வைத்­தியர் ஷாபி விவ­கா­ரத்தின் பின்­ன­ணியில் குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர்

நடவடிக்கை எடுக்கக் கோரி வைத்தியர் ஷாபியின் மனைவி இமாரா பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு

0 880

குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் சிரேஷ்ட வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி விவ­கா­ரத்தின் பின்னணியில், அந்த வைத்­தி­ய­சா­லையின் பணிப்பாளர் வைத்­தியர் சரத் வீர­பண்­டார உள்­ள­தாக சந்­தே­கிப்­ப­தா­கவும், அது தொடர்பில் உரிய விசாரணையொன்றை முன்­னெ­டுத்து நியாயத்தைப் பெற்­றுத்­த­ரு­மாறு கோரி பதில் பொலிஸ்மா அதி­ப­ருக்கு முறைப்­பா­டொன்று அளிக்­கப்­பட்­டுள்­ளது.

வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியின் மனை­வி­யான, 42 வய­து­டைய குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் வைத்­தியர் மொஹம்மட் நஸீர் பாத்­திமா இமாரா இந்த முறைப்­பாட்டைப் பதிவு செய்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் விடி­வெள்ளிக்குத் தெரி­வித்­தது.

சட்­டத்­த­ரணி எம்.என்.எம்.ஷைனாஸ் மற்றும் ஆர்.எம்.இன்ஷான் ஆகி­யோ­ருடன் பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு சென்­றுள்ள வைத்­தியர் பாத்­திமா இமாரா, பொலிஸ்மா அதி­பரின் நிவா­ரணப் பிரிவில் எழுத்­து­மூலம் இம்­மு­றைப்­பாட்டை பதிவு செய்­துள்­ள­துடன், அம்­மு­றைப்­பாட்­டுடன் அது­கு­றித்த சாட்­சி­யாக ஆவ­ணங்கள் சில­வற்­றையும் இணைத்துக் கொடுத்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. நேற்று முன்­தினம் பதிவு செய்­யப்­பட்­டுள்ள இந்த முறைப்­பாடு தொடர்பில், பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்­ர­ம­ரத்ன அவ­தானம் செலுத்­தி­யுள்ள நிலையில், அதனை பொருத்­த­மான விசா­ரணைப் பிரி­வொன்­றிடம் கைய­ளிக்க இன்று அல்­லது நாளை நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டலாம் என பொலிஸ்மா அதி­ப­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்கள் ஊடாக அறிய முடி­கின்­றது.

இலக்கம் 6/1, வீர­சிங்க மாவத்தை, குரு­நாகல் எனும் முக­வ­ரியில் வசிக்கும் தனக்கோ அல்­லது தனது கண­வ­ரான வைத்­தியர் ஷாபிக்கோ குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பா­ள­ருடன் எந்த தனிப்­பட்ட குரோ­தங்­களும் தான் அறிந்­த­வரை இல்­லை­யென முறைப்­பாட்டில் சுட்­டிக்­க­ாட்­டி­யுள்ள வைத்­தியர் பாத்­திமா இமாரா, தனது கண­வ­ருக்கு எதி­ராக மிகப் பார­தூ­ர­மான குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்ட நிலையில், அது குறித்த விசா­ர­ணை­க­ளுக்கு பணிப்­பாளர் சரத் வீர­பண்­டார பல வகை­யிலும் இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். வைத்­தி­ய­சா­லைக்கு உள்­ளேயும் வெளி­யேயும், குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணை­க­ளுக்கும் அவரால் இடை­யூறு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக வைத்­தியர் பாத்­திமா இமா­ராவின் முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் அந்த முறைப்­பாட்டில், வைத்­தி­ய­சாலைப் பணிப்­பாளர் நீதி­மன்றில் சுயேச்­சை­யாக ஆஜ­ராகி தனது கண­வ­ருக்கு எதி­ராகப் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­த­தா­கவும், அவை அத்தனையும் பொய்யென விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், தனது கணவருக்கு எதிராக கருத்தடை குற்றச்சாட்டு உள்ளிட்ட இந்த சோடிக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் வைத்தியசாலை பணிப்பாளர் சரத் வீரபண்டாரவே உள்ளதாகத் தாம் சந்தேகிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.எப்.எம்.பஸீர்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.