புர்கா அணிந்து வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்களுக்கு சில இடங்களில் அசௌகரியம்

தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம்

0 1,253

புர்கா ஆடை அணிந்து வாக்­க­ளிக்க வரும் முஸ்லிம் பெண்­களை ஆள்­அ­டை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தும் அதி­கா­ரி­யிடம் மாத்­திரம் முகத்தை திறந்து காட்­டு­மாறு ஆணைக்­குழு தெரி­வித்­தி­ருந்த போதும்,  சிலர் அந்த அறி­வு­றுத்­தல்­களை கருத்திற் கொள்­ளாது  புர்கா அணிந்து வந்த பெண்­களை பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளாக்­கி­ய­தாக தமக்கு முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக தேர்தல் வன்­மு­றை­களை கண்­கா­ணிப்­ப­தற்­கான நிலையம் தெரி­வித்­துள்­ளது.  தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வினால் கூறப்­பட்­டி­ருந்த அனைத்து அறி­வு­றுத்­தல்­களும் முறை­யாக உரிய அதி­கா­ரி­க­ளுக்கு கிடைக்கப் பெற்­றதா என்­பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்­டி­யுள்­ளது என்றும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் தேர்தல் வன்­மு­றை­களை கண்­கா­ணிப்­ப­தற்­கான நிலையம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

2015 ஆம் ஆண்டு தேர்­த­லையும் விட இம்­முறை தேர்­தலின் போது குறை­வான தேர்தல் முறை­கே­டு­களே பதி­வா­கி­யுள்­ளன. இம்­முறை தேர்­தலை நியா­ய­மா­ன­தா­கவும், சுதந்­தி­ர­மா­ன­து­மாக நடாத்­து­வ­தற்கு தேர்தல் ஆணைக்­கு­ழுவும் பெரும் உத­வி­களை வழங்­கி­யது. தேர்தல் பிர­சார காலங்­க­ளையும் விட தேர்­தலின் போது ஆணைக்­குழு மிகவும் வினைத்­தி­ற­னுடன் செயற்­பட்­டது.

தேர்தல் தினத்­தன்று மாலை 5 மணி­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் மாத்­திரம் 196 தேர்தல் முறை­கே­டுகள் பதி­வா­கி­யி­ருந்­தன. கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலின் போது இதே­போன்ற  222 முறை­கே­டுகள் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தன. இதே­வேளை அனைத்து மாவட்­டங்­க­ளையும் முன்­னி­லைப்­ப­டுத்தி நோக்­கும்­போது இம்­முறை வன்­முறைச் சம்­ப­வங்கள் மிகவும் குறை­வா­கவே பதி­வா­கி­யி­ருந்­தன. இந்­நி­லையில் இரு வன்­முறை சம்­ப­வங்கள் இம்­முறை பதி­வா­கி­யி­ருந்­த­துடன், இருவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

தேர்தல் தினத்­தன்று புத்­த­ளத்­தி­லி­ருந்து மன்­னா­ருக்கு வாக்­க­ளிப்­ப­தற்­காக வாக்­க­ாளர்­களை அழைத்துச் சென்ற பேருந்து மீது சிலரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோகம் தொடர்பில் நாம் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளளோம். அதே­வேளை இவ்­வா­றான நிலை­மை­களின் போது வாக்­கா­ளர்­களின் பாது­காப்பு மற்றும் உரி­மையை உறு­திப்­ப­டுத்தும் வகையில் தேர்தல் ஆணைக்­குழு செயற்­பட வேண்டும் என்றும் நாம் எதிர்­பார்க்­கிறோம்.

வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் இம்­முறை மோச­டிகள் பெரி­தாக இடம்­பெ­றா­விட்­டாலும் , சில கட்­சி­களின் ஆத­ர­வா­ளர்கள் வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு வரு­கை­தந்த வாக்­கா­ளர்­களின் எண்­ணத்தில் மாற்றம் ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­பட்­டி­ருந்­த­மையும் அவ­தா­னிக்க கூடி­ய­தாக இருந்­தது. அதே­வேளை இதன்­போது சட்­டத்­திற்கு புறம்­பான பிர­சார செய்­பா­டு­களும் இடம்­பெற்­றி­ருந்­தன.

முக்­கிய தொலைக்­காட்சி அலை­வ­ரி­சைகள் மற்றும் சமூ­க­வ­லைத்­த­ளங்­க­ளிலும் பொய்­யான மற்றும் இன­வா­தத்தை தூண்டும் வகை­யி­லான பல செய்­திகள் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன. இது தொடர்பில் நாம் தேர்தல் ஆணைக்­கு­ழு­வுக்கு தெரி­வித்­தி­ருந்த போதும் அவர்­களால் இதற்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுப்­பதில் சிக்கல்கள் காணப்பட்டதுடன் சில முறைகேடுகள் தொடர்பில் ஆணைக்குழுவுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றும் நடவடிக்கை எடுக்காமை குறித்தும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்.

அதேவேளை பலாலி வீதி தடுப்பு சர்சைகுறித்து உடன் அவதானம் செலுத்தி பொலிஸார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.