குற்றச்­சாட்­டு­க­ளின்றி 15 மாதங்­க­ளாக தடுத்­து­ வைக்­கப்­பட்­டுள்­ள சட்டத்தரணி ஹிஜாஸ் நிபந்­த­னை­க­­ளின்றி விடு­விக்­கப்பட வேண்­டும்

11 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக தெரிவிப்பு

0 335

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்கும் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாவை விரை­வாக விடு­த­லை­செய்யும் அதே­வேளை, அச்­சட்­டத்தை உட­ன­டி­யாக மீளாய்­விற்கு உட்­ப­டுத்த வேண்டும் என்று வலி­யு­றுத்தி சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை, உறுப்­புரை 19, மனித உரி­மைகள் மற்றும் அபி­வி­ருத்­திக்­கான ஆசியப் பேரவை, பிர­ஜை­களின் பங்­க­ளிப்­பிற்­கான உல­க­ளா­விய கூட்­டணி, முன்­னிலை பாது­கா­வ­லர்கள், மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம், சர்­வ­தேச சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் மனித உரி­மைகள் செயற்­திட்டம், சர்­வ­தேச யூரர்கள் ஆணைக்­குழு, அனைத்து விதங்­க­ளி­லு­மான அடக்­கு­மு­றைகள் மற்றும் இன­வா­தத்­திற்கு எதி­ரான சர்­வ­தேச முன்­மு­யற்சி, இலங்­கை­யி­லுள்ள சர்­வ­தேச செயற்­பாட்­டா­ளர்கள், உண்­மைக்கும் நீதிக்­கு­மான இலங்­கையின் செயற்­திட்டம் ஆகிய 11 அமைப்­புக்கள் இணைந்து கூட்­ட­றிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளன. அதன் விபரம் வரு­மாறு:

இலங்­கையின் பிர­பல சட்­டத்­த­ர­ணியும் சிறு­பான்மை மற்றும் சிவில் உரி­மைகள் தொடர்­பான செயற்­பாட்­டா­ள­ரு­மான ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா சுமார் 15 மாத­கா­ல­மாக மிக மோச­மான பயங்­க­ர­வா­தத்­தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை எமக்குப் பெரிதும் விச­ன­ம­ளிக்­கின்­றது. நீதி­மன்­றத்தில் ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­விற்கு எதி­ராக நம்­பத்­த­குந்த ஆதா­ரங்கள் எவையும் சமர்ப்­பிக்­கப்­ப­டாத நிலையில், அவர் எவ்­வித நிபந்­த­னை­க­ளு­மின்றி உட­ன­டி­யாக விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும்.

ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டார். 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்­தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ருந்த இன்ஸாப் அஹமட் என்­ப­வ­ருக்கு உத­வி­ய­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா மீது பொலி­ஸாரால் ஆரம்­பத்தில் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட போதிலும், பின்னர் அது வாபஸ் பெறப்­பட்­டது. ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில், அவர் மீதான குற்­றச்­சாட்­டுக்­களில் பல­முறை மாற்­றங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

