உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள்: டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள ஐவரிடம் தடுப்புக் காவலில் விசாரணை

மன்றில் ஆஜர்படுத்தி அனுமதியும் பெறப்பட்டது

0 959

4/21 உயிர்த்த ஞாயி­றன்று இலங்­கையில் இடம்­பெற்ற தொடர் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை மையப்­ப­டுத்தி இடம்­பெறும் விசா­ர­ணை­களில், டுபா­யி­லி­ருந்து நாடு கடத்­தப்­பட்­டுள்ள மேலும் ஐவரை தடுத்­து­வைத்து விசா­ரிக்க சி.ஐ.டி. அனு­மதி பெற்­றுக்­கொண்­டுள்­ளது.

கடந்த 14 ஆம் திகதி நாடு கடத்­தப்­பட்­டுள்ள மேற்­படி ஐவ­ரையும் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வைத்து சி.ஐ.டியினர் கைது செய்து பாது­காப்பு அமைச்சின் தடுப்­புக்­காவல் உத்­த­ரவைப் பெற்­றுக்­கொண்­டுள்ள நிலையில், நேற்று அவர்­களை கொழும்பு பிர­தான நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்து அவ்­வுத்­த­ர­வுக்­க­மைய தடுப்புக் காவலின் கீழ் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க அனு­மதி பெற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

குறித்த ஐவரும், கடந்த வருடம் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லை­ய­டுத்து, டுபாயில் கைது செய்­யப்­பட்டு அங்கு தடுத்து வைத்து விசா­ரணை செய்­யப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லை­யி­லேயே அவர்கள் நாடு கடத்­தப்­பட்­டுள்­ள­தாக சி.ஐ.டியினர் கூறினர்.

எம்.எம்.எம். ஆதில், எம்.எல். ஷிஹான் அஹமட், பவுஸர் பவாஸ், ஏ.எஸ். மொஹமட் ஹாலிம், எம்.ரீ.மொஹமட் ரியாத் ஆகிய ஐந்து பேரே நேற்று கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டு 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரிக்க அனு­மதி பெறப்­பட்­ட­வர்­க­ளாவர்.

ஏற்­க­னவே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் வெளி­நா­டு­களில் இருந்த பயங்­க­ர­வாத சந்­தேக நபர்கள் 8 பேர் நாட்­டுக்கு அழைத்து வரப்­பட்­டுள்ள நிலையில் சிலர் நாடு கடத்­தப்­பட்ட பின்னர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இவர்­க­ளுக்கு மேல­தி­க­மாக சுமார் 65 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்கள் உயிர்த்த ஞாயிறு விவ­கா­ரத்தில் நேர­டி­யாக தொடர்­பு­பட்­டமை, உதவி ஒத்­தாசை வழங்­கி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் மற்றும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வு­களின் கீழ் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.

ஏற்­க­னவே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லை­ய­டுத்து, கடந்த 2019 ஜூன் 14 ஆம் திகதி 5 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களை சவூதி அரே­பி­யாவின் ஜித்தா நக­ரி­லி­ருந்து சி.ஐ.டி. நாட்­டுக்கு அழைத்து வந்­தது.

30 வய­தான புதிய காத்­தான்­குடி – 2 எனும் முக­வ­ரியைச் சேர்ந்த தேசிய தெளஹீத் ஜமா­அத்தின் ஆயுத பிரிவுத் தலை­வ­ராக கரு­தப்­படும் ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான் அல்­லது மொஹம்மட் மில்ஹான், 34 வய­தான மரு­த­முனை – 3 ஐச் சேர்ந்த மொஹமட் மர்சூக் மொஹமட் ரிழா, வெல்­லம்­பிட்­டியைச் சேர்ந்த 47 வய­தான மொஹமட் முஹிதீன் மொஹமட் சன்வார் சப்றி, 29 வய­தான காத்­தான்­குடி – 1 ஐச் சேர்ந்த மொஹமட் இஸ்­மாயில் மொஹமட் இல்ஹாம், அனு­ரா­த­புரம் கெப்­பித்­தி­கொல்­லா­வையைச் சேர்ந்த 37 வய­தான அபு­சாலி அபூ­பக்கர் ஆகிய ஐந்து பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களே சவூ­தி­யி­லி­ருந்து இவ்­வாறு கைது செய்­யப்­பட்டு நாட்­டுக்கு அழைத்து வரப்­பட்­ட­வர்­க­ளாவர்.

அதன் பின்னர் கடந்த ஜூலை 16 ஆம் திகதி நாடு கடத்­தப்­பட்ட மாவ­னெல்­லையைச் சேர்ந்த சமத் எம். றியாஸ் எனும் சந்­தேக நபர் சி.ஐ.டியால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

ஐ.எஸ். ஐ.எஸ். எனும் பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­பு­களைப் பேணிய இலங்­கை­யர்­களின் வலை­ய­மைப்பின் பிர­தான நப­ராகக் கரு­தப்­படும் ஒரு­வரை, 4/21 உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து கட்டார் பொலிஸார் கைது­செய்து தொடர்ந்தும் தடுத்து வைத்து விசா­ரித்து வரு­கின்­றனர். மொஹமட் அன்வர் மொஹமட் இன்சாப் எனும் குறித்த சந்­தேக நபரே இவ்­வாறு கட்டார் பொலிஸ் நிலையம் ஒன்றால் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், தற்­போது சி.ஐ.டி. பொறுப்பில் விசா­ரிக்­கப்­பட்­டு­வரும் தேசிய தெளஹீத் ஜமாஅத் முக்­கிய உறுப்­பினர் பஸ்ஹுல் சஹ்­ரானும் குறித்த சந்­தேக நபரும் கட்­டாரில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி பேணி­யுள்­ளமை தெரி­ய­வந்­துள்ள நிலையில், கட்­டாரில் தடுப்பில் உள்ள சந்­தேக நபரை இலங்­கைக்கு அழைத்­து­வந்து விசா­ரிக்கும் பணி­களை முன்­னெ­டுக்­கவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே கட்­டாரில் தற்­போதும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மொஹமட் அன்வர் மொஹமட் இன்­சாப்­புடன் தங்­கி­யி­ருந்­த­தாகக் கூறப்­படும் மாவ­னெல்­லையைச் சேர்ந்த சமத் மொஹமட் றியாஸ் என்­பவர் கட்டார் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு இரண்­டரை மாதம் தடுப்புக் காவல் விசா­ர­ணை­களின் பின்னர் இலங்­கைக்கு நாடு கடத்­தப்­பட்ட பின்னர் கடந்த ஜூலை 16 ஆம் திகதி சி.ஐ.டி. விமான நிலை­யத்தில் வைத்து கைது செய்து தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

அத்துடன் நாவலபிட்டி – ஹப்புகஸ்தலாவை பகுதியைச் சேர்ந்த 30 வயதான மொஹமட் சலீம் அப்துல் சலாம், அம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 37 வயதான மொஹமட் சஹான் மொஹமட் றியாஸ் ஆகியோரையும் சி.ஐ.டி.யினர் டுபாயிலிருந்து கைதுசெய்து அழைத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.