அரபுக் கல்லூரி ஆலோசனை சபையில் சிங்களவர்களையும் இணைக்க வேண்டும்

பஸ்யால அரபுக்கல்லூரியில் நுழைந்து பிக்குகள் கோரிக்கை

0 1,341

பஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் திடீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை­யி­லான குழு­வினர், அரபுக் கல்­லூரி அப்­பி­ர­தே­சத்தின் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒற்­று­மையை இல்­லாமல் செய்­துள்­ள­தாகத் தெரி­வித்­த­துடன் அர­புக்­கல்­லூ­ரிக்­கென ஒரு ஆலோ­சனை சபை அமைக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அக்­கு­ழுவில் சிங்­க­ள­வர்­களும் இடம்­பெற வேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்­தினர்.

அர­புக்­கல்­லூ­ரியில் ஏன் அரபு மொழி மாத்­திரம் போதிக்­கப்­ப­டு­கி­றது. தமிழ், ஆங்­கில மொழிகள் ஏன் போதிக்­கப்­ப­டு­வ­தில்லை. அரபு மொழி மாத்­திரம் போதிக்­கப்­பட்டு அரபு கலா­சாரம் பரப்­பப்­ப­டு­கி­றது என்றும் முறை­யிட்­டனர்.
பஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் சபீலுர் ரசாத் அர­புக்­கல்­லூ­ரிக்கே இரண்டு பெளத்த குரு­மார்கள் மற்றும் சுமார் 20 பிர­தே­ச­வா­சிகள் அடங்­கிய குழு விஜயம் செய்து அரபுக் கல்­லூரி நிர்­வா­கத்தை கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யது.
இச்­சம்­பவம் தொடர்பில் எல்­ல­ர­முல்ல சபீலுர் ரசாத் அர­புக்­கல்­லூ­ரியின் அதிபர் எம்.ஐ.எம்.சுஹைப் (தீனி) யைத் தொடர்­பு­கொண்டு வின­வி­ய­போது அவர் விடி­வெள்­ளிக்கு இவ்­வாறு தெரி­வித்தார்.

“செவ்­வாய்க்­கி­ழமை பஸ்­யால, கலல்­பிட்­டிய தாது­கன்த பன்­ச­லையைச் சேர்ந்த தேரர்­களும் அப்­பி­ர­தேச மக்கள் சிலரும் அர­புக்­கல்­லூ­ரிக்கு வரு­கை­தந்­தனர்.

அர­புக்­கல்­லூ­ரியில் என்ன போதிக்­கப்­ப­டு­கி­றது என்­பது தொடர்பில் தாம் அறிந்­து­கொள்ள விரும்­பு­வ­தாகக் கூறி­னார்கள். ஏன் அரபு மொழி மாத்­திரம் போதிக்­கப்­ப­டு­கி­றது என்று கேட்­டார்கள். அரபு மொழி போதிக்­கப்­பட்டு அரபு கலா­சாரம் பரப்­பப்­ப­டு­வ­தா­கவும் அவர்கள் கூறி­னார்கள். கல்­லூ­ரியின் பதிவுச் சான்­றி­த­ழையும் வேண்­டி­னார்கள்.

கம்­பஹா மாவட்­டத்தைச் சேர்ந்த மாண­வர்கள் மாத்­தி­ரமே சேர்த்­துக்­கொள்­ளப்­பட வேண்டும் என்­றார்கள். பிற மாவட்ட மாண­வர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கக்­கூ­டாது என்­றார்கள். எமது கல்­லூ­ரியில் கல்­முனை, காத்­தான்­குடி, குரு­நாகல் பகு­தி­களைச் சேர்ந்­த­வர்கள் பயி­லு­கி­றார்கள்.

பிர­தே­சத்தில் நாம் ஒற்­று­மை­யாக வாழ்­வ­தற்கு கல்­லூ­ரிக்­கென்று ஆலோ­சனை சபை­யொன்று நிறு­வப்­பட வேண்டும். அச்­ச­பையில் சிங்­க­ள­வர்­க­ளுக்கும் இட­ம­ளிக்­கப்­பட வேண்டும் என்­றார்கள்.

அர­புப்­பா­ட­சாலை தொடர்பில் சந்­தேகம் நில­வு­வ­தா­கவும், அச்­சந்­தே­கங்­களைத் தெளி­வு­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை இரவு 8 மணிக்கு மீண்டும் வருகை தரு­வ­தாக அவர்கள் கூறிச் சென்­றார்கள்.

இந்த அர­புக்­கல்­லூரி 1993 ஆம் ஆண்டு திஹா­ரியில் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தாகும். பின்பு 2008 ஆம் ஆண்டே திஹா­ரி­யி­லி­ருந்து எல்­ல­ர­முல்­லக்கு இட­மாற்றம் செய்­யப்­பட்­டது. இக்­கல்­லூ­ரியில் நாட்டின் பல பிர­தே­சங்­க­ளையும் சேர்ந்த 67 மாண­வர்கள் கல்வி பயில்­கி­றார்கள். இது அர­புக்­கல்­லூ­ரிக்கு விடுக்­கப்­பட்ட அச்­சு­றுத்­த­லாகும். ”

இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் தெரி­விக்­கையில், “சம்­பவம் தொடர்பில் எமக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ளன. முஸ்­லிம்­களின் இவ்­வா­றான பிரச்­சி­னை­களைத் தீர்த்­து­வைப்­ப­தற்கு பொறுப்­பாக பிர­த­ம­ரினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர் மர்வின் விக்­கி­ரம சிங்­க­விடம் முறைப்­பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் கருத்து தெரிவிக்கையில், ‘‘குறிப்பிட்ட அரபுக்கல்லூரி திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு திஹாரியிலிருந்து எல்லரமுல்லக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இடமாற்றம் தொடர்பான ஆவணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றார்.”

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.