முஸ்லிம் சமூகத்தைப் பழிவாங்கவா இஸ்ரேலின் உதவியை நாடுகிறது இலங்கை?

0 400

எம்.எம்.ஸுஹைர்
ஜனாதிபதி சட்டத்தரணி,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

இலங்­கையில் இடம்­பெற்ற படு­ப­யங்­க­ர­மான மனித உரிமை மீறல்கள் தொடர்­பான புதுப்­பிக்­கப்­பட்ட அறிக்­கையை ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் உயர் ஸ்தானிகர் மிச்செல் பாச்லெட், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இம்­மாதம் 28ஆம் திகதி சமர்ப்­பிக்­க­வி­ருக்­கிறார்.

குறிப்­பாக இலங்­கையில் நடப்­ப­தாக கூறப்­படும் இத்­த­கைய உரிமை மீறல்­களைக் கண்­கா­ணிப்­ப­தற்கு கடந்த ஆண்டில் ஜெனீ­வாவில் நிறு­வப்­பட்ட விசேட பொறி­மு­றை­யா­னது ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவை பலப்­ப­டுத்த வழி­வ­குத்­தது. அந்த சிறப்புப் பொறி­மு­றைக்கு ‘இலங்கை பொறுப்­புக்­கூறல் திட்டம்’ என்று பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.
கடந்த 26 ஜன­வரி 2021 அன்று ஐ.நா மனித உரி­மைகள் உயர் ஸ்தானிகர் அலு­வ­லகம் வெளி­யிட்ட முன்­னைய அறிக்­கையில் “தேசிய அளவில் பொறுப்­புக்­கூ­றலை முன்­னெ­டுப்­பதில் அர­சாங்­கத்தின் ‘இய­லாமை மற்றும் விருப்­ப­மின்மை’ தெளி­வாக நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. இந்­நி­லையில், சர்­வ­தேச குற்­றங்­க­ளுக்­காக நீதியை நிலை­நி­றுத்­து­வ­தற்­கான சர்­வ­தேச நட­வ­டிக்கை எடுக்க வேண்­டிய நேரம் வந்­துள்­ளது” எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த சூழ்­நி­லையில் இம்­முறை ‘இலங்­கையில் அனைத்துத் தரப்­பி­ன­ராலும் இழைக்­கப்­பட்ட சர்­வ­தேச குற்­றங்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் மற்றும் வழக்­கு­களை அவர்­களின் தேசிய நீதி­மன்­றங்­களில் தொடர்­வ­தற்கு’ ஆணைக்­கு­ழுவின் உயர் ஸ்தானிகர் பாச்லெட், ஐ.நா.வின் உறுப்பு நாடு­களை மீண்டும் ஒரு­முறை மிகவும் அழுத்­த­மாக வலி­யு­றுத்­த­வுள்ளார்.

நாட்டில் அத்­தி­யா­வ­சிய உணவு மற்றும் எரி­பொருள் துறை­களில் மட்­டு­மல்­லாது சர்­வ­தேச ரீதி­யிலும் இலங்கை நிலை­கு­லைந்து தட்டுத் தடு­மா­றிக்­கொண்­டி­ருப்­பது தெளி­வாகத் தெரி­கி­றது. இலங்கை அரசின் பொறுப்­புக்­கூ­றலை மழுங்­க­டிக்கும் முன்­னெ­டுப்பை ஜெனீவா அடை­யாளம் கண்­டுள்­ளது. ஜெனீ­வாவை தள­மாகக் கொண்ட ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் பெப்­ர­வ­ரி, -மார்ச் மாதங்­களில் நடை­பெற இருக்கும் வழக்­க­மான அமர்­வு­களில், வகை­கூறும் பொறுப்­பு­ணர்ச்­சியில் இலங்­கையின் இய­லாமை மற்றும் விருப்­ப­மின்மை குறித்த விடயம் முக்­கிய பேசு பொரு­ளாக எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

