கப்பல் நுழையாத ஒலுவில் துறைமுகம்

0 4,878

றிப்தி அலி

“அம்­பாறை மாவட்­டத்தின் ஒலுவில் கடற்­க­ரை­யோ­ரத்தில் 75 தென்னை மரங்­க­ளுடன் காணப்­பட்ட எனது தோட்டம், கடந்த 2013ஆம் ஆண்டு காணாமல் போய்­விட்­டது. இக்­கா­ணிக்­கான உறுதி என்­னிடம் இருந்தும் காணி இல்லை” என்­கிறார் 50 வய­தான ஏ.எல்.எம். ஜெமீல்.

முப்­பது வரு­டங்கள் நாட்டில் இடம்­பெற்ற யுத்­த­த்தினால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் காணாமல் போயுள்­ளனர். இது இலங்­கையில் பெரும் பிரச்­சி­னை­யொன்­றாக காணப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான நிலை­யி­லேயே, ஒலு­விலைச் சேர்ந்த மீன­வ­ரான ஜெமீல், தனது காணியைக் காண­வில்லை என்­கிறார்.

தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழகம் அமையப் பெற்­றுள்ள ஒலுவில் பிர­தே­சத்தின் கிழக்குப் பகுதி கடற்­க­ரையைக் கொண்­ட­தாகும். சுமார் ஆறு கிலோ மீற்றர் நீள­மான இந்த கடற்­கரைப் பகு­தியில் துறைமுகம் ஒன்றை அமைப்­ப­தற்­கான திட்டம் அப்­போ­தைய துறை­முக அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்­ர­பினால் முன்­மொ­ழி­யப்­பட்டு 1998.10.23ஆம் திகதி வர்த்தமானி அறி­வித்தல் மூலம் பிர­க­ட­ன­மா­னது.

ஆனாலும் இதன் நிர்­மாணப் பணிகள் 2008.07.01ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்டு 2013.09.01ஆம் திகதி அப்­போ­தைய ஜனா­தி­ப­தியும் துறை­முக அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக திறந்­து­வைக்­கப்­பட்­டது.

வர்த்­தகம் மற்றும் மீன்­பிடி என்று இரண்டு பகு­தி­களைக் கொண்ட இத்­து­றை­முகம் சுமார் 52 ஏக்கர் நிலப்­ப­ரப்­பினைக் கொண்­டுள்­ளது. இதற்­காக ஒலுவில் மற்றும் அதனை அண்­டிய பால­முனை ஆகிய பிர­தே­சங்­க­ளி­லுள்ள பொது­மக்­களின் காணி­களும் சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

“காணி சுவீ­க­ரிக்­கப்­பட்­டவர்களுக்கு 7 கோடி 71 இலட்­சத்து 55ஆயி­ரத்து 662 ரூபா இது­வ­ரையில் நஷ்­ட­ஈ­டாக வழங்­கப்­பட்­டுள்­ளது” என துறை­முக அதி­கார சபை தெரி­வித்­தது. எனினும் சில காணி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு, இன்னும் நஷ்­ட­ஈடு கிடைக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

வர்த்தக கப்­பல்­க­ளுக்கு சரி­யான துறை­முகம், கரை­யோர சலு­கை­களை வழங்கல் மற்றும் கரை­யோர மார்க்­கத்தை முன்­னேற்றல், சீமெந்து மற்றும் உரம் தொழிற்­சாலை உரு­வாக்­கு­வ­தற்­கான முத­லீட்­டா­ளர்­களை உள்­ளீர்த்தல், மீன் உற்­பத்­தி­யினை அதி­க­ரிப்­பதன் மூலம் வெளி­நாட்டு முத­லீ­டு­களை உள்­ளீர்த்து தொழில் வாய்ப்­பு­களை வழங்கல், கடலின் ஆழ­மான பகு­தி­களில் பய­ணிக்­கின்ற மீன்­பிடி பட­குகள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை தீர்த்தல் போன்ற பல முக்­கிய விட­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே இந்தத் துறை­முகம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது என துறை­முக அதி­கார சபை தெரி­வித்­தது.

