1915 கலவரம் : ஒரு சிங்கள எழுத்தாளரின் கள அனுபவம்!

0 612

எம்.எல்.எம். மன்சூர்

1915 ஆம் ஆண்டு மே மாதம் 28ஆந் திகதி தொடக்கம் நாடெங்­கிலும் பர­வ­லாக நிகழ்ந்து வந்த சிங்­கள – முஸ்லிம் கல­வ­ரங்கள் ஓர­ள­வுக்கு தணிக்­கப்­பட்டு, ஊர­டங்குச் சட்டம் தளர்த்­தப்­பட்­டி­ருந்த சூழ்­நிலை. முன்­னி­ரவு நேரம். ஆள் நட­மாட்­டமோ வாகனப் போக்­கு­வ­ரத்தோ இல்­லாமல் வெறிச்­சோடிப் போயி­ருக்கும் காலி – மாத்­தறை வீதியில் மெது­வாக நகர்ந்து செல்­கி­றது ஒரு மாட்டு வண்டி.

வண்­டிக்குள் ஒரு வாள், கருங்­கற்கள், மணல் போத்­தல்கள் மற்றும் பொல்­லுகள் என ஒரு சில ஆயு­தங்கள். பய­ணத்தின் நோக்கம் வெலி­கா­மத்­திற்குப் போய் முஸ்­லிம்கள் மீது ஒரு தாக்­கு­தலை நடத்­து­வது.

இருட்டில் அந்த வண்­டிக்குப் பின்னால் மௌன­மாக நடந்து கொண்­டி­ருந்த ஐந்து இளை­ஞர்­களில் ஒருவர் சுமார் 50 ஆண்­டு­களின் பின்னர் நவீன சிங்­கள இலக்­கி­யத்தின் பிதா­மகர் எனக் கொண்­டா­டப்­பட்ட எழுத்­தாளர் மார்ட்டின் விக்­கி­ர­ம­சிங்க (1890 -1976). சிங்­கள மொழியின் முத­லா­வது சிறு­கதைத் தொகுப்பை 1924 வெளி­யிட்­டவர். நாவல், சிறு­கதை, விமர்­சனம், பௌத்த தத்­துவம், வர­லாறு மற்றும் சமூ­க­வியல் போன்ற பரந்த தளங்­களில் சிங்­க­ளத்­திலும், ஆங்­கி­லத்­திலும் 90 இற்கு மேற்­பட்ட நூல்­களின் ஆசி­ரியர்.

1915ஆம் ஆண்டு சிங்­கள – முஸ்லிம் கல­வ­ரங்கள் ஆரம்­பித்த பொழுது அவர் கொழும்பில் ஒரு கடையில் வேலை செய்து கொண்­டி­ருந்தார். கல­வ­ரத்தை அடுத்து கடை மூடப்­ப­டு­வ­துடன் வீடு வந்து சேர்­கிறார். அப்­பொ­ழுது அவ­ருக்கு வயது 25. காலி நக­ரி­லி­ருந்து சிறிது தூரத்தில் அமைந்­தி­ருக்கும் கொக்­கல அவ­ரு­டைய சொந்த ஊர்.

அன்று இரவு நடந்த சம்­ப­வங்­களை தனது வாழ்க்கை சரி­தத்தில் ஒரு வித சங்­கட உணர்­வுடன், குற்ற உணர்ச்சி மேலிடப் பதிவு செய்­தி­ருக்­கிறார் மார்ட்டின் விக்­கி­ர­ம­சிங்க.
“ஊர­டங்குச் சட்டம் தளர்த்­தப்­பட்­டி­ருந்த போதிலும் மாலை 6.00 மணிக்குப் பின்னர் காலி – மாத்­தறை வீதி ஆள் நட­மாட்­டமோ வாகனப் போக்­கு­வ­ரத்தோ இல்­லாமல் பாழ­டைந்து கிடக்­கி­றது. வீதி இரு மருங்­கிலும் இருந்த வீடு­களில் வசிக்கும் மக்கள் எவரும் வெளியில் வரு­வ­தில்லை….. புடவைக் கட்­டுக்­களை தோளில் சுமந்து கொண்டு வீடு­வீ­டாகச் சென்று வியா­பாரம் செய்யும் முஸ்லிம் (பொட்­டணி) வியா­பாரி ஒருவர் எங்கள் அயல் கிரா­மத்தில் கொல்­லப்­பட்­டி­ருக்­கிறார் என ஒரு வதந்தி பரப்­பப்­பட்­டி­ருந்­தது. ஆனால், அதை ஊரில் யாரும் நம்­ப­வில்லை. கிரா­மத்தில் வீடு வீடாகச் சென்று அவ்­விதம் துணி வியா­பாரம் செய்யும் முஸ்­லிம்கள் இரு­வரும் அன்று எமது நண்பர் ஒரு­வரின் வீட்டில் தங்­கி­யி­ருந்­தார்கள் என்ற விட­யத்தை நாங்கள் அறிந்­தி­ருந்தோம்”.

(முஸ்­லிம்­களை குறிப்­ப­தற்­கென மார்ட்டின் விக்­கி­ர­ம­சிங்க ‘தம்பி’ என்ற சொல்லை தொடர்ந்தும் பயன்­ப­டுத்­து­கிறார். அக்­கால சிங்­கள கிராம மக்­க­ளுக்கு மத்­தியில் சாதா­ர­ண­மாக புழக்­கத்தில் இருந்து வந்த சொல் அது. அதில் எத்­த­கைய காழ்ப்­பு­ணர்ச்­சியும் இருக்­க­வில்லை).

“சிறு பரு­வத்தில் முஸ்லிம் பொட்­டணி வியா­பா­ரிகள் எங்கள் வீட்­டுக்கு வரும் போதெல்லாம் எனக்கு ஒரே சந்­தோசம். துணிக்­கட்­டுக்­களில் ஒட்­டப்­பட்­டி­ருக்கும் வண்ணப் படங்­க­ளுடன் கூடிய லேபிள்கள் என்னை கவர்­பவை. சில நாட்­களில் அந்த வியா­பா­ரி­யிடம் கெஞ்சிக் கேட்டு அத்­த­கைய வண்ண லேபிள்­களை பெற்­றுக்­கொள்வேன்.

நாங்கள் சிறு­வர்­க­ளாக இருந்த பொழுது எங்கள் மனதை கவர்ந்த மற்­றொரு நபர் முஸ்லிம் ‘மணிப் பெட்டி’ வியா­பாரி. ஒரு நூத­ன­சா­லையைப் போன்ற அவ­ரு­டைய பெட்­டியை திறக்கும் பொழுது சவர்க்­கார வாசனை வெளியில் வீசும். அந்தப் பெட்­டிக்குள் இருக்கும் வித­வி­த­மான மணிகள், அணி­க­லன்கள் மற்றும் அலங்­காரப் பொருட்கள் என்­ப­வற்றைப் பார்த்து நாங்கள் எல்­லோரும் சந்­தோ­சப்­பட்டோம்.

கிரா­மத்து சிறு­வர்­களை மட்­டு­மல்­லாமல் சிறு­மி­க­ளையும், பெண்­க­ளையும் மகிழ்­வித்­த­வாறு வீடு வீடாகச் சென்று துணி­ம­ணி­க­ளையும், சாப்புச் சாமான்­க­ளையும் விற்று வரும் முஸ்லிம் வியா­பாரி ஒரு­வரை கொலை செய்­யக்­கூ­டிய எந்த ஒரு ஈனப் பிற­வியும் எங்கள் கிரா­மத்தில் இருந்து வர­வில்லை என்­பது எல்­லோ­ருக்கும் தெரியும்.”

விக்­கி­ர­ம­சிங்­கவின் ஊர் நண்பன் ஒய்பர்ட் அவ­ரிடம் வந்து “இன்று இரவு நாங்கள் வெலி­கா­மத்­திற்கு போவோமா” எனக் கேட்­கிறான். ஆனால், அந்தப் பய­ணத்தை அவர் விரும்­ப­வில்லை. அவ­ரது எண்ண ஓட்டம் இப்­படிச் செல்­கி­றது:

“மாலை 6.00 மணிக்குப் பின்னர் வீட்­டி­லி­ருந்து வெளியில் வரு­வதை தடை செய்யும் கட்­டளை விலக்கிக் கொள்­ளப்­பட்­டி­ருந்த போதிலும், மாத்­தறை – காலி நெடுஞ்­சா­லையில் ரோந்துப் பணியில் ஈடு­படும் பஞ்சாப் சிப்­பாய்­களின்; வாகனம் இன்­னமும் ஓடிக் கொண்­டி­ருக்­கின்­றது. சிங்­கள – முஸ்லிம் கல­வரம் தணிந்து சில நாட்­களே கடந்­துள்­ளன. வெலி­கா­மத்தில் சிங்­க­ள­வர்­க­ளுக்கும், முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் எந்­த­வொரு கல­வ­ரமும் நடக்­க­வில்லை. நாங்கள் இந்த இரவில் அங்கு செல்­வது அணைந்து கொண்­டி­ருக்கும் நெருப்பை மீண்டும் எரிய விடு­வ­தற்­கான ஒரு முயற்­சி­யா­கவே இருக்கும்.”
ஆனால், நண்­பர்­களின் வற்­பு­றுத்­தலை அவரால் தட்­டிக்­க­ழிக்க முடி­ய­வில்லை.
“… நாங்கள் ஐந்து பேர் மாட்டு வண்­டிக்குப் பின்னால் நடக்கத் தொடங்­கினோம். சலமன் சில்வா ஒரு துருப்­பி­டித்த வாளை எடுத்துக் கொடுத்து, அதனை வண்­டிக்குள் வைக்­கு­மாறு லைறி­சிடம் சொன்னான்.

“வண்­டிக்குள் வேறு என்ன சாமான்கள் இருக்­கின்­றன” என்று கேட்டேன்.
“மணல் போத்தல், கருங்­கற்கள் மற்றும் பொல்­லுகள்.”

அவர்­க­ளு­டைய வண்டி நடு இரவில் வெலி­கா­மத்தைச் சென்­ற­டை­கி­றது. இருட்டில் சற்று தூரத்தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருக்கும் ஒரு குதிரை வண்டி மங்­க­லாகத் தெரி­கி­றது. ஒரு வாழைப் புத­ருக்கு அருகில் மாட்டு வண்­டியை ஓர­மாக நிறுத்­து­கி­றார்கள்.
குதிரை வண்டிப் பக்­க­மி­ருந்து விதா­னையார் இறங்கி வரு­கிறார்.
“அவர் எங்­களில் இரண்டு மூன்று பேரின் உற­வினர்.”

“குதிரை வண்­டியில் இருப்­பவர் வெலி­கம கோர­ளையின் முத­லியார். அவர் உங்­களைச் சந்­திக்க விரும்­பு­கிறார்.”

அப்­பொ­ழுது முத­லியார் வண்­டி­யி­லி­ருந்து இறங்கி எங்­களை நோக்கி வந்தார்.
“இந்த இரவில் ஏன் வெலி­கா­மத்­திற்கு வந்­தீர்கள்”?

“எங்கள் உற­வி­னர்­க­ளுக்கு முஸ்­லிம்கள் தொல்லை கொடுத்­தி­ருப்­ப­தாக கேள்­விப்­பட்டோம்!” என சலமன் சில்வா சொன்னான்.

“அது பொய்­யான செய்தி; இங்கு அப்­படி எதுவும் நடக்­க­வில்லை. சிங்­கள மக்­களும், முஸ்லிம் மக்­களும் சகோ­த­ரர்­களைப் போல வாழ்ந்து வரு­கின்­றார்கள்” என்­கிறார் முத­லியார்.

“ஆம், எங்­க­ளுக்கும் அப்­படித் தான் தெரி­கி­றது. நாங்கள் திரும்பிச் செல்­கிறோம்.”
“இன்னும் ஐந்து நிமி­டங்கள் நீங்கள் தரித்து நிற்க வேண்டும்” எனக் கட்­ட­ளை­யிட்டு விட்டு, முத­லியார் போய் குதிரை வண்­டியில் ஏறிக் கொண்டார்.

நாங்கள் மாட்டு வண்­டியை மறு­பக்கம் திருப்ப முன்னர் துப்­பாக்கி ஏந்­திய இரு பஞ்­சாபி சிப்­பாய்­க­ளுடன் ஒரு மோட்டார் வண்டி வந்து நின்­றது.
வண்­டி­யி­லி­ருந்து புன்­ன­கை­யுடன் இறங்­கிய அர­சாங்க அதிபர் பிரவ்ணிங் எங்­க­ளிடம் கேட்டார்.

“இந்த இரவில் எதற்­காக வெலி­கா­மத்­திற்கு வந்­தீர்கள்? உட­ன­டி­யாக நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும்.”

