சஹ்ரான் ஹாஷிமின் மைத்துனரும் அவரது கர்ப்பிணி மனைவியும் கைது

0 166

(எம்.எப்.அய்னா)
சஹ்ரான் ஹாஷிமின் மைத்­துனர், அதா­வது மனை­வியின் சகோ­தரர் திடீ­ரென பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றியலில் வைக்­கப்பட்­டுள்ளார். இவ்­வ­ருடம் உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று, அதி­கா­லையில் பெரும் படை­யுடன் ஒரு வீட்டை சுற்­றி­வ­ளைத்து, சஹ்­ரானின் மைத்­து­ன­ரையும் அவ­ரது கர்ப்­பிணி மனை­வி­யையும் பொலிஸார் இவ்­வாறு கைது செய்­தமை அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்­றுக்கு அமைய கைது நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்பட்­ட­தாக கொச்­சிக்­கடை பொலிஸார் விடி­வெள்­ளிக்கு தெரி­வித்­தனர்.

கடந்த 4 வரு­டங்­க­ளுக்கு முன்னர் அதா­வது 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் சஹ்ரான் ஹாஷீம் தலை­மை­யி­லான குழு, கத்­தோ­லிக்க, கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் நட்­சத்­திர ஹோட்­டல்­களை இலக்கு வைத்து தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை நடாத்­தி­யி­ருந்­தனர்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே, இம்­முறை உயிர்த்த ஞாயிறு தின கொண்­டாட்­டங்­க­ளுக்­காக தேவா­ல­யங்­களை மையப்­ப­டுத்தி விஷேட பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டன.

அவ்­வாறு இருக்கும் போது ஞாயி­றன்று அதி­காலை 1.00 மணி­ய­ளவில் இரா­ணு­வத்­தினர், விமா­னப்­ப­டை­யினர், அதி­ரடிப் படை­யினர், பொலிசார் என அனை­வரும் இணைந்து நீர்­கொ­ழும்பு – கொச்­சிக்­கடை பகு­தியில் வீடொன்­றினை சுற்­றி­வ­ளைத்­தி­ருந்­தார்கள். அந்த வீட்டில் சஹ்­ரானின் மைத்­துனர், அவர் மனைவி உள்­ளிட்ட குடும்ப உறுப்­பி­னர்கள் இருந்த நிலையில், பொலிஸார் சஹ்­ரானின் மைத்­து­ன­ரையும் அவ­ரது மனை­வி­யையும் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்து சென்­றனர்.

இந்த வீடு சஹ்­ரானின் மைத்­து­னரின் மனை­வியின் வீடாகும். சஹ்­ரானின் மைத்­துனர் குரு­ணாகல் – கட்­டு­பொத்த பொலிஸ் பிரிவின் கெக்­கு­னு­கொல்ல எனும் ஊரைச் சேர்ந்­தவர். அவர் நீர்­கொ­ழும்பு – கொச்­சிக்­கடை பகு­தி­யி­லேயே திரு­மணம் முடித்­துள்ளார். தற்­போது அவ­ரது மனைவி 4 மாத கர்ப்­பி­ணி­யாக இருக்கும் நிலையில், அவரை தாய் வீட்­டுக்கு சஹ்­ரானின் மைத்­துநர் அழைத்து வந்­துள்ளார். அழைத்து வரு­வ­தற்கு முன்னர், அவர் தனது வதி­விட பொலிஸ் பிரி­வான கட்­டு­பொத்­தயில் உள்ள பொலிஸ் நிலை­யத்­துக்கும் தான் மனை­வியின் வீட்­டுக்கு செல்­வ­தாக அறி­வித்­தி­ருக்­கின்றார்.

இவ்­வாறு அறி­வித்­து­விட்டு சென்று, கொச்­சிக்­கடை பகு­தியில் தங்­கி­யி­ருந்த போதே இந்த திடீர் கைது சம்­பவம் நடந்­துள்­ளது.

குறித்த சஹ்­ரானின் மைத்­துனர் 2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்னர் கைது செய்­யப்­பட்டார். அவ­ருக்கு எதி­ராக மேல் நீதி­மன்றில் வழக்கு நிலு­வையில் உள்ள நிலையில் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். எனினும் அவ­ரது மனை­விக்கு எதி­ராக எந்­த­வித குற்­றச்­சாட்­டுக்­களும் இல்லை.

இவ்­வா­றான நிலையில், இம்­முறை உயிர்த்த ஞாயிறு தின கொண்­டாட்­டங்­க­ளுக்கு தயா­ரான போது, பொலி­சா­ருக்கு யாரோ ஒருவர் அழைப்­பெ­டுத்து, சஹ்­ரானின் மைத்­துனர் கொச்­சிக்­க­டையில் தங்­கி­யி­ருப்­ப­தா­கவும் அது சந்­தே­கத்­துக்கு உரி­யது எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்த தக­வலை வைத்­துக்­கொண்டே அதி­ர­டி­யாக படை­யி­னரின் சுற்­றி­வ­ளைப்­புடன் சஹ்­ரானின் மைத்­துனர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இந்­நி­லையில், இரு­வரும் எதிர்­வரும் 20 ஆம் திக­தி­வ­ரையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

பொலிசார் அவ்­வி­ரு­வ­ரையும் கைது செய்து, நீர்­கொ­ழும்பு நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­தனர். இதன்­போது பதில் நீதி­வானே அங்கு கட­மையில் இருந்த நிலையில், கொச்­சிக்­கடை பொலிஸ் பொறுப்­ப­தி­காரி இருவர் தொடர்பில் சி.ஐ.டி.யின் அறிக்­கை­களைப் பெற எதிர்ப்­பார்ப்­ப­தாக தெரி­வித்த விட­யங்­களை ஆராய்ந்து அவர்­களை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டி­ருந்தார்

அவர்கள் கொச்­சிக்­க­டையில் தங்­கி­யி­ருக்க தெளி­வான காரணம் இருக்­கையில், அதுவும் பொலி­சா­ரிடம் தாம் இருக்கும் இடம் தொடர்பில் தகவல் அளித்துள்ள நிலையிலும் இந்த கைதுக்கு எதிராக சஹ்ரானின் மைத்துனரின் சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுக்க எதிர்ப்பார்ப்பதாக அறிய முடிகின்றது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் நேற்று கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடளிக்க சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.