தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிக சன அடர்த்தி கொண்ட பகுதியாக நெருக்குவாரப்படும் காத்தான்குடி மக்கள்

0 642

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மாகாண சபையில் கொண்டு வரப்­பட்ட முயற்சி
முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­காக தான் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்­பி­ன­ராகப் பதவி வகித்­த­போது முன்­னெ­டுக்­கப்­பட்ட முயற்­சிகள் தோல்­வியில் முடிந்­த­தாக யூ.எல்.எம்.என். முபீன் தெரி­விக்­கிறார்.

2009 ஆம் ஆண்டு நான் மாகாண சபை உறுப்­பி­ன­ராக செயற்­பட்­ட­போது கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் காணிப்­பி­ரச்­சி­னைகள் தொடர்பில் மாகாண சபையில் தனி­நபர் பிரே­ரணை கொண்டு வந்து விலா­வா­ரி­யாக உரை­யாற்­றினேன். பிரே­ர­ணையின் பின்னர் அப்­போ­தைய மாகாண காணி அமைச்சர் விம­ல­வீர திஸா­நா­யக்­க­வினால் காணிப் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­காக கிழக்கு மாகா­ணத்தின் மூன்று மாவட்­டங்­க­ளுக்கும் மூன்று மாவட்ட குழுக்­களும் மாகாண குழு­வொன்றும் உரு­வாக்­கப்­பட்­டது. ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மேற்­படி குழுக்­களை இயங்க விடாமல் பாரிய தடை­களை ஏற்­ப­டுத்­தி­யது.

அதா­வது மட்­டக்­க­ளப்பில் முஸ்­லிம்கள் காணி­களை அப­கரித்­துள்­ள­தாக அர­சாங்க மட்­டத்­திலும் அதற்கு வெளி­யிலும் மிகப் பொய்­யான பரப்­புரை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு முஸ்­லிம்கள் தெளி­வான விளக்கம் கொடுக்க வேண்­டி­யுள்­ளது” என்றும் முபீன் குறிப்­பி­டு­கிறார்.

காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் மற்றும் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளன காணி விவ­காரக் குழுவின் தலை­வ­ராக இருந்­த­போது தனது முயற்­சி­யினால் சம்­மே­ளனம் காத்­தான்­குடி முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் காணிப் பிரச்­சி­னைகள் தொடர்­பாக ஒரு முன்­மொ­ழிவு ஆவண அறிக்­கையைத் தயா­ரித்­த­தா­கவும் முபீன் குறிப்­பிட்டார்.

காத்­தான்­குடி மக்கள் முகம்­கொ­டுக்கும் காணி இல்லாப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணு­மாறு காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் மற்றும் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் அதி­காரத் தரப்­பி­ன­ருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி அனுப்பி வைத்­தி­ருந்த திட்ட முன் மொழிவின் மூலம் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­தது. அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­தா­வது :

முன்­மொ­ழிவு – 01
காத்­தான்­குடி பிர­தேச செய­லகப் பிரிவை மீள் எல்லை நிர்­ணயம் செய்து அதனை இரண்டு பிரி­வு­க­ளாக ஆக்­குதல். காத்­தான்­கு­டியின் மொத்த பரப்­ப­ளவு 6.5 சதுர கிலோ மீற்­றர்கள். 2020 இல் செய்­யப்­பட்ட கணக்­கெ­டுப்­பின்­படி 18 கிராம அலு­வலர் பிரி­வு­க­ளிலும் 15273 குடும்­பங்­களைச் சேர்ந்த 50358 மக்கள் காத்­தான்­குடிப் பிர­தே­சத்தில் வசிக்­கின்­றனர்.

அதன் எல்­லைகள் பின்­வ­ரு­மாறு:
வடக்கு: மண்­முனை வடக்கு பிர­தேச செய­லக பிரிவு
தெற்கு: மண்­முனை பற்று பிர­தேச பிர­தேச செய­லக பிரிவு
கிழக்கு: வங்­காள விரி­குடா
மேற்கு: மட்­டக்­க­ளப்பு வாவி.
காத்­தான்­குடி 1901ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு முறைப்­படி தனி­யான உதவி அர­சாங்க அதிபர் (AGA) பிரி­வாக மாற்­றப்­படும் வரை மண்­முனை வடக்கு பிர­தேச இறை­வரி அலு­வ­ல­கத்தின் (DRO) பிரிவின் கீழ் இருந்து வந்­தது. இது 1992இல் பிர­தேச செய­லகப் பிரி­வாக மாற்­றப்­பட்­டது.

