கர்தினாலை முன்மாதிரியாகக் கொண்டு உலமா சபை சமூகத்திற்காக குரலெழுப்ப வேண்டும்

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி வேண்டுகோள்

0 434

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் சமூகம் பல்­வேறு சவால்­களை எதிர்­நோக்­கி­யுள்ள இன்­றைய சூழலில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை சமூ­கத்தின் தலை­மைப்­பொ­றுப்­பினை ஏற்­க­வேண்டும். எவ்­வித அர­சியல் மற்றும் இயக்­க­சார்­பின்­றிய உலமா சபையின் செயற்­பா­டு­க­ளையே சமூகம் எதிர்­பார்க்­கி­றது என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத்­சாலி அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­ச­பை­யிடம் வேண்­டுகோள் விடுத்தார்.

அசாத்­சாலி இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைமைக் காரி­யா­ல­யத்­துக்கு விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு முஸ்­லிம்­களின் சம­கால பிரச்­சி­னைகள் தொடர்பில் உலமா சபையின் நிர்­வாக உறுப்­பி­னர்­க­ளு­டனும், பொதுச் செய­லாளர் அர்கம் நூரா­மித்­து­டனும் கலந்­து­ரை­யா­டினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் எவ்­வித குற்­றமும் புரி­யாத பெரும் எண்­ணிக்­கை­யி­லான முஸ்லிம் இளை­ஞர்கள் அர­சினால் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அவர்­களின் உரி­மை­க­ளுக்­காக உலமா சபை குரல் எழுப்ப வேண்டும். பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் தமது சமூ­கத்­துக்­காக பல சவால்­களை எதிர்­கொண்ட நிலையில் போராடி வரு­கிறார். அவரை உலமா சபை உதா­ர­ண­மாகக் கொள்ள வேண்டும்.

இஸ்லாம் சமய பாடநூல் விவ­காரம், கூர­கல தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் விவ­காரம் என்­ப­வற்றில் உலமா சபை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சமூ­கத்தை நல்­வ­ழிப்­ப­டுத்த வேண்­டி­யதும் அவர்­க­ளது உரி­மை­களைப் பாது­காக்­க­வேண்­டி­யதும் உலமா சபையின் கட­மை­யாகும் என்று வேண்டிக் கொண்டார்.
உலமா சபை மற்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலிக்கிடையிலான மேலுமொரு சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.