இலங்கை அர­சாங்­கத்தின் உரிமை மீறல்­க­ளுக்­கான பொறுப்­புக்­கூ­றலில் உள்ள தெளி­வான இய­லாமை மற்றும் விருப்­ப­மின்மை கார­ண­மாக விதிக்­கப்­படும் தண்­ட­னைகள், ஐ.நா. உறுப்பு நாடு­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தா­கவே இருக்கும். பாரிய மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­ட­தாகக் கூறப்­படும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் போன்ற தண்­ட­னைகள் விதிக்­கப்­ப­டலாம். குற்­ற­வா­ளி­களில் கணி­ச­மான அரச அதி­கா­ரிகள், மனித உரிமை மீறல்­களைத் தடுக்கத் தவ­றிய அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்கள், மனித உரி­மைகள் சார்ந்த கட­மை­களை நிறை­வேற்றத் தவ­றிய அரச வழக்­க­றி­ஞர்கள், நீதி­ப­திகள் என தண்­ட­னைக்கு உட்­படும் நபர்­களின் பட்­டியல் விரிந்து செல்லும்.

இந்த விட­யத்தில் அமெ­ரிக்­காவின் கடந்­த­கால நடை­மு­றை­க­ளின்­படி இலக்கு வைக்­கப்­பட்ட தண்­ட­னைகள் குற்றம் சாட்­டப்­பட்ட குற்­ற­வா­ளி­களின் குடும்ப உறுப்­பி­னர்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தா­கவே இருக்கும். இலங்­கையின் அப்­பாவி குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு இத்­த­கைய தண்­ட­னைகள் விதிக்­கப்­ப­டு­வது எத்­த­கைய அதிர்ச்­சி­யையும் தரு­வ­தில்லை. காரணம் இலங்கை மக்கள் இவ்­வா­றான தண்­ட­னை­களை ஏன் எதற்கு என்று தெரி­யா­ம­லேயே அனு­ப­வித்து வரு­கின்­றனர். இலங்­கையில் அதற்­கான பல வழக்­குகள் ஆதா­ரங்­க­ளாக பதி­வா­கி­யுள்­ளன. உதா­ர­ண­மாக ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்று குற்றம் சாட்டி நேரடி குடும்ப உறுப்­பி­னர்­களை கைது செய்து பல மாதங்­க­ளாக தடுத்து வைத்த சம்­ப­வங்கள் ஏராளம் உண்டு. அவர்களில் ஒரு சிலர் சட்­டமா அதி­பரின் பரிந்­து­ரையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். உதா­ர­ணத்­திற்கு ஒரு வழக்கில் தேயிலை ஏற்­று­ம­தி­யாளர் ஒருவர், இரண்டு வரு­டங்­களும் ஒன்­பது மாதங்­களும் அரச தடுப்புக் காவலில் இருந்த பின்னர் விடு­விக்­கப்­பட்டார். இலங்­கையில் கடு­மை­யான மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்­கான தண்­ட­னை­யாக விசா மறுக்­கப்­ப­டு­வ­தா­னது, அவர்­க­ளு­டைய குடும்ப உறுப்­பி­னர்­க­ளையும் மருத்­துவம், கல்வி அல்­லது பிற நோக்­கங்­க­ளுக்­காக செல்­வ­தற்கு அனு­ம­திக்கும் நாடு­க­ளுக்குச் செல்­வதைக் கூட தடுக்­கலாம். இது ஒரு­வேளை நடந்தால், குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளான நபர்கள் அந்­தந்த உறுப்பு நாடு­க­ளுக்குச் செல்லும் போது கைது செய்­யப்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யமும் உள்­ளது.

மனித உரி­மைகள் மீதான ‘கிரி­மினல்’ மீறல்கள் வழக்­கு­களில் முன்னர் விதந்­து­ரைத்­துள்ள தண்­ட­னைகள் போது­மா­னது அல்ல என வாதி­டு­ப­வர்­களும் உள்­ளனர். மீறல்கள் தங்கள் அதி­கார வரம்­பிற்குள் வரும்­போது அவற்றைச் சீர்­செய்­வ­தற்கு அரச வழக்­க­றி­ஞர்­களும் நீதித்­து­றையும் உட­னடி நட­வ­டிக்கை எடுப்­பதைத் தவிர்ப்­ப­தற்கும் எதிர்­பார்த்த தண்­ட­னைகள் போதாது என்றே அவர்கள் கரு­து­கின்­றனர். எவ்­வா­றா­யினும் ஜெனீ­வாவின் இலங்கை பொறுப்­புக்­கூறல் பொறி­முறை திட்­டத்தை மதிப்­பி­டு­வ­தற்கு எதிர்­வரும் 2022 மார்ச் அமர்­வு­களின் முடி­வுகள் வெளி­யாகும் வரை நாம் பொறுத்­தி­ருக்க வேண்டும்.

கிறிஸ்­தவ திருச்­சபை சர்­வ­தேச விசா­ர­ணையை நாடாது?

சென்ற 2022 பெப்­ர­வரி 8 ஆம் திக­தி­யன்று இலங்­கையில் உள்ள கத்­தோ­லிக்க திருச்­சபை தனது நீதிக்­கான போராட்­டத்தை சர்­வ­தே­ச­ம­ய­மாக்கத் தயா­ராக இருப்­ப­தாக அறி­வித்­தது. இதற்கு, சுமார் 90 நாடு­களில் தூதுப் பணி­ம­னை­களைக் கொண்ட செல்­வாக்­கு­மிக்க வத்­திக்கான் பாப்­ப­ரசர் பிரான்சிஸ் தனது ஆத­ரவை முழு­மை­யா­ரக வழங்­கி­யி­ருந்­தமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது. ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தல்கள் சர்­வ­தேச சதி என்று கொழும்பு பேராயர் 21 ஜூலை 2019 அன்று கட்டு­வாப்­பிட்டி தேவா­ல­யத்தில் ஆற்­றிய உரை­யா­னது உல­க­ளவில் மேற்­கோள்­காட்­டப்­பட்ட செய்­தி­யாகும். அவ்­வு­ரையில் உலகின் அதி­சக்­தி­வாய்ந்த வல்­ல­ரசு நாடொன்றை பெயர் குறிப்­பி­டாமல் அவர் சுட்டிக் காட்­டினார். இந்தப் பின்­ன­ணியில் இங்­குள்ள திருச்­சபை சர்­வ­தேச ‘விசா­ர­ணையை” நாடு­வது அதிகம் சாத்­தி­ய­மில்லை. மேலும் போப் பிரான்சிஸ் தனது 2021 ஈஸ்டர் செய்­தியில், ‘உலகம் பேர­ழிவு தரும் தொற்­று­நோயால் துய­ருற்­றி­ருக்கும் நிலையில் ஆயுதக் கொள்­வ­ன­வு­க­ளுக்­காக செலவு செய்த” உலக வல்­ல­ர­சு­களை கடு­மை­யாக சாடினார். எனினும் ஈஸ்டர் ஞாயிறு துன்­பியல் தாக்­கு­தல்­களில் கொல்­லப்­பட்ட மக்­களின் நலன்­களைக் கவ­னிப்­ப­தற்­காக ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் முழு நேர ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணியை நிய­மித்த திருச்­சபை, ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் வர­வி­ருக்கும் அமர்­வு­களைக் கண்­கா­ணிக்கவும் ஒரு தூதுக்­கு­ழுவை நிய­மிக்கப் பின்­னிற்கப் போவ­தில்லை.
கடந்த செப்­டெம்பர் மாதம் ஐ.நா மனித உரி­மைகள் பேரவை அமர்­வு­களில் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் எதற்கும் இலங்கை திறம்­பட பதி­ல­ளித்­த­தாகத் தெரி­ய­வில்லை. இலங்­கையின் இணை அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் கலா­நிதி ரமேஷ் பத்­தி­ரண, பெப்­ர­வரி 8ஆம் திகதி, “நாங்கள் மனித உரி­மைகள் பேர­வைக்கோ அல்­லது ஐ.நா சபைக்கோ ஐரோப்­பிய யூனி­ய­னுக்கோ எதி­ராக கடும்­போக்கு அணு­கு­மு­றையைக் கொண்­டி­ருக்­க­வில்லை. அனைத்து உல­க­ளா­விய நிறு­வ­னங்­க­ளு­டனும் நாங்கள் நல்­லு­றவைப் பேணு­கிறோம் மற்றும் அவர்­களின் நலன்கள் சார்­பா­கவும் குரல் கொடுக்­கவும் கவனம் எடுக்­கின்றோம்” எனக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

