இன ஐக்கியத்தை கட்டியெழுப்பிய பாரூக்

0 440

ஏ.ஆர்.ஏ.பரீல்

பெரும்­பான்மை சமூ­கத்­துடன் மிகவும் நெருங்கிப் பழகி, தமிழ் சமூ­கத்­தையும் அர­வ­ணைத்து அர­சியல் செய்து இன ஐக்­கி­யத்தைக் கட்­டி­யெ­ழுப்ப பாடு­பட்ட அர­சி­யல்­வா­தி­யான முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் யு.எல்.எம்.பாரூக் கடந்த 6ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை வபாத்­தானார். இவர் 1941ஆம் ஆண்டு பிறந்­தவர்.

யு.எல்.எம்.பாரூக் கேகாலை மாவட்­டத்தின் முத­லா­வது சிறு­பான்மை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகும்.ருவன்­வெல்ல தொகு­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக, கேகாலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக ஆர்.பிரே­ம­தா­சவின் அர­சாங்­கத்தில் போக்­கு­வ­ரத்து இரா­ஜாங்க அமைச்­ச­ராக பதவி வகித்­துள்ளார். மேலும் இலங்கை மத்­திய போக்­கு­வ­ரத்துச் சபை தலைவர் உட்­பட பல்­வேறு முக்­கிய பத­வி­க­ளையும் வகித்­த­வ­ராவார்.
முன்னாள் ஜனா­தி­பதி ஆர்.பிரே­ம­தாச 1956ஆம் ஆண்டு ருவன்­வெல்ல தொகு­தியில் போட்­டி­யிட்ட போது பாரூக் 15 வயது இளை­ஞ­ராக இருந்தார். அன்று பிரே­ம­தா­சவின் தேர்தல் பிர­தான அலு­வ­லகம் பாரூக்கின் தந் தையின் கட்­டி­ட­மொன்­றிலே இயங்­கி­யது. அக்­கா­லத்தில் இந்த அலு­வ­ல­கத்­துக்கு அவர் அடிக்­கடி சென்று வந்தார். இதனால் அவ­ருக்கு அர­சி­யலில் ஆர்வம் ஏற்­பட்­டது. மாணவர் பரு­வத்­திலே அர­சி­யலில் ஈடு­பட்டார். முன்னாள் தொழில் அமைச்­சரும், ருவன்­வெல்ல பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பி.சி. இம்­பு­லா­ன­வுடன் நெருங்­கிய உற­வினைப் பேணிய பாரூக் அவ­ரது வழி­காட்­ட­லுடன் ஐ.தே. கட்­சி­யூ­டாக அர­சி­யலில் பிர­வே­சித்தார்.

1964 ஆம் ஆண்டு ருவன் வெல்ல கிரா­ம­ச­பைக்கு கன்­னத்­தோட்டை வட்­டார ஐ.தே.க. அபேட்­ச­க­ராக போட்­டி­யிட்டு உறுப்­பி­ன­ராகத் தெரிவு செய்­யப்­பட்டார்.
அடுத்­து­வந்த கிராம சபைத் தேர்­த­லிலும் இவர் வெற்றி பெற்­ற­துடன் சிங்­க­ள­வர்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட ருவன்­வெல்ல தொகு­தியின் ஐ.தே.க. மத்­திய அமைப்பின் தலைவர் பத­விக்கு போட்­டி­யிட்ட சந்­தர்ப்­பங்­க­ளி­லெல்லாம் வெற்றி பெற்றார். பெரும்­பான்மை மக்கள் இவர் மீது கொண்­டி­ருந்த நம்­பிக்­கையே இதற்குக் கார­ண­மாகும்.

1988ஆம் ஆண்டு ருவன்­வெல்ல தொகுதி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த தொழீல் அமைச்சர் பி.சி. இம்­பு­லான ஊவா மாகாண ஆளு­ந­ராக பத­வி­யேற்­ற­தனால் ஏற்­பட்ட ருவன்­வெல்ல தொகுதி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி வெற்­றி­டத்­துக்கு உறுப்­பினர் ஒரு­வரை நிய­மிப்­ப­தற்­கான இர­க­சிய வாக்­கெ­டுப்பு கட்சித் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. இவ்­வாக்­கெ­டுப்பில் கூடு­த­லான விருப்பு வாக்­கு­களைப் பெற்று தெரி­வானார்.
இத­ன­டிப்­ப­டையில் ஐ.தே.க. செயற்­குழு அவரை ருவன்­வெல்ல தொகுதி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிப்­ப­தற்கு தீர்­மா­னித்­தது. 1988.06.20 ஆம் திகதி பாரூக் தனது 47ஆவது பிறந்த தினத்தில் ருவன்­வெல்ல பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக சத்­திய பிர­மாணம் செய்து கொண்டார். 1989 வரை பதவி வகித்த இவர் 1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட விகி­தா­சார தேர்தல் முறை மூலம் கேகாலை மாவட்ட அபேட்­ச­க­ராகப் போட்­டி­யிட்டு மீண்டும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரானார்.

