ஹிஜா­ஸுக்கு எதி­ராக இர­க­சிய வாக்குமூல­ம­ளிக்க சாட்­சி­யா­ள­ருக்கு சட்­டத்­த­ர­ணியை ஏற்­பாடு செய்­து­கொ­டுத்த சி.ஐ.டி.

குறுக்கு விசா­ர­ணை­களில் வெளிப்­பட்ட பல உண்­மைகள்

0 318

எம்.எப்.எம்.பஸீர்

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக கடந்த 2020 மே 12 ஆம் திகதி, கோட்டை நீதிவான் நீதி­மன்றின் அப்­போ­தைய நீதிவான் ரங்க திஸா­நா­யக்க ( தற்­போது மேல் நீதி­மன்ற நீதி­பதி) முன்­னி­லையில் இர­க­சிய வாக்­கு­மூ­ல­ம­ளிக்க, சி.சி.டி.யின் அதி­காரி ஒருவர் மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக் எனும் சாட்­சி­யா­ள­ருக்கு சட்­டத்­த­ரணி ஒரு­வரை ஏற்­பாடு செய்து கொடுத்­துள்­ளமை தொடர்­பி­லான தக­வல்கள் தற்­போது வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ரான வழக்கில் புத்­தளம் மேல் நீதி­மன்றில் அரச தரப்பின் பிர­தான சாட்­சி­யா­ள­ராக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் புத்­தளம், அல் சுஹை­ரியா மத­ர­ஸாவின் முன்னாள் மாணவன் எனக் கூறப்­படும் மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக்கின் சாட்­சியம் ஊடாக இந்த தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கடந்த 18 ஆம் திகதி மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக், ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்வின் சட்­டத்­த­ர­ணியின் குறுக்கு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து சாட்­சி­ய­ம­ளித்தார்.இதன்­போது மனோ­கர டி சில்வா எனும் சட்­டத்­த­ர­ணியை சி.ஐ.டி. அதி­காரி தனக்கு ஏற்­பாடு செய்து தந்­த­தா­கவும், தான் நீதிவான் முன்­னி­லையில் இர­க­சிய வாக்கு மூல­ம­ளிக்கும் போது, அச்­சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்வின் புகைப்­ப­டங்­களைக் காட்டி அடை­யாளம் காண உதவி செய்­த­தா­கவும், இர­க­சிய வாக்கு மூலம் பெறும் சந்­தர்ப்­பத்தில் அச்­சட்­டத்­த­ர­ணியும் நீதி­வானின் அறையில் இருந்­த­தா­கவும் சாட்­சி­யாளர் மலிக் குறிப்­பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலைத் தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் தற்­போது சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் சுஹை­ரியா மத்­ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகி­யோ­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு கடந்த 18 ஆம் திகதி அவ்­வ­ழக்கை விசா­ரிக்­க­வென விஷே­ட­மாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள சிலாபம் மேல் நீதி­மன்றின் நீதி­பதி குமாரி அபே­ரத்ன முன்­னி­லையில் புத்­தளம் மேல் நீதி­மன்றில் இறு­தி­யாக விசா­ர­ணைக்கு வந்­தி­ருந்­தது.

அன்­றைய தினம், பிணையில் உள்ள சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த நிலையில், விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 2 ஆம் பிர­தி­வா­தி­யான அல் சுஹை­ரியா மத்­ரசா அதிபர் சகீல் கான் சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் மன்­றுக்கு அழைத்து வரப்­பட்­டி­ருந்தார்.

முதல் பிர­தி­வா­தி­யான சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் சார்பில் ஆஜ­ராகும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளிந்த இந்­ர­திஸ்­ஸவின் குறுக்கு விசா­ர­ணைகள் பிர­தா­ன­மாக குறித்த தினத்­தன்று இடம்­பெற்­றன.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திக­திக்கும் 31 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் புத்­தளம் அல் சுஹை­ரியா மத்­ர­ஸாவில் கல்வி பயின்ற மாண­வர்­க­ளுக்கு, கற்­றுக்­கொ­டுக்­கப்­பட்ட சொற்கள் ஊடா­கவோ, தவ­றான பிரதி நிதித்­துவம் ஊடா­கவோ பல்­வேறு மதங்­க­ளுக்கு இடையில் மோதல் ஏற்­படும் வண்ணம் எதிர் உணர்­வு­களை தூண்டும் வித­மாக சொற் பொழி­வினை நடாத்­தி­யமை, அதற்­காக சதி செய்­தமை தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 2 (1) எச் பிரி­வுடன் இணைத்து கூறப்­படும் அச்­சட்­டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் தொடர்பில், ‘ இஸ்­ரே­லி­யர்கள் கைப்­பற்­றி­யி­ருப்­பது, எமது பள்­ளி­வா­சல்கள். இலங்­கையில் கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கு எதி­ராக தாக்­குதல் நடத்­தி­னா­லேயே அவர்கள் அச்­சப்­ப­டுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடி­யோக்­களை கண்­பித்­தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலை­மையை ஏற்­ப­டுத்தும் வண்ணம் உணர்­வு­களை தூண்­டி­ய­தாக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) எச் பிரி­வுடன் இணைத்து நோக்­கப்­படும் அச்­சட்­டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

