தங்க புத்தர் சிலை விவகாரம் : இரண்டு பேரை கைது­செய்ய உத்­த­ரவு கோத்­தா­வி­டமும் விசா­ரிக்கும் சாத்­தியம்

0 844

பாது­காப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவின் ஆலோ­சனை மற்றும் கோரிக்­கைக்கு அமைய, அனு­ரா­த­புரம் ‘சந்த ஹிரு சேய’ நினைவுத் தூபியில் வைப்­ப­தற்­காக தங்­கத்­தி­னா­லான சமா­தி­நிலை புத்தர் சிலையை அமைக்க, யாழ். மாதகல் கடலில் கைப்­பற்­றப்­பட்ட ஒரு தொகை தங்­கத்தில் 8 கிலோவை கடற்­ப­டைக்கு வழங்­கி­ய­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் முன்னாள் சுங்கப் பணிப்­பாளர் நாயகம் உள்­ளிட்ட இரு­வரைக் கைது­செய்ய சட்­டமா அதிபர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். 

இந்­நி­லையில் முன்னாள் சுங்கப் பணிப்­பாளர் நாயகம் ஜகத் பீ. விஜே­வீர மற்றும் முன்னாள் சுங்க மேல­திக பணிப்­பாளர் தாரக சென­வி­ரத்ன ஆகி­யோரை உட­ன­டி­யாகக் கைது­செய்து மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்க எப்.சி.ஐ.டி. எனும் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

இது தொடர்பில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ரணை அறை இலக்கம் 8 பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சஞ்­ஜீவ பெர்­னாண்டோ தலை­மை­யி­லான குழு­வினர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் நிலையில், விசா­ர­ணையின் தற்­போ­தைய நிலை கோட்டை நீதிவான் நீதி­மன்­றுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்டு, சட்­டமா அதி­பரின் ஆலோ­சனை தொடர்­பிலும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யி­லேயே இந்தக் கைது உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
இலங்கை சுங்கம் மற்றும் கடற்­படை தொடர்­பு­பட்ட இந்த தங்க மோசடி தொடர்பில் முதன் முதலில் மோசடி தடுப்புக் குழு­வுக்கு அனா­ம­தேய முறைப்­பாடு கிடைத்­துள்­ளது. இந்த முறைப்­பா­டா­னது அக்­கு­ழுவின் தலைவர் ஆனந்த விஜே­பால ஊடாக கடந்த 2016 மே 13 ஆம் திகதி பொலிஸ்மா அதி­ப­ருக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. அத­னை­ய­டுத்து அது­கு­றித்த விசா­ர­ணைகள் எப்.சி.ஐ.டி. எனப்­படும் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் தற்­போது இது­கு­றித்த விசா­ர­ணைகள் சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி. மற்றும் எப்.சி.ஐ.டி. ஆகி­ய­வற்றின் பிர­தானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, சி.ஐ.டி. மற்றும் எப்.சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரி­யந்த ஆகி­யோரின் ஆலோ­சனை மற்றும் மேற்­பார்­வையில், உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் அனுர பிரே­ம­ரத்­னவின் கீழ் பொலிஸ் பரி­சோ­தகர் சஞ்­ஜீவ பெர்­னாண்டோ தலை­மை­யி­லான குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.
2014 ஆம் ஆண்டு ஒக்­டோபர் முதலாம் திகதி வடமேல் கடற்­படை புல­னாய்வுப் பிரி­வுக்கு கிடைத்த தக­வ­லின்­படி 45.03 கிலோ தங்கம் யாழ். மாதகல் கடலில் வைத்து பட­கொன்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்­டது. இதன்­போது இரு சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். பின்னர் சந்­தேக நபர்­களும் தங்­கமும் யாழ். சுங்கப் பிரி­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட நிலையில் மேல­திக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது கடத்த முயன்ற தங்கம் அர­சு­டை­மை­யாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யி­லேயே அப்­போ­தைய கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் எஸ்.என்.ஜே.பெரேரா சுங்கப் பணிப்­பாளர் நாய­கத்­திற்கு கோரிக்கை கடி­த­மொன்றை அனுப்­பி­யுள்ள நிலையில் தங்க புத்தர் சிலை ஒன்­றினை நிர்­மா­ணிப்­ப­தற்­காக கைப்­பற்­றப்­பட்ட தங்­கத்தில் 8 கிலோவை மீளக் கோரி­யுள்ளார். பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் ஆலோ­ச­னைக்­க­மை­வாக அதனைக் கோரு­வ­தா­கவும் அக்­க­டி­தத்தில் அவர் சுட்டிக் காட்­டி­யுள்ளார். அத்­துடன் ஜனா­தி­பதி தலை­மையில் இடம்­பெற்ற பாது­காப்புக் கூட்­டத்தில் இந்த விவ­காரம் தொடர்பில் முடி­வெடுக்கப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டியே இந்த தங்கத் தொகை கோரப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அப்­போ­தைய சுங்கப் பணிப்­பாளர் நாயகம் ஜகத் பீ. விஜே­வீ­ரவை தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்­டுள்ள பாது­காப்பு மற்றும் நகர திட்­ட­மிடல் அமைச்சின் முன்னாள் செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ, குறித்த தங்­கத்தை கடற்­ப­டைக்கு கைய­ளிக்­கு­மாறு ஆலோ­ச­னையும் வழங்­கி­யுள்­ள­தாக இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
இந்­நி­லை­யி­லேயே அப்­போ­தைய சுங்கப் பணிப்­பாளர் நாயகம் ஜகத் பீ. விஜே­வீர அப்­போ­தைய கடற்­படை தள­ப­தியின் கோரிக்கை கடி­தத்தை மேல­திக சுங்கப் பணிப்­பாளர் தாரக சென­வி­ரத்­ன­வுக்கு இந்த விட­யத்தைக் கையாள அனுப்பி வைத்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவை தொடர்பில் நீதி­மன்­றுக்கு நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விரி­வான அறிக்­கை­களை சமர்ப்­பித்­துள்­ளது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே சட்­டமா அதி­ப­ரிடம் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு இந்த விவ­கா­ரத்தில் சட்ட நட­வ­டிக்கை தொடர்பில் ஆலோ­ச­னையும் கோரி­யது.