´ஐந்து நிமி­டத்தில் திரும்பிச் செல்­கிறோம்” என்றான் ஒய்பெர்ட்.
அப்­பொ­ழுது விதா­னையார் என்னை அணுகி, தணிந்த குரலில் சொன்னார்:

“வண்­டியில் ஆயு­தங்கள் எவையும் இருக்­கின்­ற­னவா என தேடிப் பார்க்­கு­மாறு முத­லியார் சொல்­கிறார். அப்­படி ஏதா­வது இருந்தால் வாழைப் புத­ருக்குள் எறிந்து விடுங்கள்.”
ஆயு­தங்­களை வாழைப் புத­ருக்குள் வீசி எறிந்து விட்டு, பின்­னி­ரவில் ஊர் திரும்­பு­கி­றார்கள் மார்ட்டின் விக்­கி­ர­ம­சிங்­கவும், அவர்­க­ளு­டைய நான்கு நண்­பர்­களும்.
அவர் தொடர்ந்து இப்­படி எழு­து­கிறார்:

“எங்கள் பயணம் ஒரு விளை­யாட்டு அல்ல என்­பதை நாங்கள் எல்­லோரும் உணர்ந்து கொண்­டி­ருந்தோம். அந்த உணர்வை மறைத்துக் கொள்ளும் நோக்­கத்­துடன் வேறு ஏதேதோ கதைத்துக் கொண்டு வந்தோம். பிரவ்ணிங் அர­சாங்க அதி­பரின் சம­ய­யோ­சித புத்தி கார­ண­மாக அந்த நேரத்தில் வன்­முறைச் சம்­ப­வங்கள் எவையும் நிக­ழ­வில்லை.
நாங்கள் இரவில் வெலி­கா­மத்­திற்கு வரு­வதைத் தெரி­வித்து அர­சாங்க அதி­ப­ருக்கும், முத­லி­யா­ருக்கும், வெலி­கம கிராம விதா­னை­யா­ருக்கும் எங்கள் உற­வி­னர்­களே தந்திச் செய்­தி­களை அனுப்பி வைத்­தி­ருந்­தார்கள் என்ற விடயம் ஊருக்கு புறப்­ப­டு­வ­தற்கு முன்னர் எங்­க­ளுக்குத் தெரிய வந்­தது…… எங்­களை பிடித்துக் கொண்டு போய், வழக்குத் தாக்கல் செய்து, தண்­டனை பெற்றுத் தரு­வ­தற்­கான எல்லா சாட்­சி­யங்­க­ளையும் எமது உற­வி­னர்­களே வழங்­கி­யி­ருந்­தார்கள்.”

நவீன தொலைத்­தொ­டர்பு வச­திகள் எவையும் இல்­லாத அந்த நாட்­களில் ‘ஐந்து சிங்­கள இளை­ஞர்கள் ஒரு சில ஆயு­தங்­க­ளுடன் மாட்டு வண்­டியில் வெலி­கா­மத்தை நோக்கி வந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்’ என்ற எச்­ச­ரிக்­கையை ஊர் பெரி­ய­வர்கள் எவ்­வ­ளவோ சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் உரிய அதி­கா­ரி­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­து­கி­றார்கள். அரச இயந்­திரம் உட­ன­டி­யாக முடுக்­கி­வி­டப்­ப­டு­கி­றது. ஒரு சில நிமி­டங்­களில் முத­லியார், விதா­னையார், அர­சாங்க அதிபர் மற்றும் ரோந்துப் பணியில் ஈடு­பட்­டி­ருந்த பஞ்சாப் சிப்­பாய்கள் ஆகிய அனைத்து தரப்­பி­னரும் அந்த இடத்­திற்கு வரு­கி­றார்கள். நடக்­க­வி­ருந்த விப­ரீதம் உரிய நேரத்தில் தடுக்­கப்­ப­டு­கி­றது.

சுமார் 100 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் நாட்டில் இன வன்­முறை கட்­ட­விழ்த்து விடப்­பட்­டி­ருந்த ஒரு சூழலில் நிகழ்ந்த ஒரு சம்­பவம் குறித்த மார்ட்டின் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்த நினைவுப் பகிர்வு இன்­றைய இலங்­கையின் பின்­ன­ணியில் மிகுந்த முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. அதா­வது, பிரிட்டிஷ் கால­னித்­துவ ஆட்­சி­யா­ளர்கள் நாட்டில் அசா­தா­ரண நிலை­மைகள் தோன்றும் பொழுது சட்­டத்தின் ஆட்­சியை நிலை­நி­றுத்தும் விட­யத்­திற்கு எந்த அள­வுக்கு முன்­னு­ரிமை வழங்­கி­யி­ருந்­தார்கள் என்­ப­த­னையும், சட்டம் ஒழுங்கு மற்றும் பாது­காப்பு என்­ப­வற்­றுக்கு பொறுப்­பாக இருந்து வந்த கிராம மட்ட விதா­னைமார் தொடக்கம் முத­லியார், பொலிஸார் மற்றும் அர­சாங்க அதிபர் வரை­யி­லான தரப்­புக்கள் எவ்­வித நிர்ப்­பந்­தங்­க­ளுக்கும் அடி­ப­ணி­யாமல் எவ்­வாறு தமது கட­மை­களை புரிந்து வந்­தார்கள் என்­ப­த­னையும் காட்டும் ஓர் உதா­ர­ண­மாக இதனைப் பார்க்க முடியும்.

துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, அதற்கு சுமார் 100 ஆண்­டு­களின் பின்னர் நவீன தொடர்பு சாதன வச­திகள் அனைத்தும் உச்ச மட்­டத்தில் வளர்ச்சி கண்­டி­ருந்த ஒரு பின்­ன­ணியில் 2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் அம்­பா­றை­யிலும், மார்ச் முதல் வாரம் திக­ன­யிலும், 2019 மே மாதம் வயம்ப மற்றும் மினு­வாங்­கொடை ஆகிய பிர­தே­சங்­க­ளிலும் இடம்­பெற்ற இன வன்­மு­றை­களின் போது பொலி­சா­ரையும் உள்­ள­டக்­கிய விதத்தில் பாது­காப்பு படை­களும், முழு அரச யந்­தி­ரமும் செய­லற்று, முடங்கிப் போயி­ருந்­தது ஏன்? சுந்­தி­ரத்­திற்கு பின்னர் 1958, 1983, 2001, 2014 எனப் பல தட­வைகள் இந்த அவலம் மீண்டும் மீண்டும் நிகழ்ந்­தி­ருக்­கி­றது.

அரசு (State) வேறு, அர­சாங்கம் (Government) வேறு என்ற அர­சி­யலின் அடிப்­படை தத்­து­வத்தை மூத்த சிவில் சேவை அதி­கா­ரி­களும், பொலி­ஸாரும் புரிந்து கொள்ளத் தவ­றி­யி­ருந்­ததே இதற்­கான மூல காரணம். 1950 கள் வரையில் உயர் பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு மத்­தியில் இந்தப் புரிதல் இருந்­தி­ருக்­கி­றது. அதற்­கான ஓர் உதா­ரணம் :

1959 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொழும்­புத்­துறை முகத்தில் ஒரு பாரிய வேலை நிறுத்தம் இடம்­பெ­று­கி­றது. போச்­சு­வார்த்­தைகள் தோல்வி கண்­ட­த­னை­ய­டுத்து துறை­முகச் செயற்­பா­டுகள் அனைத்தும் முடக்­கப்­படும் அள­வுக்கு நிலைமை தீவி­ர­ம­டை­கி­றது. பிர­தம மந்­திரி பண்­டா­ர­நா­யக்க பொலிஸ் மா அதிபர் ஒஸ்மன்ட் டி சில்­வாவை அழைத்து, உட­ன­டி­யாக பொலிஸார் துறை­மு­கத்­திற்குள் பிர­வே­சித்து, வேலை நிறுத்­தத்தை முறி­ய­டிக்க வேண்டும் என்றும், அதற்கு தலை­தாங்கி வரும் தொழிற்­சங்கத் தலை­வர்­களை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கட்­ட­ளை­யி­டு­கிறார்.

அப்­படிச் செய்­வது ஒரு சட்ட விரோ­த­மான செய­லாக இருந்து வரும் என தான் கரு­து­வ­தனால் தன்னால் அதனைச் செய்ய முடி­யாது என பொலிஸ் மா அதிபர் திட்­ட­வட்­ட­மாக பிர­தம மந்­தி­ரி­யிடம் சொல்­கிறார். அத்­துடன் நின்று விடாது, உட­ன­டி­யாக உயர் பொலிஸ் அதி­கா­ரி­க­ளி­னதும், கொழும்பு மாந­கர பொலிஸ் நிலை­யங்­களின் பொறுப்­ப­தி­கா­ரி­க­ளி­னதும் ஒரு மாநாட்டை கூட்­டு­கிறார். பொலிஸார் தமது கட­மை­களை செய்யும் பொழுது அர­சி­யல்­வா­தி­க­ளி­ட­மி­ருந்து வரும் சட்­டத்­திற்கு புறம்­பான வேண்டுகோள்களை நிறைவேற்றி வைக்கக்கூடாது என அவர்களுக்கு கண்டிப்பான விதத்தில் அறிவுறுத்தல்களை வழங்குகிறார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.