2020 இல் உள்­ள­படி காத்­தான்­குடி பிர­தேச செய­லகப் பிரிவு
மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ­மீட்­ட­ருக்கு 7747 ஆக உள்­ளது. குறிப்­பிட்ட சில கிராம அலு­வலர் பிரி­வு­களில், சுமார் 7338 மக்கள் வசிக்­கின்­றனர். இதன் கார­ண­மாக தென்­கி­ழக்கு ஆசியா முழு­வ­திலும் அதிக மக்கள் தொகை கொண்ட பகு­தி­யாக காத்­தான்­குடி அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.

இந்த நிலை தொடர அனு­ம­தித்தால், இன்னும் 10 ஆண்­டு­க­ளுக்குள் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் மேலும் மோச­ம­டையும் என்று அஞ்­சப்­ப­டு­கி­றது. காத்­தான்­கு­டியில் மக்கள் தொகை மிகவும் அடர்த்­தி­யாக இருப்­பதால், சுகா­தாரம், குடி­யி­ருப்­புகள் போன்­ற­வற்றில் சொல்­ல­வொண்ணா இன்­னல்­களை அந்த மக்கள் எதிர்­கொள்­கின்­றனர்.
காத்­தான்­குடி மக்கள் மிக அதி­க­மான கஷ்­டங்­களை அனு­ப­விக்­கின்­றனர். இங்கு எழும் பிரச்­சி­னைகள் மற்ற அண்­டைய பகு­தி­க­ளிலும் எதிர்­ம­றை­யான தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தும்.

மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­ச­ினை­களைக் குறைக்கும் நோக்கில். 1998ஆம் ஆண்டு நிலப் பரப்பு வர்த்­த­மானி உட்­பட இன்­னு­மொரு பிர­தேச செய­லகப் பிரிவு தேவை என்று நாங்கள் முன்­மொ­ழி­கின்றோம்.

இதற்கு மேல­தி­க­மாக காங்­கே­ய­னோடை, சிகரம், கர்­பலா, ஒல்­லிக்­குளம், பால­முனை மற்றும் கீச்­சாம்­பள்ளம் ஆகிய இடங்கள் அசா­தா­ர­ண­மான சனத்­தொகை அடர்த்­தியின் கார­ண­மாக, அங்கு வசிக்கும் மக்கள் பல்­வேறு முக்­கிய பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ளத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.
அவற்றில் சில:
01. சுத்­த­மான குடிநீர் இல்லை.
02. சுகா­தா­ரமும் சௌக்­கி­யமும் இல்லை.
03. சுற்­றுச்சூழல் மாசு­பாடு அதி­க­ரித்­துள்­ளது.
04. குடி­யி­ருப்­ப­தற்கு நிலம் இல்லை.
நிலத்­தடி நீர் ஏற்­க­னவே மாசு­பட்­டுள்­ளதால் சுகா­தாரம் மற்றும் சௌக்­கியம் பாதிக்­கப்­பட பல­மான சாத்­தி­யக்­கூ­றுகள் உள்­ளன. மக்கள் தொகை அடர்த்தி கார­ண­மாக பல்­வேறு வகை­யான தொற்­று­நோய்கள் எளிதில் பர­வு­கின்­றன. நீரால் பரவும் நோய்­களால் மக்கள் பாதிக்­கப்­படும் அபாயம் உள்­ளது. சுற்­றுச்சூழல் மாசு­பாட்டால் மனி­தர்­களும் தொடர்ந்து பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். உதா­ர­ண­மாக, காற்று மாசு­பாட்டின் நீண்­ட­கால வெளிப்­பாடு நாள்­பட்ட சுவாச நோய், நுரை­யீரல் புற்­றுநோய் மற்றும் பிற நோய்­க­ளுக்கு வழி­வ­குக்கும்.

எதிர்­கா­லத்தில், குடும்­பங்கள் விரி­வ­டை­யும்­போது, காணிகள் வழங்­கப்­ப­டா­விட்டால், மக்கள் சீவிக்க வாழ்­வி­டங்கள் இல்லை. கொழும்பு மாந­கரில் நிலவும் காணித் துண்­டொன்றின் விலைத் தரத்தை விட காத்­தான்­குடிப் பிர­தே­சத்தில் காணியின் விலை அதி­க­ரித்­துள்­ளது. நிலங்­களை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்­ளப்­பட்­டுள்­ளனர். இந்த நெருக்­க­டியை முறி­ய­டிக்க, இடையில் குறு­கிய இடத்தில் வீடு கட்­டு­வதைத் தவிர மக்­க­ளுக்கு தீர்வு இல்லை. காத்­தான்­கு­டியில் இந்தப் பாரிய காணிப் பிரச்­சி­னையை புதிய விஸ்­த­ரிக்­கப்­பட்ட பிர­தேச செய­லகம் உரு­வாக்கும் இந்த ஏற்­பாட்டின் மூலம் மட்­டுமே தீர்க்க முடியும்.