அந்த ஆலோ­சனை கிடைக்­கப்­பெற்ற நிலையில், அதில் முன்னாள் சுங்கப் பணிப்­பாளர் நாயகம் ஜகத் பீ. விஜே­வீர மற்றும் முன்னாள் சுங்க மேல­திக பணிப்­பாளர் தாரக சென­வி­ரத்ன ஆகி­யோரை நம்­பிக்கை மோசடி மற்றும் பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோகம் ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களில் கைது செய்ய ஆலோ­சனை கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. அது தொடர்பில் கோட்டை நீதி­வா­னுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே முன்னாள் சுஙப் பணிப்­பாளர் நாயகம் ஜகத் பீ. விஜே­வீர மற்றும் முன்னாள் சுங்க மேல­திக பணிப்­பாளர் தாரக சென­வி­ரத்ன ஆகி­யோரை உட­ன­டி­யாகக் கைது செய்து மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்க உத்­த­ர­விட்­டுள்ளார். சுங்­கப்­பி­ரிவின் பொறுப்பில் எடுக்­கப்­படும் எந்தப் பொருளும் 30 நாளுக்­குமுன் எந்­த­வொரு கார­ணத்­திற்­கா­கவும் விடு­விக்­கப்­பட முடி­யா­தென சுங்க கட்­டளைச் சட்டம் குறிப்­பிடும் நிலை­யி­லேயே கைப்­பற்­றப்­பட்டு 24 மணி­நே­ரத்­திற்குள் இந்த தங்கம் மீள­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாகக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. 2014 ஒக்­டோபர் மாதம் கைப்­பற்­றப்­பட்ட தங்­கத்­தி­லி­ருந்து கடற்­படை பெற்­றுக்­கொன்ட 8 கிலோ தங்­கத்தில் சமா­தி­நிலை புத்தர் சிலை அமைக்­கப்­பட்டு, அது 2014 நவம்பர் 23 ஆம் திகதி அனு­ரா­த­புரம் ‘சந்த ஹிரு சேய’ நினைவுத் தூபியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட தங்கத்தை கடற்படைக்கு கொடுக்க ஆலோசனை, உத்தரவு வழங்கியதாகக் கூறப்படும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவிடம் இந்த விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்க எப்.சி.ஐ.டி. நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், அதற்கு முன்னதாக குறித்த இரு சுங்க அதிகாரிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.