குறித்த இரு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் உதவி ஒத்­தாசை புரிந்­த­தாக சுஹை­ரியா மத்­ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்­க­ர­வாத தடைச் சட்ட ஏற்­பா­டுகள் பிர­காரம் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்­பி­லான யுத்த வீடியோ காட்­சி­களை காண்­பித்து ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் கூறி­ய­தாக கூறப்­படும் வச­னங்கள் ஊடாக வெறுப்­பு­ணர்­வு­களை விதைத்­தாக குற்றம் சுமத்தி சிவில் அர­சியல் உரி­மைகள் குறித்­தான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் 3 (1) ஆம் உறுப்­பு­ரை­யுடன் இணைத்து பார்க்­கப்­படும் அச்­சட்­டத்தின் 3 (3) ஆம் உறுப்­பு­ரையின் கீழ் குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ரா­கவும், அதற்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை தொடர்பில் மத்­ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீ­லுக்கு எதி­ரா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் கடந்த 18 ஆம் திகதி வழக்கு விசா­ர­ணைக்கு வந்த போது, முதலில் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் கடந்த தவணை விசா­ரணை பதி­வு­களில் உள்ள சில பிழைகள் திருத்தம் செய்­யப்­பட்­டன. 7 தவ­றுகள் இவ்­வாறு திருத்தம் செய்­யப்­பட்­டன.

வழக்குத் தொடுநர் சார்பில் அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி லக்­மினி கிரி­ஹா­கம, அரச சட்­ட­வாதி கிஹான் குண­சே­க­ர­வுடன் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்வா மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

முதல் பிர­தி­வாதி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­தன, சட்­டத்­த­ரணி ஹபீல் பாரிஸ் உள்­ளிட்­டோ­ருடன் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளிந்த இந்­ர­திஸ்ஸ ஆஜ­ரானார். 2 ஆம் பிர­தி­வா­தி­யான அதி­ப­ருக்கு சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள பிர­சன்­ன­மானார்.

இவ்­வ­ழக்­கினை இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் விஷே­ட­மாக மேற்­பார்வை செய்யும் நிலையில் அதற்­காக சட்­டத்­த­ரணி அனுஷா கன்­னங்­க­ர­வுடன் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுர மெத்­தே­கொட பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார்.
இந் நிலை­யி­லேயே ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளிந்த இந்­ர­திஸ்ஸ குறுக்கு விசா­ர­ணை­களை ஆரம்­பித்தார்.

கடந்த தவணை ( 2022 ஜன­வரி 28 ஆம் திகதி)சாட்­சி­யாளர் நீதி­மன்றில் வழக்குத் தொடுநர் தரப்பின் நெறிப்­ப­டுத்­தலில் வழங்­கிய சாட்­சி­யங்­களில் கூறிய விட­யங்­களை மையப்­ப­டுத்தி அவர் குறுக்கு விசா­ர­ணை­களை ஆரம்­பித்தார்.

அதன்­படி, இந்த விவ­கா­ரத்தில் சி.ஐ.டி.யின­ருக்கு முதல் வாக்கு மூலத்தை தான் தன் வீட்­டுக்கு அருகே உள்ள ஒரு இடத்தில் வைத்து வழங்­கி­ய­தா­கவும் அது கடந்த 2020 ஏப்ரல் 20 ஆம் திகதி வழங்­கப்­பட்­டது என்­ப­தையும் சாட்­சி­யாளர் வெளிப்­ப­டுத்­தினார். அதனைத் தொடர்ந்து 2 ஆம் வாக்கு மூலத்தை மறுநாள் அதா­வது 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி சி.ஐ.டி.யில் வைத்து வழங்­கி­ய­தா­கவும், அன்­றைய தினம் சி.ஐ.டி.யினர் தன் வீட்­டுக்கு வந்து தன்­னையும் தனது சகோ­த­ர­னையும் சி.ஐ.டி.க்கு அழைத்துச் சென்று வாக்கு மூலத்தை பதிவு செய்­த­தா­கவும் சாட்­சி­யாளர் குறுக்கு விசா­ர­ணை­க­ளி­டையே கூறினார்.