எனவே, அதற்கு சட்­ட­பூர்வ நடை­மு­றையை வழங்க அர­சாங்கம் பரி­சீ­லிக்க வேண்டும். காத்­தான்­குடி பிர­தேச சபையின் தெற்கு எல்­லையில் உள்ள ஒரு பிர­தேசம் அண்­மைக்­கா­ல­மாக பர­ப­ரப்­பான பிரச்­சி­னை­யாக மாறி­யுள்­ளமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. இது கிழக்கில் உள்ள கடற்­க­ரை­யி­லி­ருந்து மேற்கே பிர­தான சாலை வரை ஹைறாத் நகர் என்று அழைக்­கப்­படும் ஒரு வாழும் பகுதி. 12 மே 1987, 24 மே 1997 மற்றும் 11 டிசம்பர் 1998 ஆகிய மூன்று வர்த்­த­மானி அறி­விப்­பு­க­ளின்­படி, இந்த குறிப்­பிட்ட பகுதி காத்­தான்­குடி பிர­தேச செய­ல­கத்­திற்குச் சொந்­த­மா­ன­தாக இருந்­தி­ருக்க வேண்டும்

இருந்தும், 1999இல் எல்லை நிர்­ணயம் செய்­யப்­பட்­ட­போது, ஆரை­யம்­பதி பிர­தேச சபையைச் சேர்ந்த ஒரு குழு­வினர், நியா­ய­மற்ற முறையில் இந்த விட­யத்தில் ஒரு பெரிய குழப்­பத்தை உரு­வாக்­கினர். இதனால் சர்ச்­சைக்­கு­ரிய பகுதி இன்னும் கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது. இது ஒரு பெரிய குறை­பாடு, உண்­மையில். இது, அரசு நிர்­வாகம் முறை­யாக செயல்­ப­டு­வ­தற்கு பெரும் அச்­சு­றுத்­த­லாக மாறி­யுள்­ளது. எனவே இந்தப் பிரச்­சினை மிகவும் அக்­க­றை­யு­டனும் பொறுப்­பு­டனும் தீர்க்­கப்­பட்டு நியா­ய­மான தீர்வு காணப்­பட வேண்டும் என்று நாம் கரு­து­கின்றோம்.

முன்­மொ­ழிவு 2
தற்­போ­துள்ள காத்­தான்­குடி பிர­தேச செய­லகப் பிரிவில் கிராம அலு­வலர் பிரி­வு­களின் அதி­க­ரிப்பு

2020 இல் செய்­யப்­பட்ட மதிப்­பீட்­டின்­படி 50358 மக்கள் தொகை­யுடன் ஏற்­க­னவே உள்ள காத்­தான்­குடி பிர­தேச செய­லகப் பிரிவின் அளவு வெறும் 6.5 கிலோ­மீற்றர் மட்­டுமே. மக்கள் தொகை 15273 குடும்­பங்­களைக் கொண்­டது. பொது­வாக 300 குடும்­பங்­களைக் கொண்ட ஒரு பிரி­வுக்கு ஒரு கிராம உத்­தி­யோ­கத்தர் பணி­பு­ரிந்தால், இது 51 கிராம அலு­வலர் பிரி­வு­களைக் கொண்­டி­ருக்க வேண்டும்.

இந்த பிர­தேச செய­லகப் பிரிவு நீடிக்­கப்­பட்­ட­போது, மேலே உள்ள முன்­மொ­ழி­வின்­படி, இப்­போது மண்­முனை வடக்கின் கீழ் வரும் குடும்­பங்கள் 3 கிராம அலு­வலர் பிரி­வு­க­ளையும் இப்­போது இருக்கும் 2112 குடும்­பங்­க­ளையும் கொண்­டி­ருக்க வேண்டும்.
புதிய கிராம அலு­வலர் பிரி­வு­களை ஸ்தாபித்தல்

காத்­தான்­கு­டியில் உள்ள மக்கள் தொகைக்கு 50 கிராம அலு­வலர் பிரி­வுகள் தேவை. ஆனால் தற்­போது 18 கிராம அலு­வலர் பிரி­வுகள் மட்­டுமே உள்­ளன. இந்த நிலைமை பின்­வரும் சிர­மங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

