தொல்பொருள் வலயங்களும் கைதுகளும் உணர்த்துவது என்ன?

0 940
  • ஏ.ஆர்.ஏ.பரீல்

ஒரு நாட்டின் தேசிய சொத்­தாக தொல்­பொ­ருட்கள் கரு­தப்­ப­டு­கின்­றன. இவற்றைப் பாது­காப்­ப­தற்­காக இலங்­கையில் தனி­யான ஒரு திணைக்­களம் கலா­சார அமைச்சின் கீழ் இயங்கி வரு­கி­றது.

தம்­புள்ளை, அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, மிஹிந்­தலை, சீகி­ரியா என்று எமது நாட்டின் தொல்­பொருள் பிர­தே­சங்­களை பட்­டி­ய­லிட்டுக் கொண்டு செல்­லலாம்.

நாட்டில் 23 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட தொல்­பொருள் பிர­தே­சங்­களை அடை­யாளப் படுத்­தி­யுள்­ள­தாக தொல்­பொருள் திணைக்­கள உத­விப்­ப­ணிப்­பாளர் விராஜ் பால­சூ­ரிய தெரி­விக்­கிறார்.

அண்­மைக்­கா­ல­மாக எமது சமூகம் தொல்­பொருள் என்றால் என்ன? பெரு­ம­ள­வி­லான தொல்­பொ­ருட்கள் எந்­தெந்தப் பிர­தே­சங்­களில் அமைந்­துள்­ளன என்­பதில் ஓர­ளவு தெளி­வினைப் பெற்­றுள்­ளது. இது­வரை காலம் நாம் தொல்­பொ­ருட்கள் தொடர்பில் அக்­க­றை­யின்­றியே இருந்தோம்.

எமது பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மற்றும் இஸ்லாமிய கல்வி நிறு­வ­னங்­களின் மாண­வர்கள் தொல்­பொருள் சின்­னங்கள் மீதேறி புகைப்­படம் எடுத்­துக்­கொண்ட சம்­ப­வங்கள் நாட்டில் பெரும் சர்ச்­சையைக் கிளப்­பி­விட்­டன. சமூக வலைத்­த­ளங்கள் மற்றும் ஊட­கங்கள் முஸ்லிம் சமூ­கத்தை எமது நாட்­டுக்கு வேண்­டா­த­வர்­க­ளாக, புரா­தன தொல்­பொ­ருட்­களின் எதி­ரி­க­ளா­கவே சித்­தி­ரித்­தன. இதற்­கான பொறுப்­பினை எமது எதிர்­கால சந்­த­தி­யி­ன­ரான மாணவர் சமூ­கமே ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.

அண்­மையில் தொல்­பொருள் சின்­னங்­க­ளுடன் தொடர்­பு­பட்ட இரு சம்­ப­வங்கள் எமது சமூ­கத்தை பெரும்­பான்­மை­யினர் மத்­தியில் சந்­தே­கக்கண் கொண்டு நோக்­கு­வ­தற்கு வழி சமைத்­து­விட்­டன.

மிஹிந்­தலை தா-து­கோ­புர சம்­பவம்

ஹொர­வப்­பொத்­தான, கிர­லா­கல புரா­தன வர­லாற்றுப் புகழ் மிக்க தூபியின் மீதேறி புகைப்­படம் எடுத்­துக்­கொண்டு அதனை சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்­றிய 8 தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த மாண­வர்கள் நீதி­மன்­றினால் அப­ராதம் விதிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்ட சில தினங்­களில் மீண்டும் அவ்­வா­றான ஒரு சம்­பவம் பதி­வா­கி­யது. அச்­சம்­ப­வத்­துக்கும் பொறுப்­பா­ன­வர்கள் எமது மாண­வர்­களே.

மிஹிந்­தலை ரஜ­ம­கா­வி­காரை வளா­கத்­தி­லுள்ள பிர­பல சைத்­திய ஒன்­றுக்கு அரு­கி­லுள்ள வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த தாது­கோ­புரம் மீதேறி புகைப்­படம் எடுத்­துக்­கொண்­ட­தற்­காக மிஹிந்­தலை பொலி­ஸாரால் இரு மாண­வர்கள் கைது செய்­யப்­பட்­டனர். புதை­பொருள் திணைக்­கள அதி­கா­ரி­களால் இவர்கள் கைது செய்­யப்­பட்டு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டனர். இவர்கள் இரு­வரும் திஹா­ரியைச் சேர்ந்த இஸ்­லா­மிய கல்வி நிலையம் ஒன்றின் மாண­வர்­க­ளாவர்.

