தியா­க­ர­ம­ழானும் மக்­க­ளின்­போ­ராட்­டங்­களும்

0 436

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

“ஒவ்­வொ­ரு­நாளும் ஆஷூரா
ஒவ்வோர் இடமும் கர்பலா”
(ஈரானின் புரட்சிச் சிந்­த­னை­யாளன்
அலி ஷரி­யாத்தி)

இந்த சுலோகத்­து­டன்தான் லட்­சக்­க­ணக்­கான ஈரானியர்கள் (பெண்­க­ளுட்­பட) நிரா­யு­த­பா­ணி­க­ளாகத் திரண்­டெ­ழுந்து வீதி­க­ளையும் பல்­க­லைக்­க­ழக வளா­கங்­க­ளையும் முற்­று­கை­யிட்டு சர்வாதி­கார ஷா மன்­னனை நாட்டை விட்டே விரட்­டி­ய­டித்­தனர். அவ்­வா­றான ஒரு சந்தர்ப்பம் இப்­பு­னித ரம­ழானில் இலங்­கை­யிலும் இன்று உரு­வாகிக் கொண்­டி­ருக்­கி­றது.

புனித ரமழான் நன்­மை­களைக் கொள்­ளை­ய­டிக்கும் ஒரு மாதம் என்று பள்­ளி­வா­சல்­களில் மௌல­விகள் பிர­சங்­கிக்கக் கேட்­ட­துண்டு. அது ஒவ்­வொரு நோன்­பா­ளி­க­ளையும் நோக்கி அவர்கள் போதிக்கும் உப­தேசம். சில வேளை­களில் சில முஸ்­லிம்கள் சில விசேட தேவை­க­ளுக்­கா­கவும் இறை­வனைத் தொழுது நோன்பு நோற்­ப­தையும் நாம் அறிந்­துள்ளோம். அவை­யெல்லாம் அவ­ர­வரின் தனிப்­பட்ட நம்­பிக்­கையைப் பொறுத்­தவை. ஆனால் இவ்­வ­ருட நோன்பு இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு முக்­கி­ய­மான அல்­லது நெருக்­க­டி­யான கால­கட்­டத்தில் நுழைந்து அவர்களின் வாழ்க்­கையில் மறக்­க­மு­டி­யாத ஒரு மாத­மாக அமைந்­துள்­ளது. அதைப்­பற்­றிய சில சிந்­த­னை­களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்­வதே இக்­கட்­டு­ரையின் நோக்கம்.

நோன்பு என்­றாலே தியாகம் என்­பது பொருள். வரு­டந்­தோறும் முப்­பது நாட்­க­ளுக்குப் பகல் முழுதும் பல்­வகைச் சுவை­க­ளையும் ஆசை­க­ளையும் ஒறுத்து இறை­வ­னுக்­காக அவற்றை தியாகம் செய்து அவ­னிடம் பாவ­மன்­னிப்புக் கேட்கும் ஒரு மாதம். இருக்கும் உணவை ஒறுப்­ப­துதான் தியா­க­மென்றால் இல்­லாத உணவை ஒறுப்­பது எப்­படி? அந்த வினாதான் எத்­த­னையோ ஏழை முஸ்லிம் குடும்­பங்­களை இன்று நோக்­கி­யுள்­ளது.

நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை ஒழுங்­காகப் பரா­ம­ரித்து வளர்க்கத் தெரி­யாத ஊழல் நிறைந்த ஓர் அர­சாங்­கமும் அதன் ஜனா­தி­ப­தியும் பட்­டி­னியைப் பரி­சாக எல்லா ஏழைக் குடும்­பங்­க­ளுக்கும் இன்று வழங்­கி­யுள்­ளனர். அந்தக் குடும்­பங்­களுள் எத்­த­னையோ முஸ்லிம் அல்­லாத குடும்­பங்கள் என்­பதையும் மன­திற்­கொள்ள வேண்டும். இல்­லாத உண­வுக்­காக அக்­கு­டும்­பங்கள் ஏங்கித் தவிக்­கின்­றன. வீதி­யிலே இறங்கி ஆர்ப்­பாட்­டமும் செய்யத் துணிந்­து­விட்­டன. முஸ்லிம் குடும்­பங்­களோ இல்­லாத உணவை இறை தியா­க­மாக மாற்றி அமைதி காண்­கின்­றன. ஆனால் அந்த அமை­தியை பட்­டி­னிக்கும் அப்பால் ஒரு படி­யேறி ஆட்­சி­யா­ளரின் அநி­யா­யத்தை எதிர்க்கும் ஓர் அமைதிப் போரா­ட்­ட­மாக மாற்றி முஸ்லிம் நோன்­பா­ளிகள் அனை­வரும் அனைத்து மத மக்­க­ளுடன் இணைந்து தம் குரல்­களை எழுப்­பு­வதே இப்­பு­னி­த­ மா­தத்தைச் சிறப்­பிக்கும் ஒரு செயல் என்­பதை இக்­கட்­டுரை வலி­யு­றுத்­து­கி­றது.

அந்த வகையில் கொட்டும் மழை­யையும் பாராது நோன்­புடன் ஆர்ப்­பாட்ட மேடை­யிலே ஏறி “ஜனா­தி­ப­தியே வெளி­யே­று”, என்று கர்ச்சித்த அந்த வீர முஸ்லிம் பெண்ணைக் கண்டு பெரு­மைப்­ப­டாமல் இருக்க முடி­யுமா? அதே­போன்று சுதந்­திர சதுக்­கத்தில் ஆர்ப்­பாட்­டத்­துக்கு மத்­தியில் இறை­வ­னிடம் கையேந்­திய அந்த முஸ்­லிம்க­ளையும் போற்­றாமல் இருக்க முடி­யாது.

இலங்கை முஸ்­லிம்­க­ளி­டையே இந்த வருட ரமழான் ஓர் ஆரோக்­கி­ய­மான மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை இங்கே விளக்­க­வேண்­டி­யது அவ­சியம். அதா­வது, இத்­தனை காலமும் பெரும்­பான்மை இன மக்கள் முன்­னெ­டுத்த அர­சியற் போராட்­டங்­க­ளி­லெல்லாம் முஸ்­லிம்கள் பங்­கா­ளி­களாய் அல்­லாமல் பார்­வை­யாளர்களாக மட்­டுமே செயற்­பட்டு வந்­துள்­ளனர். அது முஸ்லிம் சமூ­கத்­தின்மேல் ஒரு கறை­யாகப் படிந்­துள்­ளது.

