மு.கா. முற்போக்காளர்கள் என நிரூபிக்க முயற்சிக்கின்றது ம.வி.மு. உறுப்பினர் லால்காந்த சாடல்

0 708

பல­வீ­ன­மான அர­சி­யலை முன்­னெ­டுத்­து­வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யையும்  இணைத்துக் கொண்டு அதன் மூலம் தாம் முற்­போக்­கா­ளர்கள் என நிரூ­பிப்­ப­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளனர் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தொழிற்­சங்க செயற்­பாட்­டாளர் முன்னாள் எம்.பி. லால்­காந்த தெரி­வித்தார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யையும் இணைத்­துக்­கொண்டு கூட்­டணி அமைத்து எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கள­மி­றங்­க­வுள்­ளது என்ற அதன் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் கருத்­துக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில் தெரி­வித்­த­தா­வது;

‘யார் என்ன கூறி­னாலும் நாங்கள் மக்கள் விடு­தலை முன்­ன­ணியோ அல்­லது ஜன­ப­ல­வே­கய (மக்கள் சக்தி) யோ முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் மாத்­தி­ர­மல்ல மற்றும் பல கட்­சி­க­ளுடன் இணையப் போவில்லை. உடன்­ப­டிக்கை செய்து கொள்ளப் போவ­து­மில்லை. இது உறு­தி­யாகும்.

மேலும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் அவ­ரது அணி, மஹிந்த ராஜபக் ஷ, கோத்­த­பாய ராஜபக் ஷ உட்­பட ராஜபக் ஷாக்கள் அல்­லது அந்த தரப்­பினர், ரவூப் ஹக்கீம் மற்றும் அவ­ரது தரப்­பினர் ரிஷாத் பதி­யுதீன் அல்­லது அவ­ரது தரப்­பி­ன­ருடன் இணையப் போவ­தில்லை.

எங்­க­ளது கொள்­கைகள் பற்றி மக்கள் கேள்வி எழுப்­பு­வ­தில்லை. மக்­களை நாம் தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளோம். மக்­க­ளுடன் இணை­வற்கு அமைப்­பொன்­றினை நிறு­வி­யுள்ளோம்.

இதே­வேளை, ஏனைய அனைத்துக் கட்­சிகள் மக்­களை நிரா­க­ரித்து வரு­கையில் அக்­கட்­சிகள் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினை விமர்சித்து தாம் முற்­போக்குவாதிகள் என்று நாடகமாடி வருகிறார்கள். அதற்கு முயற்சிக்கிறார்கள். அதன் மூலம் அவர்களது இயலாமை வெளிப்படுகிறது. இவை எமக்கு சவாலாக அமையாது என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.