இதே­வேளை, ஒலுவில் துறை­முக நிர்­மா­ணத்­திற்­காக டென்மார்க் நோர்­டியா வங்கி மூலம் 4 கோடி 60 இலட்­சத்து 95ஆயி­ரத்து 369 யூரோ மற்றும் 45 சதம் வட்­டி­யில்லாக் கட­னாக இலங்கை அர­சுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இன்­றைய நாணயப் பெறு­ம­தியில் இந்தத் தொகை­யா­னது 1,069 கோடி 19 இலட்­சத்து 34 ஆயி­ரத்து 870 ரூபா­வாகும்.
2011.03.31ஆம் திக­தி­யி­லி­ருந்து 10 ஆண்­டு­க­ளிற்குள் 20 தவ­ணை­களில் செலுத்தி தீர்க்கும் நிபந்­த­னையில் இக்­கடன் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இதற்­க­மைய 2015.09.30ஆம் திக­தி­ய­ளவில் இக்­கடன் தொகையில் 2 கோடியே 30 இலட்­சத்து 4 ஆயி­ரத்து 634 யூரோ­ செலுத்தவேண்டியுள்ளதாக கணக்­காய்­வாளர் நாய­கத்தின் அறிக்­கை­யொன்றில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இக்­க­டனை திருப்பிச் செலுத்தும் பணி திறை­சே­ரி­யி­னா­லேயே முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தானால் இது தொடர்பான தகவல் எதுவும் எம்­மி­ட­மில்லை என துறை­முக அதி­கார சபை குறிப்­பிட்­டது.

இத்­து­றை­முக நிர்­மாணப் பணிகள் டென்மார்க் கம்­ப­னிக்கே வழங்­கப்­பட வேண்டும் என ஒப்­பந்­தத்தில் குறிப்­பி­டப்­பட்­ட­தற்கு அமைய MT Hojgaard எனும் நிறு­வ­னமே இதன் நிர்­மாணப் பணி­களை மேற்­கொண்­டது.

இந்தத் துறை­முகம் திறக்­கப்­பட்டு எட்டு வரு­டங்கள் கழிந்த நிலை­யிலும் வர்த்­தகத் துறை­முகம் இன்னும் செயற்­படத் தொடங்­கா­மை­யினால் ஒரு கப்பல் கூட இந்த துறை­மு­கத்­திற்கு இது­வரை வர­வில்லை.

எனினும், மீன்­பிடித் துறை­முகம் மாத்­திரம் ஒரு குறிப்­பிட காலப்­ப­கு­தியில் இயங்­கி­யது. அத­னை­ய­டுத்தே இயற்­கைக்கு பெரும் அழிவு ஆரம்­ப­மா­னது. இத்­து­றை­முக நிர்­மா­ணத்தின் பின்பு துறை­மு­கத்தின் வடக்குப் பக்­க­மாக பல நூறு மீற்றர் நிலப்­ப­ரப்பை, கடல் விழுங்­கி­விட்­டது. இதனால் காணியை இழந்­தவர்களில் ஒருவர் தான் ஏ.எல்.எம். ஜெமீல்.
சுமார் 30 வரு­டங்­க­ளாக பரா­ம­ரித்து வந்த தென்னந் தோட்டம் கண் முன்­னா­லேயே கட­ல­ரிப்­புக்­குள்­ளாகி அழி­வ­டைந்­தமையை பொறுக்க முடி­யா­துள்­ளது என வேத­னைப்­பட்ட ஜெமீல், “இதற்­காக அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து இது­வரை எந்­த­வித நஷ்­ட­ஈடும் கிடைக்­க­வில்லை” என்றார்.

