இறுதி முயற்சியில் வக்பு சபையும், திணைக்களமும் – தப்தர் ஜெய்லானி பாதுகாக்கப்படுமா?

0 712

ஏ.ஆர்.ஏ.பரீல்

பலாங்­கொ­டை­யி­லுள்ள ஹிட்­டு­வாங்­கல கூர­கல எனும் மலை­க­ளுக்­கி­டையில் அமைந்­துள்­ளதே ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லாகும்.

கூர­கல மலை (குகையைக் கொண்­டுள்ள மலை) கால் அடி மலை எனவும் அழைக்­கப்­ப­டு­கி­றது. பெரிய பாராங்கல் ஒன்றின் கீழ் மங்­க­லான பாதச் சுவடு காணப்­ப­டு­வ­த­னா­லேயே அது இவ்­வாறு அழைக்­கப்­ப­டு­கி­றது. இம்­மலை ஹிட்­டு­வாங்­கல (உள்­ளங்கை அடை­யாளம் பதிந்­துள்ள மலை) என்றும் அழைக்­கப்­ப­டு­கி­றது. பெரிய பாராங்கல் ஒன்று மழை மற்றும் வெயி­லி­லி­ருந்து பாது­காப்­ப­ளிக்கும் வகையில் இயற்­கை­யான கூரை போன்றும் காணப்­ப­டு­கி­றது. இரு பாறை­க­ளுக்­கு­மி­டை­யி­லான நெருக்­க­மான வழி ஊடாக மேடையை அடைய முடியும். அம்­மே­டை­யி­லி­ருந்து கல்­தொட்ட சம­வெளியைப் பார்க்­கக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. வானம் தெளிவாக உள்ள காலங்­களில் அதைப்­பார்க்­கலாம்.

கவ்துல் அஃழம் என பிர­பல்­ய­மாக அறி­யப்­படும் செய்­யது ஷெய்க் முஹி­யத்தீன் அப்துல் காதிர் ஜெய்­லானி என்ற இறை­நே­சரை கண்­ணி­யப்­ப­டுத்தும் நோக்கில் 800 வரு­டங்­க­ளுக்கும் மேலாக இலங்கை முஸ்­லிம்கள் இங்கு சமய அனுஷ்­டா­னங்­களை நடத்தி வரு­கின்­றனர். அப்துல் காதிர் ஜெய்­லானி தியா­னத்தில் ஈடு­பட்­டி­ருந்த மலை விளிம்­பி­லி­ருந்து சுமார் 200 அடி தூரம் சிர­மத்­துடன் நடந்து குகையை அடைய முடியும்.
அதனுள் மலைப் பிள­வி­னூ­டாக ஒரு வெ ளிச்சம் புலப்­ப­டு­கி­றது. இக்­குகை பலாங்­கொடை பீட பூமியின் உச்­சியில் உள்­ளதால் அத­னூ­டாக ஊடு­ருவி வரும் சூரிய ஒளியே அது­வாகும்.

ஆர்.எச்.பாஸற் என்­பவர் ‘ரொமான்றிக் சிலோன்’ எனும் நூலில் கூர­கல குகையைப் பற்றி பின்­வ­ரு­மாறு விப­ரிக்­கிறார். ‘அக்­குகை கவ­னத்தை ஈர்க்கும் ஓர் இட­மாகும். செயற்­கை­யான அகழ்­வு­களோ, அல்­லது சடங்­குகள் சம்­பந்­த­மான அலங்­கா­ரங்­களோ மேற்­கொண்­ட­தற்­கான அத்­தாட்­சிகள் எது­வு­மின்றி முற்­றிலும் இயற்­கை­யா­ன­தாக அது உள்­ளது. செங்­குத்­தான மலை உச்­சி­யி­லி­ருந்து இறங்கிச் சென்றால் அதன் நுழை­வாயில் அமைந்­துள்ள இடத்தைக் காணலாம். அதனுள் நுழைந்தால் பெரிய மண்­டபம் ஒன்றை அடை­யலாம். அதன் இரு­பு­றங்­க­ளிலும் இரு வழிகள் காணப்­ப­டு­கின்­றன. இது பூமிக்­க­டியில் சுமார் 50 யார் தூரம் வரை புலப்­ப­டு­கி­றது. அதற்­கப்பால் நிழல்­களின் பொது­வான இருள் காணப்­ப­டு­கி­றது’ என்று பாஸற் விப­ரிக்­கிறார்.

