இந்தோனேசியாவில் கடும் மழை, மண்சரிவு உயிரிழப்புகள் அதிகரிப்பு மீட்புப் பணிகள் துரிதம்
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ள நிலையில் கூரை வரை புதையுண்டுள்ள டசின் கணக்கான வீடுகளை மூடியுள்ள களி மண்ணைத் தோண்டி மேலும் உடல்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டு வருகின்றனர்.
மோசமான காலநிலை காரணமாக ஒரு நாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீட்புப் பணிகள் கடந்த சுகாபூமி மாவட்டத்தில் அமைந்துள்ள சேர்னாரெஸ்மி கிராமத்தில் புதன்கிழமை மீண்டும் ஆரம்பமானது.
கடந்த திங்கட்கிழமை மாலை வேளையில் 30 வீடுகளைத் தாக்கிய மண்சரிவினால் புதையுண்டதாக…