வஸீம் கொலையாளிகளை உடன் கைது செய்யுங்கள்: நீதி­மன்றம் சி.ஐ.டி.க்கு உத்­த­ரவு

சந்­தேக நபர்­களை அடை­யாளம் காண நாஸாவின் உத­வியை நாடி­யுள்ள விசா­ர­ணை­யா­ளர்கள்

0 790
  • எம்.எப்.எம்.பஸீர்

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனை கொலை செய்த கொலை­யா­ளி­களை உட­ன­டி­யாகக் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கொழும்பு மேல­திக நீதிவான் இசுரு நெத்­தி­கு­மார நேற்று சி.ஐ.டி.க்கு உத்­த­ர­விட்டார். உண்­மை­யான கொலை­யா­ளி­களை இது­வரை சி.ஐ.டி. கைது செய்­ய­வில்லை என்­பதை சுட்­டிக்­க­ாட்­டிய நீதிவான் இசுரு நெத்­தி­கு­மார, தேவை­யற்ற தாம­தங்­களை தவிர்த்து உடன் உண்மைக் கொலை­யா­ளி­களை கைது செய்­யு­மாறு சி.ஐ.டி.க்கு கண்­டிப்பான உத்­த­ரவை விடுத்தார்.  இந்­நி­லையில் வஸீம் தாஜுதீன் படு­கொ­லையில் குற்­ற­வா­ளி­களைக் கைது­செய்ய சி.ஐ.டி. அமெ­ரிக்­காவின் தேசிய வானூர்­தி­யியல் மற்றும் விண்­வெளி நிர்­வாகம் எனப்­படும்  நாஸாவின் (National Aeronautics and Space Administration – NASA) உத­வியை நாடி­யுள்­ளது. தாஜுதீன் கொலை சந்­தேக நபர்­களை அடை­யாளம் காண்­ப­தற்­காக கொலை இடம்­பெற்ற தினம், குறிப்­பிட்ட நேரத்தில் நாஸாவின் செயற்கைக் கோளினால் பிடிக்­கப்­பட்ட படங்கள், வீடி­யோக்­களை தமக்கு பெற்­றுத்­த­ரு­மாறு கோரி­யுள்­ள­தாக  வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­கா­ரத்­துக்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் இந்­திக லொக்­கு­ஹெட்டி நீதி­மன்­றுக்கு நேற்று அறி­வித்தார்.

வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் நேற்று பிற்­பகல் கொழும்பு மேல­திக நீதிவான் இசுரு நெத்­தி­கு­மார முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது இந்த விவ­கா­ரத்தில் சாட்­சி­களை மறைத்­தமை, மாற்­றி­யமை மற்றும் கொலைச் சதியில் தொடர்­புள்­ள­தாக சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் கைது செய்­யப்­பட்டு பிணையில் உள்ள நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி அங்­கொ­டகே சுமித் சம்­பிக்க, மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேன­நா­யக்க மற்றும் கொழும்பு முன்னாள் சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்­த சம­ர­சே­கர ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

சட்­டமா அதிபர் சார்பில் வழ­மை­யாக மன்றில் ஆஜ­ராகும் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் டிலான் ரத்­நா­யக்க வெளி­நாடு சென்­றுள்­ளதால் அவர் ஆஜ­ரா­காத நிலையில்,  சி.ஐ.டி. சார்பில் விசா­ரணை அதி­கா­ரி­க­ளான மனிதப் படு­கொலை குறித்த விசா­ரணை அறையின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் இந்­திக லொக்­கு­ஹெட்டி, அதன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்ஜித் முன­சிங்க மற்றும் சார்ஜன்ட் ரத்­னப்­பி­ரிய ஆகியோர் மேல­திக விசா­ரணை அறிக்­கை­யுடன் மன்றில் ஆஜ­ரா­கினர்.

இதன்­போது மன்றில் மேல­திக விசா­ரணை அறிக்­கையை சமர்ப்­பித்து உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் இந்­திக லொக்­கு­ஹெட்டி விசா­ர­ணை­களை தெளி­வு­ப­டுத்­தினார்.

