மேல் மாகாண தமிழ் மொழி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

0 725

மேல்­மா­கா­ணத்தில் தமிழ் மொழி மூல­மான பாட­சா­லை­களில் 450க்கும் அதி­க­மான ஆசி­ரியர் வெற்­றி­டங்கள் நில­வு­கின்­றன.

கடந்த மாதம் பரீட்­சைக்கு தோற்­றிய பட்­ட­தா­ரி­களை இணைத்­துக்­கொள்­வதன் மூலம் இவ்­வெற்­றி­டங்­களை நிரப்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என மேல் மாகாண கல்வி அதி­கா­ரி­களும் அதி­பர்­களும் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

இது தொடர்­பாக மேலும் தெரிய வரு­வ­தா­வது, மேல் மாகா­ணத்தில் 11 கல்வி வல­யங்கள் காணப்­ப­டு­கின்­றன.

இவற்றில் நூற்­றுக்­க­ணக்­கான தமிழ் மொழி மூல­மான பாட­சா­லை­களில் கடந்த பல வரு­டங்­க­ளாக ஆசி­ரியர் வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக களுத்­துறை மாவட்­டத்தில் இருக்கும் களுத்­துறை, ஹொரண மற்றும் மத்­து­கம வல­யங்­களில் சுற்­ற­றிக்­கையின் பிர­காரம் 250 ஆசி­ரியர் வெற்­றி­டங்கள் இருப்­ப­தா­கவும் அதில் களுத்­துறை வல­யத்­திலே அதிக வெற்­றி­டங்கள் நில­வு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் இம்­மா­வட்­டத்தில் தற்­போது ஆசி­ரி­யர்­க­ளாக கடமை புரியும் வெளி மாவட்­டங்­களைச் சேர்ந்த சுமார் 80 ஆசி­ரி­யர்கள் 5 வரு­டங்­களை பூர்த்­தி­செய்து இட­மாற்­றத்­துக்­காக விண்­ணப்­பித்­துள்­ளனர்.

அதே­போன்று கம்­பஹா மாவட்­டத்தில் களனி கல்வி வல­யத்தில் 32 ஆசி­ரியர் வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­வ­துடன் இட­மாற்றம் பெற்­றுச்­செல்ல விண்­ணப்­பித்­த­வர்­க­ளுடன் சேர்த்து சுமார் 50 வெற்­றி­டங்கள் வரை நில­வு­கின்­றன.
இவ்­வாறு கொழும்பு மாவட்­டத்தில் மொத்­த­மாக 450க்கும் அதிக ஆசி­ரியர் வெற்­றி­டங்கள் நில­வு­கின்­றன.

அத்­துடன் நிலவும் ஆசி­ரியர் வெற்­றி­டங்கள் பூர்த்­தி­செய்­யப்­ப­டாமல் இருப்­பதால் 5 வருட சேவையை பூர்த்­தி­செய்த ஆசி­ரி­யர்கள் தங்கள் சொந்த பிர­தே­சங்­க­ளுக்கு இட­மாற்றம் பெற்­றுச்­செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருப்­ப­தாக, இட­மாற்­றத்­துக்கு விண்­ணப்­பித்­தி­ருக்கும் ஆசி­ரி­யர்கள் கவலை தெரி­விக்­கின்­றனர்.

அதனால் மேல் மாகா­ணத்தில் தமிழ் மொழி மூல­மான பாட­சா­லை­களில் நிலவும் ஆசி­ரியர் வெற்­றி­டங்­க­ளுக்கு பட்­ட­தா­ரி­களை நிய­மிப்­ப­தற்­காக கடந்த மாதம் 30 ஆம் திகதி நடத்­திய போட்டிப் பரீட்­சையில் தோற்­றிய பட்­ட­தா­ரி­க­ளைக்­கொண்டு இவ்­வெற்­றி­டங்­களை நிரப்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

அத்­துடன் மேல் மாகா­ணத்தில் ஆங்­கில மொழி மூல­மான பாட­சா­லை­க­ளிலும் நிலவும் ஆசி­ரியர் வெற்­றி­டங்­களை பரீட்­சைக்கு ஆங்­கில மொழி மூலம் தோற்­றிய பட்­ட­தா­ரி­களை நிய­மிக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

எனவே இது­தொ­டர்­பாக மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவ­தானம் செலுத்தி உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என பட்­ட­தா­ரிகள் எதிர்­பார்க்­கின்­றனர்.

இதே­வேளை, மேல் மாகா­ணத்தில் பாட­சா­லை­களில் நிலவும் ஆசி­ரியர் வெற்­றி­டங்­க­ளுக்கு பட்­ட­தா­ரி­களை நியமிப்பதற்காக கடந்த 30ஆம் திகதி போட்டிப் பரீட்சை இடம்பெற்றது.

இப்பரீட்சையில் தமிழ் மொழி மூல வினாத்தாளில் பல பிழைககள் இருந்துள்ளன. அதனால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் கடந்த வாரம் மேல்மாகாண ஆளுர் ஏ.ஜே.எம். முஸம்மிலை சந்தித்து இது தொடர்பாக முறைப்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(எம்.ஆர்.எம்.வஸீம்)

vidivelli

Leave A Reply

Your email address will not be published.