இலங்­கையின் மேற்கு பக்க நிலப்­ப­ரப்பு “துறை­முக நக­ர­மாக” கட­லினுள் அதி­க­ரித்துச் செல்­கின்ற சம­யத்தில், கிழக்குப் பக்­க­மாக செயற்­கை­யாக உரு­வாக்­கப்­பட்ட துறை­மு­கத்­தினால் நிலப்­ப­ரப்­பினுள் கடல் புகுந்­துள்­ளது. (பார்க்க வரைபடம் 1)

“இக்­க­ட­ல­ரிப்பு கார­ண­மாக இன்று எங்­க­ளது கிராமம் அழிந்­து­விட்­டது. இத்­து­றை­மு­கத்­தினால் எமது ஊரிற்கு இவ்­வ­ளவு பாதிப்பு ஏற்­படும் என்று நாங்கள் கன­விலும் கூட நினைக்­க­வில்லை” என்­கிறார் 52 வய­தான மீனவர் எம்.எஸ்.ஜெமீல்.

துறை­மு­கத்­தினால் ஊர் அழி­வ­டையும் என்ற விடயம் முன்­னரே தெரிந்­தி­ருந்தால், இதன் நிர்­மாணப் பணி­க­ளுக்கு எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருப்போம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
இதே­வேளை, “இக்­க­ட­ல­ரிப்பு நவம்பர் முதல் பெப்­ர­வரி வரை­யான காலப் பகு­தி­யி­லேயே அதி­க­மாகும். இதனால் மீன்­பிடித் தொழிலை ஒழுங்­காக மேற்­கொள்ள முடி­யா­மையின் கார­ண­மாக பாரிய பொரு­ளா­தார பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­யுள்ளோம்” என நிந்­தவூர் பிர­தே­சத்­தினைச் சேர்ந்த நான்கு பிள்­ளை­களின் தந்­தை­யான பீ. லத்தீப் தெரி­வித்தார்.

“இந்த கட­ல­ரிப்பு தொடர்ந்தால் எமது பரம்­ப­ரையே அழிந்­து­விடும்” என அவர் மேலும் கூறினார். 52 வய­தான லத்தீப் கடந்த 25 வரு­டங்­க­ளாக மேற்­கொண்டு வரு­கின்ற மீன்­பிடித் தொழிலை நம்­பியே அவ­ரது குடும்பம் வாழ்­கின்­றது.

இத்­து­றை­மு­கத்­தினால் பாரிய சுற்­றாடல் பாதிப்பு மாத்­தி­ர­மல்­லாமல் ஆயி­ரக்­க­ணக்­கான குடும்­பங்­களின் வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அவர்களின் நிலங்­களும் சூறை­யா­டப்­பட்­டுள்­ளன.

அம்­பாறை மாவட்­டத்தின் கரை­யோர பிர­தே­சங்­க­ளான ஒலுவில், அட்­ட­ப்பள்ளம், நிந்­தவூர், காரை­தீவு, மாளி­கைக்­காடு மற்றும் சாய்ந்­த­ம­ருது ஆகிய பிர­தே­சங்­களில் ஏற்­பட்­டுள்ள இந்த கட­ல­ரிப்­பினால் மீன்­பிடித் தொழில் மாத்­தி­ர­மன்றி, நன்னீர் மீன்­பிடி, தென்னந் தோட்டம், பண் பயிர்ச்­செய்கை மற்றும் விவ­சாயம் ஆகி­யன முற்­றாக பாதிப்­ப­டைந்­துள்­ளன.

