ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனைகள்

சபையில் அமைச்சர் வீரசேகர விசேட உரை

0 328
  • நவ்பர் மெளலவியே ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி
  • புர்கா தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
  • 11 முஸ்லிம் அமைப்புகளுக்கு தடை
  • பாடப் புத்தகங்களில் அடிப்படைவாத கொள்கைகள்

 

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஈஸ்டர் தாக்­கு­தலை தடுக்க இல­கு­வான வழி­மு­றைகள் இருந்தும் அதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்க நல்­லாட்சி அர­சாங்கம் தவ­றி­விட்­டது. தாக்­குதல் நடத்­தப்­பட முன்னர் பல்­வேறு சம்­ப­வங்கள் நாட்டில் இடம்­பெற்­றுள்­ளன. அவற்றை சரி­யாக கண்­கா­ணித்து விசா­ர­ணை­களை நடத்­தி­யி­ருந்தால் இவ்­வா­றான தாக்­குதல் நடக்­காது தடுத்­தி­ருக்க முடியும் என பொது மக்கள் சிவில் பாது­காப்பு அமைச்­சர் சரத் விர­சேகர கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சின் தீர்­மா­னத்தை நேற்று முன்­தினம் சபையில் விசேட அறிக்­கை­யொன்றை விடுத்து உரை­யாற்­றிய போதே அமைச்சர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளி­யி­டு­கையில், 2018 பெப்­ர­வரி 6 ஆம் திகதி தொடக்கம் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்­குதல் நடத்­தப்­படும் வரையில் ஒன்­பது சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. ஆனால் அர­சாங்கம் புல­னாய்­வுத்­து­றையை பல­வீ­னப்­ப­டுத்­தி­யமை, தேசிய பாது­காப்பை பூச்­சி­யத்தில் வைத்­தி­ருந்­தமை என்­ப­வற்றின் கார­ண­மாக தாக்­கு­தலை தடுக்க முடி­யாமல் போனது. எனினும் நாம் ஆட்­சிக்கு வந்­த­வுடன் துரி­த­மாக செயற்­பட்டு குற்­ற­வா­ளி­களை கைது­செய்யும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

சீனா­வி­லி­ருந்து வாள்கள் கொள்­வ­னவு
இந்த தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட 50 இற்கும் அதி­க­மான இலங்­கை­யர்கள் வெளி­நா­டு­களில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். மேலும் சிலர் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர், அவர்­க­ளையும் கைது செய்ய சர்­வ­தேச பொலிசின் உத­வியை நாடி­யுள்ளோம். அது­மட்­டு­மல்ல 2015 ஆம் ஆண்டு இலங்­கையின் தேசிய நிறு­வனம் ஒன்­றி­னூ­டாக சீனாவில் இருந்து 1440 வாள்கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த நிறு­வ­னத்­திடம் இருந்து வாள்­களை பெற்­றுக்­கொண்ட நபர்கள், நிறு­வ­னங்கள் தொடர்­பிலும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இல்ஹாம் சகோ­த­ரர்­களே நிதி­ய­ளித்­தனர்
அதேபோல், 2018 ஆம் ஆண்டு தொடக்கம் ஈஸ்டர் தாக்­குதல் நடத்­தப்­படும் வரையில் சஹ்­ரா­னுக்கு தேவை­யான சகல வச­தி­க­ளையும் செய்து கொடுத்­துள்­ளதும் தெமட்­ட­கொட இப்­ரா­ஹீமின் புதல்­வர்­க­ளான இன்ஸாப் மற்றும் இல்ஹாம் ஆகி­யோ­ராகும். குறித்த காலப்­ப­கு­தியில் இவர்கள் 500 இலட்­சத்­திற்கும் அதி­க­மான பணத்தை பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளனர். அத்­துடன் இவர்கள் இரு­வரும் ஐ.எஸ்.எஸ்.எஸ் அமைப்­புடன் தொடர்­பு­பட்டு சிரி­யாவில் பயிற்சி பெற்ற இலங்கை பயங்­க­ர­வாதி நிலாம் என்­ப­வரின் தந்­தைக்கு 2018 நவம்பர் மாதம் 45 இலட்சம் ரூபா வழங்­கி­யுள்­ளனர். இதேபோல் மேலும் பல இலட்சம் ரூபா தாக்­கு­த­லுக்­காக செலவு செய்­துள்­ளனர். சேவ் த பேர்ல் அமைப்பின் ஊடா­கவும் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதற்கும் இன்ஸாப் மற்றும் இல்ஹாம் ஆகியோர் பாரிய அள­வி­லான பணத்தை செலவு செய்­துள்­ளனர்.

