சட்டத்தரணி ஹிஜாஸுக்கு எதிரான வழக்கு: பிணை கிடைக்குமா?

0 352

எம்.எப்.எம்.பஸீர்

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் தற்­போது சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்­றச்­சாட்­டுக்­களின் பேரில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு பிணை­ய­ளிக்க கடந்த ஜன­வரி 28 ஆம் திகதி மீண்டும் புத்­தளம் மேல் நீதி­மன்றம் மறுத்­தி­ருந்­தது. இது பொது­வாக அன்­றைய தினம் வழக்கு விசா­ர­ணை­களைத் தொடர்ந்து எல்லா ஊட­கங்­க­ளிலும் பிரச்­சா­ரப்­ப­டுத்­தப்­பட்ட, எல்­லோரும் அறிந்த செய்­தி­யாகும்.

எனினும் சர்­வ­தேச அளவில் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள, பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ரான வழக்கில், வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ராகும் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்சன டி சில்­வாவை புத்­தளம் மேல் நீதி­மன்றம் இவ்­வ­ழக்கின் போது கடு­மை­யாக எச்­ச­ரித்­தது. இது ஊட­கங்­களில் பெரி­தாக வெளிச்­ச­மிட்டு காட்­டப்­ப­டாத போதும், கடந்த ஜன­வரி 28 ஆம் திகதி வழக்கு விசா­ர­ணை­களின் போது இடம்­பெற்ற மிக முக்­கி­ய­மான நிகழ்­வாக இதனை குறிப்­பிட முடியும். ஏனெனில் அதற்கு காரணம் உள்­ளது.

இந்த வழக்கின் பிர­தான சாட்­சி­யா­ள­ரான புத்­தளம் அல் சுஹை­ரியா மத்­ர­சாவின் முன்னாள் மாணவன் மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக்கின் சாட்­சி­யங்­களை நெறிப்­ப­டுத்தும் போது, சாட்­சி­யா­ள­ரிடம் நேர­டி­யான, பதிலை உணர்த்த முடி­யு­மான முறையில் கேள்­வி­களை தொடுத்­த­மையை மையப்­ப­டுத்தி நீதி­மன்றால் இவ்­வாறு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. இந்த விவ­காரம் தொடர்­பி­லான வழக்கை விசா­ரிக்­க­வென விசே­ட­மாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள சிலாபம் மேல் நீதி­மன்றின் நீதி­பதி குமாரி அபே­ரத்­ன­வினால் இவ்­வாறு அரசின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் எச்­ச­ரிக்­கப்­பட்டார். பொது­வாக சாட்சி விசா­ர­ணை­களின் போது, நேர­டி­யான அல்­லது பதிலை உணர்த்தும் கேள்­வி­களைக் கொண்டு நெறிப்­ப­டுத்­தல்­களை முன்­னெ­டுக்க முடி­யாது. வேறு வகையில் கேள்­வி­களை எழுப்ப முடி­யாத சந்­தர்ப்­பங்­களில் நீதி­மன்றின் அனு­ம­தி­யுடன் மட்டும் அவ்­வா­றான நேர­டி­யாக கேள்­வி­களை தொடுக்க முடியும். இதுவே பொது­வான சம்­பி­ர­தா­ய­மாகும்.

சர்­வ­தேச அளவில் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள, பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ்
ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ரான வழக்கில், வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ராகும்
பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சுதர்சன டி சில்­வாவை
புத்­தளம் மேல் நீதி­மன்றம் இவ்­வ­ழக்கின் போது கடு­மை­யாக எச்­ச­ரித்­தது. இது ஊட­கங்­களில் பெரி­தாக
வெளிச்­ச­மிட்டு காட்­டப்­ப­டாத போதும், கடந்த ஜன­வரி 28 ஆம் திகதி வழக்கு விசா­ர­ணை­களின் போது இடம்­பெற்ற மிக முக்­கி­ய­மான நிகழ்­வாக இதனை குறிப்­பிட முடியும்.

