலில் ஆற்றும் பங்­க­ளிப்பை பல­வீ­ன­மான இழி­வ­ளவு நிலைக்குக் கொண்டு வருதல்
(இ) முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளையும் அர­சியல் வகுப்­பையும் தமிழ் அர­சியல் வகுப்பின் சில பகு­தி­க­ளையும் அர­சியல் ரீதி­யாக வளைத்துப் பிடித்துக் கொள்ள பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியின் தலைமை ஆற்றல் பெற்­றுள்­ளமை ஆகிய செயற்­பா­டுகள் மூலமே இவற்றை செய்­துள்­ளது.

(III) பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியில் பசில், மகிந்த தலை­மையும் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் முன்­வைக்­கின்ற விட­ய­மா­னது இலங்கை தமிழ் முஸ்­லிம்­க­ளுக்கு அர­சியல் ரீதி­யான பிரச்­சினை கிடை­யாது என்­பதும் இருப்­ப­தெல்லாம் பொரு­ளா­தார மற்றும் அபி­வி­ருத்தி தொடர்­பான பிரச்­சி­னை­களே என்­ப­து­மாகும். எனவே அர­சியல் தீர்வு காண வேண்­டிய தேசிய பிரச்­சினை எதுவும் இலங்­கையில் இல்லை எனவும் இதன் மூலம் கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. ஐக்­கிய மக்கள் சக்தி, சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஜேவி­பியும் சிங்­கள பௌத்­த­வாத விளக்­கத்­துக்கு சவால் விடு­வ­தாக இல்லை. அரச மறு­சீ­ர­மைப்­புக்கு பதி­லாக குறைந்­த­பட்ச சட்ட மற்றும் நிறு­வன ரீதி­யான மறு­சீ­ர­மைப்பு என்ற புதிய மாற்று வழியை அவர்கள் தெரி­வு­செய்து கொள்­வ­தற்­கான பிர­தான கார­ண­மாக இருப்­பதும் இந்த விட­ய­மாகும்.

(IV) சிங்­கள அர­சியல் கட்­சி­களின் தலை­மைகள் மலை­யகத் தமிழர், வடக்கு கிழக்கு தமிழர், முஸ்­லிம்கள் என்­ப­வர்­களை நோக்கி எப்­போதும் முன்­வைக்க ஆயத்­த­மா­க­வுள்ள அர­சியல் தீர்வு பெரும்­பாலும் தமது ஆதிக்­கத்தின் கீழ் அமைக்­கப்­படும் இனங்­க­ளுக்கு இடை­யி­லான போலிக் கூட்­டாட்சி நிர்­வாக அமைப்பின் அங்­கத்­து­வ­மாகும். இது 1947 முதலே சிங்­கள அர­சியல் வகுப்­பினர் பரீட்­சித்­துள்ள பிரித்­தாளும் தந்­தி­ரத்தை முன்­கொண்டு செல்­வ­தாகும்.

நேரடி யுத்­த­மல்­லாத வேறு வழி­களில் தமிழ் முஸ்லிம் அர­சியல் தலை­மை­களை தம் பக்கம் வளைத்துக் கொள்ளும் ராஜ­பக்ச மூலோ­பா­யத்தைப் பற்றி சிங்­கள அர­சியல் தலை­மைகள் இப்­போ­தெல்லாம் ஆர்­வத்­துடன் அவ­தா­னித்­தி­ருப்­ப­தா­கவும் கூற முடியும். இது இலங்­கையின் இனத் தொடர்­புகள் பற்­றிய அர­சியல் முகா­மைத்­து­வத்­துக்­காக உரு­வா­கி­யுள்ள ராஜ­பக்­ச­வாத பிர­வே­சத்தைப் பொது­மைப்­ப­டுத்தல் என்றும் அறி­முகம் செய்­யலாம்.