1922ஆம் ஆண்டு ஹிட்­டு­வாங்­கல மலையின் கீழ் சிறிய பள்­ளி­வாசல் ஒன்று நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. மலை நாகப் பாம்பின் படம் போன்று அமைந்­தி­ருந்­ததால் அப்­பள்­ளி­வா­ச­லுக்கு கூரை ஒன்றின் அவ­சியம் ஏற்­ப­ட­வில்லை. பல அரபு எழுத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. பாறையில் செதுக்­கப்­பட்ட மிஹ்ராப் ஒன்றின் வடி­வத்தில் கிப்லா திசை காட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. இப்­பள்­ளி­வா­சலை மர்ஹூம் சி.எல்.எம்.மரிக்கார் நிறு­வினார்.
கூர­கல பௌத்த துற­வி­களின் தியான ஸ்தலம் என உரிமை கோரப்­பட்­டாலும் அதற்­கான ஆதா­ரங்­க­ளில்லை. கூர­கல குகையைத் தவிர ஏனைய குகை­களில் கல்­வெட்­டுக்கள் காணப்­ப­டு­கின்­றன. இவை பௌத்த சங்­கத்­திற்கு அர்ப்­ப­ணிக்­கப்­பட்­டவை என கல்­வெட்­டுக்கள் தெரி­விக்­கின்­றன. எனவே கூர­கல குகையில் முஸ்­லிம்­களின் வர­லாற்று சான்­றுகள் காணப்­ப­டு­கின்­ற­ன­வே­யன்றி ஏனைய குகை­களில் போன்று கல்­வெட்­டுக்கள் காணப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

1971ஆம் ஆண்டு தொல்­பொருள் திணைக்­களம் கூர­கல பிர­தே­சத்தை தொல்­பொருள் பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யதன் பின்பே பெரும்­பான்­மை­யி­னரின் எதிர்­வ­லைகள் ஜெய்­லானி பள்­ளி­வா­சலை நோக்கி நகர்ந்­தன.

சிங்­கள ராவயவின் ஊர்­வலம்
2015 ஏப்ரல் மாதத்தில் சிங்­கள ராவய அமைப்பு கூர­க­லைக்கு ஊர்­வ­ல­மொன்றை மேற்­கொண்­டது. ஊர்­வ­லத்தில் பௌத்த குரு­மார்­களும், பெரும்­பான்­மை­யின மக்­களும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

கூர­க­லயில் அமைந்­துள்ள தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலை அகற்­றி­விட்டு அவ்­வி­டத்தில் புத்தர் சிலை­யொன்­றினை நிறு­வு­வதே அவர்­க­ளது பிர­தான இலக்­காக இருந்­தது. அவர்கள் ஊர்­வ­லத்தில் புத்தர் சிலை­யொன்­றி­னையும் சுமந்து சென்­றனர்.
‘பௌத்­தர்­களின் புனித பிர­தேசம் கூர­கல. அதனை முஸ்­லிம்கள் ஆக்­கி­ர­மித்துக் கொண்­டுள்­ளார்கள். எமது உயிர்­களைத் தியாகம் செய்­தா­வது கூர­க­லயை முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து மீட்போம்’ என்று சிங்­கள ராவய அமைப்பு சவால் விட்­டது.

சிங்­கள ராவ­யவின் ஊர்­வலம் கூர­க­லயில் நல்­லு­ற­வுடன் வாழும் சிங்­கள முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ரி­டையே முறுகல் நிலை­யினைத் தோற்­று­விக்­கலாம் எனக் கரு­திய கல்­தொட்ட பொலிஸார் பலாங்­கொடை நீதிவான் நீதி­மன்­றத்­தி­ட­மி­ருந்து தடை­யுத்­த­ர­வொன்­றினைப் பெற்­றுக்­கொண்­டதால் சிங்­கள ராவ­யவின் ஊர்­வலம் பொலி­ஸா­ரினால் தடை செய்­யப்­பட்­டது.