இவ்­வா­றான நிலையில் உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் தற்­போது சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்­றச்­சாட்­டுக்­களில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணைகள் கடந்த 28 ஆம் திகதி இடம்­பெற்ற போது இந்த சம்­பவம் நீதி­மன்றில் பதி­வா­னது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திக­திக்கும் 31 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் புத்­தளம் அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சா­லையில் கல்வி பயின்ற மாண­வர்­க­ளுக்கு, கற்­றுக்­கொ­டுக்­கப்­பட்ட சொற்கள் ஊடா­கவோ, தவ­றான பிர­தி­நி­தித்­துவம் ஊடா­கவோ பல்­வேறு மதங்­க­ளுக்கு இடையில் மோதல் ஏற்­படும் வண்ணம் எதிர் உணர்­வு­களை தூண்டும் வித­மாக சொற் பொழி­வினை நடாத்­தி­யமை, அதற்­காக சதி செய்­தமை தொடர்பில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) எச் பிரி­வுடன் இணைத்து கூறப்­படும் அச்­சட்­டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் தொடர்பில், ‘ இஸ்­ரே­லி­யர்கள் கைப்­பற்­றி­யி­ருப்­பது, எமது பள்­ளி­வா­சல்கள். இலங்­கையில் கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கு எதி­ராக தாக்­குதல் நடத்­தி­னா­லேயே அவர்கள் அச்­சப்­ப­டுவர்” என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடி­யோக்­களை காண்­பித்­தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலை­மையை ஏற்­ப­டுத்தும் வண்ணம் உணர்­வு­களை தூண்­டி­ய­தாக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) எச் பிரி­வுடன் இணைத்து நோக்­கப்­படும் அச்­சட்­டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

குறித்த இரு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் உதவி ஒத்­தாசை புரிந்­த­தாக சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்­க­ர­வாத தடைச் சட்ட ஏற்­பா­டுகள் பிர­காரம் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்­பி­லான யுத்த வீடியோ காட்­சி­களை காண்­பித்து ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் கூறி­ய­தாக கூறப்­படும் வச­னங்கள் ஊடாக வெறுப்­பு­ணர்­வு­களை விதைத்­த­தாக குற்றம் சுமத்தி சிவில் அர­சியல் உரி­மைகள் குறித்­தான சர்­வ­தேச இணைக்­கப்­பாட்டு சட்­டத்தின் 3 (1) ஆம் உறுப்­பு­ரை­யுடன் இணைத்து பார்க்­கப்­படும் அச்­சட்­டத்தின் 3 (3) ஆம் உறுப்­பு­ரையின் கீழ் குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ரா­கவும், அதற்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை தொடர்பில் மத்­ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீ­லுக்கு எதி­ரா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. அக்­குற்­றச்­சாட்­டுக்கள் பிர­தி­வா­தி­க­ளுக்கு வாசித்து காட்­டப்­பட்ட நிலையில், அவர்கள் அக்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் தாம் நிர­ப­ரா­திகள் என அறி­வித்­தனர்.

இவ்­வ­ழக்கு விசா­ரணை தொடர்பில் இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் விசேட அவ­தானம் செலுத்­தி­யுள்ள நிலையில், ஹிஜாஸ் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் அவர் தொடர்ச்­சி­யாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலைமை உள்­ளிட்ட பல விட­யங்­களை முன்­னி­றுத்தி வழக்கு விசா­ர­ணையை மேற்­பார்வை செய்ய விசேட சட்­டத்­த­ர­ணிகள் குழாம் அச்­சங்­கத்தால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுர மெத்­தே­கொட தலை­மையில் சட்­டத்­த­ரணி சரித் கல்­ஹேன இது தொடர்பில் நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.

இந் நிலையில் சாட்­சி­யா­ளரின் சாட்­சியம் பெறும் நட­வ­டிக்­கைகள், பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்சன டி சில்­வாவின் நெறிப்­ப­டுத்­தலில் ஆரம்­ப­மா­னது.