இந்த வாக்கு மூலத்தை வழங்கச் செல்ல முன்னர், 2020 ஏப்ரல் 20 ஆம் திகதி இரவு வேளையில் தான் அனைத்து விட­யங்­க­ளையும் நினை­வு­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். அவ்­வாக்கு மூலம் வழங்கும் போதும், தான் ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்வின் பெயரை அறிந்­தி­ருக்­க­வில்லை எனவும் சி.ஐ.டி.யினர் புகைப்­ப­டங்­களை காட்­டிய போது புகைப்­ப­டத்­தையே அடை­யாளம் கண்­ட­தா­கவும், அவர்­களே ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் என பெயரை தெரி­வித்­த­தா­கவும் சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார். மூன்­றா­வது சி.ஐ.டி. வாக்கு மூலம் கடந்த 2021 பெப்­ர­வரி 13 ஆம் திகதி தன்னால் வழங்­கப்­பட்­டது எனவும் அவ்­வாக்கு மூலம், தான் அப்­போது வேலை­பார்த்த நீர்­கொ­ழும்பு, கட்­டான வர்த்­தக நிறு­வ­னத்­துக்கு வந்த சி.சி.டி. அதி­கா­ரி­களால் பெறப்­பட்­டது எனவும் சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.

குறித்த அனைத்து வாக்கு மூலங்­க­ளிலும் தனக்கு தெரிந்த, மிக முக்­கி­ய­மான, கண்­டிப்­பாக வெளிப்­ப­டுத்­த­வேண்­டிய அனைத்து விட­யங்­க­ளையும் கூறி­ய­தாக சாட்­சி­யாளர் கூறினார்.

அதன்­ப­டியே, இந்த விவ­கா­ரத்தில் தான் அறிந்த, முக்­கி­ய­மான தக­வல்கள் அனைத்­தையும், எந்த அழுத்­தங்­களும் இன்றி, சுயா­தீ­ன­மாக சி.ஐ.டி.யின­ருக்கும், நீதி­வா­னுக்கும், வழக்கு விசா­ரணை இடம்­பெறும் மேல் நீதி­மன்றில் சாட்­சி­ய­மா­கவும் தெரி­வித்­த­தாக குறிப்­பிட்ட சாட்­சி­யாளர் ஏற்­க­னவே கடந்த 2022 ஜன­வரி 28 ஆம் திகதி வழங்­கிய சாட்­சி­யத்தில் கூறிய விட­யங்­களை சி.ஐ.டி. அதி­கா­ரி­க­ளி­டமும் தெரி­வித்­த­தாக குறிப்­பிட்டார்.
அதன் படி, கடந்த 2022 ஜன­வரி 28 ஆம் திகதி சாட்­சி­யாளர் மலிக் தான் அறிந்த மிக முக்­கி­ய­மா­னது என கருதும் விட­யங்கள் அனைத்­தையும் சாட்­சி­ய­மாக வழங்­கி­ய­தாக கூறிய நிலையில், அதில் கூறப்­பட்ட விட­யங்கள் எவையும் சி.சி.டி.யின் 3 வாக்கு மூலங்­க­ளிலும் சாட்­சி­யா­ளரால் எந்த சந்­தர்ப்­பத்­திலும் கூறப்­ப­ட­வில்லை என குறுக்கு கேள்­வி­களை தொடுத்து ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளிந்த இந்­ர­திஸ்ஸ மன்­றுக்கு பிரஸ்­தா­பித்தார்.

