காத்தான்குடியில் 20 பேருக்கு மரண தண்டனையா?

0 998

காத்­தான்­கு­டியில் இரு­பது பேருக்கு ஷரீஆ சட்­டத்தின் கீழ் மரண தண்டனை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக பேரா­சி­ரியர் மெத­கொட அபே­திஸ்ஸ தேரர் தெரி­வித்­துள்ள கருத்தை வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தாக காத்­தான்­குடி நக­ர­சபை தவி­சாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரி­வித்தார்.

பேரா­சி­ரியர் மெத­கொட அபே­திஸ்ஸ தேரர் அப்­பட்­ட­மான பொய்­யொன்றை கூறி­யுள்­ள­தா­கவும் இதனை தேரர் நிரூ­பிக்க வேண்­டு­மெ­னவும் நக­ர­சபை தவி­சாளர் இதன்­போது குறிப்­பிட்டார்.

நேற்று முன்­தினம் மாலை காத்­தான்­குடி நக­ர­சபை மண்­ட­பத்தில் காத்­தான்­குடி நக­ர­சபை, காத்­தான்­குடி ஜம்­இய்­யதுல் உல­மா­சபை, காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் ஆகிய நிறு­வ­னங்கள் இணைந்து நடாத்­திய இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

பேரா­சி­ரியர் மெத­கொட அபே­திஸ்ஸ தேரர் காத்­தான்­குடி மீது ஓர் அபாண்­ட­மான பொய்யை தெரி­வித்­துள்ளார். இதனை நாங்கள் முற்­றாக மறுக்­கின்றோம். அவரின் கருத்­துக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்­பிலும் ஆராய்ந்து வரு­கின்றோம்.

கடந்த 30 வருட கால யுத்­தத்­துக்கு முன்­னரோ அல்­லது யுத்தம் நிறை­வ­டைந்த பின்­னரோ, தேரர் கூறிய எந்­த­வொரு விட­யமும் இடம்­பெ­ற­வில்லை என்­பதை தெளி­வாகக் கூறி­வைக்க விரும்­பு­கின்றோம்.

தேரர் குறிப்­பிட்­டி­ருப்­பது போல வட்டி, விப­சாரம் போன்ற சமூக விரோதச் செயல்­களில் ஈடு­பட்ட அல்­லது மார்க்க விரோ­த­மாக செயற்­பட்ட எவ­ருக்­குமே காத்­தான்­கு­டியில் மரண தண்­டனை வழங்­கப்­ப­ட­வில்லை. இரா­ணு­வத்­துக்கு காத்­தான்­குடி முஸ்­லிம்கள் உதவி செய்­தார்கள் என்ற கார­ணத்­திற்­காக தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் காத்­தான்­குடி முஸ்­லிம்­களை கடத்திக் கொலை செய்­த­துடன் பள்­ளி­வா­ச­லிலும் தொழு­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­த­வர்­களை படு­கொலை செய்­தார்கள்.

இலங்­கையின் அர­சியல் யாப்­புக்கும் இலங்கை அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் மாற்­ற­மாக ஒரு காலத்­திலும் ஒரு­போதும் காத்­தான்­குடி முஸ்­லிம்­களோ அல்­லது இலங்­கை­யி­லுள்ள முஸ்­லிம்­களோ செயற்­பட்ட வர­லாறே கிடை­யாது என்­ப­தையும் தெளி­வாக கூறி­வைக்க விரும்­பு­கின்றோம்.
பேரா­சி­ரியர் மெத­கொட அபே­திஸ்ஸ தேரர் கூறிய கருத்து தொடர்பில் நாம் நீதி­மன்­றத்தை நாட­வுள்ளோம். இது தொடர்­பாக சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் ஆராய்ந்து வரு­கின்றோம்.

காத்­தான்­கு­டி­யிலும் மட்­டக்­க­ளப்­பிலும் பொலிஸ் நிலை­யங்கள் இருக்­கின்­றன. பாது­காப்­புத்­து­றை­யினர் இருக்­கின்­றார்கள். காத்­தான்­கு­டி­யிலும் கடந்த 30 வரு­டங்­க­ளாக பொலிஸ் நிலையம் இருக்­கின்­றது. தேரர் கூறி­யது போன்ற எந்தப் பதி­வு­க­ளு­மில்லை. அப்­படி தேர­ரி­டத்தில் ஆதா­ர­மி­ருந்தால் அதை நிரூ­பிக்­கு­மாறு அவ­ருக்கு சவால் விடு­கின்றோம் என மேலும் தெரி­வித்தார்.
இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் காத்­தான்­குடி ஜம்­இய்­யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எஸ்.ஹாறூன், செயலாளர் அஷ்ஷெய்க் டி.எம்.அன்சார் நளீமி, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.சி.எம்.ஏ.சத்தார், செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி, காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் உட்பட நகரசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.