நரபலி கேட்ட நாமபூஜை

0 472

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

பாகிஸ்­தானின் தொழிற்­சா­லை­யொன்றில் பணி­யாற்­றிய இலங்­கை­ய­ரான பிரி­யந்த குமா­ரவை அத்­தொ­ழிற்­சா­லையில் வேலை­செய்த முஸ்லிம் தீவி­ர­வாதக் கும்­ப­லொன்று காட்­டு­மி­ராண்­டித்­த­னமாய் அடித்துத் தீயிட்டுக் கொழுத்திக் கொலை செய்­ததை மனி­தா­பி­மா­ன­முள்ள எந்த ஒரு ஜீவனும் மன்­னிக்க முடி­யாது. மன்­னிக்­கவும் கூடாது. அந்­நாட்டின் பிர­தமர் இம்ரான் கான் அக்­கும்­ப­லுக்கு கடும் தண்­டனை வழங்­கப்­படும் என்று உறுதி கூறி இலங்கை மக்­க­ளுக்கும் தனது ஆழ்ந்த கவ­லையை தெரி­வித்­துள்ளார். பிரி­யந்­தவை இழந்த அவரின் மனைவி பிள்­ளை­க­ளுக்கும் அவ­ரது உற­வி­ன­ருக்கும் அத்­து­ய­ரத்தைத் தாங்­கிக்­கொள்ளும் சக்­தியை இறைவன் அரு­ள­வேண்டும் என நாம் எல்­லாரும் பிரார்த்­திப்­போ­மாக.

காட்­டு­மி­ராண்டிச் செயல்­களும் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான மக்­களும் பா­கிஸ்­தா­னுக்கு மட்­டுமே சொந்­த­மா­ன­வை­யல்ல. அப்­ப­டிப்­பட்ட செயல்­க­ளையும் அதனைச் செய்­ப­வர்­க­ளையும் எல்லா நாடு­க­ளிலும் எல்லா இனங்­க­ளிலும் காணலாம். உதா­ர­ண­மாக, இலங்­கை­யி­லேற்­பட்ட இனக்­க­ல­வ­ரங்­க­ளையும் அக்­க­ல­வ­ரங்­களில் எத்­தனை அப்­பாவி மக்கள் எவ்­வா­றான கொடு­மை­க­ளுக்கு ஆளாக்­கப்­பட்டுச் செத்து மடிந்­தார்கள் என்­ப­தையும் வர­லாறு மறக்­க­வில்லை. கொட்டாரமுல்லையில் இரு வரு­டங்­க­ளுக்­குமுன் ஒரு முஸ்லிம் குடும்பத் தலைவரை எப்­படி சிங்­கள பௌத்த வெறி­யினர் அடித்துக் கொன்­றார்கள் என்­பதை எப்­படி மறக்­கலாம்? அதற்­காக ஒன்­றுக்­கொன்று சமன் என்ற அடிப்­ப­டையில் பா­கிஸ்­தானில் நடை­பெற்ற சம்­ப­வத்தை நாம் மன்­னித்து மறந்­து­விட முடி­யாது. அதிலும் அக்­கொலை சம்­பந்­த­மாக முஸ்­லிம்கள் அவ­சியம் அறிந்­து­கொள்ள வேண்­டிய ஒரு முக்­கிய விட­யத்தை இக்­கட்­டுரை விளக்க விரும்­பு­கி­றது. வழ­மை­போன்று இவ்­வி­ளக்கம் பல­ருக்கு அஜீ­ர­ணத்தை ஏற்­ப­டுத்­தலாம்.