கலா­நிதி பத்­தி­ரன குறிப்­பிட்ட விட­யத்தில் உல­க­ளா­விய நலன்கள் மட்­டு­மல்­லாது இலங்­கை­யி­லுள்ள மூன்று சிறு­பான்மைச் சமூ­கங்­களின் நலன்சார் விட­யங்­க­ளிலும் அர­சாங்கம் கரி­சனை எடுக்கும் என்று சேர்த்தே குறிப்­பிட்­டி­ருக்க வேண்டும். அவ்­வாறு குறிப்­பிடத் தவ­றி­யதும் வருத்தம் தரு­கி­றது. மேலும் 07.01.2022 அன்று அர­சாங்கப் பிர­தி­நி­தி­க­ளுடன் இடம்­பெற்ற சந்­திப்பில் மனித உரி­மைகள் உயர் ஸ்தானிகர் அலு­வ­ல­கத்தின் அறிக்­கைக்கு அர­சாங்கம் முன்­வைத்த எழுத்து மூல பதில்கள் மற்றும் அதன் மீதான அவ­தா­னங்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பதும் கவ­னத்தில் கொள்ள வேண்­டிய விட­ய­மாகும். ஒரு­வேளை ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் அலு­வ­ல­கத்­திற்கு வழங்கும் வகையில் அர­சாங்­கத்­திடம் போது­மான பதில்கள் இல்­லாமல் இருந்­தி­ருக்­கலாம்.

2021 செப்­டெம்பர் 14 அன்று நடை­பெற்ற ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் 48ஆவது அமர்வில் “பயங்­க­ர­வாத தடுப்பு (தற்­கா­லிக விதிகள்) சட்டம்” சர்­வ­தேச தர­நி­லைகள் மற்றும் சிறந்த நடை­மு­றை­க­ளுக்கு இணங்க மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­படும் என்று இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சர் கூறி­யி­ருந்தார். எனவே தற்­போது நடை­மு­றையில் உள்ள பயங்­க­ர­வாத தடைச் சட்டம் சர்­வ­தேச தர­நி­லைகள் மற்றும் சிறந்த நடை­மு­றை­க­ளுக்கு ஒத்­துப்­போ­க­வில்லை என்­பது சந்­தே­க­மின்றி ஏற்றுக் கொள்­ளப்­பட்ட ஒரு விட­ய­மாக சர்­வ­தேச உரி­மைகள் பேர­வையில் வைத்தே இலங்கை அரசு பறை­சாற்­றி­யுள்­ளது.

மொத்­தத்தில் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்டம் (பி.ரி.ஏ) சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கும் உடன்­ப­டிக்­கை­க­ளுக்கும் முற்­றிலும் முர­ணா­னது என்­பது அனை­வரும் அறிந்­ததே. இச்­சட்டம் இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் உள்ள அடிப்­படை உரி­மை­க­ளையும் தெளி­வாக மீறு­கி­றது. பி.ரி.ஏ. என்­பது அடிப்­ப­டையில் ஒரு துன்­பு­றுத்­த­லாகும். முன்னாள் பிரிட்டிஷ் ஆட்­சியின் கீழ் இருந்த பல ஆசிய நாடு­களில் கிட்­டத்­தட்ட 150 ஆண்­டு­க­ளாக நடை­மு­றையில் இருந்த சாட்­சி­யங்கள் சட்டம், தண்­டனைச் சட்டம் மற்றும் குற்­ற­வியல் நடை­முறைச் சட்டம் ஆகி­ய­வற்றின் நிய­தி­க­ளையும் விதி­மு­றை­க­ளையும் மீறு­கி­றது.

மனி­த­கு­லத்தின் அறி­யப்­பட்ட வர­லாறு நெடு­கிலும் அரச பயங்­க­ர­வாதம் உட்­பட பயங்­க­ர­வா­தத்தின் வடி­வங்கள் பல்­வேறு பெயர்­களில் இருந்து வந்­துள்­ளன. அரச பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான நியா­ய­மான மற்றும் சட்­ட­பூர்­வ­மான எதிர்ப்­புகள் கூட பெரும்­பாலும் பயங்­க­ர­வாதம் என்று எழுந்­த­மாக முத்­திரை குத்­தப்­படும் வர­லாறே தொடர்­கி­றது. 1979 இல் உரை­யா­ட­லுக்கு முன்­னு­ரிமை அளிக்கும் வகையில் பயங்­க­ர­வாத தடைச் சட்டம் (பி.ரி.ஏ) இயற்­றப்­பட்­டது. ஆனால் பி.ரி.ஏ. கருத்துச் சுதந்­தி­ரத்தை மீறும்­வ­கையில் கருத்து வேறு­பாடு கொண்ட மனிதக் குரலை ஒடுக்­கு­வதில் ஒரு தனிப் பெரும் பங்கை வகித்­தது. அது ஒரு நிக­ரற்ற வேத சட்­ட­மாக அர­சோட்­சி­யது. துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அது பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்குப் பதி­லாக அந்த சாபக்­கேட்டை பெருக்­கி­யது! நாடு 30 வருட இரத்­தக்­கறை படிந்த போரில் சிக்கித் தவித்­தது. அந்தப் போர் நாட்டின் பொரு­ளா­தார பலத்தை நலி­வ­டையச் செய்­தது. நாடு அதன் இய­லு­மையை தாண்டி செல­வ­ளிக்கும் துர்ப்­பாக்­கிய நிலைக்கு தள்­ளப்­பட்­டது. எமது நாட்டின் சொற்ப வளங்கள் கூட வீணாக போர்­களை ஏற்­று­மதி செய்யும் நாடு­க­ளுக்கு இரை­யா­கின. இன்று நாட்டின் அப்­பாவி மக்கள் அன்­றாட அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்­காக மணித்­தி­யாலக் கணக்கில் வரி­சையில் நின்று அவ­லப்­படும் துர்ப்­பாக்­கிய நிலை எழுந்­துள்­ளது.

இந்­நி­லையில் பார­பட்­ச­மான நடை­மு­றை­க­ளுக்கு நாம் முற்­றுப்­புள்ளி வைத்­துள்­ளோமா? சிஐடி, ரிஐடி மற்றும் அரச புல­னாய்வு அதி­கா­ரிகள் உட்­பட பல்­வேறு பாது­காப்பு நட­வ­டிக்கை கார­ண­மாக 40க்கும் மேற்­பட்ட சிவில் சமூக அமைப்­புகள் தேவை­யற்ற கெடு­பி­டி­க­ளுக்கும் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கும் முகம்­கொ­டுப்­ப­தாக கூறப்­படும் புகார் மனுக்கள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக ஐ.நா அறிக்கை கூறு­கி­றது. மேலும் அனைத்து வகை­யான கண்­கா­ணிப்­பு­க­ளையும் உட­ன­டி­யாக நிறுத்­து­மாறும் அறிக்கை வலி­யு­றுத்­தி­யுள்­ளது. தமிழ் மற்றும் முஸ்லிம் சிறு­பான்­மை­யி­னரை ஓரங்­கட்டும் அள­விற்கு உரிமை மீறல் மோச­ம­டைந்­துள்­ள­தாக அந்த அறிக்கை எச்­ச­ரிக்­கையும் விடுத்­துள்­ளது. உயர்­மட்ட அரச அதி­கா­ரி­களின் பிள­வு­ப­டுத்தும் கருத்­தா­டல்கள் மற்றும் பார­பட்­ச­மான வெறுப்புச் சொல்­லா­டல்கள் துரு­வ­மு­னைப்பை ஏற்­ப­டுத்தி வன்­மு­றையை உரு­வாக்கும் அபா­யத்­திற்கும் கட்­டியம் கூறு­கி­றது. கொவிட்-19 இன் இடர்­கால சூழலிலும், ஏப்ரல் 21 இன் ஈஸ்டர் தாக்­கு­தலின் பின்­னரும் அப்­பாவி இலங்கை முஸ்லிம் சமூகம் அதி­க­ளவில் பலிக்­க­டா­வாக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த உண்­மைகள் மறுக்­கப்­பட முடி­யுமா? கோவிட் கார­ண­மாக மர­ணித்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை அவர்­க­ளு­டைய மத அனுஷ்­டா­னங்­க­ளுக்கு இணங்க அடக்கம் செய்­வ­தற்­கு­ரிய மத உரி­மைகள் மறுக்­கப்­பட்­டது முதல் அண்­மைக்­கா­லத்தில் முஸ்லிம் சிறார்­க­ளுக்­கு­ரிய இஸ்லாம் பாடப்­புத்­த­கங்கள் மீண்டும் எழு­தப்­பட வேண்டும் என்ற அரச தரப்பின் பாகு­பா­டுகள் வரை உரிமை மீறல் பட்­டியல் நீண்டு செல்­கி­றது.

