மக்கா ‘சிலோன் ஹவுஸ்’ விவகாரம்: கிடைத்த நிதியில் புதிய கட்டிடம் வாங்கப்பட்டது

0 710

மக்கா ஹரம் ஷரீப் அபி­வி­ருத்திப் பணி­க­ளின்­போது பாதை­யொன்று அமைக்­கப்­ப­டு­வ­தற்­கா­கவே சிலோன் ஹவுஸ் கட்­டிடம் அகற்­றப்­பட்­டது. அதற்­கென சவூதி அர­சாங்­கத்­தினால் கிடைக்­கப்­பெற்ற நஷ்­ட­ஈடு மூலம் கொள்­வ­னவு செய்­யப்­பட்ட விடு­திக்­கட்­டி­ட­மொன்று அஸீ­ஸி­யாவில் இயங்கி வரு­கி­றது.

இதில் ஊழல், மோச­டிகள் நில­வி­யுள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­ப­டு­வது முற்­றிலும் தவ­றாகும். இதற்­காக நான் கவ­லைப்­ப­டு­கிறேன் என அரச ஹஜ் குழுவின் முன்னாள் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

சவூ­தியில் இயங்­கி­வந்த சிலோன் ஹவு­ஸுக்கு நஷ்­டா­ஈ­டாக கிடைக்­கப்­பெற்ற சுமார் 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கும் மேற்­பட்ட தொகைக்கு என்ன நடந்­தது. இதன் பின்­ன­ணியில் உள்­ள­வர்கள் யார் என கண்­ட­றி­யு­மாறு ஹஜ் குழு பிர­த­மரை வேண்­டி­யுள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் சிலோன் ஹவுஸ் கட்­டிடம் இலங்கை முஸ்லிம் தன­வந்­தர்­க­ளாலே கொள்­வ­னவு செய்­யப்­பட்டு பல தசாப்த கால­மாக இயங்கி வந்­தது. பின்பு ஹரம் ஷரீப் அபி­வி­ருத்தி பணி­க­ளின்­போது பாதை அபி­வி­ருத்­திக்­காக சவூதி அரசு அக்­கட்­டி­டத்தை சுவீ­க­ரித்­தது. ஆனால் அப்­போது சவூதி அரசு எவ்­வித நஷ்ட ஈடும் வழங்­க­வில்லை.

இத­னை­ய­டுத்து சவூதி அரே­பி­யாவில் குடி­யு­ரிமை பெற்­றுள்ள இலங்­கையைச் சேர்ந்த சாதிக் ஹாஜியார் நஷ்­ட­ஈடு கோரி சவூதி நீதி­மன்றில் வழக்கு தொடர்ந்தார். அவரே சட்­டத்­த­ர­ணி­களை நிய­மித்து நஷ்­ஈ­டுக்­காக வாதா­டினார்.

சவூதி அர­சினால் கிடைக்­கப்­பெற்ற நஷ்­ட­ஈட்­டி­னாலே அஸீ­ஸாவில் விடுதி வளா­க­மொன்று கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளது. அதி­லி­ருந்து கிடைக்கும் வரு­மானம் சவூ­தி­யி­லுள்ள இலங்கை குடும்­பங்­களின் பிள்­ளை­க­ளுக்கு மத்­ரஸா கல்வி மற்றும் உயர்­கல்­விக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. தற்­போது அஸீ­ஸி­யா­வி­லுள்ள சிலோன் ஹவுஸ் சாதீக் ஹாஜி­யா­ரி­னாலே பரி­பா­லிக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த அர­சாங்­கத்தின் காலத்­திலும் சிலோன் ஹவுஸ் தொடர்பில் விமர்­ச­னங்கள் எழுந்­ததால் ஹஜ்­க­மிட்டி சாதிக் ஹாஜி­யா­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது. அவர் பணிப்­பாளர் சபை­யொன்­றினை நிய­மித்து சிலோன் ஹவுஸை பரி­பா­லிக்­கு­மாறு வேண்டிக் கொண்டார்.

அதற்­கி­ணங்க அதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் பொறுப்­பினை சவூ­தி­யி­லுள்ள இலங்­கைத்­தூ­த­ருக்கும் கொன்­சி­யுலர் ஜென­ர­லுக்கும் வழங்­கினோம். ஆனால் இது­வரை தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. சவூதி அரேபியாவின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இதில் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்நிலையில் சிலோன் ஹவுஸ் நஷ்டஈடு தொடர்பில் தவறான கருத்துக்களை வெளியிடுவது எமக்குப் பாதகமாகவே அமையும் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.