இக்­க­ட­ல­ரிப்பு கார­ண­மாக நிந்­தவூர் பிர­தேச செய­லக பிரிவில் 148 ஏக்கர் தனியார் காணிகள் கட­லுக்குள் மூழ்­கி­யுள்­ள­துடன், சுமார் 120 ஏக்கர் தனியார் காணிகள் பகு­தி­ய­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இதில் 45 சத­வீதம் விவ­சாயம் மற்றும் தென்னங் காணி­களும், 33 சத­வீதம் விவ­சாய காணி­களும், 12 சத­வீதம் தென்னங் காணி­களும் காணப்­ப­டு­கின்­றன. இக்­கா­ணி­களின் விளைச்­சலும் பாரி­ய­ளவில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

“எமது பிர­தே­சத்தில் ஏற்­பட்­டுள்ள கட­ல­ரிப்­பினை தடுப்­ப­தற்கு பாறாங் கற்கள் போடு­வ­தற்கு மேல­தி­க­மாக மண் திட்டும் (Sand Barrier) போட வேண்­டி­யுள்­ளது. இதன் ஊடாக பகு­தி­ய­ளவில் பாதிக்­கப்­பட்ட 120 ஏக்கர் காணி­யினை பாது­காக்க முடியும்” என நிந்­தவூர் பிர­தேச செய­ல­கத்­தினால் தயா­ரிக்­கப்­பட்டு காணி அமைச்சின் கீழுள்ள காணிப் பயன்­பாடு கொள்கைத் திட்­ட­மிடல் திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

1948ஆம் ஆண்டு முதல் ஒலு­விலில் செயற்­பட்டு வந்த தும்புத் தொழிற்­சா­லையும் இக்­க­ட­ல­ரிப்­பினால் செய­லி­ழந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இதே­வேளை, “இக்­க­ட­ல­ரிப்­பினால் ஏற்­பட்ட பாதிப்­புக்கள், வழங்­கப்­பட்ட நஷ்­ட­ஈடு தொடர்பான எந்த தர­வு­களும், இத்­து­றை­முகம் அமை­யப்­பெற்­றுள்ள அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­ல­கத்தில் இல்லை” என அங்­குள்ள உயர் அதி­கா­ரி­க­ளினால் தெரி­விக்­கப்­பட்­டது.

இக்­க­ட­ல­ரிப்பைத் தடுப்­ப­தற்­காக துறைசார் நிபுணர்களின் ஆலோ­ச­னை­யுடன் பல மில்­லியன் ரூபா செலவில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அர­சாங்­கத்­தினால் இப்­பி­ர­தே­சங்­களில் பாறாங்­கற்கள் போடப்­பட்டு வரு­கின்­றன.

இது­வரை ஒலுவில் பிர­தே­சத்தில் 1,050 மீற்­றரும், நிந்­தவூர் பிர­தே­சத்தில் 45 மீற்­றரும், காரை­தீவு மற்றும் மாளி­கைக்­காடு பிர­தே­சத்தில் 150 மீற்­ற­ரிலும் பாறாங்­கற்கள் போடப்­பட்­டுள்­ள­துடன் எதிர்­கா­லத்­திலும் இந்த நட­வ­டிக்கை தொடர்ச்சியாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கரை­யோரம் பேணல் மற்றும் கரை­யோர மூல­வள முகா­மைத்­துவ திணைக்­க­ளத்தின் அம்­பாறை மாவட்ட பிராந்­திய பொறி­யி­ய­லாளர் காரி­யா­லயம் தெரி­வித்­தது.
இருந்­த­போ­திலும், கட­ல­ரிப்பின் தீவிரம் குறை­வ­டை­ய­வில்லை. அது மாத்­தி­ர­மல்­லாமல் துறை­மு­கத்தின் வடக்குப் பக்­கத்­தி­லுள்ள மண் தெற்குப் பக்கம் நோக்கி இழுத்துச் செல்­லப்­பட்­ட­மை­யினால் வடக்குப் பக்கம் நிலப்­ப­ரப்பு குறை­வ­டைய, தெற்குப் பக்கம் நிலப்­ப­ரப்பு அதி­க­ரிக்­கின்­றது.