அதற்குக் காரணம் அவர்களின் தலை­மைத்­து­வங்கள் போதித்த அர­சியல் மார்க்கம். ஒரு பக்­கத்தில் மதத்­த­லைவர்கள் இந்த வாழ்க்­கையே நிலை­யற்­றது, மறு­மையே நிலை­யா­னதும் நிச்­ச­ய­மா­னதும் ஆகும். ஆதலால் மறு­மைக்குத் தேவை­யான மார்க்கக் கட­மை­களை நிறை­வேற்­றிக்­கொண்டு இக­வாழ்­வுக்குத் தேவை­யான ஜடத்­துவ தேவை­களை மட்டும் நிறை­வேற்­றிக்­கொண்டு வாழ்­வதே ஓர் உண்­மை­யான முஃமினின் கடமை என்று போதித்­ததால் மற்­றவர்கள் நடாத்­திய அர­சியல், பொரு­ளா­தார, சமூகப் போராட்­டங்­களில் முஸ்­லிம்கள் பங்­கு­கொள்­ள­வில்லை. தூரத்­திலே நின்று அவற்றை வேடிக்கை பார்த்­தனர் என்றே சொல்­லலாம். மறு­பக்­கத்தில் முஸ்லிம் அர­சியல் தலைவர்கள் நடாத்­திய வியா­பார அர­சியல் அப்­ப­டிப்­பட்ட போராட்­டங்­களை முஸ்­லிம்­க­ளுக்கு அவ­சி­ய­மற்­ற­தொன்­றாக ஆக்கி விட்­டது. அதா­வது முஸ்­லிம்­களோ இரண்­டா­வது சிறு­பான்மைச் சமூகம். ஆகவே எந்த அர­சியல் கட்சி ஆட்­சிக்கு வந்­தாலும் அந்தக் கட்­சி­யுடன் சேர்ந்து அந்த அரசின் சலு­கை­களைப் பெற்று வாழ்­வதே சிறந்த உபாயம் என அத்­த­லைவர்கள் வலி­யு­றுத்­தினர். 1980க்குப் பின்­னரும் முஸ்லிம் தலைவர்கள் தனிப்­பட்ட கட்­சி­களை அமைத்தும் இந்தத் தந்­தி­ரமே கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. உதா­ர­ண­மாக, இற்­றை­வரை பாரா­ளு­மன்­றத்­துக்குச் சென்ற எந்த ஒரு முஸ்லிம் தலை­வ­னா­வது அங்கே ஆண்­டு­தோறும் சமர்ப்பிக்­கப்­பட்ட வர­வு – ­செ­லவுத் திட்­டத்­தைப்­பற்­றியோ அங்கே கொண்­டு­வ­ரப்­பட்ட பொரு­ளா­தாரம் சம்­பந்­த­மான எந்­த­வொரு மசோ­தா­­வின் ­மீதோ நாட்டு மக்­களின் கவ­னத்தை ஈர்க்கும் வகையில் உரை­யாற்­றி­யது உண்டா? அவர்கள் எல்­லா­ருமே ஆளும் கட்­சிக்கு ஆமாப்­போடும் பொம்­மை­க­ளா­கத்தான் இருந்­தனர். இத­னா­லேதான் ஒரு சந்தர்ப்பத்தில் முஸ்­லிம்­க­ளைப்­பற்றி கலா­நிதி கொல்வின் ஆர். டி. சில்வா விமர்சித்­த­போது அவர்களுக்கும் இந்த நாட்­டுக்கும் உள்ள உறவு மாட்­டுக்கும் புல்­லுக்­கு­மி­டையே உள்ள உற­வு­போன்­றது என்றார். அதா­வது மாடு புல்லை மேயுமே தவிர அதை எவ்­வாறு வளர்ப்பது என்­ப­தைப்­பற்றி அது கவ­லைப்­ப­டு­வ­தில்லை. இது எவ்­வ­ளவு ஆபத்­தான ஒரு விமர்சனம் என்­பதை அன்­றைய முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் உணர்ந்தார்­களோ தெரி­யாது. இவ்­வாறு மதத்­த­லைவர்களும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் போதித்த போத­னையால் பெரும்­பாலும் வாத்­த­கத்தில் ஈடு­பட்­டி­ருந்த சாதா­ரண முஸ்­லிம்கள் தாமும் தமது வியா­பா­ரமும் குடும்­பமும் பள்­ளி­வா­சலும் என்­ற ­ப­டியே தமது காலத்தைக் கடத்­தினர். ஆனால் அதுவோ முஸ்­லிம்­க­ளி­டையே புத்­தி­ஜீ­விகள் என்ற ஒரு வர்க்கம் மருந்­துக்கும் காணக்­கி­டைக்­கா­ம­லி­ருந்த ஒரு காலம். அது இன்று வெகு­வாக மாறி­விட்­டது.
பதி­யுத்தீன் மஹ்மூத் தோற்­று­வித்த கல்விப் புரட்­சியால் வியா­பாரச் சமூ­க­மாகக் கணிக்­கப்­பட்ட முஸ்­லிம்கள் முதலில் ஓர் ஆசி­ரிய சமூ­க­மாக மாறி அதன் ­வ­ழி­யாக இன்று அறி­வாற்­றலும் பல துறை­க­ளிலும் திற­மை ­பெற்ற புத்­தி­ஜீ­வி­களைக் கொண்ட ஒரு சமூ­க­மாகத் தோற்­ற­மெ­டுத்­துள்­ளது. அதில் ஆண்கள் மட்­டு­மல்ல பெண்­களும் உரு­வா­கி­யுள்­ளனர்.