1. பேரி­டர்­க­ளின்­போது குறிப்­பிட்ட கிராம அலு­வலர் பிரி­வு­களால் தங்கள் பிரி­வு­க­ளுக்குள் இருக்கும் மக்­களை சரி­யாக கவ­னிக்க முடி­ய­வில்லை.
2. பேரிடர் சூழ்நிலை­க­ளின்­போது பய­னா­ளி­களை நிர்­வ­கிப்­பதில் எப்­போதும் தேவை­யற்ற தாம­தங்கள் ஏற்­ப­டு­கின்­றன.
3. இந்தப் பகு­தியில் உள்ள பெரும்­பா­லான மக்கள் பெரும்­பாலும் வணி­கத்தைச் சார்ந்து இருப்­பதால் அவர்­க­ளுக்கு தனிப்­பட்ட தேவைகள் உள்­ளன, அவை கிராம அலு­வ­லரால் கவ­னிக்­கப்­பட வேண்டும்.
வறுமை ஒழிப்பு முன்­மு­யற்­சி­க­ளின்­போது மக்கள் பெறும் இழப்­பீ­டு­களின் சத­வீதம் ஒப்­பீட்­ட­ளவில் மிகக் குறை­வாக உள்­ளது, ஏனெனில் தற்­போ­தைய கிராம அலு­வலர் பிரி­வுகள் பெரி­ய­தாக உள்­ளன.

நிறை­வாக
காத்­தான்­குடி பிர­தேச செய­லாளர் பிரிவை மறு­சீ­ர­மைப்­புக்­கான அவ­சி­யத்­தையும் இன்­றி­ய­மை­யா­த­தையும் மீண்டும் வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம். இது ஒன்றே மக்­களின் துய­ரங்­க­ளுக்கு சாத்­தி­ய­மான தீர்­வாக இருக்கும் என்று நாங்கள் உறு­தி­யாக நம்­பு­கிறோம். காத்­தான்­கு­டியை இரண்டு தனித்­தனி பிரி­வு­க­ளாகப் பிரிக்க வேண்டும் என்ற எங்கள் முன்­மொ­ழிவு இரண்­டாம்­பட்சம் மட்­டுமே.

நாம் வலி­யு­றுத்­து­வது காத்­தான்­கு­டியை அண்­டி­யுள்ள முஸ்லிம் குக்­கி­ரா­மங்­களை ஒன்­றி­ணைத்து எல்­லை­களை விரி­வு­ப­டுத்த வேண்டும். மேலும், தற்­போ­துள்ள 18 கிராம அலு­வலர் பிரி­வு­க­ளி­லி­ருந்து அவற்றின் எண்­ணிக்கை 49 ஆக அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். எங்கள் முன்­மொ­ழி­வின்­படி பிர­தேச செய­லாளர் பிரிவு பெருப்பிக்கப்படும்போது கிராம அலுவலர் பிரிவுகள் 62 பிரிவுகளைக் கொண்டிருக்கும். பிரதேச செயலாளர் பிரி­வு­களை நிர்­ணயம் செய்யும் நோக்­கத்­திற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள அர­சாங்­கத்­திற்கும் ஆணைக்­கு­ழு­விற்கும் எமது மன­மார்ந்த நன்­றியைத் தெரி­விக்க இந்தச் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்­கின்றோம்.” என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஆனால் இந்த விட­யமும் இன்­னமும் கிடப்­பில்தான் உள்­ளது. அதனால் காத்­தான்­குடி மக்­களும் குடி­யி­ருக்க காணி­யின்றி, ஏலவே உள்ள குறு­கிய நிலத்­திற்­குள்­ளேயே புதிய கட்­டி­டங்­களை நிர்­மா­ணித்து சனத்­தொகை அடர்த்­தி­மிக்க பகு­திக்குள் வாழ நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்ளனர்.

காத்­தான்­குடிப் பிர­தே­சத்தில் கடந்த வருடம் எடுக்­கப்­பட்ட (2021) கணக்­கெ­டுப்­பின்­படி 3243 குடும்­பங்கள் காணி­யற்­றோ­ராக உள்­ளனர் என்று காத்­தான்­குடி பிர­தேச செய­லக உதவிச் செய­லாளர் எம்.எஸ். சில்­மியா தெரி­விக்­கிறார். இதுவே தற்போது காத்தான்குடி மக்கள் எதிர்கொண்டுள்ள காணிப் பிரச்சினையின் யதார்த்தமாகும்.
(தொடரும்… )

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.