1990ஆம் ஆண்டு போக்­கு­வ­ரத்து இரா­ஜாங்க அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டார். இவர் போக்­கு­வ­ரத்து துறையில் பல மாற்­றங்­களைச் செய்தார். புகை­யி­ரத நிலை­யங்­க­ளுக்கும் பஸ் டிப்­போக்­க­ளுக்கும் திடீர் விஜ­யங்­களை மேற்­கொண்டு போக்­கு­வ­ரத்து சேவையில் நில­விய ஊழல், மோசடி, வீண்­வி­ரயம் என்­ப­ன­வற்றைக் கண்­ட­றிந்து அவற்றை களைய நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்டார்.

வட­கி­ழக்கு மாகா­ணத்தின் பஸ் சேவை­களைப் புன­ர­மைக்கும் பொறுப்பு பாரூக்­கிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தது. யாழ்ப்­பாணம், மன்னார் தவிர்ந்த வடக்கு,கிழக்கின் சகல இ.போ.ச. டிப்­போக்­க­ளும்­ இ­வ­ரது தலை­மை­யிலே மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்­டன. மட்­டக்­க­ளப்பு டிப்போ மக்கள் மயப்­ப­டுத்­தப்­படும் நிகழ்­வுக்கு சென்று திரும்பும் போது இவர் பய­ணித்த பாதையில் கண்­ணி­வெடி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அவர் மயி­ரி­ழையில் உயிர் தப்­பினார்.

கேகாலை மாவட்­டத்தில் முஸ்லிம் கல்வி அபி­வி­ருத்தி சங்கம் ஒன்றை நிறுவி சப்­ர­க­முவ மாகாண சபை மூலம் கெகாலை மாவட்­டத்தின் பல முஸ்லிம் பாட­சா­லை­களின் கட்­டிடப் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைத்தார். ஒரே வரு­டத்தில் 19 முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு கட்­டி­டங்­க­ளைப்­பெற்றுக் கொடுத்தார்.

2000 ஆம் ஆண்டு வரை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த இவர் கட்­சியின் வேண்­டு­ கோ­ளுக்­கி­ணங்க பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கபீர் ஹாஷி­முக்கு இட­ம­ளித்து தேர்­தலில் போட்­டி­யி­ரு­வ­தி­லி­ருந்தும் விலகிக் கொண்டார்.

யு.எல்.எம்.பாரூக்­கிற்கு பெரும்­பான்மை சமூ­கத்தின் பெரும் ஆத­ரவு இருந்­தது. நெருங்­கிய நல்­லு­றவு இருந்­தது. கேகாலை மூன்று கோற­ளையைச் சேர்ந்த சிங்­கள மக்­களின் எல்­லை­யற்ற அன்பைப் பெற்­றுள்ள பாரூக் அர­சி­யலில் இல்­லாமை இம்­மக்­க­ளுக்கு ஏற்­பட்ட பெரும் நஷ்­ட­மாகும். அவர் எனது நெருங்­கிய நண்பர். இவ­ரது நல்­லு­ற­வி­னாலே பெரும்­பான்மை மக்கள் இவரை தங்­க­ளது பிரதி நிதி­யாக தேர்ந்­தெ­டுத்­தார்கள். இன­வா­தி­க­ளுக்கும், மத­வா­தி­க­ளுக்கும் தங்கள் பேதங்­க­ளி­லி­ருந்தும் வெளியே­று­வ­தற்கு இவர் முன்­னு­தா­ர­ண­மாகும்’ என இவ­ருக்கு இவர் அர­சி­ய­லி­லி­ருந்து விலகிக் கொண்­டதன் பின்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த பாராட்டு விழாவில் வெளியி­டப்­பட்­டுள்ள நூலில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நூலில் இவரைப் பாராட்டி வாழ்த்துத் தெரி­வித்­தி­ருந்த ருவன்­வெல்ல சாசன பாது­காப்பு சபையின் தலை­வரும் மூன்று கோற­ளையின் பிர­தான சங்க நாயக்­க­ரு­மான ஹால்­யாலே ஆரி­ய­வன்ச அபி­மான நாயக்க தேரரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவர் இன ஐக்கியத்துக்காக பெரிதும் பாடுபட்டவர்.

பாரூக்கின் ஜனாஸா கடந்த வெள்ளிக்கிழமை மாலை கன்னத்தோட்டை மஸ்ஜிதுல் முனவ்வரா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸா நல்லடக்கத்தில் கேகா வை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி சபாநாயகர் உட்பட பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.

ருவன்வெல்ல தொகுதியின் பிர தான நகரங்களில் வீடுகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் பெரும்பான்மை மக்கள் வெள்ளை கொடி ஏற்றியிருந்தனர். அவருக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ் கிட்ட நாமும் பிரார்த்திப்போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.