புத்தர் சிலை தகர்ப்பு விவகாரம்: 16 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

ட்ரயல் அட்பார் நீதிமன்றை அமைக்க கோரிக்கை

0 349

(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக் காலப்­ப­கு­தியில் மாவ­னெல்லை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­களில் ஐந்து புத்தர் சிலை­களை சேத­ப்ப­டுத்­தி­யமை தொடர்பில் 16 பேருக்கு எதி­ராக, கேகாலை மேல் நீதி­மன்றில் சட்ட மா அதி­பரால் வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் கைது செய்­யப்­பட்ட சஹ்­ரானின் நெருங்­கிய சகாவும் தேசிய தெளஹீத் ஜமாஅத்தின் சிரேஷ்ட தலை­வ­ரு­மான நெளபர் மெள­லவி, புத்தர் சிலை உடைப்பை அடுத்து கைது செய்­யப்பட்ட இப்­ராஹீம் மெள­லவி அவ­ரது மகன்மார் இருவர் உள்­ளிட்ட 16 பேருக்கு எதி­ரா­கவே இவ்­வாறு குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்டு வழக்குத் தொட­ரப்­பட்­டுள்­ள­தாக சட்ட மா அதி­பரின் செய்தித் தொடர்­பாளர் அரச சட்­ட­வாதி நிஷாரா ஜய­ரத்ன கூறினார்.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழும், பயங்­கர­வா­தி­க­ளுக்கு நிதி அளித்­தலை தடுப்­பது தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழும் 21 குற்­றச்­சாட்­டுக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இரு சமூ­கங்­க­ளி­டையே மோதலை உரு­வாக்க சதித் திட்டம் தீட்­டி­யமை, 5 புத்தர் சிலை­களை தகர்த்­தமை, சமூ­கங்களிடையே வெறுப்­பு­ணர்­வு­களை தூண்­டி­யமை, தோப்பூர், மாவ­னெல்லை, ஹம்­பாந்­தோட்டை மற்றும் நுவ­ரெ­லியா பகு­திகளில் அதற்­கான வதி­விட கருத்த­ரங்­குகள் மற்றும் ஆயுதப் பயிற்­சி­யினைப் பெற்­றமை தொடர்பில் பய­ங்க­ர­வாத தடை சட்­டத்தின் கீழும், ஆயுதப் பயிற்சி மற்றும் கருத்­தரங்­கு­க­ளுக்கு தேவை­யா­ன­வற்றை நேர­டி­யா­கவும் மறை­மு­கமாகவும் வழங்­கி­யமை தொடர்பில் பயங்­கர­வா­தி­க­ளுக்கு நிதி­ய­ளிப்­பதை தடுக்கும் சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழும் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

2019 ஏப்ரல் 21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை நடாத்­திய பயங்­கர­வாதி சஹ்ரான் மற்றும் முறைப்­பாட்­டாளர் அறி­யா­த­வர்­க­ளுடன் இணைந்து பிர­தி­வா­திகள் இக்­குற்­றத்தை புரிந்­துள்­ள­தாக சட்ட மா அதிபர் குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

இக்­குற்­றச்­சாட்­டுக்­களை உறுதி செய்ய 49 தடயப் பொருட்­க­ளையும், 92 சாட்­சி­யா­ளர்­களின் பட்­டி­ய­லையும் சட்ட மா அதிபர் குற்றப் பத்­தி­ரி­கையில் இணைத்­துள்ளார்.
மொஹம்மட் அல்பர் மொஹம்மட் அஸ்பாக், மொஹம்மட் பைசர் மொஹம்மட் முப்தி, மொஹம்மட் அக்பர் மொஹம்மட் முனீப், மொஹம்மட் சுபியான் மொஹம்மட் இர்ஷாத், மொஹம்மட் அஸ்ஹர் அதீக் அஹமட், நஜி­முதீன் மொஹம்மட் பெளசான், ரஷீத் மொஹம்மட் இப்­ராஹீம் அல்­லது இப்­ராஹீம் மெள­லவி அல்­லது இப்­ராஹீம் சேர், அபூ செய்த் எனும் மொஹம்மட் இப்­ராஹீம் நெளபர் மெள­லவி, அபூ நஜா என­ப்படும் மொஹம்மட் ரமீஸ், மொஹம்மட் சாஜித் அல்­லது சாஜித் மெள­லவி, அபூ பலாஹ் என­பப்டும் மொஹம்மட் இப்­ராஹீம் சாஹித் அப்துல் ஹக், அபூ உமர் என­ப்படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாதிக் அப்­துல்லாஹ், அபூ ஹினா அல்­லது சிவப்பு தாடி என அறி­ய­ப்படும் மொஹம்மட் ஹனீபா சைனுல் ஆப்தீன், ஹிஸ்­புல்லாஹ் கான் ஹாமித், அபூ சியா என­ப்படும் ஹயாத்து மொஹம்­மது அஹ­மது மில்ஹான், ஹாஜா மொஹிதீன், ஹனன் ஹம்­சுதீன் எனும் ஹனன் ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கவே இவ்­வாறு வழக்குத் தொட­ரப்பட்­டுள்­ளது.

இவ்­வா­றான நிலையில், குறித்த வழக்கை விசா­ரணை செய்ய சிறப்பு ட்ரயல் அட் பார் நீதி­மன்றம் ஒன்­றினை அமைக்­கு­மாறு சட்ட மா அதிபர் தப்­புள டி லிவேரா, பிர­தம நீதி­யரச­ரிடம் கோரிக்கை முன்­வைத்­துள்ளார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.