மட்டக்களப்பு நகர் பள்ளிவாசல் காணியை ஆக்கிரமிக்க முயற்சி!

0 164

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கடந்த சில நாட்­க­ளாக மட்­டக்­க­ளப்பு நகரின் முகப்பாய் அமைந்­துள்ள மட்­டக்­க­ளப்பு நகர பள்­ளி­வா­ச­லான ஜாமியுஸ் ஸலாம் ஜும்மாப் பள்ளிக் காணியை அப­க­ரிப்பதற்கான முயற்சிகளில் சில தரப்பினர் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
அதா­வது இப்­பள்­ளி­வா­சலின் முன்­னா­லுள்ள வாசல் பகு­தியை அகற்ற வேண்டும் என்­பதே இவர்­க­ளது கோரிக்கை. அரு­கி­லுள்ள வின்சென்ற் தேசிய பாட­சா­லைக்கு வரும் மாண­வர்கள் காலை­யிலும் பிற்­பகல் பாட­சாலை விடும் தறு­வா­யிலும் வீதியில் நெரி­சலை எதிர்­கொள்­கி­றார்கள் என்­பதே இதற்கு கூறப்படும் கார­ணமாகும்.

இந்தப் பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால் உள்ள இரு புறங்­களும் ஒரு பக்கம் நீதி­மன்ற வளா­கத்தின் நிலம் மற்­றொரு புறம் பரந்து விரிந்த வெபெர் விளை­யாட்டு மைதா­னத்தின் நிலம். இவ்­விரு பகு­திக்­கு­மு­ரிய காணி­களில் பயன்­பாட்­டுக்குப் போக மேல­திக நிலம் வெறு­மனே உள்­ளது. மேலும் இப்­பா­ட­சா­லைக்கு நேர் எதி­ராக உள்ள அடுத்த பக்­கத்தில் பரந்து விரிந்த பாதையும் போதி­ய­ளவு நடை பாதையும் போதி­ய­ளவு நிலமும் உள்­ளது. இவை­யெல்லாம் இருக்க பள்ளிவாசல் காணி­யையே அப­க­ரிக்க ஆர்வம் காட்­டு­கின்­றனர்.

இந்த விடயம் குறித்து அந்தப் பள்­ளி­வா­சலின் நிரு­வாக சபை கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் முஸ்லிம் பாராளு­மன்ற உறுப்­பி­னரும் சுற்­றாடல் அமைச்­ச­ரு­மான இஷற்.ஏ. நஸீர் அஹ­மட்டைச் சந்­தித்துப் பிரஸ்­தா­பித்­தது.

அமைச்­ச­ரிடம் அவர்கள் கைய­ளித்த மக­ஜரில் பின்­வரும் விட­யங்கள் பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டி­ருந்­தன.

17ஆம் நூற்­றாண்டின் சகாப்­தத்தில் நிறு­வப்­பட்ட மட்­டக்­க­ளப்பு நகரப் பள்­ளி­வாசல், அதன் தொடக்­கத்தில், 1920 முதல் 1971 வரை இலங்­கையில் குடி­யே­றிய இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரான சொலுக்­கர்­களின் குடும்­பத்தால் நிர்­வ­கிக்­கப்­பட்­டது, மேலும், அவர்கள் பள்­ளி­வா­ச­லையும் அதன் அசையும் அசையாச் சொத்­துக்­க­ளையும் உள்ளூர் மக்­க­ளான அறங்­கா­வ­லர்­க­ளிடம் ஒப்­ப­டைத்து விட்டு நாட்டை விட்டு வெளி­யே­றினர்.