முஸ்­லிம்­களை தீவி­ர­வா­தி­க­ளாக்கும் இஸ்­ரே­லிய திட்டம் முத­லீட்­டா­ளர்­க­ளையும் சுற்­றுலாப் பய­ணி­க­ளையும் பாதிக்கும்

இப்­போது நாம் என்ன செய்து கொண்­டி­ருக்­கிறோம்? இலங்கை அரசு பாது­காப்பு மற்றும் பயங்­க­ர­வாத எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் உத­வு­வ­தற்­காக இஸ்­ரேலை இங்கு அழைத்து வரு­கி­றது. நண்டைச் சுட்டு நரி­களை காவல் வைப்­பது போல 75 ஆண்­டு­க­ளாக பலஸ்­தீ­னி­யர்­களின் சொந்த பூமியை ஆக்­கி­ர­மித்து நர­வேட்­டை­யா­டிய ஒரு நாட்டின் உத­வியை இலங்கை கோரி­யி­ருப்­பது சிறு­பான்மை முஸ்­லிம்­களை இலக்கு வைப்­ப­தா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது. பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு பதி­லாக அதனை திட்­டம்­போட்டு வளர்ப்­பதில் இஸ்­ரே­லுக்கு பெரும் பங்­குண்டு. அத்­த­கைய கைங்­க­ரி­யத்தை செய்யும் நிபு­ணத்­து­வமும் திற­மையும் இஸ்­ரே­லுக்கு உண்டு என்­ப­தற்கு வர­லாறு சான்­றாகும். இஸ்ரேல் மற்றும் அமெ­ரிக்­காவில் உள்ள நூற்­றுக்­க­ணக்­கான ஆயுத உற்­பத்தி தொழிற்­சா­லைகள் தொட­ராக இயங்­கு­வ­தற்கு இஸ்ரேல் பாடு­ப­டு­கி­றது என்­பது பகி­ரங்க ரக­சி­ய­மாகும்.

இஸ்ரேல் பயங்­க­ர­வாத எதிர்ப்புத் திட்­டத்­திற்­காக இங்கு வருகை தரு­வதை “இலங்கை முஸ்­லிம்­களை தீவி­ர­வா­தி­க­ளாக்கும் இஸ்­ரே­லிய திட்டம்” என்று குறிப்­பி­டு­வதில் தவ­றில்லை. இலங்­கைக்கு எஞ்­சி­யி­ருக்கும் வெளி­நாட்டு வளங்­களின் கடைசித் துளி­யையும் கிள்ளி எடுக்க இவர்­களின் வருகை போது­மா­னது. பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்த வாக­னங்கள் உட்­பட எனைய வளங்­க­ளையும் பரி­சாக வழங்­கு­வ­தற்கு ஜப்பான் பரந்த விளம்­ப­ரத்தை அளித்து வரு­கி­றது. உண்­மை­யான வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் மற்றும் சுற்­றுலாப் பய­ணி­களை இலங்­கைக்கு வர­வி­டாமல் பய­மு­றுத்­து­வ­தற்கு இந்த இரு நாடு­களும் போது­மான திறன் கொண்­டவை.