பிர­த­ம­ரினால் குழு நிய­மனம்
அப்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் ஜெய்­லானி பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் ஆராய்ந்து தீர்­வொன்­றி­னைப்­பெற்றுக் கொள்­வ­தற்­காக 2015 ஏப்­ரலில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. இக்­கு­ழுவில் இரத்­தி­ன­புரி அர­சாங்க அதிபர், பலாங்­கொடை பிர­தேச செய­லாளர், கலா­சார மர­பு­ரி­மைகள் அமைச்சின் செய­லாளர், தொல்­பொருள் திணைக்­கள பணிப்­பாளர் ஆகியோர் உள்­ள­டங்­கி­யி­ருந்­தனர். 2015 ஏப்ரல் 21ஆம் திகதி இரத்­தி­ன­புரி அர­சாங்க அதி­பரின் காரி­யா­ல­யத்தில் இக்­குழு கூடி­யது. முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் அப்­போ­தைய பணிப்­பா­ளரும் கூட்­டத்­துக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்தார்.

இரா­ஜாங்க அமைச்­சரின் அறி­விப்பு
அப்­போ­தைய இரா­ஜாங்க அமைச்சர் நந்­தி­மித்­திர ஏக்­க­நா­யக்க ஜெய்­லானி பள்­ளி­வாசல் அகற்­றப்­ப­ட­வுள்­ளது என அறி­வித்தார்.

‘கூர­கல பிர­தேசம் தொல்­பொருள் பிர­தேசம். இப்­பி­ர­தேசம் தொல்­பொருள் திணைக்­க­ளத்­துக்குச் சொந்­த­மா­ன­தாகும். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் நிய­மிக்­கப்­பட்ட குழு சமர்ப்­பித்த அறிக்­கை­யின்­படி பள்­ளி­வாசல் அங்­கி­ருந்தும் அகற்­றப்­ப­ட­வுள்­ளது என அப்­போ­தைய கலா­சார மர­பு­ரி­மைகள் இரா­ஜாங்க அமைச்சர் நந்­தி­மித்­திர ஏக்­க­நா­யக்க தெரி­வித்தார்.

இதே­வேளை அகற்­றப்­படும் பள்­ளி­வா­சலை முஸ்­லிம்கள் அவர்­க­ளுக்­கென ஒதுக்­கப்­பட்­டுள்ள பிரத்­தி­யேக 16 ஏக்கர் காணியில் நிர்­மா­ணித்­துக்­கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இரத்­தி­ர­ன­புரி அர­சாங்க அதிபர் தெரி­விப்பு
ஜெய்­லானி பள்­ளி­வாசல் அகற்­றப்­பட வேண்டும் எனவும் அதற்கு ஈடாக முஸ்­லிம்­க­ளுக்கு காணி வழங்­கப்­பட வேண்­டு­மெ­னவும் ஏற்­க­னவே பல வரு­டங்­க­ளுக்கு முன்பே தீர்­மா­னிக்­கப்­பட்டு விட்­ட­தா­கவும் , இதனை அமுல்­ப­டுத்­து­வ­திலே கால­தா­மதம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் 2015லே அப்­போ­தைய இரத்­தி­ன­புரி அர­சாங்க அதிபர் நிமல் கன்­னங்­கர தெரி­வித்­தி­ருந்தார்.

தொல்­பொருள் பிர­தே­சங்கள் தொடர்­பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு 2006ஆம் ஆண்டு நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­குழு கூர­கல ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்­காக முஸ்­லிம்­க­ளுக்கு மாற்­றுக்­காணி வழங்க வேண்­டு­மென சிபா­ரிசு செய்­தி­ருந்­த­தையும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

தொல்­பொருள் வல­யத்­தி­லுள்ள பள்­ளி­வாசல் காணி 1990ஆம் ஆண்டு குத்­த­கைக்கே வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்த அவர் முஸ்­லிம்­க­ளுக்­கென ஒதுக்­கப்­பட்­டுள்ள 16 ஏக்கர் காணியில் பள்­ளி­வாசல் அகற்­றப்­பட்டு நிர்­மா­ணிக்­கப்­ப­டலாம் எனவும் தெரி­வித்தார். அவர் பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்­துக்­கொள்ள அர­சாங்கம் உதவி செய்யும் எனவும் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

இதே­வேளை முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த குழு பள்­ளி­வா­சலை அகற்­று­வ­தற்கு சிபா­ரிசு செய்­தி­ருந்­தாலும் அர­சாங்கம் பள்­ளி­வாசல் நிர்­வாகம் மூலமே அதனை அகற்­றிக்­கொள்­வ­தற்கு திட்­ட­மிட்­டி­ருந்­தது.