அது­மாத்­தி­ர­மல்­லாமல், வடக்­கி­லி­ருந்து இழுத்துச் செல்­லப்­பட்ட மண் துறை­மு­கத்தின் நுழை­வா­யிலை மூடி மண் மேடாக இன்றும் காட்­சி­ய­ளிப்­ப­தையும், கட்­டாக்­காலி மாடு­களின் தரிப்­பி­ட­மாக இத்­து­றை­முகம் மாறி­யுள்­ள­தையும் ஏர்த் ஜேர்னலிசம் நெட்வர்கின் அனு­ச­ர­ணை­யுடன் மேற்­கொள்­ளப்­பட்ட கள விஜ­யத்தின் போது நேர­டி­யாக அவ­தா­னிக்க முடிந்­தது.

இந்த மண் மேடு கார­ண­மாக மீன்­பிடித் துறை­மு­கத்தில் தரித்து நின்ற பட­குகள் கட­லுக்குள் சென்று வர முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ள­மை­யினால் 2018.09.23ஆம் திக­தி­யுடன் மீன்­பிடி துறை­மு­கத்தின் செயற்­பா­டுகள் அனைத்தும் இடை­நி­றுத்­தப்­பட்­டன.

இந்த மீன்­பிடித் துறை­முகம் செயற்­பட்ட காலப் பகு­தியில் அம்­பாறை மாவட்­டத்தின் மீன் உற்­பத்தி அதி­கரித்து காணப்­பட்­ட­தாக கடற்­றொழில் நீரியல் வளத் திணைக்­கள கல்­முனை மாவட்ட காரி­யா­லயம் தெரி­வித்­தது.

இதே­வேளை, “பல மில்­லியன் ரூபா செலவில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு இன்று செய­லி­ழந்­துள்ள ஒலுவில் துறை­மு­கத்தின் பரா­ம­ரிப்­பிற்­காக மாதாந்தம் 56 லட்சம் ரூபா செல­வ­ழிக்­கப்­ப­டு­கின்­றது” என துறை­முக அதி­கார சபை, தகவல் அறியும் விண்­ணப்­பத்­திற்கு வழங்­கிய பதிலில் தெரி­விக்­கின்­றது.

“இத்­து­றை­முகம் ஒழுங்­கான முறையில் நிர்­மா­ணிக்­கப்­ப­டா­மையே கட­ல­ரிப்பு ஏற்­ப­டு­வ­தற்­கான பிர­தான கார­ண­மாகும்” என சூழ­லி­ய­லாளர் கலா­நிதி அஜந்த பெரேரா தெரி­வித்தார்.

சுற்­றாடல் பாதிப்பு தொடர்பான மதிப்­பீட்டின் பிர­காரம் இந்தத் துறை­முகம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்தால் கட­ல­ரிப்பு ஒரு­போதும் ஏற்­பட்­டி­ருக்­காது எனவும் அவர் கூறினார்.
“சிலரின் தேவை­க­ளுக்­காக மிக அவ­ச­ர­மாக இத்­து­றை­முகம் நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­மை­யி­னா­லேயே இப்­பா­திப்பு தற்­போது ஏற்­பட்­டுள்­ளது” என சூழ­லி­ய­லாளர் அஜந்த பெரேரா குற்­றஞ்­சாட்­டினார்.

எவ்­வா­றா­யினும், சுற்­றாடல் பாதிப்பு தொடர்பான மதிப்­பீடு மேற்­கொள்­ளப்­ப­டா­ம­லேயே இத்­து­றை­முகம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ள­தாக துறைசார் நிபுணர்கள் தெரி­விக்­கின்­றனர். இக்­குற்­றச்­சாட்­டினை நிரா­க­ரித்த துறை­முக அதி­கார சபை, மத்­திய பொறி­யியல் உசாத்­துணை பணி­ய­கத்தின் (CECB) மூலம் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள சுற்­றாடல் பாதிப்பு அறிக்­கை­யினை அதி­கார சபையின் நூல­கத்தில் பார்­வை­யி­டலாம் என்­றது.