இதன்­போது சாட்­சி­ய­ம­ளித்த சாட்­சி­யா­ள­ரான மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக், 2018 ஆகஸ்ட் 19 ஆம் திகதி இருவர் சுஹை­ரியா மத்­ரசா பாட­சா­லைக்கு வந்து விரி­வு­ரை­களை முன்­னெ­டுத்­த­தா­கவும், பிர­தி­வாதி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் அதி­லி­ருந்து ஒரு மாதம் அல்­லது இரு மாதங்­க­ளுக்கு பிறகு வந்து விரி­வுரை நடாத்­தி­ய­தாக கூறினார். அத்­துடன் இதன்­போது ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் புர­ஜெக்டர் ஒன்­றினை பயன்­ப­டுத்­தி­ய­தா­கவும், அதனை பயன்­ப­டுத்தி அவர் என்ன கூறினார் என்­பது ஞாப­கத்தில் இல்லை எனவும் சாட்­சி­யாளர் சாட்­சி­ய­ம­ளித்தார்.

இதன்­போது, சாட்­சி­யா­ள­ருக்கு நேர­டி­யாக ஆம், இல்லை எனும் பதிலை அளிக்க முடி­யு­மான வண்­ணமும், பதிலை கேள்­வியில் மறைத்தும் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்சன டி சில்வா கேள்­வி­களை தொடுப்­ப­தாக , சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ர­ணி­களும் நீதி­பதி குமாரி அபே­ரத்­ன­விடம் சுட்­டிக்­காட்­டினர்.

இத­னை­ய­டுத்து, சாட்­சி­யாளர் சாட்சிக் கூண்­டி­லி­ருந்து இறக்­கப்­பட்டு, நீதி­மன்ற அறைக்கு வெளியே தடுத்து வைக்­கப்­பட்ட நிலையில், பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்சன டி சில்­வாவின் குறித்த நட­வ­டிக்கை தொடர்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளிந்த இந்­ர­திஸ்ஸ மற்றும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள ஆகி­யோரால் ஆட்­சே­பனை பதிவு செய்­யப்­பட்­டது. அதற்­கான பதில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்சன­வினால் வழங்­கப்­பட்­டது.

இந் நிலையில் விட­யங்­களை ஆராய்ந்த நீதி­பதி குமாரி அபே­ரத்ன, ‘ சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் சிரேஷ்ட அதி­காரி ஒரு­வ­ரிடம் தான் இவ்­வா­றான பதிலை உணர்த்தும் கேள்­வி­களை எதிர்­பார்க்­க­வில்லை எனவும், அவ்­வாறு பதிலை உணர்த்தும் கேள்­வி­களை இனி மேல் நீதி­மன்றின் அனு­ம­தி­யில்­லாமல் கேட்கக் கூடாது” எனவும் உத்­த­ர­விட்டார்.
அவ்­வாறு உத்­த­ர­வி­டப்­பட்ட பின்னர் மீள சாட்சி நெறிப்­ப­டுத்தல் ஆரம்­பிக்­கப்­பட்டு 2 ஆவது கேள்­வியே நேர­டி­யான, பதிலை உணர்த்தும் கேள்­வி­யாக அமைந்­தி­ருந்­தது. இந் நிலையில், பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ர­ணி­க­ளான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளிந்த இந்­ர­திஸ்­ஸவும், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ர­ளவும் மீண்டும் தமது ஆட்­சே­ப­னை­களை பதிவு செய்­தனர்.

இத­னை­ய­டுத்து, சாட்­சி­யா­ள­ரிடம் நேர­டி­யான, பதிலை உணர்த்தும் கேள்­வி­களை தொடர்ந்து கேட்­பது தொடர்பில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சுதர்­சன சில்­வாவை கடு­மை­யாக எச்­ச­ரிப்­ப­தாக நீதி­பதி குமாரி அபே­ரத்ன திறந்த மன்றில் அறி­வித்தார்.
அதனைத் தொடர்ந்து குறு­கிய நேரத்தில், சாட்­சி­களை நெறிப்­ப­டுத்தும் பொறுப்பை, அவ­ரோடு மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி லக்­மினி கிரி­யா­கம கையேற்றார்.

