படு தோல்வியடைந்துள்ள கொவிட் தடுப்பு செயலணி

0 619

நாட்டில் கொவிட் 19 தொற்­றுப்­ப­ரவல் நாளுக்கு நாள் மோச­ம­டைந்து கொண்டே செல்­கி­றது. ஒரு புறம் தடுப்­பூசி ஏற்றும் பணிகள் வேக­மாக முன்­னெ­டுக்­கப்­பட்ட போதிலும் மர­ணங்­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்­துள்­ளது. நேற்று முன்­தினம் 124 பேர் மர­ணித்­த­தாக நேற்று இரவு அர­சாங்க தகவல் திணைக்­களம் வெளி­யிட்ட அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவர்­களில் 95 பேர் 60 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளாவர்.

எதிர்­வரும் வாரங்­களில் மரண எண்­ணிக்கை மேலும் பல மடங்கு உயரும் என சுகா­தா­ரத்­துறை நிபு­ணர்கள் எச்­ச­ரித்து வரு­கின்­றனர். உட­ன­டி­யாக நாடு முடக்­கப்­ப­டா­விட்டால் அடுத்த 20 தினங்­களில் மேல­தி­க­மாக 1200 பேரை இழக்க வேண்டி வரும் என ரஜ­ரட்ட பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் சுனேத் அகம்­போடி தெரி­வித்­துள்ளார்.

இவ்­வாறு மரண வீதம் அதி­க­ரித்துச் செல்­கின்ற போதிலும் அர­சாங்கம் இதனைக் கட்­டுப்­ப­டுத்தி நாட்டு மக்­களைப் பாது­காப்­ப­தற்குத் தேவை­யான காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை என பலரும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். “அர­சாங்­கத்தின் கொவிட் 19 முகா­மைத்­துவம் தொடர்­பான கொள்­கை­களில் உட­னடி மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­ப­டா­விடின் இவ்­வ­ருட இறு­திக்குள் சுமார் 20 ஆயிரம் பேர் மர­ணிக்க வேண்டி ஏற்­படும்” என சுகா­தார கொள்­கைகள் தொடர்­பான நிறு­வ­னத்தின் பணிப்­பாளர் டாக்டர் ரவீந்­திர ரன்னன் எலிய தெரி­வித்­துள்ளார்.

“தற்­போ­தைய நிலையில் மாதாந்தம் சுமார் 3000 பேர் இலங்­கையில் கொவிட் 19 தொற்­றினால் மர­ணிக்­கின்­றனர். இது 1987 களில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் கிளர்ச்சி கால­கட்­டத்தில் மர­ணித்­த­வர்­களின் எண்­ணிக்­கையை விட அதி­க­மாக மாறும் என்றும் அவர் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். நாட்­டி­லுள்ள அரச மற்றும் தனியார் வைத்­தி­ய­சா­லைகள் கொவிட் தொற்­றா­ளர்­களால் நிரம்பி வழி­கின்ற நிலையில் அர­சாங்கம், புதிய திரி­பு­ட­னான வைரஸை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான எந்­த­வித முயற்­சி­க­ளையும் முன்­னெ­டுப்­ப­தாகத் தெரி­ய­வில்லை” என்றும் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.

நாட்டின் பிர­தான வைத்­தி­ய­சா­லை­களில் பணி­யாற்றும் வைத்­தி­யர்கள் உள்­ளிட்ட சுகா­தா­ரத்­துறை ஊழி­யர்­களின் கூற்­று­க­ளுக்­க­மைய, நிலை­மைகள் கைமீறிச் சென்­றுள்­ளதை உணர முடி­கின்­றது. கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் சாதா­ரண நோயா­ளர்­க­ளுக்­கான சிகிச்­சைகள், சத்­திர சிகிச்­சைகள் என்­பன இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன. சாதா­ரண நோயா­ளர்­களும் கொவிட் தொற்­றா­ளர்­களும் ஒரே விடு­தி­களில் தங்க வைக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. உட­ன­டி­யாக நாட்டை முடக்கி நோயா­ளர்­களின் எண்­ணிக்­கையை மட்­டுப்­ப­டுத்­தா­விடின் சேவை­களில் இருந்து ஒதுங்கிக் கொள்ளப் போவ­தாக சுகா­தா­ரத்­துறை ஊழி­யர்கள் எச்­ச­ரிக்க ஆரம்­பித்­துள்­ளனர்.