ஆனாலும், “இந்தத் துறை­மு­கத்தின் வடி­மைப்பில் ஏற்­பட்ட தவ­றுதான் இப்­பி­ர­தே­சத்தில் கட­ல­ரிப்பு ஏற்­ப­டு­வ­தற்­கான பிர­தான கார­ண­மாகும் என தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபி­வி­ருத்தி முகா­மை­ய­கத்தின் (NARA) சமுத்­தி­ர­வியல் விஞ்­ஞானி கலா­நிதி கே. அரு­ளா­னந்தம் தெரி­விக்­கிறார்.

இத்­து­றை­மு­கத்தின் அலை தாங்­கிகள் (Break Water) கடல் நீரோட்­டத்­தினை குறுக்­கீடு செய்யும் வகையில் கடற்­க­ரைக்கு செங்­குத்­தாக அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் கடல் நீரோட்­டத்­து­ட­னான மண்­ணோட்டம் தடைப்­ப­டு­கின்­ற­மை­யினால் துறை­முக நுழை­வா­யிலில் மண் மேடு ஏற்­ப­டு­வ­துடன் வடக்கு பக்­கத்தில் கட­ல­ரிப்பும் ஏற்­ப­டு­கின்­றது என அவர் கூறினார்.
“அலை தாங்­கிக்­காக போடப்­பட்ட கற்­களை தொழி­நுட்ப ரீதி­யாக மாற்றி கட்­டி­ய­மைக்க வேண்­டி­யுள்­ளது. இதற்கு பாரிய நிதித் தேவைப்­படும்” என கலா­நிதி அரு­ளா­னந்தம் மேலும் தெரி­வித்தார்.

இதே­வேளை, “இந்த மீன்­பிடி துறை­மு­கத்­தினை நம்பி பல மில்­லியன் ரூபாய்­களை முத­லிட்­டவர்கள் இன்று நடுத் தெருவில் நிற்­கின்­றனர்” என அம்­பாறை மாவட்ட ஆழ்­கடல் மீன்­பிடி கூட்­டு­றவு சங்­கத்தின் தலை­வ­ரான எம்.எஸ்.எம். நசீர் தெரி­வித்தார்.
இவர்களின் பட­குகள் தற்­போது வாழைச்­சேனை மீன்­பிடி துறை­மு­கத்தில் நங்­கூ­ர­மி­டப்­பட்­டுள்­ளன. இதனால் சொல்­லொன்னா துய­ரங்­களை இந்த மீனவர்கள் அனு­ப­வித்து வரு­கின்­றனர் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இந்த மீனவர்களின் பிரச்­சி­னை­யினை தீர்ப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நசீர், துறை­முக நுழை­வா­யிலில் காணப்­ப­டு­கின்ற மண் மேட்டை அகற்­றினால் மாத்­தி­ரமே மீன்­பிடி நட­வ­டிக்­கை­யினை மேற்­கொள்ள முடியும் என்றார்.

இந்த மேட்டில் உள்ள மண்ணை தனியார் கம்­ப­னிக்கு விற்­பனை செய்­வதன் ஊடாக அர­சாங்­கத்­திற்கு கிடைக்கும் பாரிய வரு­மா­னத்தின் ஊடாக இந்த மீன்­பிடி துறை­மு­கத்­தினை இல­கு­வாக சரி செய்ய முடியும் என நசீர் நம்­பிக்கை வெளி­யிட்டார்.
இவ்­வா­றான நிலையில், மீன்­பிடி துறை­மு­கத்­தினை கடற்­றொழில் அமைச்­சிற்கு கைய­ளிப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ள­துடன் துறை­முக அதி­கார சபையும் சம்­மதம் வெளி­யிட்­டுள்­ளது.

