பொதுத் தேர்தலில் சாய்ந்தமருது சார்பில் நிர்வாக சேவை அதிகாரி சலீம் போட்டி

ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் அறிவிப்பு

0 632

சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை இலக்கை அடையும் நோக்கில் கல்­முனை தொகுதி வேட்­பா­ள­ராக சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தை சேர்ந்த முன்னாள் சாய்ந்­த­ம­ருது பிர­தேச செய­லா­ளரும், இலங்கை நிர்­வாக சேவை அதி­கா­ரி­யு­மான ஏ.எல்.எம்.சலீம் போட்­டி­யி­டு­வா­ரென சாய்ந்­த­ம­ருது ஜும்ஆ பள்­ளி­வாசல் தலைவர் வை.எம்.ஹனீபா அறி­வித்­துள்ளார்.

சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை இலக்கை அடை­ய­வேண்டும் என்று போரா­டி­வரும் குழு­வி­னரின் ஏற்­பாட்டில் சாய்ந்­த­ம­ருது மண்ணின் மாற்றம் மற்றும் அபி­வி­ருத்­திக்­கான மையத்தின் காரி­யா­லயம் நேற்று முன்­தினம் சாய்ந்­த­ம­ருது கல்­யாண வீதியில் சாய்ந்­த­ம­ருது ஜும்ஆ பள்­ளி­வாசல் தலைவர் வை.எம்.ஹனீபா தலை­மையில் திறந்து வைக்­கப்­பட்­டது. இதன் பின்னர் அங்கு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில், தேசிய நல்­லி­ணக்கம், சக­வாழ்வை அடிப்­ப­டை­யாகக் கொண்டும், நிலை­யான அபி­வி­ருத்தி, புதிய அரசின் கோட்­பாட்­டையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டே இந்தக் காரி­யா­லயம் செயற்­படும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பிர­தேச மக்­களின் ஒரு­மைப்­பாட்டைக் கட்­டி­யெ­ழுப்பி பல்­லின சமூக அமைப்பில், சமூக இருப்­பையும் அபி­வி­ருத்­தி­யையும் குறிக்­கோ­ளாகக் கொண்டு “சமூக மாற்றம் மற்றும் அபி­வி­ருத்­திக்­கான மையம்” என்ற குறிக்­கோளின் கீழ் இந்த அமைப்பும், இக்­கா­ரி­யா­ல­யத்தின் செயற்­பா­டு­களும் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரி­வித்தார்.

சாய்ந்­த­ம­ருது, மாளி­கைக்­காடு ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்வாகத்தினர், கல்முனை மாநகர சபை சுயேச்சைக்குழு உறுப்பினர்கள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.-Vidivelli

  • பைஷல் இஸ்­மாயில்

Leave A Reply

Your email address will not be published.