கனம் நீதிவான் அவர்­களே,  இந்த விவ­கா­ரத்தில் 1,2,3 ஆம் சந்­தேக நபர்கள் தொடர்பில் சட்­டமா அதிபர் எமக்கு சில தெளி­வு­ப­டுத்­தல்­களை நீதி­மன்ற உத்­த­ரவுப் பிர­காரம் கடந்த 23 ஆம் திகதி அனுப்பி வைத்­துள்ளார்.

அதன்­படி முத­லா­வது சந்­தேக நப­ரான நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி சுமித் ரண­சிங்க, 2 ஆவது சந்­தேக நப­ரான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க ஆகியோர் தண்­டனை சட்டக் கோவையின் 198 மற்றும் 215 ஆம் அத்­தி­யாயங்­களின் கீழும், மூன்றாம் சந்­தேக நப­ரான சட்ட வைத்­திய அதி­காரி தண்­டனை சட்டக் கோவையின் 198 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழும் தண்­ட­னைக்­கு­ரிய குற்­றங்­களை புரிந்த­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­க­ளுக்­க­மைய வெளி­ப்ப­டுத்­தப்­பட்­டுள்ள சாட்­சி­களின் அடிப்­ப­டையில், இம்­மூன்று சந்­தேக நபர்­களும் தண்­டனை சட்டக் கோவையின் 198 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக சாட்­சி­களை மறைத்­தமை மற்றும் 215 ஆம் அத்­தி­யா­யத்­துக்­க­மைய  அரச அதி­கா­ரி­க­ளாக இருந்­து­கொண்டு பொய்­யான அறிக்­கை­களை முன்­வைத்­தமை ஆகிய குற்­றங்கள் தொடர்பில் வெளிப்­ப­டுத்­தல்கள்  செய்­யப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

உண்­மையில் இக்­குற்றம் நார­ஹேன்­பிட்டி பொலி­ஸாரால் முதலில்  வாகன விபத்­தாகக் கரு­தியே விசா­ரிக்­கப்­பட்­டது. பல வரு­டங்­களின் பின்­ன­ரேயே இது குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு கைய­ளிக்­கப்­பட்ட நிலையில் கொலை­யென விசா­ரணை ஊடாக ஊர்­ஜி­த­மா­னது.

இது­வரை இந்த விட­யத்தில் நாம் 1200 வரை வாக்­கு­மூ­லங்­களை பதிவு செய்­துள்ளோம்.

22 இலட்சம் தொலை­பேசி அழைப்­புக்­களை பகுப்­பாய்வு செய்­துள்ளோம். டிபெண்டர் வண்­டி­யொன்று  இந்த சம்­ப­வத்தில் தொடர்­பு­பட்­டுள்­ள­தாகக் கண்­ட­றிந்தோம். அதன்­படி சி.ஐ.டி.யால் முன்­னெ­டுக்­கப்பட்ட வேறு ஒரு விசா­ர­ணையில் வழக்குப் பொரு­ளான அந்த வண்­டியை நாம் கையேற்று அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ளர்­களை அழைத்து சோதனை செய்தோம். அதன் முடிவு இன்னும் கிடைக்­க­வில்லை.

அத்­துடன் வஸீமின் கைய­டக்கத் தொலை­பே­சியை நாம் நீதி­மன்ற உத்­த­ரவுப் பிர­காரம், சி.ஐ.டி.யின் டிஜிடல் பகுப்­பாய்வு ஆய்­வு­கூ­டத்தில் சோத­னைக்­குட்­ப­டுத்­தினோம். அதன் அறிக்கை எமக்கு கிடைத்­துள்­ளது. 172 பக்­கங்­களைக் கொண்ட அவ்­வ­றிக்­கையில் உள்ள விட­யங்­களை மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக ஆராய்ந்து வரு­கின்றோம்.