எனவே தமது சமூ­கத்­தைப்­பற்­றிய ஒரு விழிப்­புணர்வு இவர்களி­டையே காணப்­ப­டு­வதை மறுக்க முடி­யாது. அவ்­வா­றான ஓர் ஆரோக்­கி­ய­மான சூழலில் மற்­றைய இனங்­க­ளுடன் கைகோர்த்து நாட்டின் பிரச்­சி­னை­களை உள்­வாங்கி தேசிய எழுச்­சி­ பற்­றிய போராட்­டங்­களில் முஸ்­லிம்கள் சம­பங்கு கொள்­ளக்­கூ­டிய வாய்ப்­புகள் நிறைய உண்டு. அவ்­வா­றான ஒரு வாய்ப்பு இன்று உரு­வா­கி­யுள்­ளது.

சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கும் மேலாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச ஒரு சர்வாதி­கா­ரிபோல் மாறி ராஜாங்­கத்­தையே ஒரு குடும்ப ஆட்­சி­யா­கவும் எண்­ணற்ற ஊழல்கள் நிறைந்த ஒன்­றா­கவும் கொண்­டு ­சென்­றதால் இலங்­கையின் பொரு­ளா­தாரம் நிமிர்த்த முடி­யாத அள­வுக்குச் சரிந்து கிடக்­கி­றது. இன்று முஸ்­லிம்கள் பட்­டினி நோன்பு நோற்­ப­தற்கும் மற்ற இனத்­தவர்கள் பட்­டி­னியால் வாடு­வ­தற்கும் இந்த ஆட்­சியே காரணம் என்­பது தெளி­வா­கி­விட்­டது. இந்த வீழ்ச்சி, கோத்­தா­பய ஆட்­சி­யு­டன்தான் ஏற்­பட்ட ஒன்­றல்ல. ஆனால் அவரின் ஜனா­தி­பதி ஆட்­சி­யி­லேயே வீழ்ச்சி அதன் உச்­சத்தை அடைந்­தது என்­பதை மறுக்க முடி­யாது. அதைப்­பற்­றிய சில விப­ரங்­களை கடந்த விடிவெள்ளி இதழில் நான் விளக்­கி­யுள்ளேன்.

