மத பயங்கரவாதத்திற்கு பெளத்தம் மூலமே தீர்வு காணலாம்

ஞானசார தேரருடனான நேர்காணல்

0 1,385

அது ஒரு­வார நாளின் மாலை வேளை. கொழும்பு நகர்ப்­பு­றத்தின் ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள சத்­தர்­ம­ரா­ஜிக விகாரை அது. விகாரை என்­பதன் விளக்கம் குரு­மார்கள் வசிக்கும் விடுதி என்­ப­தாகும். என்­றாலும் இந்தக் கட்­டடம் பொது­பல சேனாவின் காரி­யா­ல­ய­மாக உப­யோகப்படுத்­தப்­பட்­டது. அவ் அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரும் இங்­கேயே தங்­கி­யி­ருந்தார்.

அந்த வளா­கத்தின் முற்­றத்தில் இளை­ஞர்கள் குழு­வொன்று கதிரைகளையும், மேசை­க­ளையும் ஒழுங்­கு­ப­டுத்திக் கொண்­டி­ருந்­து. அவர்கள் சமை­ய­லுக்­கான செயல்­வி­ளக்­கத்தை நடாத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களில் இருந்­தார்கள்.

‘இவர்கள் கிரா­மப்­புற சிங்­கள இளை­ஞர்கள். அவர்­க­ளுக்கு உதவி செய்­வ­தற்கு எவ­ரு­மில்லை. நாங்கள் இவர்­க­ளுக்கு உதவி செய்­கிறோம். அவர்­க­ளது வர்த்­த­கங்­களை ஆரம்­பிப்­ப­தற்கும், விளம்­ப­ரப்­ப­டுத்­து­வ­தற்கும் எங்­களால் இயன்ற உத­வி­களைச் செய்­கிறோம்’ என பொது­பல சேனாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே தெரி­வித்தார்.

‘சிங்­கள வர்த்­த­கர்­க­ளுக்கு உதவி செய்­வ­தற்­கா­கவே நான் ஞான­சார தேர­ருடன் ஒன்­றி­ணைந்தேன். ஆனால் அதன் பின்னர் பொது­பல சேனா ஹலால் விவ­காரம் உட்­பட பல்­வே­று­பட்ட விட­யங்­களில் கவ­னத்தைச் செலுத்­தி­யது.
சிங்­கள வர்த்­த­கர்கள் உற்­பத்திப் பொருட்­க­ளுக்கு ஹலால் சான்­றிதழ் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக கட்­டணம் செலுத்த வேண்­டி­யுள்­ள­தாக எம்­மிடம் முறை­யிட்­டார்கள். அவர்கள் ஹலால் சான்­றிதழ் பெற்றுக் கொள்ளா விட்டால் அவர்­க­ளது உற்­பத்திப் பொருட்கள் உணவுச் சந்­தையில் நிரா­க­ரிக்­கப்­படும். நாங்கள் சம்­பி­ர­தாய முஸ்­லிம்­க­ளிடம் இது பற்றி வின­வினோம்.

‘இந்த ஹலால் சான்­றிதழ் தேவை­யற்­றது. எது ஹலா­லா­னது, எது ஹலா­லற்­றது என்­பதை பகுத்­த­றிய எம்மால் முடியும். தேவை­யற்ற சிக்­கல்­களை நாம் எதிர்­கொள்ள விரும்­ப­வில்லை’ என்­றார்கள்.

‘தயவு செய்து புரிந்து கொள்­ளுங்கள்’ என்று கூறி அவர் தொடர்ந்தார். ‘பிரச்­சி­னை­களை உரு­வாக்­கு­வ­தற்கு நாம் பொது­பல சேனா அமைப்பை உரு­வாக்­க­வில்லை. சிங்­கள மக்­களின் உரி­மை­களைப் பாது­காக்­கவே ஆரம்­பித்தோம். சிங்­க­ள­வர்கள் உல­க­ளா­விய ரீதியில் சிறு­பான்­மை­யினர். நாங்கள் இப்­போது வஹாப்­வாத அடிப்­ப­டை­வா­தத்தை ஒழித்துக் கட்­டு­வ­தற்­கா­கவே போரா­டு­கிறோம்’ என்றார்.