இவ்­வா­றான நிலையில், ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இருவர் மீதான குற்றப் பத்­தி­ரி­கையும் கடந்த 2018 ஆகஸ்ட் முதலாம் திக­திக்கும் 31 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் நடந்த குற்றம் ஒன்­றினை அடிப்­ப­டை­யாக கொண்டு முன் வைக்­கப்­பட்­டுள்­ள­மையால், குற்றப் பத்­தி­ரி­கையின் குற்றம் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் காலப்­ப­கு­தியை 2018 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ஒக்­டோபர் 31 ஆம் திகதி வரை­யான காலப்­ப­குதி என திருத்த வழக்குத் தொடுநர் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­க­ம­வினால் குற்­ற­வியல் சட்­டத்தின் 167 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமைய கோரிக்கை முன் வைக்­கப்­பட்­டது.

எனினும் அந்த கோரிக்­கைக்கு ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்வின் சட்­டத்­த­ரணி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளின் இந்­ர­திஸ்­ஸவும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ர­லவும் கடும் ஆட்­சே­பனை முன் வைத்­தனர்.

அவ்­வாறு குற்றம் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும், ஒவ்­வொரு சாட்­சி­யா­ளரின் சாட்­சி­யத்­துக்கு அமைய திருத்தச் சென்றால் அது பிர­தி­வா­திக்­கான நியா­யத்தைப் பெற்­றுக்­கொள்ளும் செயற்­பா­டு­க­ளுக்கு பாரிய பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தும் என அவர்கள் சுட்­டிக்­காட்­டினர். அத்­துடன் குற்றப் பத்­தி­ரி­கையில் குற்றம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தி­யாக 2018 ஆகஸ்ட் 1 முதல் 31 வரை­யி­லான காலப்­ப­குதி குறிப்­பி­டப்­பட, சாட்­சி­யா­ளரின் இரு உறு­தி­யான சி.ஐ.டி. வாக்­கு­மூ­லங்­களை சட்ட மா அதிபர் அடிப்­ப­டை­யாக பயன்­ப­டுத்­தி­யுள்ள நிலையில், குற்றப் பத்­தி­ரி­கையை திருத்த அனு­ம­திக்க கூடாது என அவர்கள் வாதிட்­டனர்.

ஆட்­சே­ப­னை­களை ஏற்­றுக்­கொண்ட மேல் நீதி­மன்ற நீதி­பதி குமாரி அபே­ரத்ன, குற்றப் பத்­தி­ரி­கையை திருத்த அனு­ம­தி­ய­ளிக்க மறுத்தார்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே, முதல் சாட்­சி­யா­ளரின் சாட்சி நெறிப்­ப­டுத்தல் நட­வ­டிக்­கை­களை சட்ட மா அதிபர் தரப்பு முடி­வுக்கு கொண்­டு­வந்த நிலையில், சாட்­சி­யா­ளரை குறுக்கு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் எதிர்­வரும் பெப்­ர­வரி 18 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளது.

இத­னை­ய­டுத்தே ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளின் இந்­ர­திஸ்ஸ, பிணைக் கோரிக்­கையை முன் வைத்தார்.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் சார்பில் கடந்த வாரம் சீராய்வு மனு முன் வைத்து பிணை கோரிய போது, அதற்கு ஆட்சேபனை இல்லையென சட்டமா அதிபர் அறிவித்திருந்ததாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நலிந்த இந்திரதிஸ்ஸ மன்றில் சுட்டிக்காட்டினார். இதனை சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்சன டி சில்வாவும் அதனை ஆமோதித்தார். சட்ட மா அதிபருடனான பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியின் சந்திப்பின் போதும் அது உறுதி செய்யப்பட்டதாக மன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.
எனினும் சட்ட மா அதிபர் பிணை வழங்க எதிர்ப்பு இல்லை என கூறினாலும், மேல் நீதிமன்றுக்கு பிணை வழங்க பயங்கரவாத தடைச் சட்டம் பிரகாரம் அதிகாரம் இல்லை என்ற தனது முன்னைய உத்தரவை தானே மீள மாற்ற முடியாது என நீதிபதி குமாரி அபேரத்ன சுட்டிக்காட்டி பிணைக் கோரிக்கையை நிராகரித்தார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்க உத்தரவிட்டால், அதனை நகர்த்தல் பத்திரத்தினூடாக அறிவிக்குமாறும் முடியுமான முதலாவது தினத்திலேயே பிணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மேல் நீதிமன்ற நீதிபதி இதன்போது தெரிவித்தார். இந் நிலையில் இவ்வழக்கின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.