முத­லா­வ­தாக அந்தக் கொலை நடை­பெறக் கார­ண­மென்ன? இது­வரை கிடைக்­கப்­பெற்ற தக­வல்­க­ளின்­படி பிரி­யந்த அந்தத் தொழிற்­சா­லையின் ஓர் உயர் அதி­காரி. வெளி­நாட்டுக் குழு­வொன்று அத்­தொ­ழிற்­சா­லைக்கு சமு­க­ம­ளிப்­ப­தாக இருந்­ததால் அக்­குழு வரு­வ­தற்­கு­முன்னர் அத்­தொ­ழிற்­சாலை இயந்­தி­ரங்­களில் ஒட்­டப்­பட்­டி­ருந்த ஒட்­டி­களை அகற்­று­மாறு அந்த அதி­காரி கட்­ட­ளை­யிட்­டுள்ளார். அந்த ஒட்­டி­களில் என்ன அச்­சி­டப்­பட்­டி­ருந்­த­னவோ? அதன் வார்த்­தைகள் பெரும்­பாலும் உருது அல்­லது அரபி மொழி­யி­லேயே அச்­சி­டப்­பட்­டி­ருக்­கலாம். அது இலங்­கை­ய­ரான பிரி­யந்­த­வுக்கு விளங்கி இருக்­காது. மேலும் அந்த வார்த்­தைகள் அல்­லது வச­னங்கள் திருக்­குர் ஆனின் வச­னங்­க­ளா­கவோ நபி­பெ­ரு­மா­னாரின் போத­னை­க­ளா­கவோ இருந்­தி­ருக்­கலாம். அப்­ப­டி­யானால் முஸ்லிம் தொழி­லா­ளி­களைப் பொறுத்­த­வரை அவை பரி­சுத்­த­மா­னவை. அவற்றை நீக்­கு­தலோ அழித்­தலோ அவ­மா­னப்­ப­டுத்­தலோ தெய்­வநிந்­தனைக் குற்­ற­மாகும். ஆதலால் அவர்­களின் பார்­வையில் அப்­ப­ரி­சுத்த ஒட்­டி­களை நீக்­கு­மாறு கட்­ட­ளை­யிட்ட முஸ்­லி­மல்­லாத உயர் அதி­காரி தெய்­வ­நிந்­தனைக் குற்­ற­வாளி. தெய்வ நிந்­தனைக் குற்­ற­வா­ளி­க­ளுக்கு பாகிஸ்­தானின் சட்டம் சிறை அல்­லது மரண தண்­டனை. எனவே இந்த மத­அ­றி­வி­லிகள் அவர்­மீது தெய்­வ­நிந்­த­னை­யாளன் எனக் குற்­றஞ்­சு­மத்தி அவர்­களே குற்­ற­வா­ளி­யெனக் கண்டு தண்­ட­னையும் கொடுத்து அல்­லாஹ்வின் நீதி­ப­தி­க­ளாகி தூக்­கி­லிடும் சேவ­கர்­க­ளு­மா­னார்கள். ஏற்­க­னவே அந்த அதி­கா­ரியின் கட்­டுப்­பா­டு­களை விரும்­பாத சில தொழி­லா­ளி­க­ளுக்கு ஒட்­டி­களை அகற்றும் கட்­டளை வெந்த புண்ணில் வேல் பாய்ந்­த­துபோல் இருந்து இந்தக் கொலையை நடத்தத் தூண்­டி­யி­ருக்­கலாம். ஆனாலும் இத்­த­னைக்­கெல்லாம் அடிப்­ப­டை­யாக இன்­னு­மொரு காரணம் உண்டு. அதனை ஆராய்­வதே இக்­கட்­டுரை.

முத­லா­வ­தாக, அந்த ஒட்­டிகள் ஏன் இயந்­தி­ரங்­களில் ஒட்­டப்­பட்­டன? இந்த வினா­வுக்கு விடை­ய­ளிக்க பல ஆண்­டு­க­ளுக்­குமுன் நான் இலங்­கையில் வாழ்ந்­த­போது என் கண்­முன்னே நடை­பெற்ற ஒரு சம்­ப­வத்தை வாச­கர்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கிறேன். இந்­தி­யா­வி­லி­ருந்து ஒரு மௌலானா கண்­டிக்கு அவ­ரது சீடர்­களைச் சந்­திப்­ப­தற்­காக வந்­தி­ருந்தார். அவ­ரைப்­பார்க்க என் உற­வி­னர்­களுள் இருவர் என்­னையும் பேரா­தனை வளா­கத்­தி­லி­ருந்து இழுத்­துக்­கொண்டு போனார்கள். அந்தப் பெரி­யாரைச் சந்­திக்­க­வந்த வேறொ­ருவர் (அவர் கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்­த­வ­ரா­கத்தான் இருந்­தி­ருக்க வேண்டும்) மௌலா­னா­விடம் சென்று தனது உழவு யந்­திரம் அடிக்­கடி பழு­து­ப­டு­வ­தா­கவும் அதனால் பலத்த நட்டம் ஏற்­ப­டு­வ­தா­கவும் முறை­யிட்டார். உடனே அந்தப் பெரியார் ஒரு துண்டுத் தாளில் எதையோ எழுதி (அரபு மொழி­யி­லாக இருக்­கலாம்) அச்­சீ­ட­ரிடம் கொடுத்து அதனை அந்த இயந்­தி­ரத்தில் ஒட்­டு­மாறு கூறினார். அதைப் பார்த்த என் கண்­க­ளையே என்னால் நம்­ப­மு­டி­ய­வில்லை. ஏதோ கிறுக்­கப்­பட்ட கட­தாசித் துண்­டொன்று எப்­படி ஒரு இயந்­திரக் கோளாறை நீக்­கலாம்? ஆனால், அதனைப் பெற்­றுக்­கொண்­டவர் மனதில் அந்தத் தாளும் அதி­லுள்ள எழுத்­துக்­களும் தெய்­வீ­க­மா­கி­விட்­டன. அதனை யாரும் நிந்­தித்­ததால் அவர் மனம் பொறுக்­குமா?

