கொவிட் ஜனாஸாக்களை தொடர்ந்து அடக்கம் செய்வதற்கு மஜ்மா நகரில் இடமில்லை

வேறு பிரதேசங்களில் மையவாடி காணியை பெற தொடர்ந்தும் முயற்சி ஜனாதிபதி,பிரதமரிடமும் விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் நஸீர் எம்.பி.

0 353

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களை தற்­போது அடக்கம் செய்யும் மஜ்மா நகர் சூடு­பத்­தி­ன­சேனை மைய­வா­டியில் இடப்­பற்­றாக்­குறை உரு­வாகி வரும் நிலையில் வேறு பிர­தே­சங்­களில் மைய­வா­டிக்­கான காணி ஒதுக்கிக் கொள்ளும் நட­வ­டிக்­கைகள் துரி­த­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரின் கவ­னத்­திற்கு இவ்விவ­காரம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. அதற்­கான கலந்­து­ரை­யா­டல்­களும் இடம் பெற்­றுள்­ளன. விரைவில் தீர்வு பெற்றுக் கொள்­ளப்­படும். முஸ்­லிம்கள் இது தொடர்பில் அச்சம் கொள்­ளத்­தே­வை­யில்லை என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நஸீர் அஹமட் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், புத்­தளம், கிண்­ணியா, இறக்­காமம் மற்றும் மன்னார் ஆகிய பிர­தே­சங்­களில் இதற்­கென காணிகள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன. அத்­தோடு தற்­போ­தைய மைய­வாடி அமைந்­தி­ருக்கும் மஜ்மா நகர் சூடு­பத்­தி­ன­சே­னைக்கு அரு­கி­லுள்ள காணி­க­ளையும் பெற்று மைய­வா­டியை விஸ்­த­ரிப்­பது தொடர்­பாக ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை­யுடன் கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.

நாட்டின் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் அதிக எண்­ணிக்­கை­யி­லான ஜனா­ஸாக்கள் ஓட்­ட­மா­வ­டியை வந்­த­டை­கின்­றன. இதன்­போது ஜனா­ஸாக்­களின் உற­வி­னர்­களும் பல்­வேறு இன்­னல்­களை எதிர்­கொள்­கின்­றனர். இவ்­வி­ட­யமும் கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டுள்­ளது. கோற­ளைப்­பற்று மத்தி மற்றும் கோற­ளைப்­பற்று மேற்கு என்­ப­ன­வற்றின் பிர­தேச அபி­வி­ருத்திக் குழுவின் தலைவர் என்ற வகையில் மஜ்மா நகர் சூடு­பத்­தி­ன­சேனை மைய­வா­டியை விஸ்­த­ரிப்­பது தொடர்பில் ஆராய்ந்து வரு­கிறேன்.

இந்த விப­ரங்­களை நாம் கவ­ன­மான கையாள வேண்டும். 20 ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ர­வ­ளித்­த­தற்­காக எம்மை ஏசு­ப­வர்கள் இவ்­வி­வ­கா­ரத்தை பெரிது படுத்­து­வது தவிர்க்­கப்­பட வேண்டும். நாட்டின் கடந்த கால வர­லாறு அத்­தோடு தற்­போ­தைய அர­சியல் நிலைமை என்­ப­ன­வற்­றுக்கு மத்­தியில் முஸ்­லிம்கள் நாம் கவ­ன­மாக எமது பய­ணத்தைத் தொடர வேண்­டி­யுள்­ளது. என்னை ஏசி­னாலும், ஏசா­விட்­டாலும் சமூ­கத்தின் நலன் சார்ந்த எனது பய­ணத்தைத் தொடர வேண்­டி­யது எனது பொறுப்­பாகும் என்றார்.

இதே­வேளை, தற்­போது நாளாந்தம் சுமார் 25 ஜனா­ஸாக்கள் அடக்­கத்­துக்­காக வந்து சேரும் நிலையில் இன்னும் சில நாட்­களில் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய இட­மில்­லாத நிலை ஏற்­ப­டலாம். எனவே மாற்று இடத்­துக்கு எங்கு செல்­வது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக ஓரிடத்தை தெரிவு செய்ய வேண்டிய அவசர நிலை உருவாகியுள்ளது என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
சூடுபத்தினசேனையில் தற்போதைய மையவாடி 5 ஏக்கர் காணியிலே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.