ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடிக்கு உறவினர்கள் செல்ல அனுமதி

பிரதேச சபையை தொடர்புகொண்டு அனுமதி அட்டையைப் பெறலாம்

0 322

(எச்.எம்.எம். பர்ஸான்)
கொவிட் தொற்­றினால் மர­ணித்­த­வர்­களை அடக்கம் செய்யும் ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டிக்கு, அங்கு அடக்கம் செய்­யப்­பட்­ட­வர்­க­ளது உற­வி­னர்கள் நேரில் சென்று பிரார்த்­த­னை­களில் ஈடு­பட அனு­மதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்­க­மைய குறித்த மைய­வா­டியை நிர்­வ­கிக்கும் ஓட்­ட­மா­வடி பிர­தேச சபையின் முன் அனு­ம­தியைப் பெற்று உற­வி­னர்கள் மைய­வா­டிக்கு விஜயம் செய்ய முடியும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் ஓட்­ட­மா­வடி பிர­தேச சபையின் தவி­சாளர் ஏ.எம். நௌபர், செய­லாளர் எம்.எஸ். சிஹாப்தீன் ஆகியோர் ‘விடி­வெள்ளி’க்கு கருத்து வெளி­யி­டு­கையில், கொவிட் தொற்­றினால் மரணித்­த­வர்­களை அடக்கம் செய்யும் ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டியில் இம்­மாதம் 12 ஆம் திகதி வரை 3527 உடல்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. இவர்­களில் 2940 முஸ்­லிம்­களும் 257 இந்­துக்­களும் 248 பௌத்­தர்­களும் 81 கிறிஸ்­த­வர்­களும் அடங்­கு­கின்­றனர்.

இவ்­வாறு அடக்கம் செய்­யப்­பட்­ட­வர்­க­ளது உற­வி­னர்கள், குறித்த மைய­வா­டிக்கு நேரில் விஜயம் செய்து தமது உற­வு­க­ளுக்­காக பிரார்த்­த­னையில் ஈடு­பட நாம் அனு­மதி வழங்­கி­யுள்ளோம். இவ்­வாறு விஜயம் செய்ய விரும்­பு­ப­வர்கள் தாம் வருகை தரத் தீர்­மா­னித்­துள்ள தினத்­திற்கு ஒரு நாள் முன்­ப­தாக எமது பிர­தேச சபையில் இதற்­காகப் பொறுப்­பாக்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரி­க­ளான எம். இமாம் 0779798787 மற்றும் ஏ. அக்பர் 0777108383 ஆகி­யோரை மேற்­படி இலக்­கங்­களில் தொடர்பு கொண்டு விப­ரங்­களை வழங்க வேண்டும். இங்கு அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­வர்­க­ளது விப­ரங்கள் அடங்­கிய ஓர் அட்­டையை நாம் அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ருக்கு ஏற்­க­னவே வழங்­கி­யுள்ளோம். அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள தொடர் இலக்­கத்­தையும் வருகை தர விரும்­பு­ப­வர்­களின் பெயர், அடை­யாள அட்டை இலக்கம் மற்றும் தொலை­பேசி இலக்கம் ஆகி­ய­வற்­றையும் மேற்­படி அதி­கா­ரி­க­ளிடம் முன்­கூட்­டியே வழங்க வேண்டும். இதற்­க­மைய தயார் செய்­யப்­படும் அனு­மதி அட்­டை­களை மைய­வா­டியைத் தரி­சிக்கும் தினத்­தன்று காலையில் ஓட்­ட­மா­வடி பிர­தேச சபைக்கு நேரில் வருகை தந்து பெற்றுக் கொள்­ளலாம். ஒரு நேரத்தில் ஒரு அனு­மதி அட்டை மூலம் 15 பேர் மாத்­திரம் மைய­வா­டிக்குள் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள். காலை 9 மணி முதல் பிற்­பகல் 2 மணி வரை மாத்­தி­ரமே மைய­வா­டிக்குள் நுழைய அனு­மதி வழங்­கப்­படும். இந்த அனு­ம­தி­யா­னது ஏலவே அடக்கம் செய்­யப்­பட்ட ஜனா­ஸாக்­களின் உற­வி­னர்­க­ளுக்கே வழங்­கப்­ப­டவுள்ளது.

இதே­வேளை கொவிட் ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­ப­டும்­போது ஏற்­க­னவே பின்­பற்­றிய விதி­மு­றை­களில் எந்­த­வித மாற்­றங்­களும் செய்­யப்­ப­ட­வில்லை. சுகா­தார அமைச்சினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு ஜனா­ஸாவை அடக்கம் செய்­வ­தற்­காக இரண்டு உற­வி­னர்கள் மாத்­தி­ரமே மைய­வா­டிக்குள் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.