சண்முகா விவகாரம்:மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு ஆதரவு

0 380

(நா.தனுஜா)
அண்­மையில் திரு­கோ­ண­மலை சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரிக்கு அபாயா அணிந்து கற்­பித்தல் பணி­களில் ஈடு­ப­டச்­சென்ற ஆசி­ரி­யைக்கு, சிவில் சமூக மற்றும் மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ளர்கள் இணைந்து தமது ஒரு­மைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

திரு­கோ­ண­மலை சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரிக்கு அபாயா அணிந்து கற்­பித்தல் பணி­களில் ஈடு­ப­டச்­சென்­றதன் கார­ண­மாக ஆசி­ரி­யை­யொ­ருவர் கற்­பித்தல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டவோ அல்­லது பாட­சாலை வர­வுப்­புத்­த­கத்தில் கையெ­ழுத்­தி­டவோ அனு­ம­திக்­கப்­ப­டா­த­துடன் அத­னைத்­தொ­டர்ந்து அப்­பா­ட­சா­லைச்­சூ­ழலில் அமை­தி­யின்மை நிலை­யொன்றும் உரு­வா­னது.

கடந்த ஜன­வரி 19 ஆம் திகதி நீதி­மன்றில் காணப்­பட்ட இணக்­கப்­பாட்­டிற்கு அமைய கல்­வி­ய­மைச்சின் செய­லா­ளரால் அனுப்­பப்­பட்ட இட­மாற்­றக் ­க­டி­தத்­திற்கு அமைய பெப்­ர­வரி 2 ஆம் திகதி சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரிக்குக் கற்­பித்தல் பணி­க­ளுக்­கா­கச்­சென்ற அவர் மேற்­கு­றிப்­பிட்­ட­வா­றான சம்­ப­வங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்­க­வேண்­டி­யேற்­பட்­டதை அடுத்து, அவ­ரு­ட­னான ஒரு­மைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தும் வகையில் சிவில் சமூக மற்றும் மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ளர்கள் ஒன்­றி­ணைந்து கொழும்பில் அமைந்­துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிலை­யத்தில் கலந்­து­ரை­யா­ட­லொன்றை நேற்று முன்­தினம் ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர்.

சிவில் சமூக செயற்­பாட்­டா­ள­ரான ஷ்ரீன் சரூ­ரினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த இக்­க­லந்­து­ரை­யா­டலில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் முன்னாள் ஆணை­யா­ளரும் மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ள­ரு­மான சட்­டத்­த­ரணி அம்­பிகா சற்­கு­ண­நாதன், சிவில் சமூக மற்றும் மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ள­ரான பவானி பொன்­சேகா, ஆசி­ரியை பாத்­திமா பஹ்­மிதா சார்பில் நீதி­மன்றில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி சுவஸ்­திகா அரு­லிங்கம் உள்­ளிட்ட சிலரும் திரு­கோ­ண­மலை, புத்­தளம் உள்­ளிட்ட மாவட்­டங்­களில் பல்­வேறு பொதுக்­கட்­ட­மைப்­புக்­க­ளிலும் முகங்­கொ­டுக்­க­நேர்ந்த இத்­த­கைய சம்­ப­வங்­களால் பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் பெண்கள் சிலரும் பங்­கேற்­றி­ருந்­தனர். ஆசி­ரியை பாத்­திமா பஹ்­மி­தாவும் இந் நிகழ்வில் பங்­கு­பற்றி தனது கருத்­துக்­களை வெளி­யிட்டார்.

அக்­க­லந்­து­ரை­யா­டலில் தமது அனு­ப­வங்­களைப் பகிர்ந்­து­கொண்ட பாதிக்­கப்­பட்ட பெண்கள், இவ்­வா­றான சம்­ப­வங்­களால் தாம் உள­வியல் ரீதியில் முகங்­கொ­டுத்த அழுத்­தங்கள் தொடர்­பிலும் சுட்­டிக்­காட்­டி­னார்கள். அதே­வேளை இத்­த­கைய சம்­ப­வங்கள் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களின் ஓரங்கம் என்று தெரி­வித்த சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள், இவ்வாறான சம்பவங்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டியதன் அவசியம் குறித்தும் பிரஸ்தாபித்தனர். அதுமாத்திரமன்றி இதற்கு எதிராக சிவில் சமூக மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் ஒன்றிணைந்து கூட்டாக அறிக்கையொன்றை வெளியிடவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.