குறிப்­பாக, முதல் பிர­தி­வா­தி­யான ஹிஜாஸ், அல் சுஹை­ரியா மத்­ர­சா­வுக்கு வந்து, அங்­கி­ருந்த சுமார் 60 மாண­வர்­க­ளுக்கு மத்­தியில் விரி­வுரை ஒன்­றினை நடாத்­தி­ய­தா­கவும் (சாட்­சி­யாளர் பயன்­ப­டுத்­திய சொல் லெக்சர்) அதன்­போது ஒவ்­வொ­ரு­வ­ரையும் எழுந்து தம்மை அறி­முகம்( சாட்­சி­யாளர் பயன்­ப­டுத்­திய சொல் இன்ட்­ர­டியூஸ்) செய்­து­கொள்­ளு­மாறு கூறி­ய­தா­கவும், பின்னர் ஒவ்­வொ­ரு­வ­ரி­டமும் அவர்­க­ளது இலட்­சியம் ( சாட்­சி­யாளர் பயன்­ப­டுத்­திய சொல் எம்­பிஷன்) தொடர்பில் வின­வி­ய­தா­கவும் சாட்­சி­யாளர் கடந்த தவ­ணையில் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

இதன்­போது புரொ­ஜெக்டர் ஒன்­றினை பயன்­ப­டுத்தி பலஸ்தீன் – இஸ்ரேல் விவ­கார காட்­சி­களைக் காட்டி, பலஸ்­தீனில் கிறிஸ்­த­வர்கள் எங்­க­ளது பள்­ளி­வா­ச­லையே ஆக்­கி­ர­மித்­துள்­ள­தா­கவும், போரா­டு­வ­தற்கு தயா­ரா­ன­வர்கள் யார் என கேட்­ட­தா­கவும், சிலர் விருப்பம் தெரி­வித்து கை உயர்த்­தி­ய­தா­கவும் சாட்­சி­யாளர் கடந்த தவணை ( 2022.ஜன­வரி 28) சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

இந்த விட­யங்கள் சாட்­சி­யா­ளரின் முதல் 3 சி.ஐ.டி. வாக்கு மூலங்­களில் ஒன்­றி­லேனும் கூறப்­ப­ட­வில்லை என்­பதை ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நலிந்த இந்­ர­திஸ்ஸ மன்­றுக்கு குறுக்கு விசா­ர­ணைகள் ஊடாக பிரஸ்­தா­பித்து அவற்றை பதிவு செய்தார்.
மிக முக்­கி­ய­மா­னது என கூறி சாட்­சி­யா­ளரால் கடந்த தவ­ணையில் நீதி­மன்றில் குறிப்­பி­டப்­பட்ட அந்த விட­யங்கள், சி.சி.டி. விசா­ர­ணையின் போது எந்த சந்­தர்ப்­பத்­திலும் கூறப்­ப­ட­வில்லை என்­பதை அவர் மன்றில் சுட்­டிக்­காட்­டினார்.

இது தொடர்பில் சாட்­சி­யா­ள­ரிடம் வின­வப்­பட்ட போது, தனக்கு அவற்றை சி.ஐ.டி.யின­ரிடம் கூறி­னேனா இல்­லையா என்­பது தொடர்பில் ஞாபகம் இல்லை எனவும், வாக்கு மூலத்தில் அவை உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கா­விட்டால் தான் கூற­வில்லை என ஏற்­ப­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார்.

இந் நிலை­யி­லேயே இந்த விவ­கா­ரத்தில், கடந்த 2020 மே 12 ஆம் திகதி கோட்டை நீதி­வா­னுக்கு வழங்­கப்­பட்ட இர­க­சிய வாக்கு மூலத்தை மையப்­ப­டுத்தி கேள்­விகள் தொடுக்­கப்­பட்­டன. அந்த இர­க­சிய வாக்கு மூலத்தில் ஹிஜாசின் பெயரைக் கூட பிர­தி­வாதி கூற­வில்லை எனவும், அவ்­வாக்­கு­மூ­லத்­திலும் மிக முக்­கி­ய­மான விட­ய­மாக கருதி சாட்­சி­யா­ளரால் மன்றில் கூறப்­பட்ட மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட விட­யங்கள் எவையும் கூறப்­ப­ட­வில்லை எனவும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளிந்த இந்­ர­திஸ்ஸ மன்றில் பதிவு செய்தார்.

