பௌத்த தேரர்­க­ளான ஆசி­ரி­யர்கள் என் மீது விசேட அக்­கறை செலுத்­தி­னார்கள்

சிங்­களம், பௌத்த தர்மம் உட்­பட 9 பாடங்­களில் 'ஏ' சித்தி பெற்ற அஷ்ரா பானு

0 1,135

இம்­முறை க.பொ.த. சாதா­ர­ண­தரப் பரீட்­சையில் குளி­யா­பிட்­டிய மத்­திய கல்­லூ­ரியில் (சிங்­கள பாட­சாலை) கல்­வி கற்று சிங்­களம் மற்றும் பௌத்த தர்மம் உட்­பட 9 பாடங்­க­ளிலும் ‘ஏ’ சித்தி பெற்ற மாணவி அஷ்ரா பானு ‘விடிவெள்ளி’க்கு வழங்­கிய நேர்­காணல்.

நேர்­கண்­டவர் :
தாவுஸ் எம்.அஸாம்

உங்­களைப் பற்றி அறி­மு­கப்­ப­டுத்­துங்கள்?

எனது முழுப் பெயர் மொஹமட் மிஸ்பர் அஷ்ரா பானு. எனது தந்தை ஒரு துணிக்­கடை வைத்­தி­ருக்­கிறார். தாய் பரீனா. குளி­யாப்­பி­டிய, பள்­ள­பி­டிய எனது சொந்த ஊர்.
தரம் ஒன்று முதல் ஐந்து வரை குளி­யாப்­பி­டிய, ஹொலி ஏஞ்சல் மகளிர் கல்­லூ­ரி­யி­லேயே எனது ஆரம்பக் கல்­வியைப் பயின்றேன். தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்­சையில் கல்­லூ­ரி­யிலே அதி­கூ­டிய புள்­ளி­களைப் பெற்று சித்­தி­ய­டைந்து, குளி­யாப்­பி­டிய மத்­திய கல்­லூ­ரிக்கு செல்­வ­தற்­கான சந்­தர்ப்பம் கிடைத்­தது. தரம் 6 முதல் சாதா­ரண தரப் பரீட்சை எழுதும் வரையில் குளி­யா­ப்பி­டிய மத்­திய கல்­லூ­ரி­யி­லேயே கல்வி பயின்றேன்.

உங்­க­ளு­டைய பெற்றோர் உங்­களை சிங்­கள மொழி மூல­மான பாட­சா­லையில் சேர்ப்­ப­தற்­கான விசே­ட­மான கார­ணிகள் ஏதும் இருக்­கி­றதா?

எனது தாய் சிங்­கள மொழி மூல­மா­கவே கல்வி கற்­றுள்ளார். ஆகவே என்னை ஒரு தமிழ் மொழி மூல­மான பாட­சா­லையில் சேர்த்தால் அவரால் எனது கற்றல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு உதவ முடி­யாமல் போய்­விடும் என்­பதால், எனது பாடங்­களில் ஏற்­படும் சந்­தே­கங்­களை அவரால் தீர்க்க முடி­யாமல் போய்­விடும் என்­பதால் என்­னையும் சிங்­கள மொழிப் பாட­சா­லையில் சேர்த்தார். உண்­மையில் அன்று எனது தாய் எடுத்த அந்த முடிவு அதற்கு எனது தந்தை வழங்­கிய ஆத­ரவும், அதனால் தான் நான் இன்று இந் நிலையில் இருக்கிறேன். இன்­றைய எனது இந்த வெற்­றிக்கு அது ஒரு முக்­கிய கார­ணி­யாக அமைந்­தது என்றே குறிப்­பி­டலாம்.

பாட­சாலைக் காலங்­களில் நீங்கள் எதிர்­நோக்­கிய கல்வி ரீதி­யான சவால்கள் என்ன?