(V)- இலங்­கையின் இனங்கள் தொடர்­பான அர­சியல் பற்றி எதிர்­கா­லத்தில் எதிர்­பார்க்­கப்­படும் அர­சியல் கருத்­தாடல் பெரும்­பாலும் இத்­த­கைய பெய­ர­ளவு தீர்வு நோக்­கி­ய­தா­கவே அமையும். அதன் பிர­தான அம்­சங்­க­ளாக
(அ) சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் அல்­லாத பொரு­ளா­தார மற்றும் அபி­வி­ருத்தி தீர்வு முன்­வைக்­கப்­படல்
(ஆ) மேலோட்­ட­மாகச் செய்­யப்­படும் குறைந்­த­ளவு யாப்பு மாற்­றங்கள் மூலம் அர­சியல் ரீதி­யாக முக்­கி­யத்­து­வ­மற்ற பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு திட்­டங்கள் முன்­வைக்­கப்­ப­டுதல்.

(VI)- தமிழர் தேசிய கூட்­டணி தவிர்ந்த ஏனைய எந்தக் கட்­சியும் தேசிய பிரச்­சினை அவ­ச­ர­மாகத் தீர்க்­கப்­பட வேண்­டிய முக்­கி­ய­மான ஓர் அர­சியல் பிரச்­சி­னை­யாக கரு­தாமல் இருக்க இட­முண்டு.

(VII)- இலங்கை தற்­போது எதிர்­நோக்கும் கூர்­மை­யான பொரு­ளா­தார நெருக்­கடி, சமூக நெருக்­கடி மற்றும் அபி­வி­ருத்தி தொடர்­பான சவால்­களின் முன்னே இருளில் அங்­கு­மிங்கும் துலா­விக்­கொண்­டி­ருக்கும் அர­சியல் கட்­சி­க­ளுக்கும் அர­சியல் ஜாம்­ப­வான்­க­ளுக்கும் வேறு அர­சியல் சவால்கள் பற்றி சிந்­திப்­ப­தற்­கான ஆற்றல் உள்­ளதா என்­பது சந்­தே­கமே. இலங்கை இனக்­கு­ழுக்­க­ளுக்கு இடை­யி­லான அதி­காரத் தொடர்­பு­களும் அதி­காரச் சம­நி­லையும் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு தீமை பயக்கும் வித­மாக மாற்றம் பெற்­றி­ருப்­பது தொடர்ந்து நீடிக்கும் பின்­ன­ணியில் இந்­நி­லை­மையில் மாற்றம் கொண்­டு­வ­ரு­வது என்­பது சற்று சிர­ம­மான விட­யமே.

(VIII)- அடுத்த ஜனா­தி­பதி மற்றும் பொதுத் தேர்தல் நெருங்கும் வரை இலங்­கையின் அர­சியல் முறை மற்றும் யாப்பு மாற்றக் கலந்­து­ரை­யா­டல்­களில் தேசிய பிரச்­சினைத் தீர்வு என்ற கருத்து உள்­வாங்­கப்­ப­டுதல் எவ்­வாறு நிகழும் என்­பது தெளி­வில்லை. அதற்கு பிர­தான அர­சியல் கட்­சிகள் தயா­ரில்­லாத சூழலில் அக்­கட்­சிகள் இனங்­க­ளுக்கு இடை­யி­லான சுயா­தீ­ன­மா­னதும் பரந்­து­பட்­ட­து­மான ஒரு முயற்­சியின் தேவை எழுப்­பப்­ப­டு­கின்­றது.