இத­னி­டையே, கோட்டை நீதி­மன்றில் இர­க­சிய வாக்கு மூலம் வழங்கச் சென்ற போது உங்­க­ளுக்­காக சட்­டத்­த­ரணி ஒருவர் ஆஜ­ரா­னாரா? அவர் யார்?, அவரை நீங்­களா அல்­லது உங்கள் தாயாரா ஏற்­பாடு செய்தார் போன்ற கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த சாட்­சி­யாளர்,
‘ கோட்டை நீதிவான் முன்­னி­லையில் இர­க­சிய வாக்கு மூலம் அளிக்க சென்ற போது எனக்­காக சட்­டத்­த­ரணி ஒருவர் ஏற்­பாடு செய்­யப்­பட்டார். சி.ஐ.டி. அதி­காரி ஒரு­வரே சட்­டத்­த­ர­ணியை ஏற்­பாடு செய்தார். சட்­டத்­த­ர­ணியின் பெயர் மனோ­கர டி சில்வா. ஏற்­பாடு செய்த சி.சி.டி. அதி­கா­ரியின் பெயர் எனக்கு தெரி­யாது. எனினும் அவரை கண்டால் அடை­யாளம் காட்­டலாம். இந்த விட­யத்தில் விசா­ரணை செய்த சி.ஐ.டி. அதி­கா­ரியே சட்­டத்­த­ர­ணியை ஏற்­பாடு செய்தார். எனக்கோ, எனது தாயா­ருக்கோ சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் பழக்கம் இருக்­க­வில்லை.’ என சாட்­சி­ய­ம­ளித்தார்.

அத்­துடன் மற்­றொரு சந்­தர்ப்­பத்தில், தொடுக்­கப்­பட்ட குறுக்கு கேள்­விக்கு பதி­ல­ளித்த சாட்­சி­யாளர், இர­க­சிய வாக்கு மூலம் வழங்க நீதி­வானின் அறைக்குள் அழைத்துச் செல்­லப்­பட்ட போது சி.ஐ.டி. அதி­கா­ரியால் தனக்கு ஏற்­பாடு செய்து தரப்­பட்ட சட்­டத்­த­ர­ணியும் உடன் இருந்­த­தா­கவும், வாக்கு மூலம் பதிவு செய்­யப்­படும் போது அவர் ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்வின் புகைப்­ப­டத்தை தனக்கு காண்­பித்­த­தா­கவும், அத­னூ­டாக அவரை அடை­யாளம் கண்­ட­தா­கவும் தெரி­வித்தார்.

இந் நிலையில், குறித்த இர­க­சிய வாக்கு மூலத்தில் கூறப்­பட்ட விட­யங்கள் ஊட­கங்­க­ளுக்கு கசிந்­தது எப்­படி என கோட்டை நீதி­வானின் உத்­த­ர­வுக்கு அமைய சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரி­வினர் ஆரம்­பித்த விசா­ர­ணை­க­ளிலும், இவ்­வ­ழக்கின் பிர­தான சாட்­சி­யா­ள­ரான மலிக் வாக்கு மூல­ம­ளித்­துள்ள நிலையில், அவ்வாக்கு மூலம் அவசியம் எனவும், அது இதுவரை அதனை கோரிய போதும் கிடைக்கவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ குறிப்பிட்டார்.

அதில் இவ்­வ­ழக்­குடன் தொடர்­பு­டைய விட­யங்கள் கூறப்­பட்­டி­ருக்­கலாம் என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இந் நிலையில் அதற்கு பதிலளித்த அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, அவ்வாக்கு மூலம் இவ்வழக்குடன் நேரடியாக தொடர்புபடாதது எனவும், எனினும் அவ்வாக்கு மூலத்தை பார்வையிட அவசியம் என பிரதிவாதிகள் கருதுவாராயின் அதற்கு தாம் எதிர்ப்பில்லை எனவும் குறிப்பிட்டார். அதற்கு நீதிமன்றமே தேவையான உதவிகளை செய வேண்டும் எனவும், சி.சி.டி. பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டு அந்த வாக்கு மூலம் அடங்கிய புத்தகத்தை நீதிமன்றுக்கு எடுத்துவரச் செய்து அதனை பார்வையிட அனுமதிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந் நிலையில் இரு தரப்பு விட­யங்­க­ளையும் ஆராய்ந்த நீதி­பதி குமாரி அபே­ரத்ன, குறித்த விவ­கார வாக்கு மூலம் அடங்­கிய புத்­த­கத்தை அல்­லது புத்­த­கங்­களை அடுத்த தவ­ணையின் போது எடுத்­து­வ­ரு­மாறு சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரிக்கு உத்­த­ர­விட்டார்.

அதன்­படி இவ்­வ­ழக்கின் மேல­திக குறுக்கு விசா­ர­ணைகள் எதிர்­வரும் ஜூன் 10 ஆம் திக­திக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டன. வழக்கில் விளக்­க­ம­றி­யலில் உள்ள 2 ஆம் பிர­தி­வா­தி­யான மத்­ரஸா அதிபர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.