ஜே.எம்.ஐ.க்கு ஐ.எஸ்.உடன் தொடர்பு
ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பின் தலை­வ­ரான அபூ­பக்கர் அல் பக்­தாதி 2014 ஆம் ஆண்டில் இஸ்­லா­மிய இராச்­சி­யத்­திற்­கான அழைப்பை விடுத்த பின்னர் 2015 ஆம் ஆண்டில் இலங்­கையைச் சேர்ந்த 37 பேர் சிரி­யா­விற்கு சென்று ஐ.எஸ் அமைப்­புடன் இணைந்­துள்­ளனர். அத்­துடன் ஐ .எஸ் அமைப்­புடன் இணைய விருப்பம் தெரி­விக்கும் இலங்கை பிர­ஜைகள் தொடர்­பு­கொள்ள ஜமா­அத்தே மில்­லத்தே இப்­ராஹீம் என அழைக்­கப்­படும் (ஜே.எம்.ஐ) அமைப்பு இலங்­கையில் இருந்து செயற்­பட்­டுள்­ளது என்­பதும் விசா­ர­ணை­களின் மூலம் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. மத அடிப்­ப­டை­வா­தத்தில் இருந்து இவர்கள் பயங்­க­ர­வா­த­திற்கு தள்­ளப்­பட்­டுள்ள போதிலும் மேலும் சிலர் இன்­னமும் அடிப்­ப­டை­வாத கொள்­கையில் இருந்து வரு­கின்­றனர்.

நவ்­பரே பிர­தான சூத்­தி­ர­தாரி
மொஹம்மட் நவ்பர் என்ற நபர் தற்­போது கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்ளார். இவரே இந்த தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட மிக முக்­கி­ய­மான நப­ராவார். அபூ­பக்கர் அல் பக்­தா­தியின் கொள்­கையின் பால் சஹ்­ரானை இணைத்­துக்­கொள்ள பிர­தான நப­ராக மொஹம்மட் நவ்பர் செயற்­பட்­டுள்ளார். 2016 ஆம் ஆண்டில் சஹ்­ரா­னுடன் நெருக்­க­மாக செயற்­பட்டு தாக்­குதல் நடத்­தப்­படும் வரையில் சஹ்­ரானை அடிப்­ப­டை­வாத கொள்­கையில் இயக்­கி­யதும் மொஹம்மட் நவ்பர் தான் என்­பதும் விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. எனவே ஈஸ்டர் தாக்­கு­தலை நடத்­திய பிர­தான சூத்­தி­ர­தாரி மொஹம்மட் நவ்பர் என்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

ஹஜ்ஜுல் அக்­பரும் தொடர்பு
அதேபோல் ஸ்ரீலங்கா ஜமா­அதே இஸ்­லாமி அமைப்பின் பிர­தா­னி­யான ஹஜ்ஜுல் அக்­பரும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத கொள்­கையில் இருந்து செயற்­பட்­டுள்­ள­தா­கவும், தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட நபர்­க­ளுடன் நெருக்­க­மான தொடர்­பு­களை கையாண்­டுள்­ள­தா­கவும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன், மாலை­தீவு நாட்டை சேர்ந்த நான்கு இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தி­களும் இந்த தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்­டுள்­ளனர். இவர்கள் நால்­வ­ரையும் இலங்­கையின் பயங்­க­ர­வா­தி­க­ளுடன் இணைக்க இலங்­கையைச் சேர்ந்த அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜை­க­ளான லுக்மான் தாலிப் மற்றும் அவ­ரது மக­னான லுக்மால் தாலிப் அஹமட் ஆகியோர் செயற்­பட்­டுள்­ள­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இதில் லுக்மால் தாலிப் கட்டார் நாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார் எனவும் எமக்கு அறி­வித்­துள்­ளனர்.