முஸ்­லிம்­களின் எதிர்ப்­பினை எதிர்­கொள்ள விரும்­பாத அர­சாங்­கமும், அர­சி­யல்­வா­தி­களும் முஸ்­லிம்­களே பள்­ளி­வா­சலை அகற்­றிக்­கொண்­டார்கள் என்று நியா­யப்­ப­டுத்­து­வ­தற்கே இந்த ஏற்­பா­டாகும். இவ்­வா­றான சூழ்­நி­லையில் நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் பள்­ளி­வாசல் அகற்­றப்­ப­ட­வில்லை.

பொது­ப­ல­சே­னாவின் எதிர்ப்பு
கல­கொட அத்தே ஞான­சார தேரர் செய­லா­ள­ராகப் பதவி வகிக்­கும்­பொ­து­பல சேனா அமைப்பும் ஜெய்­லானி பள்­ளி­வாசல் அப்­ப­கு­தி­யி­லி­ருந்தும் அகற்­றப்­பட வேண்டும் என 2010 – 2015 காலப்­ப­கு­தியில் பல்­வேறு அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தது. ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் பேர­ணி­க­ளையும் நடத்­தி­யது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்­திலும் ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்கு எதி­ராக சவால்கள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன.

இக்­கா­லப்­ப­கு­தியில் பாது­காப்பு செய­லா­ள­ராகப் பதவி வகித்த கோத்­தா­பய ராஜபக் ஷவின் உத்­த­ர­வின்­படி பள்­ளி­வா­ச­லுக்கு சொந்­த­மாக கடைகள் மற்றும் கட்­டி­டங்கள் அகற்­றப்­பட்­டன. தற்­போ­தைய ஜனா­தி­ப­தியும் அப்­போ­தைய பாது­காப்புச் செய­லா­ள­ரு­மான கோத்­தா­பய ராஜ­பக்ஷ தப்தர் ஜெய்­லா­னிக்கு நேர­டி­யாக விஜயம் செய்து அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்ட கடை­க­ளையும் கட்­டி­டங்­க­ளையும் பார்­வை­யிட்டார்.

100 அடி உய­ர­மான தாது­கோ­புரம்
கூர­க­லயில் சுரங்க மலையில் 100 அடி உய­ர­மான தாது­கோ­புரம், தியான மண்­டபம், விடு­திகள், பாரிய சிங்­கத்தின் உருவம், வீதிக்­கட்­ட­மைப்­புகள் என்­பன தற்­போது நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மித்­த­தா­கவே இப்­பா­ரிய தாது­கோ­புரம் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. நிர்­மா­ணப்­ப­ணிகள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. நிர்­மா­ணப்­ப­ணிகள் எதிர்­வரும் ஏப்ரல் மாதத்­துக்கு முன்பு பூர்த்தி செய்­யப்­ப­ட­வுள்­ளன.

இப்­பி­ர­தே­சத்தை தொல்­பொருள் பாது­காப்பு வல­ய­மாக தொல்­பொருள் திணைக்­களம் ஏற்­க­னவே பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்­நி­லையில் தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் மேற்­பார்­வையின் கீழேயே பௌத்த புனித தல நிர்­மா­ணங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான பிர­தே­சத்­துக்குள் பல தசாப்­தங்­க­ளுக்கு முன்பும் தாது­கோ­பு­ர­மொன்று நிர்­மா­ணிக்கும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அப்­போது ஆட்­சி­யி­லி­ருந்த அர­சாங்­கத்தின் கல்வி அமைச்­ச­ராகப் பதவி வகித்த பதி­யுதீன் மஹ்முத் இதற்குப் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்ப்புத் தெரி­வித்­த­தை­ய­டுத்து அதன் நிர்­மா­ணப்­ப­ணிகள் இடை நிறுத்­தப்­பட்­டன.

திருத்த வேலை­க­ளுக்குத் தடை
பள்­ளி­வா­சலின் திருத்த வேலைகள் மற்றும் நிறப்­பூச்சு வேலைகள் என்­பன தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. கந்­தூரி நடை­பெறும் மாதத்தில் மாத்­தி­ரமே இந்த வேலைகள் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதற்கு தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரி­களின் அனு­மதி யைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும்.
‘இங்­குள்ள மரங்­களின் கிளை­களை வெட்­டு­வது கூட எமக்குத் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. இரவு வேளையில் பள்­ளி­வா­சலில் தங்­கி­யி­ருப்­பதும் எனக்குத் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. இரவு 8 மணிக்குப் பின்பு எனக்­கென உள்ள தனி­யான அறை­யிலே நான் தங்க வேண்­டு­மென உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது’ என பள்­ளி­வா­சலில் சில தசாப்­த­கா­ல­மாக பணி­யாற்­றி­வரும் முகா­மை­யாளர் எம்.எஸ்.எம்.ரபி­யுத்தீன் தெரி­விக்­கிறார்.