அதே­வேளை ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­விற்கு எதி­ராகக் கடந்த பெப்­ர­வரி மாதம் 18 ஆம் திகதி மேல் நீதி­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டின்­படி, அவர் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான அமை­திக்குப் பங்கம் விளை­விக்கும் வகை­யி­லான கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருப்­ப­தாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. புத்­த­ளத்தில் ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வினால் வெளி­யி­டப்­பட்ட கருத்து தொடர்பில் சிறுவன் ஒரு­வரால் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­மூ­லத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டே மேற்­படி குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் குறித்த சிறு­வ­னிடம் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்ட அதே­ச­ம­யத்தில் வேறு சிறு­வர்­க­ளி­டமும் அதே அதி­கா­ரி­களால் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த நிலையில், ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­விற்கு எதி­ராகப் பொய்­யான வாக்­கு­மூ­லங்­களை வழங்­கு­மாறு அந்த அதி­கா­ரிகள் தம்மை வற்­பு­றுத்­தி­ய­தாக அவர்கள் அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களைத் தாக்கல் செய்­தி­ருக்­கின்­றார்கள். ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­விற்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களில் தொடர்ச்­சி­யாக மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் நிலையில், அவ­ருக்­கெ­தி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் எவற்­றுக்கும் நியா­ய­மான ஆதா­ரங்கள் இல்லை என்றே எமக்கு எண்ணத் தோன்­று­கின்­றது.
ஒருவர் இன, மத ரீதி­யான வன்­மு­றை­களை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­பட்­டாலோ அல்­லது அத்­த­கைய சூழ்­நி­லையைத் தோற்­று­விப்­ப­தற்­கான எண்­ணப்­பாட்டைக் கொண்­டி­ருந்­தாலோ அல்­லது அத்­த­கைய சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டாலோ அவரைக் கைது செய்து தடுத்­து­வைப்­ப­தற்­கான வாய்ப்பை பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் வழங்­கு­கின்­றது. எனினும் கடந்த காலங்­களில் அந்தச் சட்­ட­மா­னது, ஊட­க­வி­ய­லா­ளர்கள் உள்­ள­டங்­க­லாக அர­சாங்­கத்தை விமர்­சிப்­ப­வர்­களைத் தண்­டிப்­ப­தற்கும் கருத்துச் சுதந்­தி­ரத்தை முடக்­கு­வ­தற்கும் வெற்­றி­க­ர­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றது.

ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா அவ­ரது கருத்­துக்கள் மூல­மாக அர­சாங்­கத்தை விமர்­சித்­து­வந்த ஒரு­வ­ராவார். இலங்­கையில் இன, மத­ரீ­தி­யான சிறு­பான்­மை­யின சமூ­கத்­திற்கு எதி­ரான செயற்­பா­டுகள் அதி­க­ரித்­து­வந்த காலப்­ப­கு­தியில் அவர் சிறு­பான்­மை­யின உரி­மை­க­ளுக்­காகப் போரா­டினார். அது­மாத்­தி­மன்றி கடந்த 2018 ஆம் ஆண்டில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­ட­போது, உயர்­நீ­தி­மன்­றத்தில் அதனை சவா­லுக்­குட்­ப­டுத்­திய சட்­டத்­த­ர­ணி­களில் ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாவும் ஒரு­வ­ராவார். எனவே தற்­போது வரை ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­விற்கு எதி­ராக இலங்கை அதி­கா­ரி­களால் எந்­த­வொரு ஆதா­ரங்­களும் சமர்ப்­பிக்­கப்­ப­டாத நிலையில், கருத்து வெளிப்­பாட்டுச் சுதந்­தி­ரத்­திற்­க­மைய அவரால் மேற்­கொள்­ளப்­பட்ட செயற்­பா­டு­க­ளுக்­கா­கவே அவர் இலக்­கு­வைக்­கப்­பட்­டி­ருப்­ப­துபோல் தெரி­கின்­றது. எனவே ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­விற்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்தும் மீளப்­பெ­றப்­ப­டு­வ­துடன் அவர் உட­ன­டி­யாக விடு­த­லை­செய்­யப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­து­கின்றோம்.

சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா கைது செய்­யப்­பட்­ட­தி­லி­ருந்து சர்­வ­தேச ரீதியில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட சட்­டங்­க­ளுக்கு அமை­வான நடை­மு­றை­களைப் பின்­பற்­று­வ­தென்­பது தொடர்ச்­சி­யாக மறு­த­லிக்­கப்­பட்­டது. குறிப்­பாக அவர் கைது­செய்­யப்­பட்­ட­மைக்­கான காரணம் என்­ன­வென்­பது அவ­ருக்குக் கூறப்­ப­ட­வில்லை. அத்­தோடு பிணைக்­கோ­ரிக்­கையை முன்­வைக்க இய­லாத வகையில் நீதி­மன்ற மேற்­பார்­வை­யின்றி அவர் நீண்­ட­கா­லத்­திற்குத் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தார். அவர் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்த காலப்­ப­கு­தியில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தினால் அனு­ம­தி­ய­ளிக்­கப்­படும் வரையில் அவ­ரது சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் தனி­யாகக் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­குக்­கூட ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­விற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்­தது. கடந்த பெப்­ர­வரி மாதம் அவர்­மீது குற்­றச்­சாட்டு பதி­வு­செய்­யப்­பட்டு, நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்­னரே சுமார் 10 மாத­கா­லத்­திற்குப் பின்னர் முதற்­த­ட­வை­யாகக் குடும்­பத்­தி­னரைச் சந்­திக்கும் வாய்ப்பு ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­விற்குக் கிடைத்­தது. இலங்­கை­யினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருக்கும் சர்­வ­தேச சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் சம­வா­யச்­சட்­டத்தின் 9 ஆவது உறுப்­பு­ரையின் பிர­காரம், தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் எந்­த­வொரு நப­ருக்கும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரையும் சட்­டத்­த­ர­ணி­க­ளையும் சந்­திப்­ப­தற்­கான உரிமை இருக்­கின்­றது.
இலங்­கையின் மிக­மோ­ச­மான பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்தின் கீழ் நீண்­ட­கா­ல­மாகத் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்கும் பலரில் ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாவும் ஒரு­வ­ராவார். இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வினால் கடந்த 2020 ஆம் ஆண்டில் வெளி­யி­டப்­பட்ட ஓர் ஆய்­வ­றிக்­கை­யின்­படி, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டி­ருக்கும் பெரு­ம­ள­வான கைதிகள் 15 –- 20 வரு­டங்­க­ளுக்கும் அதி­க­மான காலம் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இது கைதி­க­ளுக்கு இழைக்­கப்­ப­டு­கின்ற அநீதி என்­ப­துடன் சர்­வ­தேச சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் சம­வா­யச்­சட்­டத்தின் 9 ஆம் மற்றும் 14 ஆம் உறுப்­பு­ரை­களின் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள சுதந்­தி­ரத்­திற்­கான உரிமை மற்றும் நியா­ய­மான விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டு­வ­தற்­கான உரிமை ஆகி­ய­வையும் இதன்­மூலம் மீறப்­ப­டு­கின்­றன. அத்­தோடு பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ கைது­செய்­யப்­பட்­டி­ருக்கும் அநே­க­மானோர் சித்­தி­ரவ­தை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­துடன் முறை­யற்ற விதங்­க­ளிலும் நடத்­தப்­பட்­டுள்­ளனர்.

இந்தப் பயங்­க­ர­வாதத்­தடைச் சட்­டத்தை மீளாய்வு செய்­வ­தாக வழங்­கிய வாக்­கு­று­திக்குப் புறம்­பாக, தன்­னிச்­சை­யாகத் தடுத்­து­வைப்­ப­தற்கு வாய்ப்­ப­ளிக்கும் இச்­சட்­டத்தை இலங்கை தொடர்ந்தும் பயன்­ப­டுத்தி வரு­கின்­றமை பெரிதும் விசனமளிக்கின்றது. எனவே தற்போது பயங்கரவாதத்தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்பில் மறு­ப­ரி­சீ­லனை செய்யும் அதே­வேளை, அவர்கள் நியா­ய­மான விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டு­வ­தற்கு வாய்ப்­ப­ளிக்­கப்­பட வேண்டும். மேலும் சர்­வ­தேச ரீதியில் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உட்­ப­டா­த­வர்­களை உட­ன­டி­யாக விடு­தலை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அது­மாத்­தி­ர­மன்றி பயங்­க­ர­வா­தத்­தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருப்போர் தனிப்­பட்ட முறையில் அவர்­க­ளது சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கும் அவர்­க­ளது குடும்­பத்­தினர் மற்றும் நண்­பர்­களைச் சந்­திப்­ப­தற்கும் அனு­மதி வழங்­கப்­பட வேண்டும்.
அடுத்­த­தாக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­தையும் அதன் பயன்­பாட்­டையும் இலங்கை அர­சாங்கம் உட­ன­டி­யாக மீளாய்­விற்கு உட்­ப­டுத்த வேண்டும். மேலும் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் மனித உரிமை மீறல்­க­ளுக்கு உள்­ளா­ன­வர்கள் அதற்­கான தீர்­வையும் இழப்­பீட்­டையும் உரி­ய­வாறு பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அக்கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.