இந் நிலை­யில்தான் அர­சாங்­கத்தின் கொவிட் முகா­மைத்­துவம் சீர்­கு­லைந்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இந்­தி­யாவை விடவும் மோச­மா­ன­தொரு ஆபத்தை நாடு சந்­தித்­துள்­ள­தாக பலர் புள்ளி விப­ரங்­களை ஒப்­பிட்டு குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து வரு­கின்­றனர். நாட்டின் கொவிட் முகா­மைத்­துவ செய­ல­ணியில் உட­ன­டி­யாக முழுமை­யான மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என முன்னாள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். சுகா­தா­ரத்­துறை நிபு­ணர்­களின் ஆலோ­ச­னை­களைப் புறந்­தள்ளி இரா­ணுவ அதி­கா­ரி­க­ளி­னதும் அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் கருத்­துக்­க­ளுக்­க­மை­யவே தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். ரணில் விக்­ர­ம­சிங்­கவின் கருத்தை தான் ஆமோ­திப்­ப­தாக முன்னாள் சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்­னவும் தெரி­வித்­துள்ளார்.

“மூளை பகு­தி­ய­ளவில் மர­ணித்­துள்ள அதி­கா­ரி­க­ளினால் நாடு நிர்­வ­கிக்­கப்­பட்டால் ஏற்­படும் சவால்­களை நாட்டு மக்கள் எதிர்­கொள்ள நேரிடும். தற்­போ­தைய நெருக்­க­டி­யான சூழ்­நி­லையில் விசேட வைத்­திய நிபு­ணர்­களின் கருத்­துக்­க­ளுக்கு உரிய தரப்­பினர் செவி­சாய்க்க வேண்டும். இல்­லா­விடின் பாரிய விளை­வுகள் ஏற்­படும்” என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சந்­திம வீரக்­கொடி தெரி­வித்­துள்ள கருத்தும் இந்த இடத்தில் கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

இவ்­வாறு நாட்டின் சுகா­தா­ரத்­து­றையும் இன்­றைய நெருக்­க­டி­யான கால­கட்­டத்தில் தலை­மைத்­துவம் வழங்க வேண்­டிய ஏனைய தரப்­பி­னரும் தோல்­வி­ய­டைந்­துள்ள நிலையில் நாடு மிக மோச­மா­ன­தொரு சுகா­தார மற்றும் பொரு­ளா­தார நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளது. பொருட்­களின் விலைகள் சடு­தி­யாக அதி­க­ரித்­துள்­ளன. இவ்­வா­றான சூழ்­நி­லையில் ‘நாட்டை முடக்­கினால் மக்கள் பட்­டி­னிச்­சா­வையே எதிர்­கொள்ள நேரிடும். நாட்டை முடக்­கா­விட்டால் மக்கள் கொரோ­னா­வினால் செத்து மடிய நேரிடும்’ என்ற திரி­சங்கு நிலைக்கு ஆட்­சி­யா­ளர்கள் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

வெள்ளம் தலைக்கு மேலால் சென்று விட்ட நிலையில் அர­சாங்கம் இப்­போ­துதான் சுகா­தா­ரத்­துறை அமைச்­சரை மாற்­று­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. கொவிட் தொற்றுக்கு தம்மிக்க பாணியை அருந்தி நிவாரணம் தேடிய ஒரு சுகாதார அமைச்சரைக் கொண்ட நாட்டில், முட்டியில் தண்ணீரைக் கொண்டு சென்று ஆற்றில் வீசி நிவாரணம் தேடிய ஒரு சுகாதார அமைச்சரைக் கொண்ட நாட்டில் இவ்வாறு மக்கள் செத்து மடிவதில் ஆச்சரியமடைய ஒன்றுமில்லைதான்.

எது எவ்வாறு இருப்பினும் நமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நமது ஒவ்வொருவரினதும் கைகளிலேயே உள்ளது. உரிய சுகாதார பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதுடன் அல்லாஹ்வின் உதவியைத் தேடுவதன் மூலமே இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.