உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற அறிக்கைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிப்பு

0 644

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னெடுத்த விசாரணைகளின் அனைத்து அறிக்கைகளும், குறிப்பிட்ட தாக்குதல்கள் தொடர்பில் தற்போது விசாரணைகளை முன்­னெ­டுத்து வரும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்றின் உதவிப் பொதுச் செய­லாளர் டிகிரி ஜய­தி­லக ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி ஆணைக்­குழு பாரா­ளு­மன்றின் பொதுச் செய­லா­ள­ரிடம் விடுத்த கோரிக்­கைக்கு அமை­வா­கவே அவ் அறிக்கை கைய­ளிக்­கப்­பட்­ட­தா­கவும் அவர் கூறினார். பல்­வேறு தரத்­தினைச் சேர்ந்­த­வர்கள் பாரா­ளு­மன்ற விஷேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் வழங்­கி­யுள்ள சாட்­சி­யங்­களை ஆராய்­வ­தற்­கா­கவே குறிப்­பிட்ட அறிக்­கையைப் பெற்றுக் கொண்­ட­தாக ஜனா­தி­பதி ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­ற­மைக்­கான காரணங்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் நடாத்தி ஆராய்ந்த பாரா­ளு­மன்ற விஷேட தெரி­வுக்­குழு தனது அறிக்­கையை கடந்த அக்­டோபர் மாதம் 23 ஆம் திகதி பாரா­ளு­மன்­றுக்கு சமர்ப்­பித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. பாரா­ளு­மன்ற விஷேட தெரி­வுக்­கு­ழுவின் தலைவர் பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சி­ரி­யினால் அறிக்கை பாரா­ளு­மன்­றத்­துக்கு கைய­ளிக்­கப்­பட்­டது. 272 பக்­கங்­களைக் கொண்ட இந்த அறிக்­கையில் பல்­வேறு பரிந்­து­ரைகள் உள்­ள­டங்­கப்­பட்­டி­ருந்­தன.

பிரதி சபா­நா­ய­கரின் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த பாரா­ளு­மன்ற விஷேட தெரி­வுக்­கு­ழுவின் ஏனைய உறுப்­பி­னர்­க­ளாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, ஆஷு மாரசிங்க, நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அங்கம் பெற்றிருந்தனர்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.