மேற்­படி விட­யங்­களில் இருந்து விளங்­கு­வது இலங்கை அர­சி­யலில் ஓர் இடை­வெளி அல்­லது வெறுமை நிலை உரு­வா­கி­யி­ருப்­ப­தாகும். அது இனப்­பி­ரச்­சினை தீர்வு மட்­டு­மன்றி இலங்­கையின் அர­சியல் பாதையை ஜன­நா­யக வழியில் திருப்­புதல் மற்றும் உக்­கி­ர­ம­டையும் பொரு­ளா­தார சமூக நெருக்­க­டியை எதிர்­நோக்­குதல் ஆகிய மூன்று கருப்­பொ­ருள்­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் கொடுக்கும் ஒரு புதிய அர­சியல் கலந்­து­ரை­யா­டலை ஆரம்­பிப்­ப­தற்­கான அவ­கா­ச­மு­மாகும். அதா­வது இலங்கை அர­சி­யலை புதிய பாதைக்குத் திருப்­பு­வதை நோக்­காகக் கொண்டு செயற்­படும் அர­சியல் கட்­சிகள் மற்றும் உரு­வாகும் கட்­சி­யல்­லாத அர­சியல் இயக்­கங்­க­ளுக்­கான அவ­கா­ச­மு­மாகும். 2014ஆம் 2015ஆம் ஆண்­டு­களின் அனு­ப­வங்­களின் ஒரு சாத­க­மான பக்­கத்தை நாம் இங்கு நினை­வு­கூ­ரலாம். அது யாதெனில் அர­சியல் கட்­சி­களில் இருந்து தூர­மான பிர­சைகள் மற்றும் சிவில் சமூக முயற்­சிகள் மூலம் நாட்டின் அர­சியல் பாதைக்கு சவால்­விடக் கூடி­யதும் அதனைத் திசை­தி­ருப்பக் கூடி­ய­து­மான ஆற்றல் மிக்க ஓர­ள­வுக்­கேனும் மாற்று அர­சியல் பார்­வையும் நிகழ்ச்சித் திட்­டமும் முன்­மொ­ழி­யப்­பட்­ட­மையே.

புதிய பின்­னணி
இத்­த­கைய புதி­ய­தொரு சமூக முயற்சி ஏற்­ப­டு­வ­தற்­கான ஒரு சூழல் தற்­போது உரு­வா­கி­யுள்­ளது. அந்தப் பின்­னணி மற்றும் அவ­கா­சத்­தி­னூ­டாக எழும் பிர­சைகள் மற்றும் சிவில் சமூக இயக்கம் பின்­வரும் பண்­பு­க­ளுடன் இருக்க வேண்டும் என்று தெரி­கி­றது.

(I)- அதன்­மூலம் முன்­னெ­டுக்­கப்­படும் மாற்­று­நோக்கும் நிகழ்ச்சி நிரலும் வலி­யு­றுத்­தப்­பட வேண்­டி­யுள்­ளவை.
(அ) நாட்டின் பொரு­ளா­தார சமூக நெருக்­க­டியை முகா­மைத்­து­வப்­ப­டுத்­தலும் தீர்வு காண்­பதும்
(ஆ) ஜன­நா­யக மய­மாக்கல் மற்றும் தீவிர ஆதிக்­க­வாத அர­சியல் சீர­ழிவைத் தடுத்து நிறுத்­துதல்
(இ) இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்த்தல்

ஆகிய மூன்று நோக்­கங்­களும் ஒன்­றுடன் மற்­றொன்று தொடர்­பு­டைய ஒன்­றி­லி­ருந்து மற்­றதைப் பிரிக்க இய­லாத விட­யங்கள் என்­ப­தாகும். அவற்றை ஒன்­றி­லி­ருந்து ஒன்றைப் பிரித்­தெ­டுத்தல் அர­சியல் கட்­சி­களின் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­க­ளின்­போது பொருத்­த­மாக இருப்­பினும் சிவில் சமூக இயக்­க­மொன்றின் நிர்­ண­யிக்­கப்­பட்ட பண்­பாக இருக்க வேண்­டி­யது; அந்த நோக்­கங்­களின் இடைத் தொடர்­பையும் பரஸ்­பர பிரிக்க முடி­யாத தன்­மை­யையும் காண்­ப­தாகும்.