இவ்­வாறு கைது­செய்­யப்­பட்­ட­வர்கள் மூதூரைச் சேர்ந்­த­வர்கள். திஹா­ரியில் தங்­கி­யி­ருந்து கல்வி பயிலும் மாண­வர்கள். மூதூர் அப்துல் லத்தீப் வீதியைச் சேர்ந்த ரஷீட்­மொ­ஹமட் ஜிப்ரி(20) மற்றும் மூதூர் நெய்­தல்­ந­கரைச் சேர்ந்த ஜலால்தீன் ரிப்தி அஹமட்(18) ஆகி­யோரே அவர்கள்.

இரு­மா­ண­வர்­களும் ஒரு­வரை ஒருவர் மாறி மாறி புகைப்­படம் எடுத்­துக்­கொண்­ட­போதே தொல்­பொருள் அதி­கா­ரி­களால் கைது­செய்­யப்­பட்டு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளனர். புகைப்­படம் எடுக்­கப்­ப­யன்­ப­டுத்­தப்­பட்ட கைய­டக்கத் தொலை­பே­சியும் பொலி­ஸாரின் பொறுப்பில் எடுக்­கப்­பட்­டது. அதில் தாது கோபு­ரத்தின் மீதேறி எடுக்­கப்­பட்ட மூன்று புகைப்­ப­டங்கள் இருந்­துள்­ளன.

இரு மாண­வர்­களும் அவர்கள் பயிலும் கல்வி நிலை­யத்­தி­லி­ருந்து விடு­முறை பெற்­றுக்­கொண்டு மிஹிந்தலை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­பெற்று வரும் ஒரு மாண­வரின் தாயாரைப் பார்ப்­ப­தற்குச் சென்றபோதே மிஹிந்­த­லையில் தாது­கோ­புரம் மீதேறி இவ்­வாறு புகைப்­படம் எடுத்­துக்­கொண்­டுள்­ளனர்.

கடந்த 14 ஆம் திகதி கைது­செய்­யப்­பட்ட இரு­மா­ண­வர்­களும் அநு­ரா­த­புரம் நீதிவான் நீதி­மன்றில் பொலி­ஸா­ரினால் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். இவர்­களை கடந்த 21 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி நீதிவான் உத்­த­ர­விட்­டி­ருந்தார். அவர்கள் கடந்த 21 ஆம் திகதி நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போது நீதிவான் எதிர்­வரும் 27 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

கடந்த 14 ஆம் திக­தி­யி­லி­ருந்து இரு மாண­வர்­களும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள், நாட்டின் தொல்­பொருள் சட்டம் பற்­றிய போதிய அறி­வின்மை மற்றும் புரா­தன தொல்­பொருள் சின்­னங்­களின் புனி­தத்­தன்மை, அச்­சின்­னங்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டிய மரி­யாதை தொடர்பில் அறி­வின்­மை­யி­னாலே இவ்­வாறு புகைப்­படம் எடுத்­துள்­ளனர்.

பாட­சா­லைகள், அர­புக்­கல்­லூ­ரிகள், இஸ்­லா­மிய கல்வி  நிலை­யங்­களின் மாண­வர்கள் எமது வர­லாறு, புராதன சின்­னங்கள், தொல்­பொ­ருட்கள் பற்­றிய போதிய அறி­வில்­லாதவர்­க­ளாக இருக்­கி­றார்கள். இவ்­வா­றான கல்வி நிலை­யங்கள் மாண­வர்­களை கல்விச் சுற்­று­லாக்­க­ளுக்கு அழைத்­துச்­செல்லும் போது இவ்­வா­றான புரா­தன வர­லாற்றுப் புகழ்­பெற்ற இடங்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளிக்க வேண்டும். அவ்­வா­றான இடங்­க­ளுக்கு மாண­வர்­களை கல்­விச்­சுற்­றுலா அழைத்துச் சென்று அவ்­வி­டத்­தி­லி­ருந்து வர­லாறு போதிக்­கப்­பட வேண்டும். இவ்­வா­றான நடை­மு­றைகள் பின்­பற்­றப்­ப­டா­மையே மாண­வர்­களின் குறிப்­பிட்ட செயற்­பா­டு­க­ளுக்குக் கார­ண­மாகும்.

தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த 8 மாண­வர்கள் கிர­லா­கல, தூபி­மீ­தேறி புகைப்­படம் எடுத்து சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யிட்ட சம்­ப­வத்தில் அதிக அக்­கறை செலுத்­திய சமூகம் இஸ்­லா­மிய கல்வி நிலை­யத்தின் மாண­வர்கள் விவ­கா­ரத்தில் மௌனம் சாதிக்­கின்­றமை கவலை தரு­கின்­றது.

