நிகாப், புர்கா விவகாரம் : அறிவிப்பு வரும்வரை விழிப்புடன் இருக்கவும்

பெண்களுக்கு முஸ்லிம் கவுன்ஸில் வேண்டுகோள்

0 639

அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்டு விட்­டாலும் அச்­சட்­டத்தின் கீழ் தடை­செய்­யப்­பட்ட முஸ்லிம் பெண்­களின் ஆடை­யான நிகாப் மற்றும் புர்­கா­வுக்­கான தடையும் நீக்­கப்­பட்டு விட்­டதா? என்­பது தெளி­வற்ற நிலையில் உள்­ளதால் முஸ்லிம் பெண்கள் இது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு கிடைக்­கும்­வரை விழிப்­பு­ணர்­வுடன் செயற்­ப­டு­மாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம். அமீன் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அவ் அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

“அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதன் பின்பு சிலர் நிகாப் மற்றும் புர்கா தடையும் நீங்­கி­விட்­ட­தாக பிர­சாரம் செய்து வரு­கி­றார்கள். அவர்­க­ளது பிர­சா­ரங்­களின்படி செயற்­ப­டு­வதை விடுத்து அர­சாங்­கத்தின் உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கை­க­ளுக்கு அமை­வா­கவே முஸ்லிம் பெண்கள் செயற்­பட வேண்டும்.

அர­சாங்­கத்தின் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்­புகள் கிடைக்கும் வரை முகத்­திரை அணியும் முஸ்லிம் பெண்கள் அவ­ச­ர­கால சட்டம் அமுலில் இருந்­த­போது பொறு­மை­யா­கவும் நிதா­ன­மா­கவும் எவ்­வாறு கவ­ன­மாக நடந்து கொண்­டார்­களோ அவ்­வாறு தொடர்ந்தும் நடந்து கொள்­வது தற்­போ­துள்ள சூழலில் பாது­காப்­பா­னது என்று முஸ்லிம் கவுன்ஸில் கரு­து­கி­றது.

இது விட­யத்தில் நாட்டின் சூழலைக் கருத்­திற்­கொண்டு மிகவும் சாணக்­கி­ய­மாக முஸ்லிம் சமூகத்தை வழி நடத்துமாறு முஸ்லிம் சமயத் தலைமைகளிடம் முஸ்லிம் கவுன்ஸில் வேண்டுகோள் விடுக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ஏ. பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.