மாண­வர்­களின் ஆங்­கில அறிவை மேம்­ப­டுத்த கல்­வி­ய­மைச்சு திட்டம்

0 1,495

ஒரு நாட்டின் கல்­வித்­து­றையே புத்­தி­ஜீ­வி­க­ளையும் சிறந்த தலை­வர்­க­ளையும் உரு­வாக்­கு­கி­றது. அத­னா­லேயே சர்­வ­தே­சத்தில் கல்­விக்கு முக்­கிய இடம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

எமது நாட்டில் இல­வசக் கல்வி வழங்­கப்­ப­டு­கி­றது. கல்­விக்­கென ஓர் அமைச்சும் உயர்­கல்­விக்­கென மேலுமோர் அமைச்சும் செயற்­பட்டு வரு­கி­றது.
எமது மாண­வர்­களின் பாடத்­திட்­டத்தில் காலத்­துக்­குக்­காலம் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. மாண­வர்­களின் ஆங்­கி­ல­மொழி அறி­வினை மேம்­ப­டுத்­து­வ­தற்கு நாட்­டி­லுள்ள அனைத்து அர­சாங்கப் பாட­சா­லை­க­ளிலும் வாரத்­திற்கு ஒரு­தினம் பாட­சாலைத் தொடர்­பாடல் நட­வ­டிக்­கைகள் ஆங்­கில மொழியில் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் திட்டம் வகுத்துள்ளார்.

மாண­வர்­களின் ஆங்­கில மொழி­ய­றி­வினை உயர்த்­து­வ­தற்கே கல்வி அமைச்சர் இத் திட்­டத்தை செயற்­ப­டுத்­தி­யுள்ளார். அமைச்­சரின் இம்­மு­யற்சி பாராட்­டத்­தக்­க­தாகும்.

உல­க­ம­ய­மாக்­கலின் கீழ் அனைத்து நாடு­களும் ஒன்­றுடன் ஒன்று தொடர்­பு­பட்­டன வாகவே காணப்­ப­டு­கின்­றன. உல­க­ம­ய­மாக்­கலின் பின்­ன­ணியில் பல சவால்­களும் மேலெ­ழுந்­துள்­ளன. ஆங்­கி­ல­மொ­ழியே தொடர்­பாடல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அவ­சி­ய­மா­கி­றது.

இலங்­கையில் இரண்டாம் மொழி­யாக ஆங்­கி­லமே போதிக்­கப்­ப­டு­கி­றது.
சில அர­சாங்கப் பாட­சா­லை­களில் க.பொ.த. சாதா­ரண தரம் மற்றும் க.பொ.த. உயர்­தரப் பரீட்­சை­க­ளுக்கு ஆங்­கில மொழியில் தோற்­று­வ­தற்கு வாய்ப்­புகள் வழங்கப் பட்­டுள்­ளன. அப்­பா­ட­சா­லை­களில் ஆங்­கில மொழியில் பாடங்கள் போதிக்­கப்­ப­டு­கின்­றன.

என்­றாலும் பொது­வாக நோக்­கும்­போது எமது மாண­வர்­களின் ஆங்­கில அறிவு மிகவும் கீழ் மட்­டத்­திலே இருக்­கி­றது. ஆங்­கிலக் கல்வி தாழ் மட்­டத்தில் இருப்­ப­தற்கு முக்­கிய காரணம் ஆங்­கில மொழி­யினைக் கற்­பிப்­ப­தற்கு திற­மை­யான, தகு­தி­யான ஆசி­ரியர் பற்­றாக்­கு­றை­யாகும். பயிற்சி மூலம் வெளி­யேறும் ஆங்­கில ஆசி­ரி­யர்கள் மாண­வர்­களைக் கவரும் விதத்தில் ஆங்­கிலம் போதிக்கத் தவறி விடு­கி­றார்கள்.

