அசாத் சாலியிடம் விசாரணை தொடர்கிறது

அனுமதி பெற்றே துப்பாக்கியை வைத்திருந்ததாக கூறுகிறார் சட்டத்தரணி

0 357

(எம்.எப்.எம்.பஸீர்)
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சி.ஐ.டி. எனப்­படும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் சிறப்புக் குழு­வி­னரால் கைது செய்­யப்­பட்டு 48 மணி நேரம் கடந்­துள்ள நிலையில், தொடர்ந்தும் அவ­ரிடம் தடுப்புக் காவலில் சிறப்பு விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

‘நேரடி, பகுப்­பாய்வு சான்­று­களை மையப்­ப­டுத்தி தற்­போது அசாத் சாலி­யிடம் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை மையப்­ப­டுத்­திய விசா­ர­ணை­களில் சி.ஐ.டி.யின­ருக்கு கிடைத்­துள்ள தக­வல்­களை வைத்து இவ்­வி­சா­ர­ணைகள் நடக்­கின்­றன. குறிப்­பாக மாவ­னெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவ­காரம் உள்­ளிட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­த­லுடன் இணைந்த சம்­ப­வங்கள் குறித்து அவ­ரிடம் விசா­ரணை நடக்­கி­றது.’ என பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, அசாத் சாலி விவ­கார விசா­ர­ணைகள் குறித்து பொலிஸ் தலை­மை­ய­கத்தில் நேற்று நடந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் கூறினார்.

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் கடந்த 16 ஆம் திகதி மாலை 6.00 மணி­ய­ளவில் கொள்­ளுப்­பிட்­டியில் அவ­ரது காரில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த போது கைது செய்­யப்­பட்டார். 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். அவ­ரிடம் , சி.ஐ.டி.யின் பிரத்­தி­யேக விசா­ரணைக் குழு­வினர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இது தொடர்பில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் உள்ள விதி­வி­தாங்­க­ளுக்கு அமைய, சி.ஐ.டி. பணிப்­பா­ளரின் ஒப்­பு­த­லுடன் 72 மணி நேர தடுப்புக் காவலில் அசாத் சாலி சி.ஐ.டி. தலை­மை­ய­க­மான 4 ஆம் மாடியில் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

கைது செய்­யப்­படும் போது அவ­ரது காரி­லி­ருந்து வெளி­நாட்டு துப்­பாக்­கி­யொன்றும் அதன் தோட்­டாக்­களும் கைப்­பற்­றப்­பட்­டி­ருந்த நிலையில், நேற்று மாலை வரை அது குறித்­தான விசா­ர­ணை­களில் குற்றச் செயல்கள் தொடர்­பி­லான தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எவ்­வா­றா­யினும் அந்த துப்­பாக்கி 2002 ஆம் ஆண்டு முதல் உரிய அனு­ம­தி­யுடன் அசாத் சாலி பாது­காப்­புக்­காக வைத்­தி­ருந்த துப்­பாக்கி என அவ­ரது சட்­டத்­த­ரணி என்.எம். சஹீட் குறிப்­பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் அறிக்­கையில் அசாத் சாலிக்கு பாத­க­மான விட­யங்கள் காணப்­பட்­டன. மாவ­னெல்லை புத்தர் சிலை உடைப்பு விவ­காரம் மற்றும் வணாத்­த­வில்லு வெடி­பொருள் மீட்பு ஆகிய சம்­ப­வங்­களில் கைதான சந்­தேக நபர்­களை விடு­தலை செய்ய அசாத் சாலி தலை­யீடு செய்­தி­ருந்­த­தாக சாட்­சிகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இந் நிலையில் ஆணைக் குழுவின் அறிக்­கையில் அசாத் சாலி அதில் தலை­யீடு செய்­தி­ருக்கக் கூடாது என சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே அசாத் சாலி பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ், உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் சம்­ப­வங்கள் தொடர்பில் சி.ஐ.டி.யினரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

அசாத் சாலி பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்டில் கைதா­வது இது முதல் முறை­யல்ல. இதற்கு முன்னர் கடந்த 2013 மே மாதம் 2 ஆம் திகதி, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். இந்­தி­யாவின் ஜூனியர் விகடன் பத்­தி­ரி­கைக்கு இன மத முரண்­பா­டு­களைத் தூண்டும் வகையில் அவர் அளித்­த­தாக கூறப்­படும் சர்ச்­சைக்­கு­ரிய பேட்­டி­யொன்­றினை மையப்­ப­டுத்தி அக் கைது இடம்­பெற்­றி­ருந்­தது.

இத­னி­டையே கடந்த 10 ஆம் திகதி வெளி­யிட்­ட­தாகக் கூறப்­படும் கருத்து ஊடாக ( ஷரீ ஆ சட்டம் குறித்த கருத்து )தண்­டனை சட்­டக்­கோவை, பயங்­க­ர­வாத தடைச்­சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பட்டு சட்டங்களின் கீழ் அசாத் சாலி குற்றமிழைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் அறிவித்திருந்தார். அது தொடர்பிலும் கைது செய்யப்பட்ட அசாத் சாலியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.