இந்த அறி­விப்பு (சண்டே டைம்ஸ் 06.02.2022) நமது உயிர் வாழ்­வுக்கு இன்­றி­ய­மை­யாத அந்நிய முத­லீட்டை திசை திருப்பி விடும் என்­பதில் கடு­க­ளவும் சந்­தே­க­மில்லை. காரணம் குறித்த இந்த நாடு பயங்­க­ர­வா­தத்தை அதன் மண்­ணி­லி­ருந்து ஒரு­போதும் முடி­வுக்குக் கொண்­டு­வ­ர­வில்லை என்­பதே உல­க­றிந்த செய்­தி­யாகும். இஸ்ரேல் அமெ­ரிக்­காவின் கட்­டுப்­பாட்டில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் – தீவி­ர­வாத ஆயுதக் குழு­வையும் அதன் பயங்­க­ர­வாத எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களையும் நியா­யப்­ப­டுத்­து­வ­தற்­காக இங்கு அழைத்­து­வ­ரலாம். உலகில் பயங்­க­ர­வா­தத்தை முறி­ய­டித்த ஒரு சில நாடு­களில் இலங்­கையும் ஒன்று. ஆனால் 30 வருட கால யுத்­தத்தின் போது எமக்கு ஆயு­தங்­களை விற்­றதன் மூலம் (அன்­ப­ளிப்­பாகஅல்ல) பய­ன­டைந்த நாடு­களில் இஸ்­ரேலும் ஒன்று. அதனால் இஸ்ரேல் வளம் பெற்­றது. நாம் அத்­தி­யா­வ­சியத் தேவை­க­ளுக்­காக வரி­சையில் நிற்­கின்றோம். இர­சா­யன உரங்­க­ளுக்­கான தடைச் சட்டம் நாட்டின் விவ­சா­யத்தை நாச­மாக்­கி­யது. அது ஒரு முட்­டாள்­த­ன­மான முடிவு என்­பது இன்று நிதர்­ச­ன­மா­கி­யுள்­ளது. பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு அரசு எடுக்கும் இத்­த­கைய தீர்­மானம் முட்­டாள்­த­ன­மாக பய­ணத்தை தொட­ர­வுள்ளோம் என்­ப­தையே எதிர்வு கூறு­கி­றது.

எவ்­வா­றா­யினும், இங்கு இடம்­பெறும் சில மனித உரிமை மீறல்கள் மேற்­கத்­திய ஆயுதத் தொழிற்­சா­லை­களின் நலன்­க­ளுக்­காக தொழிற்­படும் வெளி­நாட்டு முக­வர்­க­ளினால் திட்­ட­மிட்டு தூண்­டப்­ப­டு­கி­றது என பலர் நம்­பு­கின்­றனர். இன்னும் சில உரிமை மீறல்கள் வேறு­சில வழி­க­ளிலும் உரு­வா­கின்­றன. சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான மற்றும் இஸ்லாம் பற்­றிய பீதியும் வெறுப்பு சொல்­லா­டல்­களும் வெளி­நாட்டு அரசு சாரா செயற்­பாட்­டா­ளர்­க­ளி­ட­மி­ருந்தும் அண்டை நாடு­க­ளி­லி­ருந்தும் தோன்­றி­ய­தாகக் கூறப்­ப­டு­கி­றது. இது குறித்தும் எமது கவனக் குவிப்பு அவ­சி­ய­மாகும். வட கிழக்கில் தனி­நாடு அமைக்கும் தாகத்­தோடு நடை­பெற்ற மூன்று தசாப்த கால தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் போருக்கு இலங்கை முஸ்­லிம்­களின் ஆத­ரவு இல்­லாமை உள்­ளிட்ட பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக ஈஸ்டர் தாக்­கு­தல்­களை வெளி­நாட்டு மத விரோத சுரண்டல் சக்­திகள் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தாக இலங்கை முஸ்­லிம்­களும் நம்­பு­கின்­றனர்.

மூன்று தசாப்த கால போரில் அர­சுக்கு ஆத­ர­வாக இருந்த சிறு­பான்மை முஸ்­லிம்­களை பழி­வாங்­க­லாமா?