இதுதான் பாகிஸ்­தா­னிலும் நடந்­துள்­ளது. ஒட்­டி­க­ளி­லுள்ள திரு­வாக்­கி­யங்கள் பாமர முஸ்­லிம்கள் பார்­வையில் தெய்­வீ­க­மா­கி­விட்­டதால் அதனை அகற்றச் சொன்­ன­வரை தெய்­வ­நிந்­தனை செய்­தவர் என முடி­வு­கட்டி அப்­பா­ம­ரர்­களே அதற்­கு­ரிய தண்­ட­னை­யையும் வழங்­கி­யுள்­ளனர். இதுதான் முல்­லாக்கள் வளர்த்­து­விட்ட இஸ்லாம். இதைத்தான் அல்­லாமா இக்பால் தனது கவி­தை­க­ளிலும் கட்­டு­ரை­க­ளிலும் ஓயாது கண்­டித்தார். இதற்கும் குர்ஆன் போதிக்கும் இஸ்­லாத்­துக்கும் எந்தச் சம்­பந்­தமும் இல்லை.

இந்த விட­யத்­தைப்­பற்றி சுமார் அரை நூற்­றாண்­டுக்கு முன்­னரே கவிஞர் அப்துல் காதர் லெப்பை நாம பூஜை என்ற தலைப்பில் எழு­தி­யுள்ள ஒரு குறிப்பை அவ­ரு­டைய பூரண வாழ்வு என்ற நூலில் நான் வெளி­யிட்டேன். அக்­கு­றிப்பை வாச­கர்முன் நிறுத்­து­வது பொருத்­தமாய் இருக்கும்.

“சுவர்­களில் எழு­துதல், தூண்­களிற் செதுக்­குதல், மரங்­களில் வெட்­டுதல், படங்­களில் அமைத்தல், அலங்­காரச் சித்­தி­ரங்­களிற் தீட்­டுதல், உலோ­கங்­களில் வடித்தல், அணி­க­லன்­களிற் பதித்தல், சீலை­களிற் சித்­தி­ரித்தல், பாத்­தி­ரங்­களிற் பதித்தல் என்­ற­வாறு விக்­கி­ர­க­வ­ணக்­கக்­காரர் கட­வு­ளு­ரு­வங்­களை என்­னென்ன வகை­களில் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்­களோ அத்­தனை வகை­க­ளிலும் முஸ்­லிம்கள் அல்லாஹ் என்ற நாமத்­துக்­கு­ரிய எழுத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். உருவச் சின்­னத்­துக்குப் பதில் எழுத்துச் சின்னம். அல்­லாஹ்­வைப்­பற்­றியோ, அவன் போத­னை­பற்­றியோ, அவன் சேவை­பற்­றியோ எந்­த­வ­கை­யான அறி­வு­மற்று அவன் நாமத்தை மட்டும் எழுத்­து­ருப்­ப­டுத்திப் பக்­தி­கொள்ளும் நிலை எவ்­விதம் வந்­தது? இதே நிலைதான் அவன் வேத­மா­கிய குர்­ஆ­னுக்கும் ஏற்­பட்­டுள்­ளது. மந்­தி­ர­மா­கவும், அலங்­காரச் சித்­திரச் சின்­னங்­க­ளா­கவும் அதன் வச­னங்கள் ஆக்­கப்­பட்­டுள்­ளன. நெஞ்­சிலும் வாழ்க்­கை­யிலும் இடம் பெற­வேண்­டிய அல்­லாஹ்வும் குர்­ஆனும் அலங்­காரச் சின்­னங்­க­ளா­கவும் பக்திச் சின்­னங்­க­ளா­கவும் விக்­கி­ரகம் இருந்த இடத்­துக்கு மாற்­றப்­பட்­டுள்­ளன. இந்தப் போக்கு வளர்ந்து நபி, சஹா­பாக்கள் நாமங்­க­ளையும் பிடித்­து­விட்­டன. (பாம­ரத்­துவ நிலையில் இது அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­தென்பர் தத்­துவ, உளநூல் விற்­பன்னர்.)”