கிர­லா­கல தூபியில் ஏறி பட­மெ-­டுத்த விவ­காரம்

ஹொர­வப்­பொத்­தானை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட வர­லாற்று சிறப்­பு­மிக்க கிர­லா­கல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்த காட்சியை முகநூல் சமூக வலைத்­த­ளத்தில் பதி­வேற்­றிய 8 தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழக மாணவர் விவ­காரம் இச்­சந்­தர்ப்­பத்தில் மீட்­டிப்­பார்க்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த எட்டு மாண­வர்கள் கிர­லா­கல தூபியில் ஏறி புகைப்­படம் எடுத்­த­தாக தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரி­களால் பொலிஸில் புகார் செய்­த­தற்கு அமை­வாக அவர்­களில் ஏழு பேரை ஹொர­வப்­பொத்­தானை பொலிஸார் கடந்த ஜன­வரி மாதம் 23 ஆம் திகதி இரவு பல்­க­லைக்­க­ழ­கத்தில் வைத்து கைது செய்­தனர். மேலும் ஒரு மாணவர் அடுத்த தினம் கொழும்­பி­லி­ருந்து வந்து பொலிஸில் சர­ண­டைந்தார். எட்டு மாண­வர்­களும் கெப்­பித்­தி­கொல்­லாவ நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். அவர்­களை நீதிவான் பெப்­ர­வரி 5 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

பெப்­ர­வரி 5 ஆம் திகதி அவர்கள் மீண்டும் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது கெப்­பித்­தி­கொல்­லாவ நீதிவான் நீதி­மன்ற நீதிவான் மாலிந்த ஹர்­ஷன அல்விஸ் எட்டு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கும் தலா 50 ஆயிரம் ரூபா அப­ரா­தமும், தலா 2 ஆயிரம் ரூபா அரச கட்­ட­ணமும் விதித்து வழக்­கினை நிறைவு செய்தார்.

இம்­மா­ண­வர்­க­ளுக்கு எதி­ராக ஹொர­வப்­பொத்­தானை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியால் மூன்று குற்­றச்­சாட்­டு­களின் கீழ் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டது. தண்­டனை சட்­டக்­கோ­வையின் 120, 140 ஆம் அத்­தி­யா­யங்­களின் கீழ் தலா ஒவ்­வொரு குற்­றச்­சாட்டும், தொல்­பொருள் சட்­டத்தின் கீழ் 31 (பீ) பிரிவின் கீழ் மற்­றொரு குற்­றச்­சாட்டும் சுமத்­தப்­பட்­டது.

நீதி­மன்றில் ஆஜ­ரான தொல்­பொருள் திணைக்­கள சட்­டத்­த­ரணி 8 மாண­வர்­க­ளுக்கும் குறைந்­த­பட்சம் இரு வருட சிறைத்­தண்­டனை வழங்­கப்­பட வேண்­டு­மென வாதிட்டார். அவ்­வாறு வழங்­கப்­பட்­டாலே எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வதைத் தடுக்க முடியும் எனவும் வாதிட்டார்.

மாண­வர்கள் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்ள 5 வழக்குத் தீர்ப்­புகள், இதற்கு முன்பு தொல்­பொருள் பிர­தே­சங்­களில் பதி­வான இவ்­வா­றான சம்­ப­வங்­களின் போது நீதி­மன்றம் கடைப்­பி­டித்த வழி­முறை என்­ப­ன­வற்றைச் சுட்­டிக்­காட்டி மாண­வர்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்ட சிறைத்­தண்­ட­னையோ, கைவிரல் பதிவோ வேண்டாம் என வாதிட்டார். இத­னை­ய­டுத்து நீதிவான் குறிப்­பிட்ட அப­ரா­தங்­களை விதித்து வழக்­கினை நிறைவு செய்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த 5 ஆம் திகதி இவ்­வாறு வழக்­கொன்று நிறைவு செய்­யப்­பட்­டி­ருக்கும் நிலையில் சில தினங்­க­ளுக்குப் பின்பு கடந்த 14 ஆம் திகதி இதே போன்­ற­தொரு சம்­பவம் இடம்­பெற்­றி­ருக்­கின்­ற­மையை அனு­ம­திக்க முடி­யாது. பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் 8 பேர் தூபி மீது ஏறி புகைப்­படம் எடுத்த விவ­காரம் அதன் பின் மாண­வர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட அப­ராதம் என்­பன நாட்டில் பிர­தான செய்­தி­க­ளாக ஊட­கங்கள் வெளி­யிட்­டி­ருந்­தன. இந்­நி­லையில் குறிப்­பிட்ட இஸ்­லா­மிய கல்வி நிலை­யத்தின் இரு மாண­வர்கள் இந்தச் செய்­தி­யையும் அது தொடர்­பான நீதி­மன்றின் தீர்­ப்பு­க­ளையும் அறி­யா­தி­ருந்­தார்­களா? இல்­லை­யென்றால் அவர்கள் வெறும் புத்­தகப் பூச்­சி­க­ளா­கவே இருந்­துள்­ளார்­களா-?