கல்வித் துறையில் காலத்­திற்குக் காலம் பல்­வேறு திட்­டங்கள் அறி­மு­கப்­ப­டுத்தப் படு­கின்­றன. என்­றாலும் அநேக திட்­டங்கள் எதிர்­பார்த்த இலக்கை எட்ட முடி­யாத நிலைக்­குள்­ளாகி விடு­கின்­றன. திட்­டங்கள் அறி­மு­கப்­ப­டுத்­து­வது மாத்­தி­ர­மல்ல அத்­திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் தரப்­பி­னரும் தமது கட­மை­யினைச் சரி­யாக மேற்­கொண்­டாலே வெற்றி இலக்­கினை அடை­ய­மு­டியும்.

கல்வி அமைச்சு மாண­வர்­களின் ஆங்­கில அறி­வினை மேம்­ப­டுத்த வேண்டும் என்­பதை இனங்­கண்டு புதிய திட்­டத்­தினை ஆரம்­பித்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. வாரத்­துக்கு ஒரு தினம் அரச பாட­சா­லை­களில் அனைத்து தொடர்­பாடல் நட­வ­டிக்­கை­களும் ஆங்­கில மொழி­யிலே மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.
இத­னுடன் தொடர்­பு­டைய ஆசி­ரி­யர்­க­ளுக்குப் பயிற்சி வழங்­கப்­பட்டே இத்­திட்டம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. திட்ட ஆலோ­ச­கர்­க­ளாகக் கட­மை­யாற்­று­வ­தற்கு 148 பேருக்கு பயிற்சி வழங்­கப்­பட்­டுள்­ளது. இவர்கள் மூலம் நாடெங்­கிலும் உள்ள பாட­சா­லை­களைச் சேர்ந்த 10000 ஆசி­ரி­யர்­க­ளுக்கு பயிற்­சிகள் வழங்­கப்­பட உள்­ளன. 2020 ஆம் ஆண்டில் மேலும் 6000 பேருக்கு பயிற்­சிகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. இவ்­வாறு பயிற்­சிகள் வழங்­கப்­படும் ஆசி­ரி­யர்கள் மூலம் மாண­வர்­களின் ஆங்­கில அறிவு மட்டம் மேம்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

தேசிய கல்வி நிறு­வகம் மூலம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள பாடத்­திட்­டத்தை மேலும் பயன்­தரும் வகையில் ஆங்­கில மொழி­யினைக் கற்­பிப்­ப­தற்கு திட்டம் வகுக்­கப்­பட்­டுள்­ளது. வகுப்­ப­றையில் ஆங்­கி­ல­மொ­ழி­யினைக் கற்­பிக்கும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு இது தொடர்­பான சுற்­று­நி­ருபம் மற்றும் ஆலோ­ச­னைகள் வழங்­கு­வ­தற்கு கல்வி அமைச்சர் திட்­ட­மிட்­டுள்ளார். இத­ன­டிப்­ப­டை­யிலே வாரம் ஒரு தினம் வகுப்­பறைத் தொடர்­பா­டல்கள் அனைத்தும் ஆங்­கில மொழியில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

எமது நாட்டின் கல்வி முறையில் மாற்­றங்கள் கொண்டு வரப்­பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கல்வி என்பது வேலைவாய்ப்புக்கு மாத்திரம் மட்டுப் படுத்தப்பட்டதல்ல. என்றாலும் எமது நாட்டின் கல்வி முறை மூலம் இந்நாட்டு தொழில் சந்தைக்குத் தேவையான தொழிற் தகைமையுள்ளவர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அத்தோடு ஆங்கிலமொழி அறிவின் மூலம் தொழிற்சந்தையில் வேலைவாய்ப்புகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். அதனடிப்படையில் ஆங்கில மொழியின் அவசியத்தை கல்வி அமைச்சர் உணர்ந்து மேற்கொண்டுள்ள திட்டம் வரவேற்கத்தக்கது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.