Q நீங்கள் பௌத்த குரு­வாக எவ்­வாறு உரு­வா­னீர்கள்?

நான் 1975 ஆம் ஆண்டு காலியைச் சேர்ந்த கல­கொ­டாத்த என்ற குக் கிரா­மத்தில் பிறந்தேன். 6 ஆம் தரம் வரை கிரா­மத்துப் பாட­சா­லை­யிலே பயின்றேன். அதன் பிறகு மத­கு­ரு­வாக மாற­வேண்டும் என்று தீர்­மா­னித்து பயிற்­சிகள் பெற்றேன். பயிற்­சி­களின் பின்பு இளம் மத­கு­ரு­வாக 1989 ஆம் ஆண்டு எமது ஊரி­லுள்ள வன­வாச சங்க ஆல­யத்தில் இணைந்து மேலும் பயிற்­சிகள் பெற்றேன்.

மேலும் பாளி மற்றும் சன்ஸ்­கிறித மொழி­களைப் பயின்றேன்.
1996 ஆம் ஆண்டு கொழும்­புக்கு வந்து களனி பல்­க­லைக்­க­ழ­கத்தில் எனது கல்­வியைத் தொடர்ந்தேன்.

1999 ஆம் ஆண்டில் பௌத்த மத­கு­ரு­மார்­க­ளுக்­கான கல்வி நிலை­யத்தில் சேர்ந்து பௌத்த மத­கு­ரு­மார்­க­ளுக்கு கல்வி போதித்தேன்.

Q ஏன் நீங்கள் கற்­பித்­தலை நிறுத்திக் கொண்­டீர்கள்?

நான் என்னை எனது நாட்­டுக்­காக அர்ப்­பணம் செய்ய வேண்டும் எனத் தீர்­மா­னித்தேன். இந்­தக்­கா­லத்தில் தமிழ் விடு­த­லைப்­புலி பயங்­க­ர­வாதிகளுக்கு எதி­ரான இயக்­கங்­க­ளுடன் இணைந்­தி­ருந்தேன். இந்தக் கால கட்­டத்­தில்தான் அன்­றைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தமிழ் இனப்­பி­ரச்­சி­னைக்கு சமஷ்டி தீர்­வொன்­றினை வழங்­கு­வ­தற்குத் திட்­ட­மிட்­டி­ருந்தார். ஆனால் அவரால் இந்தத் திட்­டத்­தினை முன்­னெ­டுக்க முடி­யாமற் போனது. பௌத்த குரு­மார்­களின் எதிர்ப்பே இதற்குக் கார­ண­மாகும்.

2000 ஆம் ஆண்டு சிஹல உறு­மய என்றோர் அர­சியல் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்­டது. நான் அக்­கட்­சியின் மத­குரு பிர­தி­நி­தி­யாக இணைந்தேன். கோட்டே பகு­திக்கே பிர­தி­நி­தி­யாகச் சேர்ந்தேன்.

சிஹல உறு­மய கட்­சிக்குள் பிரச்­சி­னைகள் உரு­வா­னதால் கட்­சியின் மத­கு­ருமார் சிலர் ஒன்­றி­ணைந்து ஜாதிக சங்க சம்­மே­ளனம் (JSS) என்றோர் அமைப்பை உரு­வாக்­கி­னார்கள். இது­வொரு பலம் வாய்ந்த தேசிய இயக்­க­மாக மாற்றம் கண்­டது. இதன் உதவிச் செய­லா­ள­ராக நான் பதவி வகித்தேன்.

2004 இல் ஜாதிக சங்க சம்­மே­ள­னத்தின் பிர­தான உறுப்­பி­னர்கள் ஜாதிக ஹெல உறு­மய (JHU) என்றோர் அர­சியல் கட்­சியை உரு­வாக்­கி­னார்கள். அதன் பின்பு நான் சில குரு­மார்­களை இணைத்­துக்­கொண்டு பொது­ப­ல­சேனா அமைப்­பினை உரு­வாக்­கினேன். இப்­போது ஜாதிக சங்க சம்மேளனம் ஜாதிக ஹெல உறு­ம­யவின் உறுப்­பினர் ரதன தேர­ரினால் கையா­ளப்­ப­டு­கி­றது. இத­னுடன் நான் தொடர்­பு­ப­ட­வில்லை.