இந்த துறை­முகம் தொடர்பில் பல ஆய்­வு­களை NARA மேற்­கொண்டு மீன்­பிடி துறை­முக கூட்­டுத்­தா­ப­னத்­திற்கு வழங்­கி­யுள்­ளது போன்று இக்­க­ட­ல­ரிப்­பினால் பாதிக்­கப்­ப­டு­கின்ற தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கமும் பல்­வேறு ஆய்­வு­களை தொடர்ச்சியாக மேற்­கொண்டு வரு­கின்­றது.

“மீன்­பி­டிக்கு பிர­பல்­ய­மான கிராமம் என்ற நாமத்­தினை கட­ல­ரிப்­பினால் ஒலுவில் இன்று இழந்து விட்­டது” என தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் புவி­யியல் விரி­வு­ரை­யாளர் கே. நிஜாமீர் தெரி­வித்தார்.

இந்தக் கட­ல­ரிப்­பினை ஒரு­போதும் முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. எனினும், கடற்­க­ரை­யோ­ரங்­களில் கண்டல் தாவ­ரங்கள் வளர்ப்பதன் ஊடாக இதனை தற்­கா­லி­க­மாக கட்­டுப்­ப­டுத்த முடியும் என அவர் குறிப்­பிட்டார்.

அது மாத்­தி­ர­மல்­லாமல், இறுதி மூன்று வரு­டங்­களின் கடல் அலையின் தர­வு­களை எடுத்து ஆய்வு செய்­வதன் ஊடாக இப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வொன்­றினை பெற முடியும் என விரி­வு­ரை­யாளர் நிஜாமீர் நம்­பிக்கை வெளி­யிட்டார்.

இது போன்று கிரிந்த மீன்­பிடி துறை­மு­கத்தில் ஏற்­பட்ட பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­காக குறித்த துறை­மு­கத்­தினை நிர்மாணிப்பதற்கு செலவாகிய நிதியைப் போன்று ஐந்து மடங்கு நிதி செலவிடப்பட்டே ஓரளவு தீர்வு கிடைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், கடல் மட்டம் உயர உயர கடலரிப்பு ஏற்படுவதனை ஒருபோதும் தடுக்க முடியாது என கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிராந்திய பொறியியலாளர் கே.எம். றிபாஸ் தெரிவித்தார்.

ஒலுவில் கடலின் உட் பகுதியிலும், வெளிப் பகுதியிலும் பாறாங் கற்கள் போடப்பட்டமையினாலேயே அக்கிராமம் தற்போது கடலரிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த துறைமுகத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால், இப்பிரதேசத்தின் கடலரிப்பு மேலும் அதிகரிக்கும் என்கிறார் பொறியியலாளர் றிபாஸ். ஆனாலும், இப்பிரச்சினையினை இலகுவில் சீர் செய்துவிடலாம் என கடற்றொழில் அமைச்சு நம்புகிறது.

இதேவேளை, “இயற்கைக்கு பாதிப்பற்ற வகையில் விஞ்ஞான ரீதியாக குறித்த மீன்பிடி துறைமுகத்தினை செயற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தார்.

தற்போது துறைமுக நுழைவாயிலில் தங்கியுள்ள மண்ணின் மூன்றில் ஒரு பங்கினை கடலுக்குள் போடுவிட்டு மற்றைய பங்கினை விற்பனை செய்வதன் ஊடாக துறைமுகத்தினை மீள இயக்குவதற்கான செலவினை ஈடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.

“இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்த மீன்பிடி துறைமுகத்தினை இயக்க முடியும்” என அவர் நம்பிக்கை வெளியிட்டார். எவ்வாறாயினும் கடந்த எட்டு வருடங்களாக தீர்க்க முடியாதுள்ள இப்பிரச்சினையினை அடுத்த மூன்று மாதங்களுக்குள் தீர்த்துவிட முடியுமா என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.