புனித பயணத்தின் பெயரால் மோசடி செய்யும் முகவர்கள்

1 1,488

சவூதி அரே­பிய அர­சாங்கம் இஸ்­லா­மிய புது­வ­ருடம் ஹிஜ்ரி 1441 ஆம் ஆண்­டி­லி­ருந்து உம்­ரா­வுக்கு புதிய சட்ட விதி­களை நடை­மு­றைக்குக் கொண்டு வந்­துள்­ள­தாக நாம் நேற்று செய்தி வெளி­யிட்­டி­ருந்தோம்.

உம்ரா யாத்­தி­ரி­கர்­களின் நலன் கரு­தியே சவூதி அர­சாங்கம் இப்­பு­திய சட்ட விதி­களை நடை­மு­றைக்குக் கொண்டு வந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.
இந்நிலையில் சவூதி அரே­பிய அரசு உம்­ரா­வுக்கு புதிய சட்ட விதி­களை அமுல்­ப­டுத்­தி­யுள்ள அதே­வேளை எமது நாட்டின் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் அரச ஹஜ் குழுவும் உம்ரா யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு எச்­ச­ரிக்­கை­களை விடுத்­துள்­ளன. இங்கு போலி உம்ரா உப முக­வர்கள் மக்­க­ளி­ட­மி­ருந்து உம்ரா யாத்­தி­ரைக்­கென முற்­பணம் அற­விட்டு ஏமாற்றி வரு­வ­தாக திணைக்­க­ளத்­துக்கு முறைப்­பா­டுகள் கிடைப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உம்ரா யாத்­திரை மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு அனு­மதிப் பத்­திரம் பெற்றுக் கொள்­ளப்­பட்­டுள்ள முகவர் நிலை­யங்கள் ஊடா­கவே பயண ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளும்­படி அரச ஹஜ் குழு மக்­களை வேண்­டி­யுள்­ளது.

ணைக்­க­ளத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள முகவர் நிலை­யங்­களின் விப­ரங்­களை திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து பெற்றுக் கொள்­ளு­மாறு மக்கள் அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள். போலி முக­வர்­களை நம்பி ஏமாறும் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் பொறுப்புக் கூற­மாட்­டாது என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புனித பய­ணங்­களை ஏற்­பாடு செய்­வ­தாகக் கூறி மக்­களை ஏமாற்றி வரு­ப­வர்கள் தொடர்பில் சமூகம் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்டும். உம்ரா யாத்­திரை ஏற்­பா­டு­களில் மாத்­தி­ர­மல்ல புனித ஹஜ் கட­மைக்­கான ஏற்­பா­டு­க­ளிலும் தொடர்ந்து மக்கள் ஏமாற்­றப்­பட்டு வரு­கி­றார்கள். ஹஜ் முக­வ­ரிடம் இலட்­சக்­க­ணக்­கான ரூபாய்­களை வழங்கி இறுதி நேரத்தில் ஏமாற்­றப்­பட்ட பலர் புனித கட­மையை நிறை­வேற்ற முடி­யாமற் போன வர­லா­றுகள் இருக்­கின்­றன. இந்த வரு­டமும் 8 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் இவ்­வாறு ஏமாற்­றப்­பட்­டார்கள். அவர்­களில் அறுவர் செலுத்­திய கட்­டணம் மில்­லியன் கணக்­காக ரூபாய்கள் இது­வரை ஹஜ் முக­வரால் அவர்­க­ளுக்கு திருப்பி வழங்­க­ப்ப­ட­வில்லை.

பெரும்­பா­லான ஹஜ், உம்ரா முக­வர்கள் பல்­வேறு உறுதி மொழி­களை வழங்கி சவூதி அரே­பி­யாவில் அவர்­களால் வழங்­கப்­படும் சேவைகள் தொடர்பில் கவர்ச்­சி­க­ர­மான பெக்­கேஜ்­களை முன்­வைத்து யாத்­தி­ரி­கர்­களை ஏமாற்றி வரு­கி­றார்கள். உறு­தி­ய­ளித்­த­படி அவர்­க­ளுக்கு சேவைகள் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. இதனால் யாத்­தி­ரி­கர்கள் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­கி­றார்கள். நட்­சத்­திர ஹோட்­டல்­களில் தங்­கு­மிட வச­தி­களை ஏற்­பாடு செய்­த­வ­தாகக் கூறி அடிப்­படை வச­திகள் குறை­வான, தரமற்ற விடுதிகளில் தங்க வைக்­கப்­ப­டு­கி­றார்கள்.

ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் இவ்­வா­றான அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­வது தொடர்பில் முறைப்­பா­டுகள் கிடைத்­த­தை­ய­டுத்தே இள­வ­ரசர் முஹம்மத் பின் சல்மான் இவ்­வ­ருடம் இஸ்­லா­மிய புத்­தாண்­டி­லி­ருந்து உம்­ரா­வுக்கு பல புதிய சட்ட விதி­களை அமுல்­ப­டுத்­தி­யுள்ளார். இது வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

புதிய சட்ட விதி­க­ளின்­படி உம்ரா பய­ணிகள் சவூதி அர­சினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட, அனு­மதிப் பத்­திரம் பெற்றுக் கொள்­ளப்­பட்­டுள்ள நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலே தங்க வைக்­க­ப்பட வேண்டும். ஹரம் ஷரீ­­புக்கு அருகில் இயங்கி வந்த அர­சினால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத சிறிய ஹோட்­டல்கள், தங்கு விடுதிகள் அர­சினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் உம்ரா யாத்­தி­ரி­கர்கள் வச­தி­க­ளுடன் கூடிய தங்­கு­மி­டங்­களில் தங்­கு­வ­தற்கு வாய்ப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
உம்ரா விசா­வுக்­கான கட்­டணம் 200 ரியா­லி­லி­ருந்து 300 ரியா­லாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் யாத்­தி­ரி­கர்கள் சிறந்த போக்­கு­வ­ரத்து சேவையை பெற்றுக் கொள்­வ­தற்­காக முகவர் நிலை­யங்கள் யாத்­தி­ரிகர் ஒரு­வ­ருக்கு 120 ரியால்­களும் வர­லாற்று இடங்­களை தரி­சிப்­ப­தற்கு ஒரு­வ­ருக்கு 20 ரியால்­களும் முன்­கூட்­டியே செலுத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது.

பெரும்பாலான அரச அனுமதி வழங்கப்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள் ஹரம் ஷரீபிலிருந்து சிறிது தொலைவில் இருந்தாலும் யாத்திரிகர்கள் அங்கேயே தங்கவைக்கப்பட வேண்டியுள்ளது. உம்ரா யாத்திரிகர்களின் நலன்கருதி சவூதி அரேபிய அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்றாலும் உம்ரா கட்டணங்களின் உயர்வும் தவிர்க்க முடியாததாகவுள்ளது.
இந்நிலையில் போலி உம்ரா முகவர்கள் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெக்க வேண்டும், மக்களும் இதுவிடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும்.

vidivelli

1 Comment
  1. Ahamed says

    Why u r not publishing the name of the travel agent. Then only people will come to know the agent and they can avoid them.

Leave A Reply

Your email address will not be published.