(II)- அத்­த­கை­ய­தொரு முயற்­சியின் அர­சியல் பலம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட முடி­யு­மா­வது அது இலங்­கையின் சகல இனங்­க­ளையும் சேர்ந்த சமூகக் குழுக்­க­ளும் அர­சியல் செயற்­பாட்­டா­ளர்­களும் பங்­கு­பற்ற முடி­யு­மான வகை­யி­லான இன­ரீ­தி­யா­கவும் பிர­தேச ரீதி­யா­கவும் பன்­மைத்­து­வ­மான பங்­கு­பற்றல் இருந்­தா­லே­யாகும். அது எந்த வகை­யிலும் சிங்­கள பௌத்த பெரும்­பான்மை அமைப்­பாக இருக்கக் கூடாது.
தேசிய பிரச்­சினை பற்றி பேசும்­போது அது சிறு­பான்­மை­யி­னரின் தேவை­யாக மட்­டுப்­ப­டுத்தும் தவறை மீண்டும் செய்­யா­தி­ருப்­பது அப்­போ­துதான்.

(III)- 2013–-2015 ஆண்­டு­க­ளின்­போது ஜன­நா­ய­கத்­திற்கு திரும்­பிய காலப்­ப­கு­தியில் “நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையை ஒழித்தல்” என்ற தனிப்பட்ட ஒரு கோசம் எழுந்தமை தனியான ஒரு நோக்கத்தின் அடிப்படையிலான கட்சிகளுக்கு அப்பால் நிற்கும் ஓர் இயக்கத்தின் பலத்தினாலாகும். ஆயினும் அதன் மட்டுப்பாடுகளும் காலக்கிரமத்தில் கண்டறியப்பட்டது. அந்த அனுபவத்தை இனப் பிரச்சினை தீர்வுடன் தொடர்புபடுத்தினால் அவற்றை சிறுபான்மை மக்களின் கட்சிகளின் தேர்தல் கோசங்களாக சுருக்கிக் கொள்ளக் கூடாது. அத்துடன் தமிழ் முஸ்லிம் பிரசைகள் இனம் என்ற வகையில் அனுபவிக்கும் அழுத்தங்கள் மற்றும் கவலைகள் தொடர்பில் அவர்களது இனத்துக்கே உரிய தீர்வுகளை முன்மொழிவதுடன் அந்தப் போராட்டத்தை சிங்கள இனத்தின் பிரசைகள் சமூக நீதிக்காக மேற்கொள்ளும் போராட்டங்களுடன் தொடர்புபடுத்தும் ஓர் அரசியல் முன்நோக்கும் கடியெழுப்பப்பட வேண்டும்.

இங்கு எழும் இரண்டு இடைக்கால முடிவுகளை வலியுறுத்தி எமது இக்கலந்துரையாடலை நிறைவு செய்யலாம். இனப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலை புதிய பாணியிலான ஒரு மாற்று அரசியல் நோக்குடன் தொடர்புபடுத்துதல், மற்றும் இனத் தொடர்பு அரசியலுக்கு இன்று இலங்கையில் ஏற்பட்டிருப்பது முன்னே செல்ல முடியாத வகையில் ஸ்தம்பித்து இருக்கின்ற நிலை அதாவது டெட்லொக் ஆக்கப்பட்டிருப்பதால் அதனை உடைத்து முன் செல்ல முடியுமான ஒரு சாதக நிலையாகும். இரண்டாவது, இனப் பிரச்சினைக்குத் தீர்வு சிறுபான்மையினரதும் பெரும்பான்மை சிங்கள மக்களினதும் உரிமைகள், சமூக நீதி, சமத்துவம், பொருளாதார, சமூக உரிமைகள் மற்றும் ஜனநாயக மயமாக்கல் தொடர்பான மொத்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும் என்பதால் சிங்கள மக்களும் நன்மையடையும் ஓர் இயக்கம் என்ற கருத்தை அரசியல் கலந்துரையாடலுக்குள் கொண்டு வருவதாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.