சென்ற சுமார் முக்கால் நூற்­றாண்டு கால­மாக பௌத்த சிங்­கள இன­வா­தத்­தையே ஒரு போதைவஸ்­தாகப் பெரும்­பான்மை இன­ மக்­க­ளுக்கு ஊட்டி அதில் அவர்களை மயங்­க­ வைத்து தேர்தல் காலங்­க­ளிலே அவர்களின் வாக்­கு­களை வென்­றெ­டுத்து நடத்­தி­ வந்த அர­சியல் நாட­கத்தின் அந்­தரங்­கத்தை இப்­போ­துதான் இன்­றைய இளம் பௌத்த சிங்­களச் சந்­ததி உணரத் தொடங்­கி­யுள்­ளது. இந்த ஏமாற்று அர­சி­யலால் தமது எதிர்­கா­லமே இருள்­ப­டிந்த ஒன்­றாக மாறி­விட்­டதை விளங்­கிக்­கொண்ட அந்தச் சந்­ததி இந்த அர­சி­ய­லுக்கு முற்­றுப்­புள்ளி வைத்து, அர்த்­த­ புஷ்­டி­யுள்ள தூய ஒரு ஜன­நா­யகப் பாதையில் நாட்டை நடத்­து­வ­தற்குத் துணிந்­து­விட்­டது. இந்தப் புது­யுகச் சந்­ததி மதம், இனம், மொழி ஆகிய பிரி­வு­களைக் கடந்து எல்­லாரும் இந்­நாட்டு மக்கள் என்ற ஒரு புரட்­சிப்­பா­ணியில் இந்த ஆட்­சிக்­கெ­தி­ரான ஆர்ப்­பாட்­டங்­களை நாடெங்­கிலும் ஆரம்­பித்­துள்­ளது. இந்தச் சந்­த­திதான் இத்­தனை காலமும் இந்த நாட்டு மக்­களை சிங்­க­ள­வ­ரென்றும் தமி­ழ­ரென்றும் முஸ்­லிம்­க­ளென்றும், பௌத்­த­ரென்றும், கிறிஸ்­த­வ­ரென்றும், இந்­து­வென்றும் இஸ்­லா­மி­ய­ரென்றும் பிரித்­து­ வைத்து அந்தப் பிரி­வி­னையைக் கொண்டு பொரு­ளா­தார வளம் திரட்­டிய பெருச்­சா­ளி­களின் முகக்­க­வ­சத்தைக் கிழித்­தெ­றிய முனை­கி­றது. “கோத்­தாவே போ” என்ற கோஷம் வானைப் பிளக்கும் அள­வுக்கு ஆர்ப்­பாட்­டங்­களில் ஒலிக்­கின்­றமை முஸ்­லிம்­களின் காது­க­ளையும் எட்­டி­யி­ருக்க வேண்டும்.

எனவே இப்­பு­னித மாதத்தில் முஸ்லிம் ஆண்­களும் பெண்­களும் திரள்­தி­ர­ளாக நாடெங்கும் நடை­பெறும் ஆர்ப்­பாட்­டங்­களில் சிங்­கள தமிழ் மக்­க­ளுடன் இணைந்து போரா­டு­வது அவ­சியம். முஸ்­லிம்கள் பொதுப் போராட்­டங்­களில் பங்கு கொள்­வ­தில்லை என்ற கறையைக் களைந்­தெ­றியும் சந்தர்ப்பம் இது. முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களே! களத்­தி­லி­றங்கி உங்கள் சமூ­கத்­துக்கு வழி­காட்­டுங்கள். இது­வரை உங்­களின் சமூ­கத்தின் முது­கிலே ஏறிக்­கொண்டு சுயலாபம் திரட்டிய அரசியல் பச்சோந்திகளையும் வனவாசம் செல்லவைக்கும் காலம் நெருங்கிவிட்டது. எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்களோ இந்த நாட்டிலே.

முடிவாக, இன்னுமொரு உண்மையையும் முஸ்லிம்கள் அறிந்து கொள்ளல் வேண்டும். இந்த ஆட்சியாளர்களைத் துரத்தியவுடன் பொருளாதாரம் உடனடியாக மீட்சிபெறப் போவதில்லை. அதற்கான சில அடிப்படை மாற்றங்களை அவசரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. சர்வதேச நாணயநிதியின் உதவியும், மத்திய வங்கியின் புதிய ஆளுனரின் உடனடியான நிதிக்கொள்கை சார்பான பரிகாரங்களும், சினேகித நாடுகளின் தாராண்மையும், புதிய ஆட்சியாளர்களின் நிதிக் கொள்கைகளும் ஒன்று சேர்ந்து செயற்பட்டு அவற்றின் பயனை அனுபவிக்க இன்னும் இரண்டு அல்லது முன்று வருடங்களாவது செல்லும். அதுவரை கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். அவ்வாறான கஷ்டங்களை எல்லா இலங்கையர்களுக்கும் இலேசாக்கித் தருமாறு இப்புனித மாதத்தில் முஸ்லிம்கள் இறைவனிடம் கையேந்த வேண்டும்.–Vidivelli

Leave A Reply

Your email address will not be published.