Qஜாதிக ஹெல உறு­மய கட்­சிக்கும் பொது­பல சேனா அமைப்­புக்­கு­மி­டையில் அடிப்­படை வேறு­பா­டுகள் உள்­ள­னவா?

ஜாதிக ஹெல உறு­மய (JHU) தற்­போது ஓர் அர­சியல் கட்­சி­யாக செயற்­ப­டு­கி­றது. ஆனால் பொது­பல சேனா ஒரு அர­சியற் கட்­சி­யல்ல. பொது­பல சேனாவை ஒரு தேசிய இயக்கம் எனக் கூறலாம்.

Q நீங்கள் சிறு­வ­ராக இருந்த காலத்தில் பௌத்­த­ரல்­லாத நண்­பர்கள் அல்­லது பௌத்­த­ரல்­லாத ஆசி­ரி­யர்கள் உங்­க­ளுக்கு இருந்­தார்­களா?

இல்லை. அதற்­கான வாய்ப்பு இருக்­க­வில்லை. நான் முழு­மை­யான ஒரு பெளத்த கிரா­மத்­திலே பிறந்து வளர்ந்தேன். கிரா­மத்தில் பள்­ளி­வா­சல்கள் இருக்­க­வில்லை. சூழ முஸ்­லிம்கள் எவரும் இருக்­க­வில்லை. அங்கே ஒரு கத்­தோ­லிக்க ஆலயம் அமைந்­தி­ருந்­தது. அதனால் அக்­கா­லத்தில் எனக்கு பெளத்­த­ரல்­லாத நண்­பர்கள் இருக்­க­வில்லை.

Qபுத்­தரின் போத­னை­களில் எது உங்­க­ளுக்கு மிகவும் முக்­கி­ய­மா­னது?

புத்­தரின் போத­னைகள் அனைத்தும் மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்தும் வாழ்க்­கைக்­கான போத­னை­க­ளாகும்.

ஏப்ரல் 21 ஆம் திகதி தங்கள் வணக்க ஸ்தலங்­களில் ஒரு சாரார் தங்­க­ளது கட­வுளை வணங்கிக் கொண்­டி­ருந்­தார்கள். வேறு ஒரு பிரி­வினர் அவர்­களைக் கொலை செய்­தார்கள். இறை­வனின் பெய­ராலே இந்தக் கொலைகள் நடந்­தே­றின. அவர்கள் இறை­வனைச் சாந்­தப்­ப­டுத்­து­வதற்காகவே கொலை செய்­தார்கள். ஒன்­பது தற்­கொலைக் குண்­டு­தா­ரிகள் இந்தக் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான செயற்­பாட்டை முன்­னெ­டுத்­தனர். இந்தக் கொலைகள் இறை­வனால் அனு­ம­திக்­கப்­பட்­டது என நம்­பிக்கை கொண்டே இந்தப் பயங்­க­ர­வாதச் செயலை முன்­னெ­டுத்­தனர்.

மத பயங்­க­ர­வாதத்­துக்கு இன்று தீர்வு காணு­வ­தென்றால் பௌத்­தமே ஒரே தீர்­வாகும். பிரச்­சி­னை­க­ளுக்குப் பேச்­சு­வார்த்­தைகள் மூலமே தீர்வு காணு­வ­தற்கு நாம் விரும்­பு­கிறோம். பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களின் மூல­மல்ல. நாங்கள் பயங்­க­ர­வா­தி­க­ளல்லர்.

Qபௌத்தம், இலங்­கையில் இஸ்லாம் போன்ற மதங்­க­ளினால் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளது என்று கூறி­னீர்கள்?