இந்தப் பின்­ன­ணி­யில்தான் வெளி­வி­வ­கார அமைச்சின் கண்­து­டைப்­புக்­கான முயற்­சியை நோக்­க­வேண்­டி­யுள்­ளது. பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தை ரத்து செய்­வ­தற்குப் பதி­லாக அல்­லது குறைந்­த­பட்சம் அர­சி­ய­ல­மைப்பில் உள்ள அடிப்­படை உரி­மைகள் விதி­க­ளுக்கு இணங்க அதனை கொண்டு வரு­வ­தற்குப் பதி­லாக வெறும் கவர்ச்­சிக்­காக மட்டும் படம் காட்டும் வெளி­யு­றவு அமைச்சின் ஏமாற்று முயற்­சியை நாம் பார்க்க வேண்டும். அனைத்து துறை­க­ளிலும் இலங்­கையின் சொந்தக் குடி­மக்­க­ளுக்கு எதி­ராகப் பயன்­ப­டுத்­தப்­படும் அடக்குமுறைச் சட்டங்களைப் புதுப்பிக்குமாறு சர்வதேச அமைப்புகள் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பது கவலை தருகின்றது.

அளுத்­கம, திகன, மினு­வாங்­கொட போன்ற பகு­தி­களில் உள்ள பெரும்­பான்­மை­யினர் சட்­டத்தை மீறிய போது பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை பிர­யோ­கிக்க விரும்­பாத அதே­நேரம், மாவ­னல்லை புத்தர் சிலை சம்­ப­வங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு மட்டும் கடு­மை­யான பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை பிர­யோ­கித்­த­மை­யிலும் பிரச்­சினை உள்­ளது. முப்­பது வருட கால யுத்­தத்தில் முஸ்­லிம்கள் நாட்டின் பெரும்­பான்மை பக்கம் நின்­ற­தற்­காக குற்றம் சுமத்தி சிறு­பான்மை முஸ்­லிம்­களை பழி­வாங்­கு­வது போல் அர­சி­யல்­வா­தி­களும் ஊடகத் துறை­யி­னரும் ஈஸ்டர் தாக்­கு­தலை நியா­ய­மான தேவை­க­ளுக்கு அப்பால் தொடர்ந்தும் உயிர்­வாழ வைக்­கின்­றனர். ஏப்ரல் 21 தாக்­குதல் நடந்த அந்த நொடி­யி­லேயே உண்­மை­யான பயங்­க­ர­வா­திகள் அனை­வரும் முழு­மை­யாக அழிந்து நாச­மா­கிய போதிலும், அர­சாங்­கத்தின் “வெளிப்­ப­டை­யான இய­லாமை மற்றும் விருப்­ப­மின்மை” கொள்­கையை பயன்­ப­டுத்தி உண்­மை­யான தேசப்­பற்­றுள்ள குடி­மக்­க­ளுக்கு கண்­ணியம் வழங்­கு­வ­தாக கற்­பிதம் செய்து செய்து கொண்டு பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்­கிறோம் என்ற போலிக்­கா­ர­ணத்தின் கீழ் 2000 க்கும் அதி­க­மானோர் கைது செய்­யப்­பட்­டனர். இந்தப் போக்கு இன்னும் பல ஆண்­டு­க­ளுக்கு நாட்டை குட்­டிச்­சு­வ­ராக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. சுருக்­க­மாகச் சொன்னால், இலங்கைத் தாய்­நாட்டின் உண்­மை­யான தேச­பக்­தர்­களின் அவ­ல­நி­லையே இது­வாகும்.

நாடெங்கும் வெறுப்­பு­ணர்வைத் தூண்­டி­ய­தாக கிரி­மினல் குற்றம் சுமத்­தப்­பட்­ட­வர்கள் நாடா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வி­னாலும், ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வி­னாலும் தண்­டிக்­கப்­ப­டாமல் விடப்­பட்­டுள்­ளனர். ஆனாலும் ஏப்ரல் 21 தாக்­குதல் நிகழ்ந்த அந்த கடி­ன­மான சூழ்­நி­லையில் கிறிஸ்­தவ திருச்­ச­பையும் தலை­சி­றந்த பௌத்த மத­கு­ருக்­களும் வழங்­கிய அமைதியான அன்பான தலைமைத்துவ பணியை முஸ்லிம் சமூகம் ஒரு போதும் மறக்காது. எமது தாய் திருநாட்டை படுகுழியில் தள்ளுவதை விட பயங்கரவாத தடைச் சட்டத்தை புதைக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.