இது ஓர் ஆழ­மான விடயம். குர்ஆன் இஸ்லாம், இமாம்கள் இஸ்லாம், அவாம்கள் இஸ்லாம் என்று மூன்று வகை­யாக இஸ்­லாத்தை வகைப்­ப­டுத்தி இரண்­டா­வதும் மூன்­றா­வதும் சேர்ந்து உரு­வாக்­கி­யதே நாம­பூஜை. ஒரு கட்­டு­ரையில் இதன் முக்­கி­யத்­து­வத்தை விளக்­கி­விட முடி­யாது. இஸ்­லாத்தை சமூ­க­வி­யலின் தத்­து­வங்­களைக் கொண்டு விளங்­கு­ப­வர்­க­ளுக்கு இதன் நடை­மு­றை­யான தாக்­கங்­களை எளிதில் விளங்கிக் கொள்­ளலாம். நாம­பூ­ஜையை வளர்த்­து­விட்ட பாமர இஸ்­லாத்­துக்கு எதையும் தர்க்­கித்து விளங்­கக்­கூ­டிய சக்தி இல்லை. அது உணர்ச்­சியின் அடிப்­ப­டையில் இயங்­கு­வது. இதைத்தான் குருட்­டுப்­பக்தி என்றும் கூறுவர். இந்தக் குருட்டுப் பக்­தி­யைத்தான் உல­மாக்­களும் வளர்த்­துள்­ளனர். அந்தப் பக்­தி­யு­டைய மக்­க­ளுக்கு தெய்­வீ­க­மென அவர்கள் கருதும் சின்­னங்­க­ளுக்கும் எழுத்­துக்­க­ளுக்கும் அடை­யா­ளங்­க­ளுக்கும் அவ­மானம் ஏற்­ப­டு­மானால் அதை அவர்­களால் தாங்­கிக்­கொள்ள முடி­யாது. ‘எடடா வாளை கொடியோன் தலை அறவே’ என்­ற­வாறு ஆத்­தி­ரப்­பட்டு இயங்­குவர். பா­கிஸ்­தானில் இலங்­கை­ய­ருக்கு நடந்­தது இந்த நாம பூஜை நடத்­திய நர­ப­லியே.

இதில் இன்­னு­மொரு ஆபத்தும் உண்டு. குருட்­டுப்­பக்­தி­யுள்ள மக்­க­ளி­டை­யேதான் மதத்­தீ­வி­ர­வா­தமும் பரவ இட­முண்டு. இவர்­களை பக­டை­க­ளாக வைத்­துத்தான் முஸ்லிம் நாடு­களில் பல தீவி­ர­வாத இயக்­கங்கள் உரு­வா­கி­யுள்­ளன. ஐ.எஸ், தலிபான், போக்கோ ஹராம் போன்ற எத்­த­னையோ இயக்­கங்­களின் காலாட் படை வீரர்­க­ளாக இவர்கள் செயற்­ப­டு­கின்­றனர். பா­கிஸ்­தா­னிலும் பல இஸ்­லா­மிய இயக்­கங்கள் பாம­ரத்­துவ முஸ்­லிம்­களை அங்­கத்­த­வர்­க­ளா­கக்­கொண்டு இயங்­கு­கின்­றன. அவ்­வி­யக்­கங்­களின் தலை­வர்கள் சொல்­வதே இவர்களுக்கு வேதவாக்கு. எதையும் தர்க்கித்து விளங்கும் சக்தி இவர்களுக்கில்லை. இவர்களுக்கு குர்ஆன் ஒரு மந்திர நூல். அது ஓதுவதற்கு மட்டுமேயன்றி விளங்குவதற்கல்ல. இந்த வளர்ச்சியை எவ்வாறு தடுப்பது என்பதைப்பற்றி இதுவரை எந்த ஒரு முஸ்லிம் நாட்டிலும் எந்த ஒரு உருப்படியான முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் அந்நாடுகளின் அரசியல்வாதிகளும் அப்படிப்பட்ட மக்களிடையே அரசியல் செல்வாக்குத் தேட விரும்புவதே. இது ஒரு துர்ப்பாக்கிய நிலைமை.

பிரதமர் இம்ரான் கான் பிரியந்தவின் கொலைக்குக் காரணமாய் இருந்தவர்கள் அனைவருக்கும் கடும் தண்டனை வழங்குவதாக உறுதிகூறி பாகிஸ்தான் சார்பாக இலங்கை மக்களுக்கும் பிரியந்தவின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து மன்னிப்பும் கோரியுள்ளது வரவேற்க வேண்டிய செயற்பாடுகள். ஆனால் அதற்கப்பாலும் சென்று இஸ்லாம் என்ற பெயரில் நாமபூஜையை வளர்க்கும் அறிவின்மையை ஒழிக்க அவரால் என்ன செய்ய முடியும் என்பதே கேள்வி. இந்த இஸ்லாத்துக்காகவா ஜின்னாவும் இக்பாலும் பாகிஸ்தானை உருவாக்கினார்கள?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.