பௌத்­தர்கள் புத்­தரின் போத­னை­களைப் பின்­பற்­றாத சந்­தர்ப்­பங்­களில் மாத்­தி­ரமே பௌத்தம் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­வ­தாக ஒரு கருத்து நில­வு­கி­றது. இரக்கம், பரிவு, சுய­கட்­டுப்­பாடு போன்ற புத்­தரின் போத­னைகள் மீறப்­படும் போதே பௌத்தம் அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளா­கி­றது?
பௌத்த கோட்­பா­டு­களும் மற்றும் பௌத்த கலா­சா­ரமும் இரு வேறு­பட்­ட­வை­க­ளாகும்.

Q பௌத்த கோட்­பா­டுகள், பௌத்த கலா­சாரம் இவை இரண்­டிலும் எது மிகவும் முக்­கி­ய­மா­னது?

இரண்­டுமே முக்­கி­ய­மா­னது. பௌத்த கோட்­பா­டு­களை எவ­ராலும் அழிக்க முடி­யாது. என்­பது உல­க­ளா­விய உண்­மை­யாகும் என்­றாலும் பௌத்த கோட்­பா­டுகள் செழித்­தோங்­கு­வ­தற்கும், வளர்ச்சி பெறு­வ­தற்கும் பௌத்த கலா­சாரம் அவ­சி­ய­மாகும்.

40 தலை­மு­றைகள் அல்­லது அதற்கும் முன்பு பௌத்­தர்கள் ஆப்­கா­னிஸ்தான், பாகிஸ்தான் என்று அழைக்­கப்­படும் நாடு­களில் வாழ்ந்­தார்கள். ஆப்­கா­னிஸ்­தானில் பௌத்த சந்­த­தி­களின் மூதா­தை­யர்கள் இஸ்­லா­மி­யர்களானதும் முன்­னோர்­களால் அமைக்­கப்­பட்ட புத்தர் சிலைகள் அழிக்­கப்­பட்­டன. இந்­நா­டு­களில் பௌத்த குரு­மார்கள் பௌத்த கோட்­பா­டு­க­ளையும், பௌத்த கலா­சா­ரத்­தையும் நிலை­நி­றுத்­தி­யி­ருந்­தனர். ஆனால் இந்­நா­டு­களில் இஸ்­லா­மிய ஆட்­சி­யேற்­பட்­டதும் பௌத்த கலா­சாரம் அழி­வுக்­குள்­ளா­னது. பௌத்த கோட்­பா­டு­களும் அழி­வுற்­றன.

இந்­தி­யாவை நோக்­கினால் இந்­தியா புத்­தரின் இட­மாகும். அங்கும் பௌத்தம் அழி­வுக்­குள்­ளா­னது. பௌத்­தத்தைப் பாது­காக்க வேண்­டு­மென்றால் பௌத்த கலா­சாரம் பாது­காக்­கப்­பட வேண்டும். இலங்­கையில் பௌத்தம் பாது­காக்­கப்­பட்­டுள்­ளது. பெளத்த கோட்­பா­டு­களும், கலா­சா­ரமும் பாது­காக்­கப்­பட்டு வரு­கி­றது.

எனவே இலங்கை பௌத்த நாடு என்ற வகையில் எம்மால் பல செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முடி­கி­றது. புத்தர் சிலை­களை நிறு­வு­கிறோம். பௌத்த ஆல­யங்­களை அமைக்­கிறோம். பௌத்த நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்­கிறோம். இதன் மூலம் பௌத்த கலா­சா­ரத்தை வாழ­வைக்க முடி­கி­றது.

Qநீங்கள் இஸ்­லா­ம் பற்றிய பயத்தை (இஸ்­லா­மோ­பியா) உரு­வாக்­கு­வ­தாக சிலர் குற்றம் சுமத்­து­கி­றார்கள். உண்­மையில் அவ்­வா­றான அச்­சு­றுத்தல் இருக்­கின்­றதா?