நெல்­லி­கல வத்­து­ர­கும்­புரே தம்­ம­ர­தன தேரர்
பலாங்­கொட கூர­கல தொல்­பொருள் வல­யத்­துக்குள் பிர­மாண்­ட­மான தூபி மற்றும் தியான மண்­ட­பங்கள், ஓய்வு மண்­ட­பங்கள் உட்­பட மாடிக்­கட்­டி­டங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. இப்­பி­ர­தேசம் பெளத்த மத்­திய நிலை­ய­மாக மாற்­றப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் அரச வெசாக் பண்­டிகை நிகழ்­வு­கள்­இப்­பி­ர­தே­சத்­திலே இடம் பெற­வுள்­ளன. இத்­த­னைக்கும் இப்­பி­ர­தேசம் பாது­காக்­கப்­ப­ட­வேண்­டிய தொல்­பொருள் பிர­தே­ச­மாகும்.
இங்கு இடம் பெறும் நிர்­மா­ணப்­ப­ணிகள் நெல்­லி­கல வத்­து­ர­கும்­புரே தம்­ம­ர­தன தேரரின் மேற்­பார்­வையின் கீழேயே இடம்­பெ­று­கின்­றன. நிர்­மா­ணப்­ப­ணி­களில் ஆயி­ரக்­க­ணக்­கான சிவில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள், இரா­ணு­வத்­தினர் மற்றும் பொது மக்கள் தொண்­டர்­க­ளாக ஈடு­பட்­டுள்­ளனர்.

இங்­கு ­வ­ர­லாற்று புகழ்­மிக்க முஸ்­லிம்­களின் புனித தல­மாகக் கரு­தப்­படும் தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலும் அமைந்­துள்­ளது. கூர­கல பிர­தேசம் பெளத்­தர்­களின் புனித பிர­தே­ச­மாக மாற்­றப்­பட்டு வரும் நிலையில் அப்­ப­கு­தியில் அமைந்­துள்ள ஜெய்­லானி பள்­ளி­வா­சலை அப்­பு­றப்­ப­டுத்தும் முயற்­சி­களில் வத்­து­ர­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் ஈடு­பட்­டுள்ளார். இவர் நெல்­லி­கல சர்­வ­தேச பெளத்த நிலை­யத்தின் ஸ்தாபக­ராவார். இவ­ருக்கு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் முழு­மை­யான ஆத­ரவு உள்­ளது.

கூர­கல ஜெய்­லா­னியில் பள்­ளி­வா­ச­லாக இயங்­கி­வரும் தக­ரக்­கொட்­டிலை அகற்றிக் கொள்­ளு­மாறு அதன் நிர்­வாக சபை­யிடம் மகஜர் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கிறேன். ஆனால் பள்­ளி­வாசல் நிர்­வா­கமோ, வக்பு சபையோ இது வரை எவ்­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ள­வில்லை. விரைவில் அது அகற்­றப்­ப­டா­விட்டால் பலாத்­கா­ர­மாக அகற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அண்­மையில் நெல்­லி­கல தேரர் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

மேலும் அவர் கூர­கல பிர­தேசம் பெளத்­தர்­களின் புனித பிர­தே­ச­மாகும். இப்­பி­ர­தே­சத்­திலே தக­ர­க்கொட்­டிலில் பள்­ளி­வாசல் அமைந்­துள்­ளது. இக்­கொட்­டிலை அகற்­றிக்­கொள்­ளு­மாறு பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தை மகஜர் மூலம் கோரி­யி­ருக்­கிறேன். ஆனால் அமை­தி­யாக இருக்­கி­றார்கள்.எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அங்­குள்ள ஸியா­ரத்தை வைத்­து­விட்டு பள்­ளி­வா­ச­லாக இயங்கும் தகர கொட்­டிலை அகற்­றும்­படி வேண்­டி­யி­ருக்­கிறேன்.