அவர்கள் பத்­தி­ரி­கைகள் வாசிக்­கா­த­வர்­க­ளாக, தொலைக்­காட்சி அலைவரிசை­களில் செய்­தி­களைக் கேட்­கா­த­வர்­க­ளா­கவே இருந்­துள்­ளனர். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் விவ­கா­ரத்தை அவர்கள் அறிந்­தி­ருந்தால் நிச்­சயம் தூபி­மீது ஏறி­யி­ருக்க மாட்­டார்கள். புகைப்­படம் எடுத்­தி­ருக்க மாட்­டார்கள்.

பள்­ளி­வா­சல்கள், பாட­சா­லை­களின் பொறுப்பு

முஸ்லிம் மாண­வர்கள், இளை­ஞர்கள் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த புரா­தன பௌத்த தூபிகள் மீதேறி புகைப்­படம் எடுக்கும் சம்­ப­வங்கள் அனு­ம­திக்­கப்­பட முடி­யாது என முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கூறி­யுள்ளார். முஸ்­லிம்கள் ஏனைய இன மக்­களின் கலா­சார பண்­பு­க­ளையும் அடை­யாளச் சின்­னங்­க­ளையும் கௌர­விக்க வேண்­டு­மெ­னவும் அறை­கூவல் விடுத்­துள்ளார்.

இது தொடர்பில் பள்­ளி­வா­சல்கள் மற்றும் முஸ்லிம் பாட­சா­லைகள், அரபுக் கல்­லூ­ரி­களில் விழிப்­பு­ணர்வு கருத்­த­ரங்­குகள் நடாத்­தப்­பட வேண்டும் எனவும் கூறி­யுள்ளார். பெண்கள் அரபுக் கல்­லூ­ரியின் பட்டமளிப்பு நிகழ்­வொன்­றிலே அவர் இந்தக் கருத்தை வெளி­யிட்­டுள்ளார். அவ­ரது கருத்து வர­வேற்­கத்­தக்­கது என்­றாலும் அமைச்சர் கருத்து தெரிவிப்பதுடன் மௌனித்து விடக்கூடாது.

அரபுக்கல்லூரிகளும், பள்ளி வாசல்களும் அவரது அமைச்சின் கீழேயே இயங்குகின்றன. அமைச்சில் உயர் அதிகாரிகளாக முஸ்லிம்களே அதிகம் இருக்கிறார்கள். அமைச்சர் இதற்கான திட்டமொன்றினை வகுக்க வேண்டும். முஸ்லிம் பாடசாலைகளில் தொல்பொருள் சட்டம், மற்றும் பொதுச் சட்டம் தொடர்பில் கருத்தரங்குகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்திட்டங்களை வகுக்கவேண்டும்.

மாணவர்களை விடுவிக்க முயற்சிகள் தேவை

மிஹிந்தலை சம்பவத்துடன் தொடர்புபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் விடுதலைக்காகவும் முஸ்லிம் சட்டத்தரணிகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தொல்பொருள் சட்டம் பற்றிய அறிவின்மையே தூபி மீதேறி புகைப்படம் எடுப்பதற்கு காரணமாய் இருக்கலாம்.

எமது மாணவர்கள் மாத்திரமல்ல இளைஞர்களும் இவ்வாறான செயற்பாடுகளில் ஒரு போதுமே ஈடுபடக்கூடாது. ஏனென்றால் அறியாத்தனமாக இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று தொடர்ந்தும் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.

எமது வரவாற்றுச் சின்னங்களையும், கலாசாரங்களையும், தொல்பொருட்களையும் கௌரவிப்பதுபோன்று நாம் ஏனைய இனத்தவரின் வரலாற்றுச் சின்னங்களையும் கௌரவிக்க வேண்டும். தேசிய சொத்தாக கருத வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.