இப்­பள்­ளி­வாசல் 1950 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய மற்றும் கலாச்­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தில் இலக்கம் R/ 729/BT / 42 இன் கீழ் பதிவு செய்­யப்­பட்டு 1965 ஆம் ஆண்டு JAMIUS SALAM JUMMA MOSQUE (TOWN MOSQUE) என்ற பெயரில் ஜும்மா பள்­ளி­வா­ச­லாக அறி­விக்­கப்­பட்­டது.
இந்த மஸ்ஜித் முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் வக்ஃப் சபையின் வழி­காட்­டு­த­லின்­படி அறங்­கா­வலர் குழு அதன் நிர்­வா­கத்தை மேற்­கொண்டு வரு­கி­றது.
மட்­டக்­க­ளப்பு நகரின் மையப் புள்­ளி­யாக விளங்கும் இந்தப் பள்­ளி­வா­சலில் அனைத்துத் தரப்­பி­னரும் பெரிதும் பய­ன­டை­கின்­றனர்.
இந்த பள்­ளி­வா­ச­லுக்கு தின­சரி 2000க்கும் மேற்­பட்ட வழி­பாட்­டா­ளர்கள் வரு­கி­றார்கள் என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மேலும் இந்த எண்­ணிக்கை வெள்­ளிக்­கி­ழமை ஜும்மாத் தொழு­கை­யின்­போது 4500க்கும் அதி­க­மாக உள்­ளது.
தவிர, நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்தும் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்குச் சிகிச்­சைக்­காக வரு­வோரும், தமது வியா­பார அலு­வல்­க­ளுக்குச் செல்­வோரும் என இந்தப் பள்­ளி ஓய்­வெ­டுக்கும் மக்­க­ளுக்கு இது ஒரு நிம்­ம­தி­யான விடு­தி­யா­கவும் விளங்­கு­கி­றது.
இவ்­வா­றி­ருக்கும் தறு­வாயில் பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பாக அமைந்­துள்ள சுற்­று­வட்­டத்தை விரி­வு­ப­டுத்த கடந்த காலங்­களில் வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை நட­வ­டிக்கை எடுத்­த­போது, எமது வாகன நிறுத்­து­மி­டத்­தி­லி­ருந்து காணியின் ஒரு பகு­தியை நன்­கொ­டை­யாக வழங்­கு­மாறு அறங்­கா­வலர் சபை­யிடம் கோரிக்கை விடுத்­தனர்.
1965ஆம் ஆண்டு இந்தப் பள்­ளி­வா­சலைக் கட்­டும்­போது வழி­பாடு செய்­ப­வர்­க­ளுக்­காக தரிப்பிட வச­திக்­காக ஒதுக்­கப்­பட்ட எங்­களின் வாகன நிறுத்­து­மி­டத்­தி­லி­ருந்து ஒரு நிலத்தை முழு ஆத­ர­வுடன் அவர்­க­ளுக்கு நன்­கொ­டை­யாக வழங்­கினோம்.
அதன்­பி­றகு, நாங்கள் எங்கள் முன் பகு­தியை வரை­ய­றுத்து, எங்கள் வாகன நிறுத்­து­மி­டத்­திற்­கான நடை­பா­தையை அமைத்தோம்.
இவ்­வா­றான வேளையில், அருகில் அமைந்­துள்ள வின்சென்ற் பெண்கள் உயர்­நிலைப் பள்­ளியின் பிள்­ளைகள், எங்கள் வாகன நிறுத்­து­மி­டத்தின் வழி­யாக நடை­பாதை மேடை­யாகப் பயன்­ப­டுத்த, வழி வகுக்­கும்­படி, வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினர் அவ்­வப்­போது எங்­க­ளுக்குக் கடி­தங்­களை அனுப்பிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.
நாங்கள் வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபையின் அதி­கா­ரி­க­ளுடன் பல­முறை கலந்­து­ரை­யாடி, மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் ஏற்­கெ­னவே நாம் ஒரு பகுதிக் காணியை நன்­கொ­டை­யாக வழங்­கி­யி­ருப்­பதால், நாங்கள் எங்­க­ளுக்கு மிகச் சொற்­ப­மாக எஞ்­சி­யுள்ள, எங்­க­ளுக்கு காணி­யில்­லாத அவல நிலையை விளக்­கி­யுள்ளோம்.
இந்தப் பின்­ன­ணியில், எங்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்ட வாகன நிறுத்­து­மி­டத்­திற்­கான எங்­களின் உரி­மையைப் பெறு­வ­தற்­காக, எங்கள் நிலைப்­பாட்டில் சில நியா­யங்­களை முன்­வைக்க விரும்­பு­கிறோம்.
• 1965 ஆம் ஆண்டு கட்­டப்­பட்ட காலப்­ப­கு­தியில் பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான பகு­தியில் உள்ள தொழு­கை­யா­ளர்­களின் பயன்­பாட்­டிற்­காக வாகன நிறுத்­து­மிடம் பிரத்­தி­யே­க­மாக ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.
• கூறப்­பட்ட சொத்து அறக்­கட்­டளை வக்ஃப் வாரியச் சட்­டத்தின் கீழ் வரு­கி­றது, இது தொடர்­பான எந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கும், வக்ஃப் வாரி­யத்தின் முன் அனு­மதி கட்­டா­ய­மாகும்.
• வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை அதி­கா­ரி­களின் செயல்­பா­டுகள் பொது நலன் சாரா­த­தா­கவும் முற்­றிலும் இன அடிப்­ப­டை­யி­லா­ன­தா­கவும் அமைந்­துள்­ளது.
• அவர்­களின் எந்­த­வொரு அதி­கா­ர­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களும் வகுப்­பு­வாத வன்­முறை, மத நல்­லி­ணக்­கத்தை சீர்­கு­லைக்கும் மற்றும் பிர­தே­சத்தில் நிலவும் அமை­தி­யான சூழலை குழப்­பு­வ­தற்கே வழி­வ­குக்கும்.
• மேற்­படி பாட­சா­லையில் கற்கும் பிள்­ளைகள் தங்கள் வளா­கத்­திற்கு மாற்று அணு­கலைக் கொண்­டுள்­ளனர்.
• கடந்த காலங்­களில் அறங்­கா­வலர் குழு, வீதி அபி­வி­ருத்­தி­யின்­போது, மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபையின் கோரிக்­கையை மதிக்கும் ஒரே நோக்­கத்­துடன் வாகன நிறுத்­து­மி­டத்­தி­லி­ருந்து போது­மான நிலத்தை நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்­ளது.
• வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை அதி­கா­ரிகள், துறைத் தலை­வ­ருடன் இணைக்­கப்­பட்ட தலைமைப் பொறி­யியலாளர்­களால் பரிந்துரைக்கப்பட்ட சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் வடிவமைப்பைக் கருத்தில் கொள்ளாமல், தற்போதுள்ள சுற்று வளைவைக் கட்டியுள்ளனர்.
• தற்­போ­துள்ள வளைவை மறு­வ­டி­வ­மைப்பு செய்­வது இந்த பிரச்­சி­னைக்கு சாத்­தி­ய­மான தீர்­வாகும் என வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை அதி­கா­ரி­க­ளுக்கு எங்­களால் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கி­றது. இந்த விடயம் இவ்­வாண்டு மார்ச் மாதத்தில் நடந்த கலந்­து­ரை­யா­ட­லின்­போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.
எனவே, இந்த விட­யங்­களை உங்கள் மனதின் ஆழத்தில் உள்­வாங்கி, இப்­ப­கு­தியில் வசிக்கும் முஸ்லிம் சமூ­கத்தின் மத உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­தவும் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.” என கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.