முஸ்­லிம்கள் தொழுகை நடத்­து­வ­தற்கு என்னால் ஒரு மண்­டபம் வேறாக அமைத்துக் கொடுக்க முடியும். கூர­கல பிர­தேசம் சிவ­னொளி­பா­த­ ம­லை­போன்று அனைத்து மக்­களும் வந்து தங்கள் மத­வ­ழி­பா­டு­களை நடத்தும் வகையில் அமைய வேண்டும்.
பள்­ளி­வாசல் நிர்­வா­கமோ அல்­லது வக்பு சபையோ இது தொடர்பில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கா­விட்டால் பள்­ளி­வாசல் அங்­கி­ருந்து அகற்­றப்­படும். பள்­ளி­வா­சலின் புதிய நிர்­வா­கத்­துக்குள் பிரச்­சினை நில­வு­வ­தாக அறி­கிறேன். அவர்கள் பிர­தேச ரீதியில் பிள­வு­பட்­டுள்­ளார்கள் என்றும் நெல்­லி­க­ல­தேரர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

மு.ச.ப. அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர்
தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் இவ்­வா­றான சர்ச்சை­க­ளுக்கு உள்­ள­மைக்குக் காரணம் பள்­ளி­வா­சலின் தற்­போ­தைய நிர்­வாக சபையும்,முன்னாள் நிர்­வாக சபை­க­ளுமே என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லுவல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் தெரி­வித்­துள்­ளமை கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வேண்­டி­ய­தாகும்.

ஜெய்­லானி பள்­ளி­வாசல் அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றப்­பட வேண்டும் என்று நெல்­லி­கல தேரர் சூளு­ரைத்­த­மையை அடுத்து பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் வெளி­யிட்­டுள்ள கருத்து பள்­ளி­வா­சலின் நிர்­வாகம் திணைக்­க­ளத்­துக்கோ,வக்பு சபைக்கோ உரிய ஒத்­து­ழைப்­பு­களை வழங்­க­வில்லை. அத்­தோடு பள்­ளி­வா­சலின் நிலைமை தொடர்பில் காலத்­துக்­குக்­காலம் தெளி­வு­ப­டுத்­த­வில்லை என்­பது உறு­தி­யா­கி­றது.

தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்கு எதி­ராக உரு­வா­கி­யுள்ள நெருக்­கடி நிலை­மையை அதன் நிர்­வாகம் ஒத்­து­ழைத்தால் மாத்­தி­ரமே தீர்த்து வைக்க முடியும். சுமுக­மான தீர்­வு­காண முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் வக்பு சபையும் தயார் நிலையில் உள்­ளது.

பள்­ளி­வாசல் நிர்­வா­க­சபை ஒத்­து­ழைப்பு வழங்­கா­து­விடின் புதிய நிர்­வாக சபை­யொன்­றினை நிய­மிக்கும் நிலைமை ஏற்­ப­டலாம். ஜெய்­லானி பள்­ளி­வாசல் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு புதிய நிர்­வாக சபை அழைக்­கப்­பட்டும் நிர்­வாக சபை உறுப்­பி­னர்கள் 11 பேரில் மூவர் மட்­டுமே அதில் கலந்து கொண்­டனர். நிர்­வாக சபையை மீண்டும் அழைத்து கலந்­து­ரை­யாடி சுமுக தீர்வு காணு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அவர் தெரி­வித்­தமை வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

ஜெய்­லானி புனி­த­தலம் வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கீழ் பதிவு செய்­யப்­பட்ட சட்­ட­ரீ­தி­யான சம­யஸ்­த­ல­மாகும். இந்­நி­லையில் இதனைப் பாது­காக்கும் பொறுப்பு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம், வக்­பு­சபை என்­ப­ன­வற்­றுக்கு மாத்­திரம் உரித்­தா­ன­தல்ல. பள்­ளி­வாசல் நிர்­வாக சபைக்கும் முக்­கிய பொறுப்பு உள்­ளது. பள்­ளி­வாசல் நிர்­வாக சபை ஏகோ­பித்து இதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வேண்டும். ஜெய்­லானி பள்­ளி­வா­சலும் அத­னோடி­ணைந்த பகு­தி­களும் முஸ்­லிம்­களின் தொன்மை மிகு புனித­த் த­லங்­க­ளாகும்.மேலும் சட்ட ரீதி­யா­ன­து­மாகும். அதனை அகற்­று­மாறு எவ­ராலும் உத்­த­ர­வி­ட­மு­டி­யாது என்றும் அவர் கூறி­யுள்ளார்.

