இந்தோனேசியாவில் கடும் மழை, மண்சரிவு உயிரிழப்புகள் அதிகரிப்பு மீட்புப் பணிகள் துரிதம்

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ள நிலையில் கூரை வரை புதையுண்டுள்ள டசின் கணக்கான வீடுகளை மூடியுள்ள களி மண்ணைத் தோண்டி மேலும் உடல்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டு வருகின்றனர். மோசமான காலநிலை காரணமாக ஒரு நாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீட்புப் பணிகள் கடந்த சுகாபூமி மாவட்டத்தில் அமைந்துள்ள சேர்னாரெஸ்மி கிராமத்தில் புதன்கிழமை மீண்டும் ஆரம்பமானது. கடந்த திங்கட்கிழமை மாலை வேளையில் 30 வீடுகளைத் தாக்கிய மண்சரிவினால் புதையுண்டதாக…

அரசாங்கத்தின் பலத்தை  இன்னும் சில தினங்களில் கண்டுகொள்ளலாம்

அரசாங்கத்தின் பலத்தை  இன்னும் சில தினங்களில் கண்டுகொள்ளலாம். அதன் பிறகு பொதுத்தேர்தல் தொடர்பாக யாரும் கதைக்கமாட்டார்கள். அத்துடன் ஜனாதிபதி தேர்தலே ஆரம்பத்தில் இடம்பெறும் என ராஜாங்க அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் முன்வைத்த இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவாக 102 பேரே வாக்களித்துள்ளனர். அரசாங்கத்துக்கு  பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அதனால் பொதுத்தேர்தலுக்கு…

முஸ்லிம் ஆசிரியைகள் ‘அபாயா’ வுடன் மீண்டும் ஷண்முகா கல்லூரி சென்றனர்

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு அபாயா அணிந்து கொண்டு சென்ற 4 முஸ்லிம் ஆசிரியைகளுக்கு பாடசாலை நிர்வாகம் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட முஸ்லிம் ஆசிரியைகள் கடந்த 9 மாத காலமாக தற்காலிக இடமாற்றத்தில் இருந்து வந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் குறித்த பாடசாலைக்கு அபாயா அணிந்து கடமைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். ஆசிரியைகளான பாத்திமா பஹ்மிதா ரமீஸ், சஜானா பாபு முஹம்மத் பசால், சிபானா முஹம்மத் சபீஸ்,ரஜீனா ரோஷான் ஆகியோரே நேற்று வழமைபோன்று இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் அபாயா அணிந்து ஷண்முகா இந்துக்…

பலுஜிஸ்தானில் கிளர்ச்சிக்காரர்களின் தாக்குதலில் பாகிஸ்தான் படையினருள் நால்வர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுஜிஸ்தானில் கிளர்ச்சிக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது நான்கு துணைப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமையன்று மாகாணத் தலைநகர் குஎட்டாவுக்கு வடகிழக்கே 262 கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்துள்ள லெராலயி மாவட்டத்தில் இம் மோதல் இடம்பெற்றதாக நேற்று முன்தினம் இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுழைபாதை எல்லையில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட போது கிளர்ச்சிக்காரர்கள் துணைப்படையினரின் குடியிருப்புப் பகுதியின் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக…