முஸ்லிம் மக்கள் சிந்திக்க வேண்டும்

கோத்தா ஜனாதிபதியானால் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவர் எனக் கூறினர்; அப்படி எதுவும் நடக்காது என்கிறார் அமைச்சர் நிமல்

0 889

முஸ்லிம் மக்கள் தற்­போது புதி­தாக சிந்­திக்­க­வேண்­டிய சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ளது. உங்­க­ளது சிந்­த­னைகள் உங்கள் தலை­வர்­களால் மழுங்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது. கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யானால் முஸ்­லிம்கள் துன்­பு­றுத்­தப்­ப­டு­வார்கள் என்று அன்று அவர்கள் கூறி­னார்கள்.

என்­றாலும் ஒரு­போதும் அப்­படி நடக்­காது. ஜனா­தி­பதி சிங்­கள மக்­க­ளுக்குப் போன்றே முஸ்­லிம்­க­ளுக்கும் தமி­ழர்­க­ளுக்கும் பாது­காப்பு வழங்­குவார் என நீதி, நீதி மறு­சீ­ர­மைப்பு மற்றும் மனித உரி­மைகள் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார். அமைச்சர் வெலி­ம­டையில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை நிகழ்த்­து­கை­யிலே இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, முஸ்லிம் மக்கள் ஜனா­தி­பதி தேர்­தலில் தன்னை ஆத­ரிக்­கா­விட்­டாலும் இப்­போ­தா­வது ஒத்­து­ழைப்புத் தாருங்கள் என ஜனா­தி­பதி அறை­கூவல் விடுத்­துள்ளார். மீண்டும் இந்­நாட்டில் குண்­டுகள் வெடிக்­காது எனவும் உறு­தி­ய­ளித்­துள்ளார். ஜனா­தி­பதி தேர்தல் முடி­வு­களின் அடிப்­ப­டையில் பொதுத் தேர்­தலில் எம்மால் 120 க்கும் 125 க்கும் இடை­யி­லான தொகு­தி­களை வெற்­றி­கொள்ள முடியும்.

முஸ்லிம் மக்கள் தற்­போது புதி­தாக சிந்­திக்­க­வேண்­டி­யுள்­ளது. முஸ்­லிம்­களில் அதி­க­மானோர் வியா­பா­ரி­க­ளா­வார்கள். வற்­வ­ரியும், ஏனைய வரி­களும் தற்­போது குறைக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­மூலம் வர்த்­த­கர்­களும் மக்­களும் நன்­மை­ய­டை­வார்கள்.

இந்த அர­சாங்­கத்­துடன் தமிழ் மக்­களும் முஸ்­லிம்­களும் ஒன்­றி­ணை­ய­வேண்டும். ஜனா­தி­ப­திக்கு சிங்­கள மக்­களே அதி­க­ளவில் வாக்­க­ளித்­தி­ருந்­தாலும் ஜனா­தி­பதி அனை­வ­ரையும் சம­மா­கவே கரு­து­வ­தாகத் தெரி­வித்­துள்ளார். எமது நாட்டில் இனம், மதங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வும் நல்­லி­ணக்­கமும் தேவை. இவற்றில் நல்­லி­ணக்­க­மின்றேல் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.

பட்­ட­தா­ரி­க­ளுக்கு மாத்­திரம் நிய­ம­னங்கள் வழங்­கு­வது எமது கொள்­கை­யல்ல. வறுமைக் கோட்டில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த உயர்தரம் மற்றும் பல்கலைக்கழக பட்டம் பெற்றுக்கொள்ளாதவர்கள் இலட்சக் கணக்கில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் வேலை வாய்ப்புகளை வழங்குவதே ஜனாதிபதியின் இலக்காகும் என்றார்.-Vidivelli

  • எ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.