மத்­ர­ஸாக்கள் முறை­யாக செயற்­ப­ட­வில்லை
இலங்­கையில் அதி­க­ள­வி­லான மத­ரசா பாட­சா­லைகள் முறை­யாக செயற்­ப­ட­வில்லை என்­பது தற்­போது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. எனவே இலங்­கையில் பிறக்கும் சகல குழந்­தை­க­ளுக்கும் 5 வயது தொடக்கம் 16 வயது வரையில் அரச கல்­வியை தொடர்­வது கண்­டிப்­பா­னது எனவும் அரச கொள்­கைக்கு அமைய கல்­வியை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் எனவும் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இதனை நிரா­க­ரிக்கும் சகல பாட­சா­லை­க­ளையும் தடை­செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அதேபோல் நீண்ட கால­மாக முறை­யான கல்­வியை பெற்­றுக்­கொ­டுக்கும் மத­ரா­சாக்­களும் இயங்­கு­கின்­றன என்­ப­தையும் நாம் நினை­வு­ப­டுத்­து­கின்றோம்.

பாட­சாலை புத்­த­கத்தில் அடிப்­ப­டை­வாதம்
பாட­சாலை பாடப்­புத்­த­கங்­களில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள அடிப்­ப­டை­வாத கருத்­துக்­களை நீக்­கவும் இப்­போதே நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக முதலாம் தரம் தொடக்கம் 13 ஆம் தரம் வரை­யி­லான பாடப்­புத்­த­கங்­களில் ஏனைய மதத்­த­வ­ருக்கு எதி­ராக செயற்­பட வேண்டும் என கூறப்­பட்­டுள்­ள­துடன், வஹாபி, சலபி கொள்­கைகள் சூட்­சு­ம­மாக பாடப்­புத்­த­கங்­களில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­மையும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இவற்றை பாடப்­புத்­த­கங்­களில் இருந்து நீக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

11 அமைப்­பு­க­ளுக்குத் தடை
மேலும் இந்த தாக்­கு­த­லுக்­கு­ஏற்ற சூழலை நேர­டி­யாகும் மறை­மு­க­மா­கவும் உரு­வாக்­கிக்­கொ­டுத்த 11 இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் அர­சாங்­கத்­தினால் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளன. அவற்றை விரை­வாக தடை­செய்ய அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும். மேலும் சஹ்­ரானின் அமைப்பு உட்­பட இலங்­கையில் செயற்­படும் அடிப்­ப­டை­வாத இஸ்­லா­மிய அமைப்­புகள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­துடன், இந்த அமைப்­பு­களின் தலை­வர்­களை கைது செய்­யவும் இந்த அமைப்­பு­களை தடை­செய்ய பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். குறிப்­பாக “வன் உம்மா, ஹிஸ்புத் தஹ்ரீர், முஜா­ஹிதீன் அல்லாஹ், சுப்பர் முஸ்லிம்” ஆகிய அமைப்­பு­களை நாம் அடை­யாளம் கண்­டுள்ளோம்.

புர்­காவை தடை செய்ய நட­வ­டிக்கை
அத்­துடன் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லான விட­யங்கள் என்ற சில­வற்றை அடை­யாளம் கண்­டுள்­ள­துடன் அவற்றில் பிர­தா­ன­மாக புர்­காவை உட­ன­டி­யாக தடை­செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அதேபோல் சிறுவர் மற்றும் பெண்­களை கருத்தில் கொண்டு சிறுவர் திரு­மண சட்­டத்­தையும் மாற்­றி­ய­மைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அதுமட்டுமல்லாது இந்த தாக்குதலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்ட சகல நபர்களுக்கும் உயரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முஸ்லிம்கள் ஒத்துழைப்பு
இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே விரைவாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாம் இஸ்லாமிய மதத்தை கட்டுப்படுத்தவில்லை, அதில் வளரும் அடிப்படைவாதத்தையே நாம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கின்றோம். குறிப்பாக வஹாபி கொள்கையை தடுக்கவே நாம் நடவடிக்கை எடுக்கின்றோம். இந்த செயற்பாடுகளில் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பும் எமக்கு கிடைக்கின்றது. அதேபோல் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிசீலனைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.