உண்­மையில் நான் தரம் 1 முதல் 11 வரையில் இரண்டு பாட­சா­லை­களில் கல்வி பயின்­றுள்ளேன். இந்த இரண்டு பாட­சாலை அனு­ப­வங்­க­ளிலும் பாரிய மாற்­றங்கள் இருந்­தன. ஹோலி ஏஞ்சல் கல்­லூ­ரியில் இருந்து புலமைப் பரிசில் சித்­தி­ய­டைந்து குளி­யாப்­பி­டிய மத்­திய கல்­லூ­ரிக்கு சென்­றதும் ஒரு பாரிய சவா­லுக்கு முகம் கொடுத்தேன். அதா­வது ஹொலி ஏஞ்சல் கல்­லூ­ரியில் பௌத்த தர்மம், இஸ்லாம், இந்து சமயம் என்று எல்லா விருப்பத் தேர்வுப் பாடங்­களும் இருந்­தன. அங்கு ஐந்தாம் தரம் வரை இஸ்லாம் பாடத்தை நான் கற்றேன். அதற்­கான ஆசி­ரி­யர்­களும் அங்கு இருந்­தார்கள். புலமைப் பரிசில் சித்­தி­ய­டைந்து குளி­யாப்­பி­டிய மத்­திய கல்­லூ­ரிக்கு சென்­றதும் அங்கு இஸ்லாம் பாடம் இல்லை. அங்கு 10 இற்கும் குறை­வான முஸ்லிம் மாண­வர்கள் தான் கல்வி பயின்­றனர். அதனால் அதற்­கான ஆசி­ரி­யர்­களும் அங்கு இருக்­க­வில்லை. எனவே சிங்­களம், பௌத்த தர்மம் ஆகிய பாடங்­களை தெரிவு செய்ய வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டது. அந்தப் பாடப் புத்­த­கங்கள் கையில் கிடைத்­ததும் உண்­மையில் நான் அழு­து­விட்டேன். ஏனென்றால் அந்தப் புத்­தகம் அதில் உள்ள விட­யங்கள் எனக்கு ஒரு புதிய விட­ய­மாக இருந்­தது. அவற்றைப் புரிந்து கொள்­ளக்­கூ­டிய பக்­கு­வமும் எனக்கு அப்­போது இருக்­க­வில்லை. உண்­மையில் சிறு­வ­யதில் இருந்து கல்­வியில் நான் அதிகம் திறமை காட்டி வந்தேன். எல்லாப் பாடங்­க­ளிலும் அதி­க­மான புள்­ளி­களைப் பெற்று எப்­போதும் முன்­ன­ணியில் தான் இருப்பேன்.

இஸ்லாம் என்றால், அது எனது மார்க்கம் எனக்கு பரிச்­ச­ய­மா­னது. அதில் சிறந்த பெறு­பே­று­களைப் பெற முடியும் என்­பது எனது ஆழ்­ம­னதின் நம்­பிக்கை. திடீ­ரென்று இவ்­வாறு ஒரு புதிய பாடம். வேறு ஒரு மதம் சார்ந்த பாடம். தெரி­யாத ஒரு விடயம். அதில் சிறந்த பெறு­பே­று­களைப் பெற­மு­டி­யாமல் போனால் நான் தோல்­வி­ய­டைவேன் என்ற அச்சம் உள்­ளத்தில் ஏற்­பட்­டது. அதை நினைத்து ஆரம்­பத்தில் அதி­க­மாக அழு­ததும் உண்டு. அப்­போது தான் மனதில் ஒரு உறு­தியை எடுத்தேன். எல்லாப் பாடங்­க­ளிலும் சிறந்த புள்­ளிகளை எடுக்கும் நான் இப்­பா­டத்­திலும் சிறந்த புள்­ளி­களை எடுப்பேன் என்று உள்­ளத்தில் உறு­தி­யான நம்­பிக்­கையை ஆழ­மாகப் பதித்துக் கொண்டேன். அன்­றி­லி­ருந்து உயர்­தரம் வரை பரீட்­சையில் சித்­தி­ய­டைய வேண்டும் என்ற உறு­தி­யான எண்­ணத்தை உள்­ளத்தில் வைத்துக் கொண்டு படித்தேன். மாஷா அல்லாஹ் தரம் 6 இல் இருந்து சாதா­ர­ண­தரப் பரீட்சை எழுதும் வரை எல்லாப் பரீட்­சை­யிலும் 90இற்கு மேற்­பட்ட புள்­ளி­க­ளையே பெற்று வந்தேன். சாதாரண தரப் பரீட்­சை­யிலும் சிறப்­பான சித்­தியைப் பெற்றேன். அத்­தோடு முடியும் என்று நினைத்தால் எதையும் சாதிக்­கலாம் என்ற பாடத்­தையும் நான் ஆழ­மாக கற்றுக் கொண்டேன்.

ஒரு பாட­சா­லையில் கல்வி பயிலும் போது அந்தப் பாட­சாலை கலாசா­ரத்­துக்கு உட்­பட்டே இருக்க வேண்டும். நீங்கள் ஒரு முஸ்லிம் மாணவி, சிங்­களப் பாட­சா­லையில் கல்வி கற்கும் போது உங்­க­ளது உடை மற்றும் தனித்­து­வத்­துக்கு ஏதும் பாதிப்­புக்கள் ஏற்­பட்­ட­துண்டா?