அத்­துடன் இந்த விவ­கா­ரத்தில் நாம் பொறுப்­பேற்­றுள்ள சி.சி.ரி.வி. ஆதா­ரங்­களில் தெளி­வான முடி­வு­களைப் பெறு­வ­தற்­காக அவற்றை ‘ சேர்ட்’ நிறு­வ­னத்­துக்கு பகுப்­பாய்­வு­க­ளுக்­காக அனுப்­பி­யுள்ளோம். வஸீம் தாஜு­தீனை பிறி­தொரு வாக­னத்தில் துரத்தும்  காட்­சிகள் அதில் உள்­ளன. எனினும் அதில் உள்ள சந்­தேக நபரை தெளி­வாக அடை­யாளம் காண நட­வ­டிக்­கை எடுக்­கப்பட்­டுள்­ளது. அவர் அணிந்­தி­ருக்கும் ரீ சேர்ட் மற்றும் அதில் உள்ள பெயர் உள்­ளிட்ட விப­ரங்­களை பெறவே ‘சேர்ட்’ நிறு­வ­னத்­துக்கு பகுப்­பாய்­வுக்கு அதனை அனுப்­பி­யுள்ளோம்  என்றார்.

இதன்­போது இந்த விட­யத்தில் முன்­னெ­டுக்­க­வுள்ள மேல­திக விசா­ர­ணைகள் தொடர்பில் நீதிவான் சி.ஐ.டி.யிடம் கேள்வி எழுப்­பினார்.

இதற்குப் பதி­ல­ளித்த உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் இந்­திக லொக்­கு­ஹெட்டி,

வஸீம் தாஜுதீன் இறு­தி­யாக நின்­றி­ருந்த இட­மான ஹெவலொக் பகு­தியின் லாப் நிறு­வனம் அருகே இருந்து வாக­னத்தில் துரத்­த­ப்ப­டு­வது சி.சி.ரி.வி. காணொ­ளிகள் ஊடாக அவ­த­ானிக்­கப்பட்­டுள்­ளன. இந்­நி­லையில் அவ்­வாறு தொடர்ந்து வாக­னத்தில் துரத்திச் செல்வோர் கண்­டிப்­பாக எவ­ருக்­கேனும் அப்­போது அழைப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்பர். அல்­லது அவர்­க­ளுக்கு அழைப்­புகள் வந்­தி­ருக்கும். இது எமது அனு­மானம். அந்த அனு­மா­னத்தின் பிர­காரம், நாம் தற்­போது நட­வ­டிக்­கை எடுத்­துள்ளோம்.

அதா­வது,  குறித்த திக­தியில், நாளில், நேரத்தில் அப்­ப­கு­தியில் உள்ள தொலை­பேசி கோபுரம் ஊடாக பரி­மா­றிய உள்­வந்த, வெளி வந்த அழைப்­புக்கள் தொடர்பில் அவ­தானம் செலுத்­தி­யுள்ளோம். அனைத்து தொலை­பேசி சேவை வழங்­குநர் நிறு­வனம் ஊடா­கவும் அறிக்கை பெற்று அவற்றை பகுப்­பா­ய்வு செய்து சந்­தே­கத்­துக்­கி­ட­மான அழைப்­புக்­களை மைய­ப்ப­டுத்தி சந்­தேக நபர்­களை விசா­ரிக்­க­வுள்ளோம்.

இத­னை­விட,  நாம் நாஸா நிறு­வ­னத்­திடம் செயற்கைக் கோள் படங்­க­ளையும் கோரி­யுள்ளோம். சம்­ப­வ­தி­ன­மன்று எடுக்­கப்பட்ட செயற்­கைக்கோள் படங்­க­ளையும் வீடி­யோக்­க­ளையும் தரு­மாறும் அத­னூ­டாக அவ்­வி­டத்­தி­லுள்ள வாக­னங்கள் மற்றும் நபர்­களை அடை­யாளம் கண்டு அதி­லி­ருந்து சந்­தேக நபர்­களைக் கைது செய்யும் நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்­துள்ளோம் என்றார்.

இத­னை­ய­டுத்து சந்­தேக நபர்கள் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ரண, கடந்த  ஆறரை வரு­டங்­களில் இது­வரை கொலை குற்­ற­வா­ளியை பொலிஸார் கண்­டு­பி­டிக்­க­வில்லை என்­பதை சி.ஐ.டி. மிகத் தெளி­வாக மன்­றுக்கு அறி­வித்­துள்­ள­தாகக் கூறினார்.

