அரபுக்கல்லூரி சட்டவரைபு துரிதப்படுத்தப்பட வேண்டும்

0 605

எமது நாட்டில் இயங்­கி­வரும் நூற்­றுக்­க­ணக்­கான அரபுக் கல்­லூ­ரிகள் தொடர்­பாக தொடர்ந்தும் பல்­வேறு தரப்­பி­னரால் தவ­றான கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த அரபுக் கல்­லூ­ரிகள் இன்று நேற்று உரு­வாக்­கப்­பட்­ட­வை­யல்ல. அவற்றின் வர­லாறு ஒன்­றரை நூற்­றாண்­டு­க­ளுக்கும் மேற்­பட்­ட­தாகும்.

ஏப்ரல் 21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்தே அர­புக்­கல்­லூ­ரி­க­ளுக்கு இந்­நி­லைமை ஏற்­பட்­டுள்­ளது. ‘அரபுக் கல்­லூ­ரி­களில் கற்­பிக்­கப்­படும் கற்கை நெறிகள் மற்றும் அடிப்­ப­டை­வாத மத போத­னைகள் தொடர்பில் ஆராய விசேட குழு­வொன்று நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்று எதி­ர­ணியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்­தி­ருக்­கிறார்.
மத்­ரஸா பாட­சா­லை­களில் பொருத்­த­மற்ற கற்கை நெறி­களே கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன. இல­வச கல்­வி­யினை வழங்கும் நாட்டில் இவ்­வா­றான பாட­சா­லைகள் இயங்­கு­வது தேவை­யற்­றது. இப்­பா­ட­சா­லை­களில் மதக் கொள்­கை­க­ளுக்கே முக்­கி­யத்­து­வ­ம­ளிக்கப் படு­கின்­றன. ஒரு குற்­றத்­தினைச் செய்தால் என்ன தண்­டனை கிடைக்கும் என்­பது எமது பொதுச்­சட்­டத்தில் தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மத்­ரஸா பாட­சாலை களில் இவ்­வா­றான குற்­றங்­க­ளுக்­கான தண்­ட­னை­களும் மிகக்­கொ­டூ­ர­மான முறையில் கற்­பிக்­கப்­ப­டு­கி­றது. இது அடிப்­ப­டை­வா­தத்­தையே ஊக்­கு­விக்­கி­றது.

பயங்­க­ர­வாதி சஹ்­ரானின் மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தலைத் தொடர்ந்து அடிப்­படை வாதத்தை போதிக்கும் பாட­சா­லைகள் தொடர்பில் அர­சாங்கம் ஒரு மாத­காலம் மாத்­தி­ரமே பேசி­யது. தற்­போது இவ்­வி­டயம் தொடர்பில் எவரும் அக்­கறை செலுத்­து­வ­தில்லை’ எனவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

எதி­ர­ணி­யினர் அர­சாங்­கத்தை எதிர்க்­க­வேண்­டு­மென்றே பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி வரு­கி­றார்கள். அர­புக்­கல்­லூ­ரி­களை சட்ட வரம்­புக்குள் உட்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் துரித கதியில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பணிப்­பு­ரை­யி­னை­ய­டுத்து அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்­கான சட்ட மூலத்தைத் தயா­ரிக்கும் பணியில் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம், வக்பு சபை என்­பன ஈடு­பட்டு சட்ட வரை­பொன்று தயா­ரிக்­கப்­பட்­டுள்ளது.
இச் சட்­ட­வ­ரைபு ‘இஸ்­லா­மியக் கல்வி’ என்ற தலைப்பில் தயா­ரிக்­கப்­பட்டு அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­துக்­காக சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அச் சட்ட வரைபை மீளாய்வு செய்­வ­தற்­காக அமைச்­ச­ரவை முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சுக்கு அனுப்பி வைத்­துள்­ளது. ‘இஸ்­லா­மியக் கல்வி’ சட்ட வரை­புக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உட்­பட பெரும்­பான்­மை­யின அமைச்­சர்­களும் தங்­க­ளது பரிந்­து­ரை­களைச் சமர்ப்­பித்­தி­ருக்­கி­றார்கள்.

பெரு­ந­க­ரங்கள் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க, நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்சர் நவீன் திசா­நா­யக்க என்போர் தங்­க­ளது பரிந்­து­ரை­களை சமர்ப்­பித்­துள்­ளார்கள். ஜனா­தி­ப­தியும் குறிப்­பிட்ட அமைச்­சர்­களும் அரபுக் கல்­லூ­ரிகள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்­பட வேண்­டு­மென்றே பரிந்­து­ரைத்­திருக் கிறார்கள். அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்­கென தனி­யான சட்­ட­மொன்று தேவை­யற்­ற­தென்றும் ‘இஸ்­லா­மியக் கல்வி’ சில திருத்­தங்­க­ளுடன் கல்வி அமைச்­சுடன் இணைக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் ஆலோ­சனை தெரி­வித்­துள்ளார்.

கடந்த காலங்­களில் அரபுக் கல்­லூ­ரிகள் எவ்வித கட்­டுப்­பா­டு­க­ளு­மின்றி தனித்­த­னி­யான நிர்­வா­கத்தின் கீழ் இயங்கி வந்­ததை எம்மால் மறுக்க முடி­யாது. மத்­ர­ஸாக்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொண்டு வெளி­நாடு களிலும் உள்­நாட்­டிலும் நிதி சேர்த்து மத்­ரஸா என்ற பெயரில் வியா­பாரம் செய்­வ­தாக முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் ஹலீமும் குற்றம் சுமத்­தி­யுள்ளார். இந்­நி­லையில் ‘இஸ்­லா­மியக் கல்வி’ (அரபுக் கல்­லூ­ரிகள்) சட்ட மூலம் விரை­வு­ப­டுத்­தப்­பட்டு அரபுக் கல்­லூ­ரிகள் அனைத்தும் சட்ட வரை­ய­றைக்குள் உட்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

எமது நாட்டில் தற்­போது 317 அர­புக்­கல்­லூ­ரிகள் இயங்கி வரு­கின்­றன. இக்­கல்­லூ­ரிகள் தற்­போது தனித் தனி நிர்­வா­கத்தின் கீழேயே இயங்­கி­வ­ரு­கின்­றன. இதனால் கொள்கை ரீதி­யான முரண்­பா­டு­களும் நில­வு­கின்­றன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அர­புக்­கல்­லூ­ரிகள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளை அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.

அரபுக் கல்­லூ­ரி­களில் அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­ப­டு­கி­றது. தீவி­ர­வா­திகள் உரு­வாக்­கப்­ப­டு­கி­றார்கள் என்று தொட­ராக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுகள் பொய்­யா­னவை என நிரூ­பிக்­கப்­பட வேண்டும். இதற்கு ஒரே வழி அரபுக் கல்­லூரி களுக்­கான தனி­யான சட்­ட­மொன்­றினை நிறை­வேற்­றிக்­கொள்­வ­தாகும். இன­வாதி களின் பொய் பிர­சா­ரங்­க­ளுக்கு பதி­லடி வழங்­கு­வ­தற்கு முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு ‘இஸ்­லா­மியக் கல்வி’ சட்டவரைபினைத் துரிதப்படுத்த வேண்டும்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.