உண்­மையில் முக்­கி­ய­மாக சொல்ல வேண்­டிய ஒரு விடயம் இது. ஒரு சில சிங்­களப் பாட­சா­லை­களில் ஆசி­ரி­யர்­க­ளுக்குக் கூட பர்தா அணி­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கு­வ­தில்லை. ஆனால் எனது பாட­சா­லையில் அவ்­வா­றான விட­யங்கள் இருக்­க­வில்லை. எனக்கு எனது மார்க்க வரை­ய­றை­க­ளுக்கு உட்­பட்டு பர்தா அணிந்து பாட­சா­லைக்கு செல்­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை பாட­சாலை அதிபர் மற்றும் நிர்­வாகம் எனக்கு முழு­மை­யான அனு­ம­தியைத் தந்­தார்கள். அதற்­காக எனது பாட­சாலை அதிபர், ஆசி­யர்கள் மற்றும் நிர்­வா­கத்­துக்கு இச்­சந்­தர்ப்­பத்தில் நன்­றியை தெரி­வித்துக் கொள்­கிறேன். அது மாத்­தி­ர­மின்றி Red Cross Society, St.John Ambulance Service ஆகி­ய­வற்­றிலும் நான் இருந்தேன். அவற்­றிலும் எனது மார்க்க வரை­ய­றை­க­ளுக்கு பாதிப்­பில்­லாமல் உடை அணி­வ­தற்கு எனக்கு அனு­மதி தந்­தி­ருந்­தார்கள். உண்­மையில் நான் கல்வி கற்ற இரு பாட­சா­லை­க­ளிலும் எனக்கு எனது மார்க்க வரை­ய­றை­களைப் பாதிக்கும் எந்த சம்­ப­வங்­களும் ஏற்­ப­ட­வில்லை. எந்த ஒரு ஆசி­ரி­யரும் ஒரு­போதும் என்னை ஒரு முஸ்லிம் மாணவி என்ற வேறு­பா­டு­க­ளுடன் பார்க்­க­வில்லை. என்னை ஆத­ரித்து என்­னோடு அன்­பா­கவே நடந்து கொண்­டார்கள். அதிலும் முக்­கி­ய­மாக குறிப்­பிட வேண்டும் எனக்கு பௌத்த தர்ம பாடத்தை எடுத்த லீல்­கொ­ல­வெவ தேரர், சுக­தா­நந்த தேரர், சுக­த­தாஸ தேரர் ஆகி­யோரும் என்­னோடு எப்­போதும் அன்­பா­கவே நடந்து கொண்­டார்கள். நான் ஒரு முஸ்லிம் மாணவி என்­பதால் என் மீது விஷேட கவனம் எடுத்து, பௌத்த தர்­மத்தில் உள்ள விட­யங்கள் எனக்கு புதிது என்­பதால் அவை எனக்கு புரி­கி­றதா என்று அடிக்­கடி என்னை விசே­ட­மாக கவனம் செலுத்தி கற்­ப­தற்கு மிகவும் உத­வி­யாக இருந்­தார்கள். உண்­மையில் அவர்­க­ளையும் நன்­றி­யோடு நினை­வு­கூர்­கிறேன்.

அண்மையில் இன ரீதி­யான பல பிரச்­சி­னை­க­ளுக்கு நாம் முகம் கொடுத்தோம். உண்­மையில் ஈஸ்டர் தாக்­கு­த­லுக்கு பின்னர் பயத்­துடன் தான் பாட­சா­லைக்கு சென்றேன். ஆனால் நான் நினைத்­தது போன்­றி­ருக்­க­வில்லை. ஆசி­ரி­யர்­களும் சரி, மாண­வர்­களும் சரி என்­னோடு வழமை போன்று அன்­பா­கவே நடந்து கொண்­டார்கள். யாரும் எனது மனம் நோகும் விதத்­திலோ அல்­லது அணு­கு­மு­றை­யிலோ எந்த மாறு­பாடும் காட்­ட­வில்லை. உண்­மையில் அதை நினைத்து அன்று நான் பெரு­மை­ய­டைந்தேன். அந்த ஒற்­றுமை சகோ­த­ரத்­துவம் என்றும், எப்­போதும், எல்லா இடத்­திலும், எல்லோர் மன­திலும் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.