தயவு செய்து நீங்கள் கவ­னத்திற் கொள்ள வேண்டும். நான் இலங்கை சம்­பி­ர­தாய முஸ்­லிம்­களைப் பற்றிப் பேச­வில்லை. அவர்கள் இலங்­கைக்கு வர்த்­தக நோக்­கத்­துடன் வருகை தந்­த­தி­லி­ருந்து சமா­தா­னத்­து­டனே வாழ்­கி­றார்கள். அவர்கள் சிங்­களப் பெண்­களைத் திரு­மணம் செய்து கொண்­டார்கள். அப்­பெண்கள் இஸ்­லாத்தை தழு­விக்­கொண்­டார்கள். இந்­நாட்டின் பௌத்த சம்­பி­ர­தா­யங்கள், பாரம்­ப­ரி­யங்கள் என்­ப­வற்றை மதித்து கௌர­வித்து அவர்கள் தங்­க­ளது சம­யத்தைக் கடைப்­பி­டிக்­கி­றார்கள். சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் வஹாபி, ஸலபி, தப்லீக், தேவ்­பந்து, இஃவான் மற்றும் தவ்ஹீத் அமைப்­பு­களின் கொடூ­ர­மான நிகழ்ச்சி நிரல்­களை கையாள்­வ­தில்லை.

கடந்த 40 வரு­டங்­க­ளாக இந்த அமைப்­புகள் பல­மாக வளர்ச்சியடைந்­துள்­ளன. இந்த அமைப்­பு­க­ளுக்கு சவூதி அரே­பியா நிதி உதவி வழங்­கு­கி­றது. இந்த அமைப்­புகள் இலங்­கையில் இஸ்­லா­மிய கோட்­பா­டு­களை மாற்­றி­ய­மைத்­துள்­ளன.

இவர்­களால் சூபி முஸ்­லிம்கள் கொல்­லப்­ப­டு­கி­றார்கள். கிழக்கில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் காத்­தான்­கு­டியில் சூபிக்கள் அவ­ம­திக்­கப்­ப­டு­கி­றார்கள். கொலை செய்­யப்­ப­டு­கி­றார்கள்.

Q பொது­பல சேனாவின் வெறுப்­பு­ணர்வு பேச்­சு­களால் சின­மூட்­டப்­பட்ட முஸ்­லிம்கள் சஹ்ரான் ஹாசிம் போன்ற அடிப்­ப­டை­வாத குழுக்­க­ளுடன் இணைந்­தனர் எனவும் ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு இது சாத­க­மாக அமைந்­தது என்றும் குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது. அத்­தோடு 2014 ஆம் ஆண்டு அளுத்­க­மயில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுக்கு நீங்­களே காரணம் என குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது. இந்தச் சம்­ப­வங்கள் கார­ண­மாக சஹ்ரான் தானா­கவே இந்த பயங்­க­ர­வாத செயலில் ஈடு­பட்டார் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றதே?

ஞான­சார தேரர் சிரித்­துக்­கொண்டே பதி­ல­ளிக்­கிறார். இப்­போது இவ்­வாறு கூறப்­ப­டு­கி­றதா? அப்­ப­டி­யென்றால் ஐ.எஸ்.பயங்­க­ர­வா­தத்­துக்கு இப்­போது நாங்­களா காரணம்?

Q அளுத்­க­மவில் வன்­செ­யல்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு முன்பு நீங்கள் ஆற்­றிய உரையில் நீங்கள் பயன்­ப­டுத்­திய வச­னங்கள் தொடர்பில் நீங்கள் வருத்­தப்­ப­டு­கி­றீர்­களா?

போய் வன்­செ­யல்­களை ஆரம்­பி­யுங்கள் என்று நான் கூற­வில்லை. எனது உரையின் பின்பு நாங்கள் அமை­தி­யாக கலைந்து சென்றோம். அப்­போது அளுத்­க­மையில் சில முஸ்லிம் இளை­ஞர்­களால் குரு­மார்கள் மீதும் பௌத்­தர்கள் மீதும் கல் எறி­யப்­பட்­டது. இதனால் சிங்­கள மக்கள் சின­ம­டைந்­தார்கள்.
எங்­க­ளது குரு­மார்­களில் ஒரு­வரின் வாகனம் சில முஸ்­லிம்­களால் அளுத்­க­மயில் தாக்­கப்­பட்­டது. எனது உரை இந்தச் சம்­ப­வத்தின் பின்பே இடம்­பெற்­றது.