இத­னை­ய­டுத்து அனைத்­தையும் ஆராய்ந்த நீதிவான் பின்­வ­ரு­மாறு அறி­வித்தார். தற்­போ­துள்ள மூன்று சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின் 198, 215 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் குற்­றச்­சாட்­டுக்கள் தெளி­வாக உள்­ளன.  அது தொடர்பில் மேல­திக விசா­ரணை தேவைப்­ப­டு­மானால் குற்­ற­வியல் சட்­டத்தின் 115 ஆம் பிரிவின் கீழ் அனு­மதி வழங்­கலாம்.

குற்­ற­வியல் சட்­டத்தின் 113 அ பிரி­வுடன் இணைத்து கூறப்­படும் 296 ஆம் பிரிவின் கீழ்­வரும் அந்தக் குற்­றச்­சாட்டு இம்­மூன்று சந்­தேக நபர்கள் தொடர்­பிலும் தொடர்ந்து முன்­வைக்­கப்ப­டுமா இல்­லையா என்­பது குறித்து தெளிவு தேவை. கொலை தொடர்பில் இன்னும் சந்­தேக நபர்கள் எவரும் கைது செய்­யப்­ப­டாத நிலையில் இவர்­க­ளுக்கு எதி­ராக அக்­குற்­றச்­சாட்டை தொடர்­வதா? என நீதிவான் கேள்வி எழுப்­பினார்.

இதற்குப் பதி­ல­ளித்த உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் இந்­திக லொக்­கு­ஹெட்டி, அடுத்த தவ­ணையில் அது தொடர்பில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் டிலான் ரத்­நா­யக்க அறி­விப்­பா­ரெனக் கூறினார்.

இதனை கருத்திற்கொண்ட நீதிவான் நெத்­தி­கு­மார,  அடுத்த தவ­ணையில் அது­கு­றித்து அறி­விக்க வேண்­டு­மென குற்­ற­வியல் சட்­டத்தின் 173 ஆவது பிரிவின் கீழ் நிர்­ணயம் செய்தார்.

இந்­நி­லையில் தொடர்ந்து திறந்த மன்றில் உத்­த­ர­வு­களை பிறப்­பித்த நீதிவான் இசுரு நெத்­தி­கு­மார மேலும் கூறி­ய­தா­வது,

இங்கு கொலை தொடர்­பி­லான சாட்­சிகள் இந்த மூன்று சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ராக இல்லை.  கொலை தொடர்பில் குறிப்­பிட்ட சந்­தேக நபர் ஒருவர் இல்லை.  இவர்கள் மூவ­ருக்கும் கொலை குற்­றச்­சாட்டு சுமத்­து­வ­தானால் அது தொடர்பில் சாட்­சி­களை முன்­வை­யுங்கள். இல்­லை­யெனில் தற்­போது வெளிப்­பட்­டி­ருக்கும் சாட்­சி­களின் பிர­காரம் சாட்­சி­களை அழித்­தமை தொடர்பில் தனி­யாக வழக்குப் பதிவு செய்­யுங்கள்.

இந்­நி­லையில் இப்­ப­டு­கொலை விவ­கா­ரத்தின் கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யுங்கள். கைது செய்து இந்த மன்றில் நிறுத்துங்கள்.  தேவையற்ற தாமதங்களை தவிர்த்து அந்தக் குற்றவாளிகளைக் கைது செய்யுங்கள்.

இங்குள்ள மூன்று சந்தேக நபர்களுக்கும் கொலையுடன் நேரடியான  தொடர்பில்லை.  கொலையின் பின்னர் அவர்கள் தொடர்புபட்டுள்ளமை தெரிகின்றது. எனவே கொலையாளிகளை உடன் கைது செய்யுங்கள் என உத்தரவிட்டார்.

அத்துடன் இந்த விவகாரத்தில் பல தேவையான முக்கிய ஆவணங்களை கடற்படை அழித்துவிட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பிலும் விசாரணை செய்து அடுத்த வழக்குத் தவணையில் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிவான் இசுரு நெத்திகுமார சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டு வழக்கை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

கடந்த 2012 மே 17 ஆம் திகதி வஸீம் தாஜுதீனின் சடலம் அவரது காருக்குள்ளிருந்து  நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்துக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.