செயற்­தி­ற­னற்ற நிர்­வாக சபை
ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபை செயற்­தி­ற­னற்­றது என்­பதை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளப்­ப­ணிப்­பாளர் வெளிப்­ப­டை­யா­கவே தெரி­வித்­துள்ளார். தற்­போ­தைய மற்றும் முன்­னைய நிர்­வா­க­ச­பைகள் பள்­ளி­வாசல் அபி­வி­ருத்­தியில் அக்­கறை செலுத்­த­வில்லை என்று கவலை வெளி­யிட்­டுள்ளார்.

பள்­ளியை பாது­காக்க நட­வ­டிக்கை
ஜெய்­லானி பள்­ளி­வாசல் நீண்­ட­கா­ல­மாக அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு உட்பட்டு வருகின்றைமை குறிப்பிடத்தக்கதாகும். தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக பதவிவகித்த காலத்தில் இப்பள்ளிவாசலுக்குச் சொந்தமான சில கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அவரது உத்தரவின் பேரிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரும் கடந்த காலங்களில் இப்பள்ளிவாசலை அகற்றக்கோரி பேரணிகளை நடத்தியிருந்தார்.

பள்ளிவா­ச­லுக்கு தொட­ராக அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்டு வந்த நிலையில் பள்­ளி­வாசல் நிர்­வாகம் அச­மந்­த­போக்கில் செய­லற்று இருப்­பதை அவ­தா­னித்த முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்ஸார் உட­ன­டி­யாக செயற்­பட்டுள்ளமை பாராட்­டத்­தக்­க­தாகும்.

அவர் கடந்த 2ஆம் திகதி ஜெய்­லானி பள்­ளி­வாசல் நிர்­வா­க­சபை உறுப்­பி­னர்­க­ளையும் முன்னாள் நிர்­வாக சபை உறுப்­பி­னர்­க­ளையும் திணைக்­க­ளத்துக்கு அழைத்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார். 11 நிர்­வாக சபை உறுப்­பி­னர்­களில் 8 பேர் மாத்­தி­ரமே கலந்­து­ரை­யா­டலில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். முன்னாள் நிர்­வாக சபையின் உறுப்­பி­னர்கள் சிலரும் கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போது ஜெய்­லானி பள்­ளி­வா­சலைப் பாது­காப்­ப­தற்கு வக்­பு­ச­பையும் முஸ்லிம் சம­ய­பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் கூட்­டாக செயற்­ப­டு­வ­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இதற்­கென ஐவர் அடங்­கிய நட­வ­டிக்கை குழு­வொன்­றினையும் பள்­ளி­வாசல் தொடர்­பான தேவை­யான ஆவ­ணங்­களைத் திரட்­டு­வ­தற்கு சட்­டத்­த­ர­ணிகள் குழு­வொன்­றினையும் நிய­மிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

பள்­ளி­வா­சலின் தற்­போ­தைய நிலை­மைக்கு தற்­போ­தைய நிர்­வா­கமும், முன்னாள் நிர்­வா­கமும் பொறுப்­புக்­கூற வேண்டும் என்று கலந்­து­ரை­யா­ட­லின்­போது தெரி­விக்­கப்­பட்­டது. குறிப்­பிட்ட நிர்­வாக சபைகள் பள்­ளி­வா­சலின் அபி­வி­ருத்­தியில் அக்­க­றை­காட்­டாமை தொடர்பில் கவலையும் வெளி­யிட்­டது.

அத்­தோடு பலாங்­கொடை பகு­தியில் இயங்­கி­வரும் 15 பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கி­களை ஒன்­றி­ணைத்து விரைவில் கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை நடத்தி கள நிலைமை ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. அத்­தோடு தொல்­பொருள் ஆணை­யாளர் நாய­கத்­துடன் வக்பு சபையும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளது.
முஸ்லிம் சம­ய­பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுடன் இணைந்து மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னங்கள் வர­வேற்­கத்­தக்­கன. ஆனால் தீர்­மா­னங்கள் காலம் தாழ்த்­தப்­ப­டாது நடைமுறைப்படுத்தப்­ப­ட­வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.