Q2014 சம்­ப­வத்­துக்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களே காரணம் என பொது­ப­ல­சேனா குறிப்­பிட்டுக் கூறி­யது, இவ்­வ­ருட ஆரம்­பத்தில் நாட்டின் சில பகு­தி­களில் ஆயு­தங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­மையை பெரும்­பா­லான எழுத்­தா­ளர்­களும், ஏனை­ய­வர்­களும் அறி­வார்கள். இது தொடர்பில் எழு­தினால் பொது­ப­ல­சேனா அமைப்பு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் என்­பதால் அவர்கள் தயக்கம் காட்­டி­னார்கள். எழு­த­வில்லை?

ஊட­கங்கள் நாங்கள் தீவி­ர­வா­திகள் என முத்­திரை குத்தி எங்­களை எப்­போதும் துரத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. நாங்கள் 2014 இல் குரல் எழுப்­பினோம். ஏனென்றால் எங்­க­ளுக்கு எதி­ராக என்ன நடக்­கி­றது என நாம் தெரிந்து வைத்­தி­ருந்தோம். முஸ்லிம் தீவி­ர­வா­தி­களால் எங்கள் குருமார் நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டார்கள். இலங்கை முஸ்லிம் தீவி­ர­வா­தி­களில் சிலர் சிரி­யாவில் ஐ.எஸ் அமைப்­புடன் இணைந்து கொண்­டுள்­ள­தாக 2014 இல் எமக்கு தக­வல்கள் கிடைத்­தன. நாம் இதனைக் கூறி­ய­போது மறுக்­கப்­பட்­டது. அன்று நாம் கூறி­ய­வைகள் அனைத்தும் இன்று நடந்­தே­றி­யுள்­ளன. நூற்­றுக்­க­ணக்­கானோர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். நாங்கள் இன­வா­திகள் என்று குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது.

சில முஸ்லிம் செயற்­பாட்­டா­ளர்கள் உலக முஸ்லிம் தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­பட்­டுள்­ளார்கள் எனும் தக­வல்கள் எம்­மி­ட­முள்­ளன. அவ்­வா­றான தீவி­ர­வா­தி­க­ளுடன் எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்கள் எம்­மி­ட­முள்­ளன.

முஸ்லிம் இளை­ஞர்கள் போலி கட­வுச்­சீட்­டுகள் மூலம் வெளி­நா­டு­க­ளுக்குச் சென்று நாடு திரும்­பி­யுள்­ளார்கள். அதற்­கான தக­வல்கள் எம்­மி­ட­முள்­ளன. கிறிஸ்­தவ பெயர்­க­ளிலே அவர்கள் நாடு திரும்­பி­யுள்­ளார்கள். அத்­தோடு இலங்­கை­யி­லி­ருந்து அவர்கள் சவூதி அரே­பி­யா­வுக்கு முஸ்லிம் பெயர்­க­ளிலே சென்­றி­ருக்­கி­றார்கள்.

தீவி­ர­வாத அமைப்­பான தேசிய தௌஹீத் ஜமாஅத் 2014 இல் நடாத்­திய மாநாடு குறிப்­பாக ஏப்ரல் குண்டுத் தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தாரி சஹ்ரான் தொடர்­பான குறிப்­பொன்று என்­னி­ட­முள்­ளது. அந்தக் குறிப்­பினை நானே தயா­ரித்தேன். ஏன் இந்த தீவி­ர­வாதி அப்­போது கைது செய்­யப்­ப­ட­வில்லை. சஹ்ரான் வெளிப்­ப­டை­யாக வஹா­பி­ஸத்தைப் பரப்­பினார். மற்றும் ஐ.எஸ். கொள்­கை­களைப் பரப்­பினார். சூபி­களின் அடக்­கஸ்­த­லங்­களை அழித்தார். முஸ்லிம் அல்­லா­த­வர்­களைக் கொல்­வ­தற்கு ஆயு­த­மேந்­து­மாறு முஸ்­லிம்­களை வேண்­டினார்.

Q நீங்கள் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­தீர்­களா?

