உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: நட்டஈடு கோரி பாதிக்கப்பட்ட 289 பேர் வழக்குத் தாக்கல் 

0 368

(எம்.எப்.எம்.பஸீர்)

போது­மான உளவுத் தக­வல்கள்  கிடைத்­தி­ருந்தும், உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கா­மையை மையப்­ப­டுத்தி,  முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளிட்ட 6 பேருக்கு எதி­ராக, பாதிக்­கப்­பட்ட 289 பேர் இரு மாவட்ட நீதி­மன்­றங்­களில் நட்ட ஈடு கோரி வழக்குத் தொடுத்­துள்­ளனர்.

கொழும்பு மற்றும் நீர்­கொ­ழும்பு மாவட்ட நீதி­மன்­றங்­களில் இந்த வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­துடன்,  அவை ஊடாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் கோரி­யுள்ள நட்ட ஈட்டின் மொத்த பெறு­மதி 1250 மில்­லியன் ரூபா­வாகும்.

உயிர்த்த ஞாயிறு தின­மான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி,  கட்­டு­வ­பிட்­டிய தேவா­லயம் மீது நடாத்­தப்­பட்ட தற்­கொலைத் தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்ட 182 பேர்  நீர் கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் நட்ட ஈடு கோரி மனுத் தாக்கல் செய்­துள்­ளனர்.  கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் ஆல­யத்தில் இடம்­பெற்ற தற்­கொலை தாக்­கு­தல்­களால் பாதிக்­கப்­பட்ட 107 பேர் கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் வழக்குத் தொடர்ந்­துள்­ளனர்.

இந்த அனைத்து நட்ட ஈடு கோரும் வழக்­கு­க­ளிலும் பிர­தி­வா­தி­க­ளாக, முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன,  முன்னாள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க,  முன்னாள் பாது­காப்பு செயலர் ஹேம­சிறி பெர்­ணான்டோ,  முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர, தேசிய உளவுச் சேவையின் முன்னாள் பணிப்­பா­ளரும்  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரு­மான நிலந்த ஜய­வர்­தன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிர­தி­வா­தி­களாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஷமில் பெரேரா, சட்டத்தரணி சந்துன் நாகஹவத்த உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

 

 

Leave A Reply

Your email address will not be published.