நாங்கள் 2014 இல் அர­சாங்­கத்தின் உயர் மட்­டத்­தி­ன­ருக்கு அறி­வித்தோம். முறைப்­பா­டுகள் செய்தோம்.

Q முஸ்லிம் சமூ­கத்தின் உயர்­மட்ட அமைப்­பான அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையை நீங்கள் கடு­மை­யாக எதிர்க்­கி­றீர்கள்? அவர்கள் வஹா­பிஸ கோட்­பா­டு­களை கடைப்­பி­டிப்­ப­தாக குற்றம் சுமத்­து­கி­றீர்கள்?

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் 90 வீதத்­துக்கும் அதி­க­மான உறுப்­பி­னர்கள் வஹா­பிஸ கொள்­கையைப் பின்­பற்­று­ப­வர்கள். அவர்கள் நபிகள் நாய­கத்தின் பிறந்த தின நினைவு குறித்து எந்­தவோர் செய்­தி­க­ளையும் (Message) வெளி­யி­டு­வ­தில்லை. வஹாப்­வா­திகள், சல­பிகள் மற்றும் இஸ்­லாத்தின் தீவி­ர­வாத கொள்­கை­களைப் பின்­பற்­று­ப­வர்கள் நபிகள் நாய­கத்தின் பிறந்­த­நாளைக் கொண்­டா­டு­வ­தில்லை. நினைவு கூரு­வ­தில்லை. ஆனால் இலங்­கை­யி­லுள்ள சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் நபி­க­ளாரின் பிறந்த தினத்தை கொண்டாடுவார்கள். நான் இங்கு ஒரு சிறு உதாரணத்தையே குறிப்பிட்டேன். நூற்றுக்கணக்கான உதாரணங்களை என்னால் முன்வைக்க முடியும். சூபி முஸ்லிம்களுக்கு எதிரான அவர்களது பத்வாக்களையும் இங்கு குறிப்பிடலாம்.

Q கடந்த ஜூலை மாதம் 7 ஆம் திகதி பௌத்த மாநாடு கண்டியில் இடம்பெற்றது? அங்கு நீங்கள் உங்களது இலக்கு ‘சிங்கள பாராளுமன்றம்’ என்று தெரிவித்தீர்கள். இது நடைமுறைச் சாத்தியமாகுமா? இலங்கையர்கள் இதற்கு ஆதரவு வழங்குவார்களா?

அரசியல் கட்டமைப்பில் சிங்களவர்கள் அல்லாதவர்கள் இருக்கக் கூடாது என்று நான் தெரிவிக்கவில்லை. பாராளுமன்றம் நாட்டின் உண்மையான நிலைமையினை மறைப்பதாகவும், சிங்களவர்களின் உரிமைகளை நலிவடையச் செய்வதாகவும் இருக்கக் கூடாது என்றே தெரிவித்தேன். எமது நாட்டின் தேசிய கல்வி முறைமை இனவாதத்தை பரப்புவதாக இருக்கக்கூடாது. அந்த வகையில் கல்வித் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். இன்று இன ரீதியிலான பாடசாலைகளே இயங்கி வருகின்றன. இதுவே பிரச்சினையாகும்.

Q நீங்கள் வெளிநாட்டு உதவிகள் பெற்றுக் கொள்வதாக கூறப்படுகிறதே?

(சிரிக்கிறார்) வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையரிடமிருந்தே எமக்கு நிதியுதவிகள் கிடைத்து வருகின்றன. வெளிநாட்டு உதவிகள் ஒரு சதமேனும் கிடைப்பதில்லை.

Q ஏப்ரல் குண்டுத் தாக்குதல்களின் பின் முஸ்லிம் சமூகத்தின் மீது பகைமை உணர்வு அதிகரித்துள்ளது. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் கடுமையாக முஸ்லிம் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது?

வஹாப்வாதிகளின் பயங்கரவாதம் காரணமாக உருவாகியுள்ள இந்நிலைமை கவலைக்குரியதாகும். சாதாரண மக்கள் தற்போது அனைத்து முஸ்லிம்களையும் சந்தேகிக்கின்றனர்.

நன்றி: The Week.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.